என் மலர்
டென்னிஸ்
- அல்காரசின் பயிற்சியாளாராக இருந்து வருபவர் ஜுவான் கார்லோஸ் பெராரோ.
- இவரது பயிற்சியில் 6 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் ஆகி சாதனை படைத்தார்.
மாட்ரிட்:
டென்னிஸ் உலகில் நம்பர் 1 வீரராக திகழ்ந்து வருபவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வீரர் கார்லோஸ் அல்காரஸ் (22). இவரது பயிற்சியாளாராக இர்ந்து வருபவர் ஜுவான் கார்லோஸ் பெராரோ.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டாக தனக்கு பயிற்சி அளித்து வந்த பயிற்சியாளர் ஜுவான் கார்லோஸ் பெரெரோ உடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்கிறேன் என அல்காரஸ் திடீரென அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அல்காரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைப் பருவக் கனவுகளை நிஜங்களாக மாற்றியதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
அல்காரஸ் தனது 16-வது வயதில் இருந்து ஜுவானிடம் பயிற்சிகள் பெற்று வந்தார். இதனால் 6 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் ஆகி சாதனை படைத்தார். 8 மாஸ்டர்ஸ் 1000 போட்டிகள் உள்பட 24 போட்டிகளில் அல்காரஸ் சாம்பியன் ஆனார். தனது 19-வது வயதில் உலகின் நம்பர் 1 வீரராக உருவெடுத்து சாதனை படைத்தார்.
- 2025-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெலாரசின் சபலென்கா தேர்வு செய்யப்பட்டார்.
- சபலென்கா 2025-ம் ஆண்டு முழுவதும் உலகத் தரவரிசையில் நம்பர்-1 வீராங்கனையாக நீடித்தவர்.
பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (டபிள்யு.டி.ஏ.) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. உலகின் பல்வேறு மீடியாக்கள் இணைந்து இவர்களைத் தேர்வு செய்கின்றன.
இந்நிலையில், சிறப்பான வளர்ச்சி கண்ட வீராங்கனையாக அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா (24), தேர்வு செய்யப்பட்டார்.
இரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர்.
2025-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெலாரசின் சபலென்கா (27), தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், போலந்தின் இகா ஸ்வியாடெக்கிற்கு அடுத்து, தொடர்ந்து 2-வது ஆண்டாக இவ்விருது பெற்ற வீராங்கனை ஆனார் சபலென்கா.
சபலென்கா 2025-ம் ஆண்டு முழுவதும் உலகத் தரவரிசையில் நம்பர்-1 வீராங்கனையாக நீடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலந்தின் இகா ஸ்வியாடெக் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
- அனிஸ்மோவா முதல் முறையாக டாப் 5 பட்டியலுக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா முதலிடத்திலும், போலந்தின் இகா ஸ்வியாடெக் இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
அமெரிக்காவின் கோகோ காப் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 5வது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் அமென்டா அனிஸ்மோவா 4-வது இடம் பிடித்து தனது சிறந்த தரநிலையைப் பதிவு செய்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமென்டா அனிஸ்மோவா அசுர வளர்ச்சி கண்டுள்ளார். 2023-தரவரிசையில் 359வது இடத்தில் இருந்த அவர் கடந்த ஆண்டு டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவில் நடந்து வருகிறது.
- 2வது தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
செங்டு:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவின் செங்டு நகரில் நவம்பர் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல்,
சீனாவின் யுங்சாகேட் பு உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சீன வீரர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவில் நடந்து வருகிறது.
- முதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.
செங்டு:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவின் செங்டு நகரில் நவம்பர் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், சீனாவின் ஜாங் மிங்குல் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 2-6 என இழந்த சுமித் நாகல் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-0, 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- உலக டென்னிஸ் லீக்கின் முதல் 3 சீசன் யுஏஇ-யில் நடைபெற்றது.
- தற்போது பெங்களூருவில் டிசம்பர் 17 முதல் 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
உலக டென்னிஸ் லீக்கின் முதல் மூன்று சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. 4ஆவது சீசன் வருகிற டிசம்பர் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பெங்களூரு எஸ்.எம். கிருஷ்ணா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் நான்கு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர்கள் என மொத்தம் 16 பேர் இந்த லீக்கில் விளையாடுகின்றனர்.
கேம் சேஞ்சர்ஸ் பால்கான்ஸ் அணியில் டேனில் மெத்வதேவ், ரோகன் போபண்ணா, மக்டா லினேட் மக்றும் சஹஜா யமலபள்ளி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
வி.பி. ரியாலிட்டி ஹாக்ஸ் அணியில் யுகி பாம்ரி, மாயா ரேவதி, எலினா ஸ்விடோலினா, டெனிஸ் ஷபோவலோவ் ஆகியோர் இடம பிடித்துள்ளனர்.
ஆசிஸ் மாவெரிக்ஸ் கைட்ஸ் அணியில் நிக் கர்கியோஸ், தக்ஷினேஷ்வர் சுரேஷ், மார்தா கோஸ்ட்யுக், அங்கிதா ரெய்னா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஏஓஎஸ் ஈகிள்ஸ் அணியில் கெயில் மோன்பில்ஸ், சுமித் நகல், பவுலா படோசா, ஸ்ரீவள்ளி பாமிதிபாட்டி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்றது.
- இறுதிப்போட்டியில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்றது.
இத்தாலியின் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் வென்று மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- அரையிறுதி சுற்றில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் தோல்வி அடைந்தார்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் மோதினர்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், இத்தாலியின் சின்னருடன் மோதுகிறார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- அரையிறுதி சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.
லீக் சுற்றுகளின் முடிவில் இத்தாலியின் சின்னர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற இறுதிப்போட்டியில் சின்னர், 2வது அரையிறுதியில் வெற்றி பெற்றவருடன் மோதுகிறார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- முதல் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலிய வீரரை எதிர்கொள்கிறார்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.
ஜிம்மி கனோர்ஸ் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்டிஸ் டி மினார் இடம்பெற்றனர்.
லீக் சுற்று முடிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் முதல் இரு இடங்களைப் பெற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற உள்ள முதல் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதுகிறார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- 3-வது சுற்றில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் வெற்றி பெற்றார்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 3வது சுற்றில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய கனடா வீரர் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற அரையிறுதியில் கனடாவின் பெலிக்ஸ், ஸ்பெயினின் அல்காரஸ் உடன் மோதுகிறார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- 3-வது சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.
ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 3வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்றார்.
நாளை நடைபெற அரையிறுதியில் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதுகிறார்.






