என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "test cricket"
- இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை.
- ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன்.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி 2021-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் ஆகியோரது வற்புறுத்தலை ஏற்று டெஸ்ட் ஓய்வில் இருந்து விடுபட்டு சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். 2-2 என்று சமனில் முடிந்த இந்த தொடரின் கடைசி டெஸ்டில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் டெஸ்டில் இருந்து மீண்டும் விடைபெற்றார்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வரை தொடர்ந்து டெஸ்டில் விளையாடுவது குறித்து பரிசீலிக்கும்படி பயிற்சியாளர் மெக்கல்லம் அவரை மீண்டும் கேட்டு இருந்தார். இந்த முறை அவரது வேண்டுகோளை ஏற்க 36 வயதான மொயீன் அலி மறுத்து விட்டார்.
இது குறித்து மொயீன் அலி கூறுகையில் 'இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. எனது முடிவு அவர்களுக்கு (ஸ்டோக்ஸ், மெக்கல்லம்) தெரியும். அற்புதமான ஆஷஸ் வெற்றியுடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்து விட்டேன்.
எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் ஏற்றம், இறக்கங்கள் நிறைந்தது. நான் அதை மாற்ற முடியாது. ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன். இனி வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்துவேன். 20 ஓவர் லீக் போட்டிகளிலும் விளையாடுவேன்' என்றார்.
- ஆஸ்திரேலியா வீரர் லபுஸ்சேன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்.
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2-வது இடத்தில் உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.
ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும், ரோகித் சர்மா 9-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் 87 மற்றும் 29 ரன் வீதம் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 10 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். புஜரா 19-வது இடத்தையும், விராட் கோலி 14-வது இடத்தையும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி சக வீரர் ஜஸ்பிரித் பும்ராவுடன் 4-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.
- வங்காளதேச அணியின் மொமினுல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
- இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
மிர்பூர்:
இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரை வங்காளதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் சட்டோ கிராமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 188 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை மிர்பூரில் தொடங்கியது. காயத்தால் முதல் டெஸ்டில் விளையாடாத இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த டெஸ்டிலும் விளையாடவில்லை. கேப்டன் பொறுப்பை லோகேஷ் ராகுல் ஏற்றார்.
இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதில் ஜெய்தேவ் உனத்கட் இடம் பெற்றார். வங்காளதேச அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. யாசிர் அலி, எபடோட் ஹொனசர் ஆகியோருக்கு பதில் மொமினுல் ஹக், தஸ்கின் அகமது சேர்க்கப்பட்டனர்.
டாஸ் ஜெயித்த வங்காளதேச அணி கேப்டன் ஷகீப்-அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். வங்காளதேசத்தின் தொடக்க வீரர்களாக ஜாகீர் ஹசன், நஜ்முல் ஹொசைன் களம் இறங்கினர். முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். இதில் 5-வது பந்தில் நஜ்முல் ஹொசைன் பவுண்டரி அடித்தார்.
தொடக்க ஜோடி நிதானமாக விளையாடியது. இருவரும் விக்கெட்டை பறிகொடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து பொறுமையாக விளையாடினார்கள். இதனால் வங்காளதேச அணியின் ரன் வேகம் மெதுவாக இருந்தது.
15-வது ஓவரில் வங்காள தேசத்தின் முதல் விக்கெட் விழுந்தது. ஜெய்தேவ் உனத்கட் பந்தில் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஜாகீர் ஹசன் 15 ரன் எடுத்தார். அடுத்த ஓவரில் 2-வது விக்கெட் விழுந்தது. அஸ்வின் பந்து வீச்சில் நஜ்முல் ஹொசைன் (24 ரன்) எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த கேப்டன் ஷகீப்-அல்-ஹசன், 16 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மொமினுல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. முஷ்பிகுர் ரகிம் 26 ரன்கள், லித்தன் தாஸ் 25 ரன்கள், மெகிடி ஹசன் 15 ரன்கள், நூருல் ஹசன் 6 ரன்கள் மற்றும் தஸ்கின் அகமது 1 ரனில் ஆட்டமிழந்தனர். மொமினுல் ஹக் 84 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் வங்காளதேச அணி 227 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினர். ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்துள்ளது.
- துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர்.
- முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து ரன் குவித்தனர். பந்தை பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்த இருவரும், முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர். ஜாக் கிராவ்லி 122 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்களும் விளாசினர்.
