search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coach"

    • 9 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது.
    • விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தகவல்.

    ரஷியாவின் வடகிழக்கு பகுதியான கோமியில் உள்ள வோர்குடா நகரில் இருந்து கருங்கடல் துறைமுக பகுதியான நோவோரோசிஸ்க் நகருக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அதில் 500-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இன்டா நகர் அருகே சென்றபோது ரெயில் தடம் புரண்டது.

    9 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. இந்த விபத்தில் 70 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    கனமழை காரணமாக விபத்து ஏற்பட்டதாக ரஷிய ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு இரண்டு மீட்பு ரெயில்களுடன் மீட்புப் படையினர் சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அவசர சேவை மற்றும் மருத்துவ குழுக்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். கனமழையே விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    500-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரெயில் ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகிலுள்ள சுரங்க நகரமான வோர்குடாவிலிருந்து நோவோரோசிஸ்க் கருங்கடல் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கவுதம் காம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
    • டோனியின் கேப்டன்சியின்கீழ் அதிக காலம் நான் விளையாடியிருக்கிறேன்.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் தற்போது நடந்துவரும் உலகக்கோப்பை போட்டிகளுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு மாற்றாக கவுதம் காம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    ஐபிஎல் போட்டிகளில் கேகேஆர் அணியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் தன்னை சிறந்த பயிற்சியாளராக நிரூபித்துள்ளார் காம்பீர். கடந்த 2018 இல் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற காம்பீர் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்களிலின் ஆட்டம் குறித்து வெளிப்படையான விமர்சனங்களை முன்வைப்பவராக உள்ளார்.

    இந்நிலையில்தான் அணியின் வீரராக இருந்த காலத்தில் எம்.எஸ்.டோனி, அணில் கும்ப்ளே ஆகியோரின் கேப்டன்சியில் விளையாடியுள்ள்ள கவுதம் காம்பீரிடம் யாருடைய கேப்டன்சி சிறந்தது என்று சமீபத்தில் நடந்த பேட்டியொன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


     



    இதற்கு பதிலளித்த காம்பீர், இது மிகவும் சர்ச்சைக்குரிய கேள்வி, இதற்கு பதிலளித்து நான் தலைப்புச் செய்தியில் வர விரும்பவில்லை. ஒவ்வொருவரிடமும் அவரவருக்கேயான பலங்களும் பலவீனங்களும் இருக்கும். நான் முதல் முதலாக டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் கேப்டன்சியில் விளையாடினேன்.

    எனது முதல் ஓடிஐ போட்டி சவுரவ் கங்குலி கேப்டன்சியின்கீழ் அமைந்தது. அணில் கும்ப்ளே கேப்ரான்சியின்கீழ் நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். டோனியின் கேப்டன்சியின்கீழ் அதிக காலம் நான் விளையாடியிருக்கிறேன். அவருடன் விளையாடுவதை நான் விரும்பினேன். அவர் அணியை வழிநடத்தும் பக்குவம் எனக்கு பிடிக்கும் என்று பொத்தாம் பொதுவாக பதிலளித்துவிட்டு நழுவியுள்ளார். 

    • அபுதாபியில் உள்ள மெடோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு ஆர்வலர்களுடன் கம்பீர் உரையாடினார்.
    • அப்போது அவரிடம் இந்திய அணி பயிற்சியாளராக விரும்புகிறீர்களா என ஒரு மாணவர் கேட்டார்.

    அபுதாபி:

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் அபுதாபியில் உள்ள மெடோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு ஆர்வலர்களுடன் உரையாடினார். அப்போது கம்பீரிடம் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறீர்களா என ஒரு மாணவர் கேட்டார். அப்போது கம்பீர் சிரித்தபடி பதில் கூறியதாவது:

    நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறேன். தேசிய அணிக்கு பயிற்சி அளிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை.

    உலகெங்கிலும் உள்ள 140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதைவிட பெரியதாக எப்படி இருக்க முடியும்?

    இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவது நான் அல்ல, 140 கோடி இந்தியர்கள்தான். அவர்கள் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவார்கள்.

