என் மலர்
நீங்கள் தேடியது "test cricket"
- இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் சதம் விளாசினார்.
- ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி தொடக்க வீரரான டக்கெட் மற்றும் அடுத்து வந்த ஒலி போப் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
ஜாக் கிராலி - ரூட் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். கிராலி 76 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ப்ரூக் அதிரடியாக விளையாட முயற்சித்து 31 ரன்னில் வெளியேறினார்.
அதனை தொடர்ந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (19) தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து ஸ்மித் 0, வில் ஜக்ஸ் 19 அட்கின்சன் 4 என வெளியேறினர். இதனால் ரூட் சதம் அடிப்பாரா இல்லையா என்பது கேள்வி குறியானது. அந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை ரூட் பதிவு செய்தார்.
இதனையடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரூட் - ஆர்ச்சர் ஆஸ்திரேலிய பந்து வீச்சை நாலாபுறமும் சிதரடித்தனர். இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 61 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது. கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறிய நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜோரூட் இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டை வீழ்த்தினார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 39 சதங்கள் விளாசியுள்ளார்.
- ஆஸ்திரேலியாவில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை அடித்து சாதித்து காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தனது முதல் சத்தத்தை ரூட் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார். தற்போது ரூட் சதம் அடித்ததால் ஹைடன் தப்பித்தார்.
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன் எடுத்து இருந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி மேலும் ரன் எதுவும் எடுக்காமல் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்டஇண்டீஸ் அணி 10 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து சாய் ஹோப் மற்றும் சந்தர்பால் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. 56 ரன்கள் எடுத்த நிலையில் சாய் ஹோப் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் ரோஸ்டன் சேஸ் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
அதனை தொடர்ந்து சந்தர்பால் 52 ரன்னிலும் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 4-ந் தேதி தொடங்குகிறது.
- முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறாது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 21-ந் தேதி தொடங்கி 2 நாட்களே முடிவுக்கு வந்தது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக வரும் 4-ந் தேதி பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதன்படி முதல் போட்டியில் விளையாடிய மார்க் வுட் காயம் காரணமாக விலகி நிலையில் அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் வில் ஜக் அணியில் இடம் பிடித்துள்ளார். வேறு எந்த மாற்றமும் செய்யபடவில்லை.
இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:-
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (வாரம்), வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்
- இந்தியாவில் விளையாடிய கடைசி 3 டெஸ்ட் தொடர்களில் இந்தியா 2ல் ஒயிட் வாஷ் ஆகி உள்ளது
- இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் கூடுதலாக விளையாடி வருகிறார்கள்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. அதேசமயம் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு 2-வது முறையாக இந்திய அணி ஹோமில் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில், சொந்த மண்ணில் தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இந்தியா இழந்தது குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் காட்டமாக பேசி வீடியோவெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இந்தியாவிற்கு வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் எதிரணிகள் பயப்படுவார்கள். ஆனால் இப்போது இந்திய அணியுடன் விளையாட வேண்டுமென்றால் ஜாலியாக இருப்பார்கள். கடந்த 12 மாதங்களில் இந்திய அணி 2வது முறையாக ஒயிட் வாஷ் ஆகி உள்ளது. இந்தியாவில் விளையாடிய கடைசி 3 டெஸ்ட் தொடர்களில் இந்தியா 2ல் ஒயிட் வாஷ் ஆகி உள்ளது
இது இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான காலகட்டத்தில் உள்ளோம். உடனடியாக கஷ்டமான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன பிரச்சனை உள்ளது. இந்திய வீரர்களின் தரம் குறைவாக உள்ளதா? ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்களா? வேகம், ஸ்பின் இரண்டிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழக்கிறார்கள்.
இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் கூடுதலாக விளையாடி வருகிறார்கள். நிதிஷ் குமார் ரெட்டி இந்தாண்டு உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் மொத்தமாகவே 14 ஓவர்களை மட்டும்தான் வீசி உள்ளார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்கள். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியில் 7 பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். இந்திய அணியால் இன்னமும் சிறப்பாக விளையாட முடியும். திடீரென எப்படி இந்த அளவிற்கு சரிவு ஏற்படும்" என்று பேசியுள்ளார்.
