என் மலர்
நீங்கள் தேடியது "ஜெர்மனி"
- ஜெர்மனி ஹாட்ரிக் வெற்றியுடன் கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- 2-வது ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன.
சென்னை:
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரை ஆகிய 2 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
வருகிற 10-ந் தேதி வரை இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்று உள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.
4-வது நாளான இன்று பிற்பகலில் மதுரையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள ஜெர்மனி-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
ஜெர்மனி ஹாட்ரிக் வெற்றியுடன் கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-0 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் கனடாவை 7-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. அயர்லாந்து முதல் ஆட்டத்தில் கனடாவை (4-3) வென்றது. அடுத்து தென் ஆப்பிரிக்காவிடம் (1-2) தோற்றது.
2-வது ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன.
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டிகளில் 'சி' பிரிவில் உள்ள நியூசிலாந்து-ஜப்பான் (மாலை 5.45 மணி), அர்ஜென்டினா-சீனா (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.
அர்ஜென்டினா, நியூசிலாந்து, அணிகள் 1 வெற்றி, 1 டிராவுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. ஜப்பான் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 3 புள்ளி பெற்றுள்ளது. சீனா 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.
இந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்து கால் இறுதியில் நுழைய அர்ஜென்டினா, நியூசிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடைசி ஆட் டத்திலும் வெற்றி பெறும் போது இரு அணிகளும் தலா 7 புள்ளிகளை பெறும் கோல்கள் அடிப்படையில் முடிவு நிர்ணயம் செய்யப் படும்.
- வலிமையான ராணுவத்தை உருவாக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்தது.
- இதற்காக கட்டாய ராணுவ சேவை திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்துகிறது.
பெர்லின்:
ஜெர்மனி ராணுவத்தில் சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.
இதற்கிடையே, நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த நேரிடும் என ஜெர்மனி ராணுவ தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் எச்சரிக்கை விடுத்தார். இதனால் வலிமையான ராணுவத்தை உருவாக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்தது.
இதற்காக கட்டாய ராணுவ சேவை திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் சேர்வதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கு மருத்துவ பரிசோதனையை எடுக்கவேண்டும்.
இந்த ராணுவ சேவையானது ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு விருப்ப அடிப்படையிலும் இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது
இதுதொடர்பான மசோதா இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 2 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் இடதுசாரி கட்சியினர் இந்த கட்டாய ராணுவ சேவைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- மேலும் 27 நோயாளிகளை அதே முறையில் கொல்ல முயன்றுள்ளார் என்றும் தெரியவந்தது.
- நோயாளிகளைப் பராமரித்து வந்த செவிலியர், அவர்களது வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் தானே எஜமானி போல செயல்பட்டதாக தெரிவித்தார்.
இரவுப்பணியில் அழுத்தத்தை குறைக்க தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளை கொன்ற ஆண் செவிலியருக்கு ஜெர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.
ஜெர்மனியின் வூர்ஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவமனையில் 2020 இல் செவிலியராக பணியில் சேர்ந்த அவர் தனது பராமரிப்பில் இருந்த நோயாளிகளுக்கு தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி செவிலியர் கொன்றுள்ளார்.
இவ்வாறு அவர் 10 நோயாளிகளை கொலை செய்துள்ளார், மேலும் 27 நோயாளிகளை அதே முறையில் கொல்ல முயன்றுள்ளார் என்றும் தெரியவந்தது.
டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை இந்த இறப்புகள் பதிவாகி உள்ளன. இரவுப் பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவே அவர் இந்தச் செயலைச் செய்ததாகத் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட செவிலியரின் பெயர் வெளியிடப்படவில்லை. வயதான மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பராமரித்து வந்த செவிலியர், அவர்களது வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் தானே எஜமானி போல செயல்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிமன்றம், செவிலியருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இருப்பினும் அவர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு ஜெர்மனியில் 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நீல்ஸ் ஹோஜெல் என்ற ஆண் நர்ஸ் ஒருவர் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்தார்.
2019இல் ஆண்டில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஜெர்மனியின் நவீன வரலாற்றில் கொடூர கொலைக்காரர் இவர் என்று கருதப்படும் நிலையில் தற்போது அதே பாணியில் மற்றொரு செவிலியரின் கொடூர கொலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலும் டிரோன்கள் பறந்தன.
- இந்த டிரோன்கள் ரஷியாவுக்கு சொந்தமானது என குற்றம் சாட்டப்பட்டது.