    எல்லோரும் நமக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால், நாங்கள் விளையாடி அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினால், இந்தியா உலகக் கோப்பையை வெல்லும். மிக முக்கியமான விஷயம் அச்சமின்றி இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • கவுதம் கம்பீரை பயிற்சியாள்ராக தேர்ந்தெடுக்க பிசிசிஐ மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
    • இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கவுதம் கம்பிர் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதிவிக்கு ராகுல் டிராவிட்டிற்கு பிறகு அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    விவிஎஸ் லக்ஷ்மண், கௌதம் கம்பீர், ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் பிளெமிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் முதலில் அடிபடத் தொடங்கின. இவர்களுள் கவுதம் கம்பீரை பயிற்சியாள்ராக தேர்ந்தெடுக்க பிசிசிஐ  மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

     

    இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடநதபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக ஐபி எல் போட்டிகளில் பிசியாக உள்ள கவுதம் கம்பிர் இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

     

    அதாவது இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு தான் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற உத்தரவாதத்தை பிசிசிஐ அளித்தால் மட்டுமே அதற்கு விண்ணப்பிப்பேன் என்று கவுதம் நிபந்தனை விதித்துள்ளார். இந்த கண்டிஷனை பிசிசிஐ ஏற்றுக்கொள்ள அதிகம் வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. இதற்கிடையில் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பிக்கும் தேதி நாளையுடன் (மே 27) முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
    • ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வேண்டவே வேண்டாம்! போட்டுடைத்த ஜஸ்டின் லாங்கர்.. கே.எல் ராகுல் கொடுத்த அட்வைஸ் இதுதான்

    டி20 உலகக் கோப்பை 2024க்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த பதவிக்கான விண்ணப்பம் வரும் மே 28 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கே.எல். ராகுல், விவிஎஸ். லக்ஷ்மன், ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் அடிபடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக, தான் விரும்பவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக உள்ள ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்த லாங்கர், ஐபிஎல் போட்டிகளின் போது சமீபத்தில் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலுடன் உரையாடினேன். அப்போது பயிற்சியாளர் பதவி குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் எதிர்கொள்ளும் அரசியலும் அழுத்தமும் எந்த ஒரு ஐபிஎல் அணி பயிற்சியாளரையும் விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதை மிகச் சரியான கருத்து என்று தான் கருதுவதாக லாங்கர் குறிப்பிட்டுள்ளார்.

     

    நேர்காணலில் தொடர்ந்து பேசிய லாங்கர், பயிற்சியாளர் பணி அனைத்தையும் உள்ளடக்கிய பாத்திரம் என்பதை நான் அறிவேன். ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன், அது மிகவும் சோர்வூட்டக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார். 

     

    • இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
    • பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அடுத்த இந்திய அணி பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிப்பதன் சாதக பாதகங்களை குறித்து மனம் திறந்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கேகேஆர் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர், ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு இந்தியாவின் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அடுத்த இந்திய அணி பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிப்பதன் சாதக பாதகங்களை குறித்து மனம் திறந்துள்ளார். ஸ்போர்ட்ஸ் கீடா நிகழ்ச்சி ஒன்றில் வாசிம் பேசுகையில், கம்பீர் எளிமையாகவும் நேர்மையாகவும் இருப்பவர் அதே நேரம், அப்பட்டமாக உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக பேசக்கூடியவர், எதையும் இருமுறை யோசிக்காமல் பேசுவார்.

     

    இது இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு குணமாகும். சில நேரங்களில் ஆக்ரோஷமாகவும் இருப்பார், இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அவர் சிறந்தவராக இருப்பார். அவர் இந்த பதவியை ஏற்றுக்கொள்வாரா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    விவிஎஸ் லக்ஷ்மண் அல்லது ஆஷிஷ் நெஹ்ரா இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு பொருத்தமாக இருப்பார்களா என்பது குறித்தும் வாசிம் அக்ரம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தனது பபேட்டியில் அவர், நானும் வேறு சில பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது.

     

    ஆசிஷ் நெஹ்ராவை சுற்றியிருக்க அனைவரும் விரும்புவர். மேலும் லக்ஷ்மன் சிறந்த மனிதர். அவர் என்சிஏ தலைவர், 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு கைகொடுக்கும் என்று தெரிவித்துள்ளார். 

     

    • இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் தேர்ந்தெடுப்பது சவாலானதாக மாறியுள்ளது.
    • பிசிசிஐயின் விருப்பப்பட்டியலில் கம்பீர் தற்போது முதலிடத்தில் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் தேர்ந்தெடுப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிசிஐ) சவாலானதாக மாறியுள்ளது. விண்ணப்பங்களுக்கான காலக்கெடு வரும் மே 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த பதவிக்கு கௌதம் கம்பீர் (கேகேஆர் அணியின் பயிற்சியாளர்), ஸ்டீபன் ஃப்ளெமிங் (சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சியாளர்), ஜஸ்டின் லாங்கர் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர்) மற்றும் ஸ்ரீலங்கா அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே ( மும்பை இந்தியன்ஸின் செயல்திறன் தலைவர்) ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.

