என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stefanos Tsitsipas"

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஜெர்மனியின் டேனியல் ஆல்ட்மயர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜெர்மனி வீரர் முதல் செட்டை 7-6 (7-5) என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக சிட்சிபாஸ் அடுத்த இரு செட்களை 6-1, 6-4 என வென்றார்.

    இதில் சுதாரித்துக் கொண்ட டேனியல் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 7-5 என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சிட்சிபாஸ் 2வது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் சிட்சிப்போஸ் - பெஞ்சமின் போன்சி மோதினார்.
    • பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சிட்சிபாஸ் கைப்பற்றினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கிரெக்க வீரர் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் - பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்சி உடன் மோதினார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சிட்சிபாஸ் கைப்பற்றினார். அடுத்த 2, 3-வது சுற்றை பெஞ்சமின் கைப்பற்றி அசத்தினார். இதனால் பெஞ்சமின் போன்சி 6-7 (4-7), 6-3,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர், சிட்சிபாஸ் ஆகியோர் நேரடியாக 2வது சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றனர்.

    இன்று நடந்த 2வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், கொலம்பியாவின் டேனியல் இலாஹி கலன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் பேபியன் மாரோசானை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காயத்தால் விலகினார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் வேலன்டின் ரோயர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரோயர் முதல் செட்டை 6-3 என வென்றார். இரண்டாவது செட்டிலும் 6-2 என ரோயர் முன்னிலை பெற்றிருந்தார்.

    அப்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக சிட்சிபாஸ் விலகினார். இதன்மூலம் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரும், கிரீசை சேர்ந்தவருமான சிட்சிபாஸ், இத்தாலியின் மேட்டியோ கிகாண்டே உடன் மோதினார்.

    முதல் செட்டை 6-4 என கிகாண்டே வென்றார். இரண்டாவது செட்டை சிட்சிபாஸ் 7-5 என வென்றார். இதனால் சுதாரித்த இத்தாலி வீரர் மேட்டியோ அடுத்த இரு செட்களை 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 3வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

    இதில் முசெட்டி 7-5, 7-6 ( 7-3) என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    ஏற்கனவே ஜோகோவிச், ரூப்லெவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 2வது சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்றார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்றில் சிட்சிபாஸ், ஜெர்மன் வீரர் ஜேன் லென்னார்டு உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை3-6 என இழந்த சிட்சிபாஸ், அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பல்கேரியாவின் டிமித்ரோவ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சிலி வீரர் நிகோலஸ் ஜேரியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காலிறுதியில் திடீரென விலகினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் ஆர்தர் பில்ஸ் 2-0 என முதல் செட்டில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சிட்சிபாஸ் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக திடீரென அறிவித்தார். இதையடுத்து, ஆர்தர் பில்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் ஆர்தர் பில்ஸ், கார்லோஸ் அல்காரசுடன் மோத உள்ளார்.

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேயஸ் உடன் மோதினார்.

    இதில் 4-6 என முதல் செட்டை இழந்த ரூனே அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் ரெய்லி ஒபெல்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங் உடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரெய்லி ஒபெல்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

    இதில் 6-1 என முதல் செட்டை சிட்சிபாஸ் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட லாரன்சோ முசெட்டி அடுத்த இரு செட்களை

    6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் நடப்பு சாம்பியனான சிட்சிபாஸ் காலிறுதி சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் டேனியல் அல்ட்மையர் உடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், போர்ச்சுகலின் நுனோ போர்ஜஸ் உடன் மோதினார். இதில் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்ற சிட்சிபாஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ×