என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Passport"
- தனது பாஸ்போர்ட்டில் உள்ள 12 பக்கங்களைக் கிழித்து மோசடியில் ஈடுபட்டனர்.
- தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருந்த துஷார் பவார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்
ஜூலை 11 அன்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருந்த துஷார் பவார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
33 வயதான துஷார் பவார், தனது பாஸ்போர்ட்டில் உள்ள 12 பக்கங்களைக் கிழித்து மோசடியில் ஈடுபட்டதாகவும், அதில் அவர் தாய்லாந்து, பேங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் செய்த விவரங்கள் உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023 - 2024 ஆம் ஆண்டுகளில் 3 முறை தாய்லாந்து சென்றதாகவும் அந்த விஷயம் தனது மனைவிக்கு தெரிந்தால் பிரச்சனையாகும் என்று பாஸ்போர்ட்டின் சில பக்கங்களை கிழித்ததாக அவர் ஒப்பு கொண்டுள்ளார்.
பாஸ்போர்ட்டில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட துஷார் தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
- பலரும் அவர்கள் பணி புரியும் நிறுவனங்களில் ஆதார் அட்டையை கொடுத்து தான் பணியில் சேர்ந்துள்ளனர்.
- தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருப்பதால் முழு தகவலையும் இப்போது வெளியிட முடியாது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் மற்றும் விஜயமங்கலம், வாய்ப்பாடி, திங்களூர், காஞ்சிகோவில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி என பெருந்துறை தாலுகா முழுவதும் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அனைத்து வகை தொழில் நிறுவனங்கள், ஓட்டல், கடைகள், தறிப்பட்டறை மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் என எல்லா பகுதியிலும் வட மாநில தொழிலாளர்களே அதிக அளவில் பணிபுரிகின்றனர். பின்னலாடை, ஸ்பின்னிங், டையிங், விசைத்தறி மற்றும் நாடா இல்லாத தறி பட்டறைகளிலும், விவசாய தொழிலுக்கும் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை வட மாநிலத் தொழிலாளர்களே பூர்த்தி செய்து வருகின்றனர்.
மேற்குவங்கம், பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா என வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பெருந்துறை தாலுகாவில் மட்டும் 2 லட்சம் பேருக்கு மேல் இருப்பார்கள் என கூறப்படுகிறது. இவர்களில் பலரும் அவர்கள் பணி புரியும் நிறுவனங்களில் ஆதார் அட்டையை கொடுத்து தான் பணியில் சேர்ந்துள்ளனர்.
மற்றபடி பணியில் சேருபவர்களின் பின்னணி அவர்களுடைய சொந்த மாநிலத்தில் ஏதேனும் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களா? தேடப்படும் குற்றவாளியா? என்பன உள்ளிட்ட எந்த பின்னணி தகவல்களும் இருப்பதில்லை. அவர்கள் அளிக்கும் ஆதார் அட்டையும் போலியானதா என்பதும் உறுதிப்படுத்தப் படுவதில்லை.
குறிப்பாக வங்காள தேசத்தில் இருந்து பாஸ்போர்ட், விசா இல்லாமல் மேற்கு வங்காளம் வழியாக ஊடுருவி தமிழகத்தின் பல பகுதிகளில் கூலித் தொழிலாளர்கள் என்ற பெயரில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பற்றிய முழு தகவல்களையும் போலீஸ் நிலையங்கள் மூலமாக சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாலைமலர் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் பெருந்துறை போலீசார், பெருந்துறை பணிக்கம்பாளையம், கிருஷ்ணாம்பாளையம், காடபாளையம் பகுதிகளில் தங்கி உள்ள வட மாநில தொழிலாளர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று இரவு நடைபெற்ற இந்த விசாரணையில் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் தங்கி சிப்காட்டில் பணி புரிந்து வந்த வங்காளதேசத்தை 9 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதன் முதற்கட்ட விசாரணையில் இந்திய நாட்டில் வசிப்பதற்கான பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாத 5 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவர்கள் அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் வங்காள தேசத்தில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு எப்படி ஊடுருவி வந்தார்கள் என்பது குறித்தும், அவர்கள் கொடுத்துள்ள ஆதார் அட்டையின் உண்மைத் தன்மை குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் கூறுகையில், வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 9 பேரை பிடித்து விசாரித்ததில் முதல் கட்டமாக 5 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள்தான் என்பது உறுதியாகி உள்ளது. இவர்களிடம் முறையான பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருப்பதால் முழு தகவலையும் இப்போது வெளியிட முடியாது. முழுமையான விசாரணைக்கு பிறகே வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் பற்றிய முழுவிவரத்தையும் வெளியிட முடியும் என்று தெரிவித்தனர்.
- பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 2-வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.
பாலியல் சர்ச்சையில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டுவரும் வகையில் அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 2-வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில், கூறியிருப்பதாவது:-
நாட்டை விட்டு வெளியேறவும், குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் அரசு வழங்கிய சலுகையை பிரஜ்வல் ரேவண்ணா துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் வேண்டுகோளை செயல்படுத்தி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.
- அதில், ஜெர்மனியில் இருந்து பிரஜ்வலை இந்தியா அழைத்துவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகாவின் ஹசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்கிறது. மத்திய அரசின் உதவியுடன் பிரஜ்வல் ஜெர்மன் சென்றுள்ளார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், ஹசன் சிட்டிங் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் பற்றி, நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நாட்டை உலுக்கிய பயங்கரமான மற்றும் வெட்கக்கேடான வழக்கை பிரஜ்வல் எதிர்கொண்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்க சி.ஐ.டி.யின் கீழ் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில் பிரஜ்வல் மீது கடந்த 28-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வல் ஜெர்மனியில் இருப்பதால் விசாரணை நிலுவையில் உள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதுடன், சர்வதேச போலீஸ் உதவியுடன் ஜெர்மனியில் இருந்து அவரை அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும். வழக்கின் அனைத்து ஆவணங்களையும் வழங்க சிறப்பு விசாரணை குழு தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
- தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
- பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் இரண்டாவது கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .
இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கடுத்து ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில் ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்து, அவர் இந்தியாவுக்கு திரும்புவதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
- தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.
- தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டராக உள்ள சுரேஷ் பாபுவிடம் 2 தவணைகளாக ரூ.40 லட்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.
திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசியாக கடந்த 20-ந் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் அங்கித் திவாரி சார்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அங்கித் திவாரிக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது.
அந்த உத்தரவில் திண்டுக்கல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அப்போது அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் கோர்ட்டில் அங்கித் திவாரியின் பெற்றோர் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வந்தனர். அதனுடன் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இடைக்கால நிபந்தனை ஜாமீன் நகலையும் வழங்கினர். இதனைத் தொடர்ந்து விரைவில் அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படும் என அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.
- நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
- நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி உள்பட 7 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு முன்கூட்டியே விடுவித்தது.
முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இவர்கள், இலங்கை மற்றும் இங்கிலாந்து செல்ல சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, முருகன் உள்ளிட்டோருக்கு பாஸ்போர்ட் வாங்குவதற்கு நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.முனியப்பராஜ், முருகனின் நேர்காணலுக்காக நாளை அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்ததாகவும் நாளை அவர்களையும் அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கூறினார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
- இந்தியர்களுக்கு 62 நாடுகள், விசா இல்லா சலுகைகளை வழங்கி உள்ளன.
- தென் ஆப்பிரிக்கா (55-வது) (மாலத்தீவு 58), சவூதி அரேபியா (67), தாய்லாந்து (66), இந்தோனேசியா (60)
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் முதலிடம் வகிக்கிறது.
ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 5 இடங்களில் உள்ளன. அடுத்தபடியாக ஸ்பெயின், பின்லாந்து, நெதர்லாந்து, தென்கொரியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த பட்டியலில் இந்தியா 85-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 84-வது இடத்தில் இருந்தது. தற்போது ஒரு இடம் பின் தங்கியுள்ளது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/02/20/2010496-passport2002001.webp)
இந்தியர்களுக்கு 62 நாடுகள், விசா இல்லா சலுகைகளை வழங்கி உள்ளன. இதில் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகியவை அடங்கும் தென் ஆப்பிரிக்கா (55-வது) (மாலத்தீவு 58), சவூதி அரேபியா (67), தாய்லாந்து (66), இந்தோனேசியா (60), உஸ்பெகிஸ்தான் (84) ஆகியவை பட்டியலில் உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 106-வது இடத்திலும், இலங்கை 101-வது இடத்திலும், வங்கதேசம் 102-வது இடத்திலும், நேபாளம் 103-வது இடத்திலும் உள்ளன. ஆப்கானிஸ்தான் 109-வது இடத்தில் உள்ளது.