பெர்லின்:
டென்மார்க், போலந்து நாடுகளின் எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரோன்கள் கண்டறியப்பட்டன. இதனால் அந்த விமான நிலையங்களை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த டிரோன்கள் ரஷியாவுக்கு சொந்தமானது என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரஷியா தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலும் டிரோன்கள் பறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விமான நிலையம் மூடப்பட்டதால் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 15 விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் சுமார் 3 ஆயிரம் பயணிகள் அவதியடைந்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து டிரோன்கள் பறக்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில மணி நேரங்களுக்கு பிறகு விமான நிலையம் திறக்கப்பட்டு விமான சேவை தொடங்கியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய பயணம், லண்டன் மாநகரில் நிறைவுறுகிறது.
- இத்தனை நாளும் என்னை கவனித்துக்கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
#Germany-யில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய #TNRising பயணம், இலண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது!
அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்.
இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட #TamilDiaspora-விற்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜெர்மனி பயணத்தில் 3201 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- இது தொடர்பான புகைப்படங்களை மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
innilaiyil, ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரத்தில் VINTAGE கார் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "இந்தியாவின் டெட்ராய்ட் நகரமான சென்னையில் இருந்து, ஜெர்மனிக்கு பயணம் செய்தபோது, உலகின் முதல் காரையும், ஒரு புகழ்பெற்ற பந்தய காரையும் அருகில் பார்க்கும் அரிய மகிழ்ச்சி எனக்குக் கிடைத்தது. காலத்தால் அழியாத பழங்காலப் பொக்கிஷங்களுக்கு மத்தியில், வரலாறு உயிர் பெறுவதை உணர்ந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. அப்படத்திற்கு பிறகு அஜித் கார் ரேஸ் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தின் அடுத்த திரைப்படமான AK65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார். அங்குள்ள ரசிகர்கள் அஜித் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்போது அவர்களிடம் பேசிய அஜித், ‛‛கார் ரேஸை பிரபலப்படுத்துங்க, எனக்காக அல்ல. இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். நிச்சயம் ஒருநாள் இந்திய வீரர்களும் பார்முலா ஒன் கார் ரேஸ் மட்டுமல்ல அனைத்து விதமான ரேஸ் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சாம்பியன் ஆவார்கள்" என்ற கருத்தை முன் வைத்தார்.
இந்நிலையில் அஜித் இன்று 13- வயது கார் பந்தய வீரரான இமானுவேல் ஜேடனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டார். அஜித்தின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- உழைப்பால் உயர்ந்துள்ள இனம்தான் தமிழ் இனம்.
- ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாருங்கள், தமிழ்நாடு அடைந்துள்ள மாற்றங்களை காண வாருங்கள்.
தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார்.
டசெல்டோர்ப் விமான நிலையத்தில், நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், சமூக தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் மலர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜெர்மனியில் தமிழ் ஆரவாரத்தை கேட்கும்போது தமிழ் மண்ணில் இருப்பதை போன்று உணர்ந்தேன்.
* பல்லாயிரம் கிலோ மீட்டர்களை கடந்து நீங்களும் நானும் சந்திப்பது தான் தமிழ் பாசம்.
* வெளிநாடுகளில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சென்னை கூட்டி வந்துள்ளோம்.
* உக்ரைன், சூடான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் சிக்கித்தவித்த மாணவர்களை மீட்டு வந்திருக்கிறோம்.
* அயலக தமிழர்களை அரவணைக்க தமிழக அரசும் நானும் எப்போதும் இருப்போம்.
* உழைப்பால் உயர்ந்துள்ள இனம்தான் தமிழ் இனம்.
* தமிழ்நாடு வளர வேண்டும் என முடிந்த உதவிகளை தாய் மண்ணுக்கு செய்யுங்கள்.
* தமிழர் தொன்மையின் பண்பாட்டு சின்னங்களை உங்கள் குழந்தைகளுக்கு காட்ட தமிழ்நாடு வாருங்கள்.
* இந்த உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழர் என்பதையும் தமிழ்நாட்டையும் மறக்காதீர்.
* தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது.
* ஜெர்மனியில் நீங்கள் சிறியதாக தொழில் செய்தாலும் அதனை தமிழ்நாட்டிலும் தொடங்க முன்வாருங்கள்.
* ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாருங்கள், தமிழ்நாடு அடைந்துள்ள மாற்றங்களை காண வாருங்கள்.
* தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உங்களால் இயன்றதை செய்யுங்கள்.
* உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன்.
- உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள்.
தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார்.
டசெல்டோர்ப் விமான நிலையத்தில், நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், சமூக தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் மலர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜெர்மனியில் அவரது பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களால் ஏற்பாடு செய்த நூற்றுக்கணக்கான அயலக தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் தமிழ் பண்பாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டின் சிறப்பை வெளிநாடுகளில் மேம்படுத்துவதற்கும் பங்களித்த ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல தமிழ்ச் சங்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
இதைத்தொடர்ந்து டசெல்டோர்பில் இன்று உயர்நிலை முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று, உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடுகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள் என்று ஜெர்மனிவாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்தேன்.
