search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nurse"

    • ஜேசனுக்கு ஹீமோதெரபி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் காட்சிகளும், தொடர்ந்து நோயாளிகளுடன் நர்சு நடனமாடும் காட்சிகளும் உள்ளது.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நர்சுவின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    புற்றுநோயாளி ஒருவருக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நேரத்தில் அவரை உற்சாகப்படுத்துவதற்காக அவருடன் நர்ஸ் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    கொலம்பியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜேசன் என்ற நோயாளிக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக அந்த வார்டு முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வீடியோவில் அந்த வார்டில் உள்ள படுக்கைகளில் நோயாளிகள் அமர்ந்திருக்கும் நிலையில் ஜேசனுக்கு ஹீமோதெரபி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் காட்சிகளும், தொடர்ந்து நோயாளிகளுடன் நர்சு நடனமாடும் காட்சிகளும் உள்ளது.

    இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நர்சுவின் இந்த செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • ஷேக் முஜிப் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியது.
    • ஷேக் முஜிபின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் காமெடி ரெட்டி பள்ளியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் ஷேக் முஜீப் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    ஷேக் முஜிப் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியது.

    இதுகுறித்து ஷேக் முஜிபின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

    ஆஸ்பத்திரியில் எங்கு பார்த்தாலும் எலிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். அவர்களின் அலட்சியத்தால் தான் ஷேக் முஜிப்பை எலிகள் கடித்ததாக தெரிவித்தனர்.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மருத்துவக் கல்லூரி இயக்குனர் திரிவேணி மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த டாக்டர் காவியா, பொது மருத்துவ அலுவலர் டாக்டர் வசந்தகுமார் மற்றும் நர்ஸ் மஞ்சுளா ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    மேலும் எலிகளைப் பிடிக்க ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே கூண்டுகள் வைக்கப்படும். ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ள பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

    • அங்கீகரிக்கப்படாத அல்ட்ரா ஸ்கேனிங் எந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது.
    • விசாரணை மேற்கொண்டதில் இந்த மருத்துவமனையில் கடந்த ஆண்டில் சட்டவிரோதமாக 9 கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து சட்ட விரோதமாக கருக்கலைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தது.

    இதைதொடர்ந்து மாவட்ட நோடல் அதிகாரி டாக்டர் மஞ்சுநாத் கடந்த 5-ந் தேதி சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் நோய் கண்டறியும் மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கீகரிக்கப்படாத அல்ட்ரா ஸ்கேனிங் எந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது.

    மேலும் மருத்துவமனையின் குப்பைத் தொட்டியில் பெண் கரு ஒன்று கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் இந்த மருத்துவமனையில் கடந்த ஆண்டில் சட்டவிரோதமாக 9 கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

    இதுகுறித்து மாவட்ட நோடல் அதிகாரி டாக்டர் மஞ்சுநாத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாலின நிர்ணயம் மற்றும் சட்ட விரோத கருக்கலைப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் 2 செவிலியர்கள், 1 லேப் டெக்னீஷியன் மற்றும் 1 துப்புரவு பணியாளர் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நர்சுகள் பொதுநல சங்க மாநில நிர்வாகிகள் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செலிவியர் சார்பில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
    • மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒரு டாக்டர் கடந்த சில மாதங்களாக தகாத வார்த்தைகளால் மிரட்டி எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நர்சுகள் பொதுநல சங்க மாநில நிர்வாகிகள் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செலிவியர் சார்பில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் நான் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். இதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒரு டாக்டர் கடந்த சில மாதங்களாக தகாத வார்த்தைகளால் மிரட்டி எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். நான் இந்த மருத்துவமனைக்கு வந்த புதிதிலும் இதே போல மிரட்டி மன உளைச்சலை ஏற்படுத்தினார். பணியின்போதும் ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார். நான் பணியை சரியாக செய்தபோதும் வேண்டுமென்றே கண்டிப்பது போல திட்டிவிட்டு பின் ஏன் என்னிடம் வந்து நீ மன்னிப்பு கேட்கவில்லை என கேட்டு இதேபோன்று தொடர்ச்சியாக துன்புறுத்தி வருகிறார். மேலும் இரட்டை அர்த்தத்தில் பேசி வருகிறார்.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    • அம்பாத்துரை ரெயில் நிலையத்திற்கு அருகே ரெயில் தண்டவாளத்தில் விழிமலர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
    • செவிலியர் அந்த வழியாக வந்த ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி வரதராஜாநகரை சேர்ந்த மாரிமுத்து மகள் விழிமலர் (வயது 41). திருமணமாகாத இவர் காந்திகிராமத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.