- வீடியோவில், விசா முத்திரைகளுக்கு பயன்படுத்தும் பாஸ்போர்ட்டின் வெற்று பக்கங்களை ஒருவர் திருப்புவதையும், அதில் ஏராளமான தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருப்பதையும் காட்டுகிறது.
- வீடியோ 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்ட நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு வாலிபர் தனது பாஸ்போர்ட்டை தொலைபேசி எண்களின் கோப்புகளாக மாற்றிய வீடியோ 'எக்ஸ்' தளத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் புதுப்பிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவில் பாஸ்போர்ட்டில் காலியாக உள்ள கடைசி பக்கத்தில் ஏராளமான தொலைபேசி எண்கள் எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில், விசா முத்திரைகளுக்கு பயன்படுத்தும் பாஸ்போர்ட்டின் வெற்று பக்கங்களை ஒருவர் திருப்புவதையும், அதில் ஏராளமான தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருப்பதையும் காட்டுகிறது.
இந்த வீடியோ 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்ட நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- திருச்சி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்து சிங்கப்பூர் செல்ல இருந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- ஏர்போர்ட் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டார்
கே.கே. நகர்,
திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் செல்லும் பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தெலுங்கன் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது33) என்பவர் தான் ஏற்கனவே சிங்கப்பூரிலிருந்து வந்த தேதியை மாற்றி போலியான சீல் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக ஏர்போர்ட் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் ஹரிஹரன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த அபுதாகிர் என்பவரே போலி பாஸ்போர்ட்டை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.
- முக்கிய குற்றவாளியான அபுதாகிரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட்டுகளை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அந்தோணிசாமி என்பவர் போலி பாஸ்போர்ட்டுடன் வந்திருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரிடம் புகார் அளித்தனர். இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. உதவி கமிஷனர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் எமர்சன் ஆகியோர் நடத்திய விசாரணையில் கோவிந்தசாமிக்கு போலி பாஸ்போர்ட் வழங்கியது ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரை சேர்ந்த புரோஷ்கான் என்பது தெரியவந்தது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். புரோஷ்கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த அபுதாகிர் என்பவரே போலி பாஸ்போர்ட்டை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது அபுதாகிர் தப்பி ஓடிவிட்டார். அவரது வீட்டில் இருந்து 100 பாஸ் போர்ட்டுகள் போலி ஆவணங்கள், மலேசியா சிம்கார்டுகள், ரூ.57 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வெளிநாடு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் புரோஷ்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முக்கிய குற்றவாளியான அபுதா கிரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- பாகிஸ்தானுக்கு கீழ் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளது
- சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்பது உலகின் அனைத்து அசல் பாஸ்போர்ட்டுகளில், அதனை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டியலிடப்படும் ஒரு அதிகாரப்பூர்வ தரவரிசையாகும். இந்த பட்டியல் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது.
உலகின் 199 பாஸ்போர்ட்டுகளில் அந்த பாஸ்போர்ட்டின் உரிமையாளர்கள் முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி கணக்கிடப்பட்ட 2023-க்கான ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
இதன்படி பாகிஸ்தானிய பாஸ்போர்ட் 'நான்காவது மோசமானது' என்று தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை மட்டுமே பாகிஸ்தான் மிஞ்சி பட்டியலில் மேலான இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் பாஸ்போர்ட் 33 மாநிலங்களுக்கு விசா இல்லாத அணுகலை அனுமதிக்கிறது.
சிரியாவின் பாஸ்போர்ட் 30 இடங்களுக்கும், ஈராக் 29 இடங்களுக்கும் மற்றும் ஆப்கானிஸ்தான் 29 இடங்களுக்கும் இது போன்ற அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குடிமக்களுக்கு 192 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் சிங்கப்பூர் இந்த பட்டியலில் முதல் இடம் பெறுகிறது.
190 இடங்களுக்கு செல்ல அனுமதிப்பதால் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய 3 நாடுகளும் இந்த பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளன.
முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளில், கடந்த பத்தாண்டுகளை ஒப்பிடும்போது, அமெரிக்கா தனது தரவரிசையில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது. 2-வது இடத்தில் இருந்த அமெரிக்கா 8-வது இடத்திற்கு விழுந்துள்ளது.
2022-ம் வருடம் இப்பட்டியலில் 85-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 80-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. உலகின் 57 இடங்களுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும். டோகோ மற்றும் செனகல் ஆகிய நாடுகளும் இந்தியாவை போல 80-வது இடத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)