தமிழ்நாட்டுக்கு வாருங்கள், நமது #DravidianModel அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டுச் சின்னங்களைக் காணுங்கள்!
உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சீனாவின் கடற்படை வலிமை அதிகரித்து வருகிறது.
- பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளுடன் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் செய்ய இந்தியா முடிவு
இந்தியாவின் ஆழ்கடல் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் வகையில், 2026ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 2 நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தங்களை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவின் கடற்படை வலிமை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்சின் Naval Group உடன் இணைந்து ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பலையும், ஜெர்மனியின் ThyssenKrupp நிறுவனத்துடன் இணைந்து Stealth நீர்மூழ்கி கப்பலையும் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை அரசுக்கு சொந்தமான மசகான் டாக் லிமிடெட் (MDL) மற்றும் பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான கடற்படை குழுமத்தால் கூட்டாக கட்டப்படும் என்று கூறப்படுகிறது.
- சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக விருது எனப் புகழாரம்.
- கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் சத்குருவிற்கு இந்தாண்டிற்கான 'குளோபல் இந்தியன் விருது' வழங்கப்பட்டது.
ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற 'க்ரேட்டர் விழா 2025' எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு "ப்ளூ டங்" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக க்ரேட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
ஜெர்மனியில் செயல்பட்டு வரும் "க்ரேட்டர் (Greator)" எனும் நிறுவனம், உலகெங்கும் உள்ள இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
இதில் உலக அளவில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, உலக புகழ் எழுத்தாளர்கள் டோனி ராப்பின்ஸ், கேரி வீ உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளனர்.
மேலும் அந்நிறுவனம் சார்பில், சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆளுமைகளை அடையாளம் கண்டு, ஆண்டுதோறும் "ப்ளூ டங்" (Blue tongue) என்ற விருதினை வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டிற்கான விருது ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டது.

இது குறித்து க்ரேட்டர் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "சத்குரு நம் காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆன்மீக ஆசிரியர்களில் ஒருவர். அவரது தெளிவான, ஆழம்மிக்க, அடிப்படையான ஞானம் மற்றும் நுட்பமான நகைச்சுவைக்காக உலகம் முழுவதும் அவர் கொண்டாடப்படுகிறார். அவரது வார்த்தைகள் நம்மை விழித்தெழச் செய்கின்றன. நமது எல்லைகளை விரிவுபடுத்துகின்றன மற்றும் நேரடியாக இதயத்தைத் தொடுகின்றன.
அதனால்தான் இந்த ஆண்டின் "ப்ளூ டங்" விருது சத்குருவுக்கு வழங்கப்படுகிறது. அவரது துணிச்சலான குரல், ஆழமான ஞானம் மற்றும் அசைக்க முடியாத தெளிவுக்காக இந்த விருதை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும் இதுகுறித்த சத்குருவின் எக்ஸ் தள பதிவில், " உங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் நன்றி. ஆனந்தமான மனிதர்களை உருவாக்குவதே மனிதகுலத்தை உருமாற்றுவதற்கான ஒரே வழி. ஏனெனில், ஆனந்தத்தை விட மேலான நறுமணம் வேறில்லை. பேரன்பும் ஆசிகளும்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் சத்குருவிற்கு இந்தாண்டிற்கான 'குளோபல் இந்தியன் விருது' வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவிற்குப் பிறகு உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக ஜெர்மனி உள்ளது.
- மூன்று வாரங்களுக்கு முன்பு ஜெர்மனியின் தலைவராக மெர்ஸ் பொறுப்பேற்றார்.
ரஷியவாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவைத் தேடும் வகையில் ஜெலென்ஸ்கி ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தலைமையில் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனாலும் ரஷியாவின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் உக்ரைனுக்கு மேலும் இராணுவ ஆதரவை பெறும் வகையில் இன்று ஜெலன்ஸ்கி ஜெர்மனி சென்றார். அங்கு தலைநகர் பெர்லினில் புதிய ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸை சந்திக்கிறார்.
அமெரிக்காவிற்குப் பிறகு உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக ஜெர்மனி உள்ளது. உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களுக்கு ஜெர்மனியும் பிற முக்கிய நட்பு நாடுகளும் இனி எந்த வரம்பு கட்டுப்பாடுகளையும் விதிக்கபோவதில்லை என்று மெர்ஸ் திங்களன்று கூறினார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு ஜெர்மனியின் தலைவராக மெர்ஸ் பொறுப்பேற்றதில் இருந்து மெர்ஸ், போர்நிறுத்தத்தைப் கொண்டுவரவும், உக்ரைனுக்கு மேற்கத்திய ஆதரவை அதிகரிக்கவும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.






