என் மலர்
ஐக்கிய அரபு அமீரகம்
- அமீரக அதிகாரி மற்றும் காவலர்கள் ஜெலென்ஸ்கியை வரவேற்றனர்.
- அமைதி பேச்சுவார்த்தைக்கு உகந்த இடமாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். மாஸ்கோ போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான உத்வேகம் அதிகரித்து வரும் நிலையில், ஜெலன்ஸ்கியின் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் சவுதி அரேபியாவில் வைத்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதாக தெரிவித்து இருந்தார். போர் தொடங்கியதில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ரஷிய மற்றும் உக்ரேனியர்கள் அபு தாபி மற்றும் துபாய்க்கு தாயகமாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். இதுதவிர கடந்த காலங்களில் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வதிலும் அமீரகம் உதவியுள்ளது.
இதன் காரணமாக போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் உகந்த இடமாக விளங்குகிறது. ஜெர்மனியில் நடந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜெலென்ஸ்கி அபு தாபிக்கு வந்தார். விமான நிலையத்தில் அமீரக அதிகாரி மற்றும் காவலர்கள் ஜெலென்ஸ்கியை வரவேற்றனர்.
போர் தொடங்கியதில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஜெலன்ஸ்கி பயணம் செய்தது இதுவே முதல் முறை ஆகும்.
- கண்டத்தின் நில பகுதிகளை 7 நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன.
- துருவ பகுதியில் சூரிய கதிர்கள் சாய்வாக வந்து படுவதால் சூடு தெரியாது.
அபுதாபி:
நமது பூமி 23.5 டிகிரி சாய்வாண கோணத்தில் ஒரே அச்சில் சுழல்வதால் வட, தென்துருவ பகுதிகள் உருவாகின. இதில் தென் துருவ பகுதியில்தான் உலகின் 5-வது பெரிய கண்டமான அண்டார்டிகா உள்ளது. சுற்றி எங்கு பார்த்தாலும் பனிப்பாறைகள் சூழ்ந்து வெண்மையாக காணப்படும் சிக்கலான பகுதியாகும்.
தென் துருவத்தில் வாழ தகவமைப்புகளுடன் கூடிய விலங்குகள் மற்றும் தாவரங்கள் மட்டுமே அங்கு வாழ முடியும். அந்த அண்டார்டிகா கண்டத்தில் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என கடந்த 1959-ம் ஆண்டு 12 நாடுகள் இரு உடன்படிக்கையை ஏற்படுத்தியது.
இதில் தற்போது 49 நாடுகள் இணைந்துள்ளன. இந்த பகுதியில் 28 நாடுகள் ஆங்காங்கே ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளன. கண்டத்தின் நில பகுதிகளை 7 நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன. கோடை காலம் நிலவும் போது மொத்தம் 5 ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் வந்து தங்கி இருப்பர். அண்டார்டிகா மண்ணில் கொடி நாட்டிய 13-வது நாடு இந்தியாவாகும்.
துருவ பகுதியில் சூரிய கதிர்கள் சாய்வாக வந்து படுவதால் சூடு தெரியாது. அதேபோல சூரியன் வானின் உச்சிக்கு வருவதில்லை. இதில் தற்போது அமீரக தேசிய வானிலை மையம், பல்கேரியாவின் துருவ ஆராய்ச்சி பயிற்சி மையத்துடன் இணைந்து கூட்டு அறிவியல் பயணத்திற்கு ஏற்பாடு செய்தது.
இதில் அமீரக தேசிய வானிலை மையத்தில் பணியாற்றும் அகமது அல் காபி மற்றும் பதர் அல் அமெரி ஆகிய 2 நிபுணர்கள் பூமியின் தென் துருவத்தை வெற்றிகரமாக அடைந்து தங்கள் பயணத்தை நிறைவு செய்துள்ளனர். இதற்காக இருவருக்கும் தீவிர பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து வெற்றிகரமாக இருவரும் பூமியின் தென் துருவத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளனர். இந்த நிபுணர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் 2 வானிலை மற்றும் நிலநடுக்க கண்காணிப்பு மையங்கள் அமீரகம் சார்பில் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் துருவப்பகுதியில் வானிலை மாற்றங்கள் மற்றும் நிலநடுக்க செயல்பாடுகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும்.
இது உலகின் சுற்றுச்சூழல் நிலை குறித்த புரிதலை மேம்படுத்தும் என அமீரக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குனரும், சர்வதேச வானிலை ஆராய்ச்சி அமைப்பின் தலைவருமான டாக்டர் அப்துல்லா அல் மண்டூஸ் தெரிவித்துள்ளார்.
- வைட்டமின்களில் ஏ, டி, இ, கே ஆகியவை கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது.
- வைட்டமின் சி அல்லது டி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்தில் கற்களை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.