    அனைவரும் அதிக லாபம் அளிக்கும் ஐபிஎல் தொடர் சம்பந்தமான வேலைகளில் பிசியாக உள்ளதால் அடுத்த 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை ஆண்டுக்கு 10 மாதங்கள் அணியுடன் பயணிக்கக்கூடிய வலுவான ஒரு பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருகிறது.

    ஐபிஎல் வேலையில் ஈடுபடாதவர் தற்போதைய என்சிஏ தலைவர் விவிஎஸ் லட்சுமண் மட்டுமே. லக்ஷ்மண் பயிற்சியாளர் பணியை ஏற்க தயக்கம் காட்டிவருவதாக தெரிகிறது. மேலும் தற்போது பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுடன் பேசவும், அவர்கள் வேலையில் ஆர்வமாக உள்ளனரா எனச் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

     

    பிசிசிஐயின் விருப்பப்பட்டியலில் கம்பீர் தற்போது முதலிடத்தில் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் மூத்த வீரர்களும் கம்பீரும் சமீப காலமாக நன்றாகப் பழகி வருவதாகத் தெரிகிறது. கேகேஆர் அணியுடன் அகமதாபாத்தில் உள்ள கம்பீருடன் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று கூறப்படுகிறது. கடைசியாக ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • ஏ.ஆர். ரகுமானின் 'சிங்கப் பெண்ணே' பாடல் வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது
    • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் கவிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    சென்னையில் மகளிர் தின விழாவையொட்டி சிறந்த மகளிருக்கான விருது வழங்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய மகளிர் கபடி பயிற்சியாளர் கவிதா செல்வராஜுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவிதா பேசியதாவது :-

    கடந்த 2013-ஆம் ஆண்டு கபடி போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்கள் பெற்றேன். மேலும் புகழின் உச்சியில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டதால் கபடி விளையாட்டை தொடராமல் விட்டு விட்டேன். தொலைக்காட்சியில் கூட விளையாட்டை

    பார்க்க மாட்டேன்., எல்லாவற்றையும் மறந்து இருந்தேன். 2019- ல் வெளிவந்த 'பிகில்' படத்தை ஒரு தியேட்டரில் பார்த்த போது ஏ.ஆர். ரகுமானின் 'சிங்கப் பெண்ணே' பாடல் வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது.

    அந்த பாடல் வரிகள் எனக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது. மீண்டும் கபடி விளையாட்டுக்கு சென்று சாதிக்க வேண்டும்., எனது திறமைகளை கபடி உலகில் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன்.

    அதனை எனது கணவர், மாமியாரிடம் சொன்னேன். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் இந்திய மகளிர் கபடி பயிற்சியாளர் பதவி கிடைத்தது. அதன் மூலம் மகளிர் கபடி குழுவினருக்கு பயிற்சியளித்து வருகிறேன்.

    எனது பயிற்சி மூலம் மகளிர் கபடி குழுவுக்கு பல பரிசுகள் கிடைத்தன. இதற்கு காரணம் 'சிங்கப்பெண்ணே' பாடல் தான். அந்த பாடல் எனக்கு ஒரு முன் உதாரணமாக அமைந்தது. இந்த பாடலை கொடுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு மிக்க நன்றி. இந்த தகவல் ஏ.ஆர் ரகுமானை சென்றடைய வேண்டும் என்று கூறினார்.





     


    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. அதனை பார்த்தஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் கவிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் 'உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி கவிதா.. நீங்கள் உயர்வடைந்து கொண்டே இருங்கள் என அவர் பதிலளித்து உள்ளார்.

    • சென்னையில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் பல்லேடியம் அரங்கில் நியூயார்க் ‘கோச்’ பிராண்டின் புதிய டேபி (Tabby) கைப்பைகள் அறிமுக விழா நடைபெற்றது.
    • இதில் நடிகைகள் ஜனனி, பார்வதி நாயர், யாஷிகா ஆனந்த், சம்யுக்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னையில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் பல்லேடியம் அரங்கில் புகழ் பெற்ற நியூயார்க் 'கோச்' பிராண்டின் புதிய டேபி (Tabby) கைப்பைகள் அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்கள் ஜனனி, பார்வதி நாயர், யாஷிகா ஆனந்த், சம்யுக்தா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பிற துறையைச் சேர்ந்த பிரபலங்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.



