என் மலர்
நீங்கள் தேடியது "துபாய் ஓபன் டென்னிஸ்"
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-4 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக யூகோ ஹம்பர்ட் 2வது செட்டை 7-6 (7-5) என போராடி வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-3 என்ற கணக்கில் வென்ற ரூப்லெவ், காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் மெத்வதேவ் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பி உடன் மோதுகிறார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.
- இதில் கிரீஸ் வீரர் ஸ்டெபனஸ் சிட்சிபாஸ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய யூகோ ஹம்பர்ட் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சிட்சிபாஸ் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.
- இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சீனாவின் ஷான் ஜுன்செங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 2வது சுற்றில் மெத்வதேவ் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா உடன் மோதுகிறார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.
- இதில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்காவின் கோகோ காப் அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய உக்ரைன் வீராங்கனை 6-4 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை கோகோ காப் 7-6 (15-13) என்ற செட் கணக்கில் வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை உக்ரைன் வீராங்கனை 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்காவின் கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலா, உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அனிசிமோவா முதல் செட்டை 6-1 என எளிதில் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெகுலா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்காவின் கோகோ காப் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பெகுலா 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-0, 6-2 என்ற செட் கணக்கில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை அமெண்டா அனிசிமோவா உடன் மோதுகிறார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, குரோசியாவின் அண்டோனியா ருசிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட குரோசிய வீராங்கனை 2வது செட்டை 6-4 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் குரோசிய வீராங்கனை 1-0 என முன்னிலை பெற்றிருந்தபோது ரிபாகினா காயத்தால் விலகினார். இதனால் குரோசிய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்காவின் கோகோ காப் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு கஜகஸ்தானின் எலினா ரிபாகினா நேரடியாக தகுதி பெற்றார். அவர் ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பைரெல் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் கலின்ஸ்கயாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி நேரடியாக தகுதி பெற்றார். அவர் பிலிப்பைன்சின் அலெக்சாண்டர் ஈலா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பிலிப்பைன்ஸ் வீராங்கனை 6-1, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான பவுலினி தொடரில் இருந்து வெளியேறினார்.
- துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவின் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
- இதில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவை வீழ்த்தினார்.
துபாய்:
துபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரூப்லெவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ஏற்கனவே, மெத்வதேவ் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை அரையிறுதியில் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெத்வதேவ் இந்த ஆண்டில் ரோட்டர்டாம், தோஹா மற்றும் துபாய் என தொடர்ச்சியாக 3 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.






