என் மலர்
நீங்கள் தேடியது "தரவரிசை"
- உலக பேட்மிண்டன் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- சமீபத்தில் நடந்த சீன ஓபன் இறுதிப்போட்டியில் சாத்விக் சிராக் ஜோடி நுழைந்தது.
புதுடெல்லி:
உலக பேட்மிண்டன் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி ஒரு இடம் முன்னேறி
6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
முன்னாள் நம்பர் ஒன் ஜோடியான சாத்விக்-சிராஜ் ஹாங்காங் ஓபன் மற்றும் சீனா ஓபன் போட்டியின் இறுதிக்குள் நுழைந்ததால் இந்த ஏற்றம் கண்டுள்ளது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 19-வது இடத்தையும், ஆயுஷ் ஷெட்டி 28-வது இடத்தையும், எச்.எஸ்.பிரனாய் 34-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 13-வது இடத்தில் தொடருகிறார். உன்னதி ஹூடா 31-வது இடத்தையும், மாளவிகா பன்சோத் 33-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
- ஜெர்மனி முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறி உள்ளது.
- ஸ்லோவாக்கியா தற்போது தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளது.
தஜிகிஸ்தானில் நடைபெற்ற CAFA நேஷன்ஸ் கோப்பையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், FIFA வெளியிட்ட தரவரிசையில், ஒரு இடம் பின்தங்கி 134வது இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்பெயின் 11 ஆண்டுகளில் முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனி முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறி உள்ளது.
எட்டு நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த பிளே-ஆஃப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஓமனை வீழ்த்தி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அக்டோபரில் நடைபெறும் AFC ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் சிங்கப்பூருக்கு எதிராக இந்தியா அடுத்ததாக மோத உள்ளது.
இதனிடையே, FIFA நேற்று வெளியிட்ட தரவரிசை பட்டியலில், ஸ்பெயின் முதலிடமும், பிரான்ஸ் இரண்டாவது இடமும், அர்ஜென்டினா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இங்கிலாந்து, போர்ச்சுகல், பிரேசில், நெதர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, இத்தாலி ஆகியவை முறையே அடுத்தடுத்து இடங்களை பிடித்து முதல் 10 இடங்களில் உள்ளன.
நான்கு முறை உலக சாம்பியனான ஸ்லோவாக்கியா தற்போது தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளது.
- பேட்ஸ்மேன்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
- இதில் ரோகித் சர்மா, விராட் கோலி பெயர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மும்பை:
பேட்ஸ்மேன்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளியான பட்டியலில் முதல் 100 இடங்களில் கூட இருவரது பெயர்களும் இடம்பெறவில்லை.
கடந்த வாரம் வரை இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் நீடித்து வந்தனர்.
ஐ.சி.சி. விதிமுறைப்படி, சுமார் 9 மாத காலம் ஒரு விளையாட்டு வீரர் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால் அவரது பெயர் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்படும் அல்லது ஓய்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டும் இவர்கள் விஷயத்தில்
நடக்கவில்லை.
இந்தச் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தரவரிசைப் பட்டியலில் இருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டது ஒருவேளை இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்களோ என்ற வதந்தி பரவியது.
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியில் இருவருக்கும் என்பதை பிசிசிஐ மறைமுகமாக தெரிவிக்கிறதா எனவும் சாடி வருகின்றனர்.
பி.சி.சி.ஐ. இருவரையும் ஓய்வுபெறும்படி கட்டாயப்படுத்திவிட்டதா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரசிகர்களின் பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில் சில மணி நேரங்களுக்குப் பிறகு ஐசிசி தனது தவறைத் திருத்தியது. இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட குழப்பம் எனத் தெரியவந்தது. அதன்பின் ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் இடம்பெற்றனர்.
- சிங்கப்பூர் பாஸ்போர்ட் உடன் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
- அமெரிக்கா 10வது இடத்திற்கும், இங்கிலாந்து 6வது இடத்திற்கும் சரிந்துள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் சமீபத்திய பட்டியலில் இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்துள்ளது.
இது கடந்த ஆறு மாதங்களில் எந்த நாடும் கண்டிராத மிகப்பெரிய முன்னேற்றமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா 85வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
லண்டனை தளமாகக் கொண்ட ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு, ஒரு நாட்டின் பாஸ்போர்ட் அதன் குடிமக்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும் நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகளவில் தரவரிசைப்படுத்துகிறது.
தற்போது, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வந்தவுடன் விசா பெறும் வசதியுடன் பயணிக்க முடியும்.
இந்தியர்கள், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, பூட்டான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து உலகளவில் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் உடன் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் உடன், விசா இல்லாமல் 189 நாடுகளுக்குள் நுழையலாம்.
இந்த முறை முன்னணியில் இருந்த அமெரிக்கா 10வது இடத்திற்கும், இங்கிலாந்து 6வது இடத்திற்கும் சரிந்துள்ளன.
- டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 2வது இடத்துக்கு முன்னேறினார்.
- இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி 11 இடம் முன்னேறி 43-வது இடம் பிடித்தார்.
துபாய்:
ஐ.சி.சி. சார்பில் டி20 வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடந்த 6 ஆண்டாக டாப்-10 பட்டியலில் இடம்பெற்று வருகிறார் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா. தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசையில் 3வது இடத்தில் இருந்த தீப்தி சர்மா, ஒரு இடம் முன்னேறி, 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தானின் சாடியா (746) விட 8 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி 11 இடம் முன்னேறி 43-வது இடம் பிடித்தார்.