துபாய்:
அமீரக மருத்துவ நிபுணர்கள் கூறிய விளக்கங்களின் தொகுப்பு பின்வருமாறு:-
உலகில் பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் மிக சிறிய அளவில் தேவைப்படும் அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்து வைட்டமின் ஆகும். வைட்டமின்களின் தேவை பெரும்பாலும் உண்ணும் உணவின் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவை பெற நல்ல சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். லத்தீனில் விட்டா என்றால் உயிர், அமைன் என்றால் நைட்ரஜன் மூலக்கூறுகள் என்பது பொருளாகும். மனிதர்களுக்கு தேவையான 13 ஊட்டச்சத்துக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைட்டமின்களில் ஏ, டி, இ, கே ஆகியவை கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது. பி மற்றும் சி வைட்டமின் நீரில் கரையும் தன்மையுடையது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக வைட்டமின்கள் உள்ளன. இதனை கடந்து தற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கும் வைட்டமின் குறைபாடு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டு மாத்திரை மற்றும் மருந்து வடிவங்களில் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த வைட்டமின்களை செயற்கையாக அதிகப்படியான அளவில் எடுத்துக்கொள்வது மற்றும் தவறான பயன்பாடுகள் காரணமாக உடல்நலனில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
சிலர் வைட்டமின்களை உட்கொள்வதில் தீங்கு ஏற்படுவது இல்லை என நம்புகின்றனர். ஆனால் இது தவறு என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதேபோல் இரும்பு, துத்தநாகம் ஆகிய நுண்ணூட்ட சத்துகள் செரிமான கோளாறு, குமட்டல், வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். வைட்டமின் சி அல்லது டி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்தில் கற்களை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.
வைட்டமின்களை சமூக ஊடகங்களில் பார்த்து நிபுணர்கள் அல்லாதவர்களின் ஆலோசனை கேட்டு உட்கொள்வது ஆபத்தானது ஆகும். ஏனெனில் இந்த பொருட்கள் எதிர்விளைவை ஏற்படுத்தும் தன்மையை பெற்றுள்ளன. நீண்ட காலத்திற்கு கடுமையான உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகப்படியான வைட்டமின்களை உட்கொள்வது என்பது விஷமுள்ள தேனை பருகுவது போன்றது ஆகும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
- முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வங்கதேசம் தகுதி பெற்றது
- 2 ஆவது அரையிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை , வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வங்கதேசம் தகுதி பெற்றது. 2 ஆவது அரையிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 49.1 ஓவர்கள் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக ரிசான் ஹொசைன் 47 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் யுதாஜித் குஹா, சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 139 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இதன்மூலம் 2 ஆவது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை வங்கதேசம் கைப்பற்றியது.
கடந்த ஆண்டு ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றிய வங்கதேச அணி தொடர்ச்சியாக இந்தாண்டும் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
- இமாம்கள் மற்றும் வழிபாட்டாளர்கள் இணைந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
- நாடு முழுவதும் "இஸ்திஸ்கா" வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை பெய்ய வேண்டி பொதுமக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அதிபர் ஷேக் முகமது பின் சையது வலியுறுத்தி இருந்தார். அமீரகத்திற்கு மழையும், இரக்கமும் அளித்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் என்று பொது மக்களிடம் அவர் தெரிவித்து இருந்தார்.
அந்த வகையில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த "சலாத் அல் இஸ்திஸ்கா" சடங்கு, தண்ணீரின் முக்கியத்துவத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இமாம்கள் மற்றும் வழிபாட்டாளர்கள் இணைந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
சிறப்பு வழிபாட்டில், அஜ்மன் ஆட்சியாளர் ஷேக் உமைத் பின் ரஷீத் அல் நுவாமி, ராஸ் அல் கைமா ஆட்சியாளர் ஷேக் சவுத் பின் சாகிர் அல் குவாசிமி ஆகியோர் கலந்து கொண்டு நாடு முழுவதும் "இஸ்திஸ்கா" வழிபாட்டில் ஈடுபட்டனர்.
வழிபாட்டில் தெய்வீக கருணை, மழை பொழிவு, வளம் செறிந்த பயிர்கள், அதிபர் மற்றும் அவரை பின்பற்றி நடக்கும் ஆட்சியாளர்கள் ஆகியோரை பாதுகாப்பது மற்றும் தேசத்தின் தலைவர்களுக்கு தெய்வீக ஆசி கிடைக்க வேண்டும் என்று வேண்டி இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.
- டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷார்ஜா:
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை , வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில், 2வது அரையிறுதியில் இலங்கை, இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லக்வின் அபேசிங்க 69 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் சேத்தன் சர்மா 3 விக்கெட், ஆயுஷ் மத்ரே, கிரண் சோர்மலே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இலங்கை பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
ஆயுஷ் மத்ரே 34 ரன்னிலும், ஆண்ட்ரே சித்தார்த் 22 ரன்னிலும் அவுட்டாகினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி அரை சதமடித்து 67 ரன்னுக்கு அவுட்டானார்.
இறுதியில் இந்தியா 21.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷி க்கு வழங்கப்பட்டது.
முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை சுருட்டி எளிதில் வீழ்த்தியது வங்கதேசம். இறுதிப்போட்டியில் வங்கதேசத்துடன் இந்திய அணி மோதுகிறது.
- டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 44 ஓவரில் 137 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 138 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இப்போட்டியில் ஐக்கிய அரபு அமீரக வீரர் அடித்த பந்தை பவுண்டை லைனில் தடுத்த இந்திய வீரர்கள் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங்கிடம் பந்தை வீசினர். அந்த பந்தை பிடித்த ஹர்வன்ஷ் சிங் திரும்பி பார்க்காமலேயே எம்.எஸ்.டோனியை போல ஸ்டம்பை தாக்கி ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.
ஆனால் அதற்கு ஐக்கிய அரபு அமீரக வீரர் கிரீசுக்குள் வந்துவிட்டதால் ரன் அவுட் இல்லாமல் போனது. ஆனால் டோனியை போல நோ-லுக் ரன் அவுட்டை முயற்சித்த இளம் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங்கை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Just Indian wicketkeeper things! ?Harvansh Singh channels his inner Thala magic on the field ✨#SonySportsNetwork #AsiaCup #NextGenBlue #NewHomeOfAsiaCup #UAEvIND pic.twitter.com/hmnntCqzXW
— Sony Sports Network (@SonySportsNetwk) December 4, 2024
- டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஷார்ஜா:
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 44 ஓவரில் 137 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ரேயான் கான் அதிகபட்சமாக 35 ரன்னும், அக்ஷத் ராய் 26 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் யுதாஜித் குஹா 3 விக்கெட்டும், சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 138 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்தனர். ஆயுஷ் மாத்ரே 67 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 76 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
- டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய வங்கதேசம் 252 ரன்கள் எடுத்தது.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் ஆடிய வங்கதேசம் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. கேப்டன் நஜ்மல் ஹொசைன் ஷாண்டோ 72 ரன்னும், ஜாகர் அலி 37 ரன்னும், சவும்யா சர்க்கா 35 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. ரஹமத் ஷா மட்டும் தாக்குப்பிடித்து 52 ரன்கள் எடுத்தார்.
வங்கதேச அணியினரின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் 43.3 ஓவரில் 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 68 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமனிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது.
- அமீரகத்தின் சில இடங்களில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்பட்டது.
- வாகன ஓட்டிகள் சாலைகளில் இருக்கும் அறிவிப்பு பலகைகளை பார்த்து அதன்படி செயல்பட வேண்டும்.
துபாய்:
அமீரக தேசிய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த வெப்பநிலை வரும் வாரத்தில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். இதனால் காலநிலை இதமாக இருக்கும். அமீரகத்தின் வடமேற்கு பகுதியில் வருகிற சனிக்கிழமை முதல் காற்றின் வேகம் சற்று அதிகரித்து காணப்படும். இதுவும் வெப்பநிலை குறைவதற்கு காரணமாக இருக்கும்.
மேலும் அமீரகத்தின் சில இடங்களில் வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக துபாய் மற்றும் அல் அய்ன் இடையிலான பகுதிகளிலும், புஜேரா, ராசல் கைமா, கல்பா உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து கடல் மற்றும் மலைப்பகுதிகளில் ஏற்படும் மேகங்கள் காரணமாக இந்த மழை சற்று அதிகரிக்கும். குறிப்பாக அபுதாபியின் அல் தப்ரா பகுதியில் அதிக மழை பெய்யக்கூடும். ஓமன் கடல் பகுதிகளில் ஏற்படும் காற்று உள்ளிட்ட காலநிலை மாற்றம் காரணமாக மழை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) அமீரகத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். எனவே வெளியிடங்களுக்கு செல்பவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். கடலில் அலையின் வேகம் வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருக்கும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
அமீரகத்தின் சில இடங்களில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களில் காலை காலங்களிலும் பனிமூட்டம் நிலவ கூடும். எனவே வாகன ஓட்டிகள் சாலைகளில் இருக்கும் அறிவிப்பு பலகைகளை பார்த்து அதன்படி செயல்பட வேண்டும்.
காற்றின் காரணமாக ஏற்படும் புழுதியால் சாலைகளில் பார்வைத்திறன் குறைந்து இருக்கும். அமீரகத்தின் மேற்கு பகுதிகளில் இந்த காற்றின் வேகம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் அதிகமாக இருக்கும். அமீரகத்தில் குளிர்காலம் வருகிற டிசம்பர் 22-ந் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 158 ரன்கள் எடுத்தது.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று மற்றும் அரையிறுதி முடிந்துள்ளன.
இந்நிலையில், துபாயில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அமெலியா கெர் 43 ரன்களும் ப்ரூக் மேரி ஹாலிடே 38 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ஓரளவு தாக்குப் பிடித்து 33 ரன்கள் எடுத்தார்.
முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 128 ரன்கள் எடுத்தது.
ஷார்ஜா:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
லீக் சுற்றுகள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற 2வது அரையிறுதியில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜார்ஜியா பிளிம்மர் அதிக பட்சமாக 33 ரன்கள் எடுத்தார். சூஸ் பெட்ஸ் 26 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் தியேந்திரா டோடின் 4 விக்கெட்டும், பிளெட்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர். அந்த அணியின் தியேந்திரா டோடின் ஓரளவு போராடி 33 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.