    மேலும் மன உளைச்சலுடனே இருந்துள்ளார். நேற்று இரவு தனது அம்மா ஈஸ்வரியிடம் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அங்கு செல்லவில்லை.

    இதனிடையே இன்று காலை அம்பாத்துரை ரெயில் நிலையத்திற்கு அருகே ரெயில் தண்டவாளத்தில் விழிமலர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த செவிலியர் அந்த வழியாக வந்த ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை செய்து வருகின்றனர்.

    • பிரீத்தி சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
    • திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடிப்படியில் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோடு பாலசுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பிரீத்தி (27).

    இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பா ளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 1/2 வருடங்களாக நர்சாக பணியாற்றி வந்தார். இவர் சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பால்காரர் அழைத்தபோது பால் வாங்குவதற்காக பிரீத்தி மாடியில் இருந்து இறங்கி வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடிப்படியில் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரீத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிரீத்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் பிரீத்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகு றித்து பிரீத்தியின் சகோதரர் ராதா (51) நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணி நியமன ஆணை 6 வாரத்திற்குள் அரசு வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

    சென்னை:

    கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்த நர்சுகள் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 3 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக முறையில் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களது பணிக்காலம் முடிவடைந்ததால் அரசு அவர்களை கடந்த ஆண்டு பணியில் இருந்து விடுவித்தது.

    இதை கண்டித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்டுள்ள செவிலியர்களுக்கு உரிய பணி நியமன ஆணை 6 வாரத்திற்குள் அரசு வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை கண்டித்து தொடர் உண்ணா விரதப் போராட்டம் தொடங்கியுள்ளது. சங்கத்தின் மாநில தலைவி விஜயலட்சுமி, துணை தலைவர் உதயகுமார், செயலாளர் ராஜேஷ், பொருளாளர் தேவிகா ஆகியோர் தலைமையில் கைக்குழந்தைகளுடன் நர்சுகள் உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர்.

    பகல்-இரவாக தொடர்ந்து 3 நாட்கள் முகாமிட்டு போராட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். கைக்குழந்தைகளை கையில் ஏந்தி போராட்ட களத்தில் செவிலியர்கள் கலந்து கொண்டது பொது மக்களை கவர்ந்தது.

    • பிறந்து 75 நாட்கள் ஆன தனது மகள் ஸ்ரீனிகாவுக்கு தடுப்பூசி போடுவதற்கு கொண்டு வந்தார்.
    • காலி சிரிஞ்சை குழந்தை உடலில் ஏற்றிய சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரிநாடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இளநிலை பொது சுகாதார செவிலியர்களாக ஷீபா, லுர்த் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.

    சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வழக்கம்போல் பணியில் இருந்தனர். அப்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விஷ்ணு பிரசாத் என்பவரின் மனைவி ஸ்ரீலட்சுமி, பிறந்து 75 நாட்கள் ஆன தனது மகள் ஸ்ரீனிகாவுக்கு தடுப்பூசி போடுவதற்கு கொண்டு வந்தார்.

    தாய்-மகள் இருவரையும் தடுப்பூசி போடும் அறைக்கு செவிலியர்கள் அழைத்துச்சென்றனர். பின்பு செவிலியர் ஷீபா குழந்தைக்கு ஊசி போட்டிருக்கிறார். அப்போது குழந்தைக்கு போடப்பட்ட ஊசி சிரிஞ்சில் மருந்து இல்லாததை குழந்தையின் தாய் பார்த்து, அதுபற்றி ஷீபாவிடம் கேட்டிருக்கிறார்.