பேட்டர் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் தொடர்கிறார். மற்றொரு வீராங்கனை ஜெமிமா 12-வது இடம் பிடித்துள்ளார்.
- கடந்த ஆண்டு இது 150வது இடத்தைப் பிடித்திருந்தது.
- ஐஐடி மெட்ராஸ் 180 வது இடத்தில் உள்ளது.
2026 QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் டெல்லி IIT பட்டியலில் டெல்லி IIT 123வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இது 150வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் 27 ரேங்க் முன்னேறி இந்த வருடம் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இந்த ஆண்டு தரவரிசையில் எட்டு புதிய கல்வி நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் இடம்பெற்ற கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலம், அமெரிக்கா (192), இங்கிலாந்து (90) மற்றும் சீனா (72) ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியா நான்காவது அதிக பிரதிநிதித்துவ நாடாக மாறியுள்ளது.
இதற்கிடையில், ஐஐடி பாம்பே 2025 ஆம் ஆண்டில் அதன் மிக உயர்ந்த தரவரிசையான 118 இலிருந்து 129 வது இடத்திற்குச் சரிந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ் 180 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியா வீரர் லபுஸ்சேன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்.
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2-வது இடத்தில் உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.
ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும், ரோகித் சர்மா 9-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் 87 மற்றும் 29 ரன் வீதம் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 10 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். புஜரா 19-வது இடத்தையும், விராட் கோலி 14-வது இடத்தையும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி சக வீரர் ஜஸ்பிரித் பும்ராவுடன் 4-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.
- 2023-2024-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவ, மாணவியர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
- 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம்:
2023-2024-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவ, மாணவியர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீடு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 வகை யான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 596 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அர்ச்சனா 6-ம் இடமும் பிடித்துள்ளார். அவர் நீட் தேர்வில் 537 மதிப்பெண்கள் பெற்றி ருந்தார். இந்த இரண்டு மாணவிகளும் சேலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அரசு ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வருண் 715 மதிப்பெண்களு டன் 3-ம் இடத்தையும், மாணவன் காவியரசு 705 மதிப்பெண்களுடன் 7-ம் இடத்தையும் பிடித்தனர்.
இது குறித்து மாணவி கிருத்திகா கூறுகையில், சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். டாக்டர் ஆக வேண்டும் என லட்சியமாக இருந்தது. இதனால் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என ஒரே நோக்கத்தில் கடுமையாக படித்தேன்.
ஆசிரியர்கள், ஆசிரி யைகள், நன்கு பயிற்சி அளித்தனர். மேலும் பெற்றோர், என்னை ஊக்கு வித்தனர். இதனால் என்னால் வெற்றி பெற முடிந்தது. அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எனக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
- பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதலிடத்தில் நீடிக்கிறார்.
- ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.
துபாய்:
டி20 கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
இந்நிலையில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 861 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார்.
இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (781 புள்ளி) 3-வது இடத்திலும் உள்ளனர்.
மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 714 புள்ளிகள் பெற்று 6-வது இடம் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 726 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இலங்கை வீரர் ஹசரங்கா 2-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் அகில் ஹூசைன் 3-வது இடமும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் அக்ஷர் பட்டேல் 4-வது இடமும், ரவி பிஷ்னோய் 5-வது இடமும் பிடித்துள்ளனர்.
ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இலங்கை வீரர் ஹசரங்கா மற்றும் வங்காளதேச வீரர் ஷகிப் உல்-ஹசன் ஆகியோர் 228 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.
- தாய்லாந்து ஓபன் தொடரில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
- ஆடவர் இரட்டையர் உலக தரவரிசையில் சாத்விக்-சிராக் ஜோடி முதலிடம் பிடித்தனர்.
புதுடெல்லி:
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்ராஜ்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், தாய்லாந்து ஓபன் தொடரில் வெற்றிபெற்ற நிலையில், ஆடவர் இரட்டையர் உலக தரவரிசையில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன ஜோடிக்கு ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தாய்லாந்து ஓபன் தொடரில் 2-வது முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் உள்ளார்.
- இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
துபாய்:
டி20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி இந்திய வீரரான ஜெய்ஸ்வால் டாப் 10-ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் 142 ரன்கள் குவித்ததன் மூலம் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மற்றொரு இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதல் இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 3-வது இடத்திலும், 4-வது மற்றும் 5-வது இடங்கள் முறையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளனர்.
மற்றொரு இந்திய வீரர் கெய்க்வாட் 2 இடங்கள் பின்தங்கி 8-வது இடம்பிடித்துள்ளார். சுப்மன் கில் 37-வது இடத்தில் உள்ளார்.
- பேட்டிங் தரவரிசையில் டாப் 10-ல் 2 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
- பந்து வீச்சாளர் தரவரிசையிலும் டாப் 10-ல் 2 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
துபாய்:
டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி) நேற்று வெளியிட்டது. இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 5-வது இடத்தில் தொடருகிறார்.
இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 3 இடம் முன்னேறி 12-வது இடத்தையும், தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 2 இடம் உயர்ந்து 15-வது இடத்தையும் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கிறார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் டாப்-3 இடங்களில் முறையே இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டன், சாரா கிளென், இந்தியாவின் தீப்தி ஷர்மா மாற்றமின்றி நீடிக்கிறார்கள். இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங் 10-வது இடமும், ராதா யாதவ் 15-வது இடமும் , பூஜா வஸ்ட்ராகர் 23-வது இடமும் , ஸ்ரேயங்கா பட்டீல் 60-வது இடமும் வகிக்கிறார்கள்.






