என் மலர்

    நீங்கள் தேடியது "trafficking"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொள்ளை கும்பல் இரும்பு பொருட்கள் கடத்த முடி யாமல் தவித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் யாறேனும் அவ் வழியாக வந்தால் அவர்களை மிரட்டியும் வருவதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரியப் பட்டு பகுதியில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு கம்பெனி உள்ளது. இங்கு இருந்து பல்லாயிரம் டன் இரும்பு பொருட்களை ஏராளமானோர் தினந் தோறும் திருடிக் கொண்டு லாரி டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிளில் திருடி சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களில் தனியார் கம்பெனியிலிருந்து பல்லாயிரம் டன் கணக்கில் இரும்பு பொருட்கள் திருடி சென்றதாக போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்டம் முழுவதும் ஏராளமானவரை கைது செய்து வருகின்றனர். போலீசார் இரும்பு பொருட்கள் திருடும் கும்ப லை தீவிரமாக கண்கா ணித்து பல்வேறு நடவ டிக்கை எடுத்து வருவதால் கொள்ளை கும்பல் இரும்பு பொருட்கள் கடத்த முடி யாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கடற்கரை வழியாக திருடப்பட்ட இரும்பு பொருட்களை வாகனங்கள் மூலமாக மர்ம கும்பல் கடத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து தனியார் கம்பெனியில் இருந்து பெரிய அளவிலான இரும்பு பொருட்களை சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்து வாகனங்கள் மூலமாக புது சத்திரம் பகுதி அய்யம் பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார கடற்கரை ஓரமாக கொண்டு வரப்பட்டு கியாஸ் சிலிண்டர் மற்றும் வெல்டிங் மிஷின் ஆகிய வற்றை கொண்டு வந்து நள்ளிரவு முதல் அதிகா லை வரை இரும்பு பொருட்களை தங்களுக்கு தேவையான அளவில் பிரித்து எடுத்து 10 -க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் கடற்கரை ஓரமாகவே இரும்பு பொருட்களை கடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறேனும் அவ் வழியாக வந்தால் அவர்களை மிரட்டியும் வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் பல்வேறு கெடுபிடி விதித்தாலும் மர்ம கும்பல் நூதன முறையில் கடற்கரை ஓரமாக திருடப்பட்ட இரும்பு பொருட்களை கடத்தும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார், சிங்காரப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்குட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாலையோரம் ஒருவர் மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்தார்.

    இதைப் பார்த்த போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். அதில் 1,050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

    இது தொடர்பாக அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிச்சாண்டி (வயது 43) என்பதும், ரேஷன் அரிசிகளை கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் பிச்சாண்டி தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று பிச்சாண்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி பிச்சாண்டி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பில்லி சூனியம் வைத்து பெண்களை பாலியல் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு கடத்திய வழக்கில் பிரிட்டன் நர்சுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #VoodooMagic #TraffickingWomen
    லண்டன்:

    லண்டனைச் சேர்ந்த ஜோசப்பின் இயாமு என்ற நர்ஸ் (வயது 53), பில்லி சூனியம் செய்து நைஜிரியாவைச் சேர்ந்த பெண்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு கடத்தியதாக கைது செய்யப்பட்டார். விசாரணையில், பிரிட்டன் குடியுரிமை பெற்ற இயாமு தேசிய சுகாதார மையத்தில் செவிலியாக பணி புரிந்து வந்ததும், இவருக்கு பில்லி சூனியம் போன்ற மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு இருப்பதும் தெரியவந்தது.

    நைஜீரியாவைச் சேர்ந்த 5 பெண்களை தன் வலையில் விழ வைத்த இயாமு, மந்திரவாதி ஒருவர் மூலம் நடத்தப்படும் மிகவும் மாந்திரீக சடங்கில் (ஜூஜூ) பங்கேற்க செய்துள்ளார். அப்போது பூஜைகள் செய்து கோழியின் இதயத்தை சாப்பிட வைப்பது, புழுக்களுடன் கூடிய இரத்தத்தை குடிக்கச் செய்வது, பிளேடால் தங்கள் உடல்களில் கீறுவது என வக்கிரமான சடங்குகளை கட்டாயப்படுத்தி செய்ய வைத்துள்ளார். அதன்பின்னர், அவர்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் நாட்டுக்கு கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. 

    மேலும் ஜெர்மனி சென்று தொழில் செய்யும்போது எங்கும் தப்பி ஓடிவிடக்கூடாது, போலீசிடம் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி வாக்குறுதி பெற்றுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட இயாமு மீது பர்மிங்காம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 10 பெண் நீதிபதிகள் உள்ளிட்ட 11 நீதிபதிகள் கொண்ட குழு இவ்வழக்கை விசாரித்தது. சுமார் 10 வார காரலமாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், இயாமு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அப்போது, பில்லி சூனியம் வைத்துவிடுவதாக மிரட்டி பெண்களை பாலியல் தொழிலுக்காக நாடு கடத்திய இயாமுவுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. #VoodooMagic #TraffickingWomen
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள போதை பவுடரை கடத்தி வந்த சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து கேரளா வழியாக மாலத்தீவுக்கு போதை பொருள் கடத்த இருப்பதாக டெல்லியில் உள்ள தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இந்த தகவல் உடனடியாக கேரள போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கண் காணிப்பை பலப்படுத்தினர். பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.

    அப்போது மாலத்தீவுக்கு செல்ல இருந்த 3 பயணிகளை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மாலத்தீவைச் சேர்ந்த ஜாமன் அகமது(வயது24), சாபிங்(29), சானித்மாகின்(27) என்பது தெரிய வந்தது. அவர்களின் உடமைகளை பரிசோதித்த போது 17 கிலோ போதை பவுடர் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    சர்வதேச சந்தையில் இந்த போதை பொருளின் மதிப்பு ரூ.5 கோடியாகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    கைதானவர்களில் சானித் மாகின் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஆவார். இந்த தகவல் உடனடியாக டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வந்து கைதானவர்களிடம் விசாரணை நடத்தினர். திருவனந்தபுரத்தில் மிகப் பெரிய அளவில் போதை பொருள் சிக்கியதும், போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கைதாகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×