    புகழ்பெற்ற ஆடம்பர பிராண்டான 'கோச் நியூயார்க்' என்பது கோச் என அழைக்கப்படுகிறது. அதன் அதிநவீன லெதர் கைப்பைகள், சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்கள் என அனைத்தும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவையாகும். அமெரிக்க பிரீமியம் ரக பிராண்டான இதன் பொருட்கள் கடந்த பல ஆண்டுகளாக பலரின் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

    பல்லேடியத்தில் மே 27–ந்தேதி மாலை நடந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் இறுதி வரை 'கோச்' பிராண்டின் அதி-ஆடம்பரத்தின் மிக உயர்ந்த பொருட்கள் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதன் பிரத்யேக லெதர் டெபி கைப்பைகளின் புதிய தொகுப்பை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் முழுமையாக ரசித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நவநாகரீகத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த பிராண்டின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

    • பயிற்சியாளர் முருகேசன் திடீரென கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கற்பழிக்க முயன்றாக தெரிகிறது.
    • அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு கால்பந்து, ஆக்கி, தடகளம், கூடைப்பந்து, வாலிபால், நீச்சல் உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி மைதானங்கள் உள்ளது.

    இங்கு தினமும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் ஸ்குவாஷ் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் பயிற்சி முடித்த கல்லூரி மாணவி தனக்கு அளிக்க வேண்டிய சான்றிதழ் தொடர்பாக பயிற்சியாளரான முருகேசன் என்பவரிடம் கேட்டார்.

    அப்போது, சான்றிதழ் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள தனது வீட்டில் உள்ளதாகவும், அதை அங்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறும் மாணவியிடம் பயிற்சியாளர் முருகேசன் கூறினார். இதைத்தொடர்ந்து மாணவி பயிற்சியாளரின் வீட்டுக்கு சென்றார். அப்போது தனிமையில் இருந்த பயிற்சியாளர் முருகேசன் திடீரென கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கற்பழிக்க முயன்றாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவரிடம் இருந்து தப்பிக்க வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார்.

    அங்கிருந்து தப்பிய மாணவி இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி பயிற்சியாளர் முருகேசனை கைது செய்தனர்.

    அவர் மீது அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    கைதான பயிற்சியாளர் முருகேசன் மீது ஏற்கனவே ரெயில்வே சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்காலிக பயிற்சியாளர் பணியில் இருந்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் மையத்தில் மேஜைப்பந்து பயிற்சியாளராக விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 'விளையாடு இந்தியா" திட்ட நிதியுதவியில் தொ டக்க நிலை மேஜைப்பந்து பயிற்சிக்கா ன விளையாடு இந்தியா மாவட்ட மையம் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளை யாட்ட ரங்கில் அமைக்கப்பட உள்ளது. இதில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்க ளுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்க தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட மேஜைப்பந்து வீரர்-வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுக ளாகவும், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

    சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேச போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

    இது நிரந்தரப்பணி அல்ல. தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தர பணியோ கோர இயலாது. கேலோ இந்தியா மாவட்ட மையங்களில் ஆர்வமுள்ள கடந்த சாம்பியன் விளையாட்டு வீரர்களை பயிற்சியாளர்களாக பணிபுரியுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய விண்ணப்பத்தை ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டு 3.3.2023 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.தகுதி வாய்ந்த வி ண்ணப்பதா ரர்களுக்கு நேர்முகத் தேர்வு ராமநா தபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #GaryKirsten #Coach #IndianWomenCricket
    மும்பை:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவி காலம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்கும் முடிவுக்கு வந்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் விருப்பம் உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.

    கிப்ஸ், மனோஜ் பிரபாகர், ஓவைஸ் ஷா, மாஸ்கரனாஸ், ரமேஷ் பவார் உள்ளிட்டோர் பதவிக்கு விருப்பம் தெரிவித்த நிலையில், தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டனும் பயிற்சியாளர் போட்டியில் இணைந்துள்ளார். அவரும் விண்ணப்பம் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 51 வயதான கிர்ஸ்டன், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு 3 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்ததோடு 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்கு வகித்தார்.

    கபில்தேவ் தலைமையிலான இடைக்கால கமிட்டி விண்ணப்பித்தவர்களிடம் வருகிற 20-ந்தேதி நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும். #GaryKirsten #Coach #IndianWomenCricket 
    ×