என் மலர்
நீங்கள் தேடியது "United Arab Emirates"
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் ஏமாற்றப்படுவதாக புகார்கள் எழுகின்றன. பல போலி நிறுவனங்களின் கவர்ச்சி கரமான விளம்பரங்களை பார்த்து ஏமாறுபவர்கள் அதில் சிக்கி கொள்கின்றனர்.
இது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் துபாயில் ஒரு அறிக்கை வெளிட்டுள்ளார்.
அதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கம்பெனிகளில் வேலை வாய்ப்பு இருப்பதாக பொய்யான விளம்பரங்களை நம்பி இங்கு வந்து சிலர் ஏமாறுகின்றனர். அவர்கள் அத்தகைய விளம்பரங்களை நம்ப வேண்டாம்.
ஏதாவது சந்தேகம் இருப்பின் தூதரகத்துக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பி விளக்கம் பெற்றுக் கொள்ளலாம். வேலைக்கான உத்தரவுமற்றும் பணிக்கான விசா கிடைத்தாலும் அதை தூதரகத்துடன் தொர்பு கொண்டு அது உண்மைதானா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். எனவே மோசடி பேர்வழிகளின் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். #Embassy
இதில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் யுஏஇ அணியின் வீரர் கைபான் முபாரக் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் யு.ஏ.இ. அணி 1-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 88வது நிமிடத்தில் யு.ஏ.இ. அணியின் வீரர் அலி அகமது மாப்கவுத் ஒரு கோல் அடித்தார். கடைசி வரை போராடிய இந்திய அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இறுதியில், யு.ஏ.இ. அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் பக்ரைனை வரும் 14ம் தேதி சந்திக்கிறது. #AFCAsianCup #India #UnitedArabEmirates
இன்னும் ஒரு அணி தேர்வாவதற்கு தகுதிச்சுற்று நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - ஹாங் காங் அணிகள் மோதின.
மழைக் காரணமாக ஆட்டம் முழுமையாக நடைபெறவில்லை. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 24 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 24 ஓவரில் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங் காங் அணி களம் இறங்கியது. ஹாங் காங் 23.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை தொடருக்கு ஹாங் காங் தகுதிப் பெற்றுள்ளது. ஹாங் காங் 16-ந்தேதி பாகிஸ்தானையும், 18-ந்தேதி இந்தியாவையும் எதிர்கொள்கிறது.
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ‘பிக் டிக்கெட்’ லாட்டரி குலுக்கல் நடந்தது. அதில் இந்தியாவை சேர்ந்த ஜார்ஜ் மாத்யூ என்பவருக்கு முதல் பரிசுத்தொகையான 12 மில்லியன் திர்காம் கிடைத்தது.
இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜார்க்மாத்யூ வாங்கிய 175342 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு இந்த பரிசுதொகை கிடைத்துள்ளது.
இந்த லாட்டரியில் மேலும் 6 இந்தியர்களுக்கும் பரிசுதொகை விழுந்துள்ளது. அண்மை காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் பல இந்தியர்களுக்கு லாட்டரியில் பரிசுகள் கிடைத்து உள்ளன.
கேரளாவை சேர்ந்த தாடுஜா மாத்யூவுக்கு கடந்த ஜுலையில் முதல் பரிசு தொகையான ரூ.13 கோடியே 65 லட்சம் கிடைத்தது. அதற்கு முன்பு ஏப்ரலில் துபாயில் வசிக்கும் இந்திய டிரைவருக்கு ரூ.23 கோடி முதல் பரிசு விழுந்தது.
கடந்த ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் கேரளாவை சேர்ந்த மற்றொருவருக்கு அபுதாபி லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு தொகை கிடைத்தது. #UAElottery