இவர்கள் தவிர ஒல்லி போப், ஹாரி ப்ரூக் ஆகியோரும் கடைசி செசனில் சதம் அடித்து அசத்தினர். ஒல்லி போப் 108 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார். போதிய வெளிச்சம் இல்லாததால் 75 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும்.
இதற்கு முன்பு 1910ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 494 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. இதேபோல் விரைவாக 500 ரன்னை கடந்த அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

கிரிக்கெட் ஆட்டங்களில் விதிமுறைகளை மாற்றுவதிலும், புதிய நுணுக்கங்களை புகுத்துவதிலும் லண்டனை மையமாக கொண்டு செயல்படும் எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கமிட்டியில் இந்நாள், முன்னாள் வீரர்கள், நடுவர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த கமிட்டி பரிந்துரைக்கும் விதிமுறைகளை தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பெரும்பாலும் அங்கீகரிக்கிறது.
மைக் கேட்டிங் தலைமையிலான எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடந்தன. இதன் முடிவில் சில பரிந்துரைகளை இந்த கமிட்டி முன் வைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அண்மை காலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தாமதமாக பந்து வீசும் புகார் அதிகமாக எழுகிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மெதுவாக பந்து வீசிய புகாருக்காக கேப்டன் என்ற முறையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டருக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இரண்டரை நாட்களில் நிறைவடைந்த டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்து வீச்சு புகார் கூறுவதா? என்று முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதை கவனத்தில் கொண்டு நேரத்தை கணக்கிட ஸ்கோர் போர்டில் எலக்ட்ரானிக் கெடிகாரம் (டைமர் கிளாக்) பொருத்தப்படும். ஓவர் முடிந்ததும் 45 வினாடியில் இருந்து கவுண்ட்டவுன் ஆரம்பிக்கும். இந்த நேரம், பந்தை எதிர்கொள்ளும் புதிய பேட்ஸ்மேனுக்கு 60 வினாடிகளாகவும், மாற்று பந்து வீச்சாளராக வருபவருக்கு 80 வினாடிகளாகவும் அதிகரிக்கப்படும். கவுண்ட்டவுன் ஜீரோவை எட்டும் போது பேட்டிங் அல்லது பந்து வீச்சுக்கு இரண்டு அணி தரப்பினரும் தயாராக இருக்க வேண்டும். கவுண்ட்டவுன் முடிந்ததும் ஆட்டத்தை தொடங்காவிட்டால் எச்சரிக்கை விடுக்கப்படும்.
இதே விதிமீறல் தொடர்ந்து நீடித்தால், சம்பந்தப்பட்ட அணியை தண்டிக்கும் வகையில் எதிரணிக்கு 5 ரன் வழங்கப்படும். விக்கெட் வீழ்ச்சியின் போதும் இதே நேரம் முறை பின்பற்றப்படும். ஆனால் ஆடுகளத்தில் (பிட்ச்) இருந்து வீரர்களின் ஓய்வறை இருக்கும் தூரத்தை வைத்து இந்த கால அளவில் மாற்றம் இருக்கும்.
ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நோ-பால் வீசினால் பிரீஹிட் வழங்கப்பட வேண்டும். இதனால் சுவாரஸ்யம் அதிகமாகும். அத்துடன் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் பிரீஹிட் முறை கொண்டு வரப்பட்டதும் நோ-பால் வீசுவது வெகுவாக குறைந்திருக்கிறது. இங்கிலாந்து அணியின் சமீபத்திய செயல்பாட்டை பார்க்கும் போது, 45 ஒரு நாள் போட்டிகளில் அந்த அணி ஒரு நோ-பால் கூட வீசவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 11 நோ-பால்களை வீசியிருக்கிறது. எனவே ‘பிரீஹிட்’ வழங்கப்படும் போது, டெஸ்ட் போட்டிலும் நோ-பால் வீசப்படுவது குறையும்.
தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் எஸ்.ஜி, கூக்கபுரா, டியூக்ஸ் ஆகிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்க இருப்பதால் எல்லா டெஸ்ட் போட்டிகளுக்கும் (பகல்-இரவு டெஸ்டை தவிர்த்து) ஒரே மாதிரியாக தரமான பந்துகளை பயன்படுத்த வேண்டும். டியூக்ஸ் வகை பந்தை இதற்கு முயற்சித்து பார்க்கலாம்.
மேற்கண்டவாறு கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்திருக்கிறது. இதை செயல்படுத்துவது குறித்து ஐ.சி.சி. விரைவில் முடிவு எடுக்கும். ஐ.சி.சி. ஒப்புதல் அளித்ததும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்.