    ஆனால் அதற்குள் குழந்தைக்கு நர்சு ஊசி போட்டுவிட்டார். இதனால் குழந்தையின் உடலில் காற்று செலுத்தப்பட்டது. இதையடுத்து நர்சு ஷீபா, மருந்து நிரப்ப மறந்துவிட்டேன் என்று கூறிவிட்டு அந்த அறையில் இருந்துவெளியே சென்றுவிட்டார். காலி சிரிஞ்சை உடலில் செலுத்தியதால் ஸ்ரீலட்சுமியின் குழந்தை அழுதபடி இருந்தது.

    இந்த விவகாரம் ஆஸ்பத்திரி முழுவதும் பரவியது. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு செவிலியர் மீண்டும் வருவார் என்று ஸ்ரீலட்சுமியிடம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அவரோ குழந்தைக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார். மேலும் தனது குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். சிரிஞ்சில் மருந்து இல்லாமல், காலி சிரிஞ்சை குழந்தை உடலில் ஏற்றிய சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பணியில் இருந்த நர்சுகளான ஷீபா, லுர்த் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு நடந்ததும், அப்போது நர்சு ஷீபா கவனக்குறைவாக குழந்தைக்கு சிரிஞ்சில் மருந்து எடுக்காமல் உடலில் செலுத்தியதும் உறுதி செய்யப்பட்டது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பேரில் நர்சுகள் ஷீபா, லுர்த் ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் பணியின் போது சண்டையிட்டது மட்டுமின்றி, கவனக்குறைவாக பணிபுரிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தையின் உடலுக்குள் மிகக்குறைந்த அளவே காற்று நுழைந்திருப்பதாகவும், அதனால் குழந்தைக்கு உடல்நல பிரச்சினை எதுவும் ஏற்படாது எனவும் குழந்தையின் பெற்றோரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

    • காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
    • முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் மாநகர நல சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

    14 நகர சுகாதார செவிலியர்கள் பணியிடத்துக்கு பி.எஸ்சி.நர்சிங், நர்சிங் மிட்வைப் பயிற்சி, டிப்ளமோ நர்சிங் அன்ட் மிட்வைப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 ஆய்வக அலுவலர், 1 மருத்துவ பணியாளர் பணியிடமும் நிரப்பப்பட உள்ளது.

    வருகிற 11-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த நபர்கள் இந்த நேர்காணலில் தங்களது அசல் சான்றிதழ், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0421 2240153 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    நேர்காணலுக்கு வருபவர்களிடம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்விச்சான்றிதழ், தமிழ்நாடு மருத்துவ குழும பதிவு சான்றிதழ், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல் சரிபார்க்கப்படும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆஸ்பத்திரியில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது.
    • குழந்தைகள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் அது போன்ற வாசகங்களை எழுதியதாக தெரிவித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.

    ஆஸ்பத்திரியில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது. தொடர்பான புகாரின் பேரில் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு விசாரணையை தொடங்கினர்.

    அப்போது அந்த ஆஸ்பத்திரியில் லூசி லெட்பி என்ற நர்சு, சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெரிந்தது. இதுபோன்ற சம்பவங்களின் போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

    விசாரணையின் போது குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நான் ஒரு பாவி, இதற்கு நான்தான் காரணம் இன்று உங்கள் பிறந்த நாள். நீங்கள் இங்கு இல்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் போன்ற வாசகங்களை எழுதியிருந்தார். இதையடுத்து நர்சு லூசி லெட்பி 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது நோய் வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், இரைப்பை குழாயில் காற்றை செலுத்தியும் அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக அரசு தரப்பு வக்கீல் கூறும்போது, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு லூசி லெட்பியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழலில் அவர் குழந்தைகளுக்கு தீங்கு விளைவித்தார். ஒவ்வொரு குழந்தையும் பாதிக்கப்பட்ட போது லூசி லெட்பி, பணியில் இருந்ததை கவனித்த சக ஊழியர்கள் கவலைகளை தெரிவித்தனர் என வாதிட்டார்.

    ஆனால் இதை லூசி லெட்பி மறுத்தார். அவரது தரப்பு வக்கீல் கூறும்போது, லூசி ஒரு அப்பாவி. குழந்தைகள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் அது போன்ற வாசகங்களை எழுதியதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளில் 7 குழந்தைகளை கொன்றது, 6 குழந்தைகளை கொல்ல முயன்றது ஆகியவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். லூசி லெட்பி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் வருகிற 21-ந்தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் லூசி லெட்பிக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    7 குழந்தைகளை கொன்ற நர்சு லூசி லெட்பி சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் உதவி உள்ளார். பச்சிளங்குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த ஆஸ்பத்திரியில் குழந்தை நல டாக்டராக ரவி ஜெயராம் என்பவர் பணியாற்றினார். இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம், நர்சு லூசி லெட்பி மீது சந்தேகத்தை எழுப்பி எச்சரிக்கையை தெரிவித்தார்.

    அதன்பின் ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலரும் சந்தேகங்களை கூறினர். இதையடுத்து நர்சு லூசி லெட்பி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

    இதுகுறித்து டாக்டர் ரவி ஜெயராம் கூறும் போது, 2015-ம் ஆண்டு மூன்று குழந்தைகள் இறந்த பிறகு முதலில் கவலைகளை எழுப்பினோம். மேலும் பல குழந்தைகள் இறந்ததால் நர்சு லூசி லெட்பி மீது சந்தேகம் ஏற்பட்டு மருத்துவமனை நிர்வாகிகளிடம் தெரிவித்தோம்.

    லூசி லெட்பி பற்றிய எச்சரிக்கைகளுக்கு காவல்துறை முன் கூட்டியே செவி சாய்த்து இருந்தால் சில உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இப்போது 4 அல்லது 5 குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருக்கக் கூடும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்" என்றார்.

    லூசி லெட்பி, இங்கிலாந்து நாட்டின் மிக குரூரமான தொடர் சிசு கொலையாளி என்ற பெயரை பெற்றுள்ளார்.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் வழிகாட்டி செவிலியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ மனைக்கு மெண்டர் செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், மருத்துவமனைக்கு தேவையான செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்வதற்கு பதிலாக அங்கு புதிய நிரந்தர செவிலியர் பணியிடங்களை தோற்றுவித்து அதில் பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கும் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    • குழந்தைக்கு பால் புகட்ட நர்சுகள் அனுமதிக்கவில்லை.
    • நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் குழந்தையை பார்க்க பிரியா காம்ளே சென்றார்.

    மும்பை :

    மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் பிரியா காம்ப்ளே. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அங்குள்ள மாநகராட்சி சாவித்ரிபாய் புலே மகப்பேறு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி குழந்தைக்கு பால் புகட்ட பிரியா காம்ப்ளே தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கு குழந்தையின் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குழந்தைக்கு பால் புகட்ட நர்சுகள் அனுமதிக்கவில்லை. மறுநாள் காலை 8 மணிக்கு வரும்படி அவரிடம் கூறி அனுப்பினர். இதன்பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் குழந்தையை பார்க்க பிரியா காம்ளே சென்றார்.

    அப்போதும் தனது குழந்தையின் வாயில் ஒட்டிய டேப் அகற்றப்படாமல் இருந்ததை கண்டு நர்சிடம் விசாரித்தார். இதற்கு குழந்தை அழாமல் இருப்பதற்காக டேப் ஒட்டியதாக நர்ஸ் தெரிவித்தார். இதனை கேட்டு திகைத்துப்போன பிரியா காம்ப்ளே மற்ற குழந்தைகளையும் கவனித்தார். அங்கிருந்த மேலும் 3 குழந்தைகளுக்கும் இதே போன்று டேப் ஒட்டப்பட்டு இருந்தது.

    இதுபற்றி அவர் முன்னாள் கவுன்சிலர் ஜக்ருதி பாட்டீலிடம் தெரிவித்தார். அவர் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உதவி கமிஷனரிடம் புகார் அளித்தார். குழந்தையின் உயிருக்கு ஆபத்தான செயலில் ஈடுபட்ட நர்சை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டது.

    ×