WTC டெஸ்ட் தொடரில் 65 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் இந்தியாவின் 3 ஆம் வரிசை பேட்ஸ்மேனின் முதல் இன்னிங்சின் சராசரி 26 ஆகும். இது 2 ஆவது மோசமான உலக சாதனையாகும்.
ஆகவே இந்திய அணியின் 3 ஆம் வரிசை வீரர் யார் என்பதை நாம் முடிவு செய்யவேண்டும். வாஷிங்டன் சுந்தர் கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் 3 ஆம் வரிசையில் இறங்கினார். கவுகாத்தி டெஸ்டில் சாய் சுதர்சன் 3 ஆம் வரிசையில் இறங்கினார். இது இந்தியாவிற்கு உதவியதா?
WTC டெஸ்ட் தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. இலங்கை, நியூஸிலாந்துடன் அவே கேமில் 2 போட்டிகளும் ஆஸ்திரேலியாவுடன் ஹோமில் 5 போட்டிகளும் இந்தியா விளையாடுகிறது.
இந்தியா அடுத்த டெஸ்ட் போட்டியை விளையாட இன்னும் 7 மாதங்கள் உள்ளது. ஆனால் இப்போது இந்திய டெஸ்ட் அணியில் என்ன நடக்கிறது என்பதை நாம் யோசிக்க வேண்டும். நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக விளையாட என்ன செய்யவேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.
தினேஷ் கார்த்திக்கின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா அணி சாதனை படைத்ததுள்ளது.
- சொந்த மண்ணில் இந்திய அணி 2-வது முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா அணி சாதனை படைத்ததுள்ளது.
அதேசமயம் சொந்த மண்ணில் இந்திய அணி 2-வது முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக அவரது எதிர்காலம் குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர்.
அதற்கு கம்பீர் கூறியதாவது:-
இதை முடிவு செய்ய வேண்டியது பிசிசிஐ தான். நான் முன்பே சொன்னேன். இந்திய கிரிக்கெட் முக்கியம். நான் முக்கியமில்லை. இங்கிலாந்து மண்ணில் டெஸ்டில் நன்றாக விளையாடியபோதும், சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்றபோது இதே கம்பீர்தான் பயிற்சியாளராக இருந்தேன். இது கற்றுக்கொண்டிருக்கும் ஒரு அணி என கூறினார்.
- 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
- நீங்கள் ஒரு தனி நபரை மட்டும் குறை சொல்ல முடியாது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. அதேசமயம் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு 2-வது முறையாக இந்திய அணி ஹோமில் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சறுக்கல்கள் எற்பட்டுள்ளதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளார் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த காலங்களிலும் இதுபோன்ற சறுக்கல்கள் எற்பட்டுள்ளன. ஆனால் யாராவது ஒருவர் நான் இதை தடுத்தாக வேண்டும் என்று விளையாட வேண்டும். அது இம்முறை நடக்கவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்த அணி வேறு. அனுபவம் வாய்ந்தது. இந்த அணி வேறு. நீங்கள் ஒப்பிட முடியாது. அவர்களுக்கு நீங்கள் நேரம் கொடுக்க வேண்டும்.
நான் அனைவரிடமிருந்தும் இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கிறேன். நீங்கள் ஒரு தனி நபரை மட்டும் குறை சொல்ல முடியாது என கம்பீர் கூறினார்.
- இந்தியாவுக்கு 549 ரன்கள் வெற்றி இலக்காக தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்தது.
- 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்தது.
கவுகாத்தி:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனையடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தது. தென் ஆப்பிரிக்கா அணி மொத்தம் 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 94 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 549 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. சுதர்சன் 2 ரன்களுடனும், குல்தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய சூழலில் நாளை 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த இன்னிங்சில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை 52 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50+ விக்கெட்டுகள் கைப்பற்றிய 5-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார்.
அந்த பட்டியல்:
1. அனில் கும்ப்ளே - 84 விக்கெட்டுகள்
2. ஜவகல் ஸ்ரீநாத் - 64 விக்கெட்டுகள்
3. ஹர்பஜன் சிங் - 60 விக்கெட்டுகள்
4. அஸ்வின் - 57 விக்கெட்டுகள்
5. ஜடேஜா - 52 விக்கெட்டுகள்
- தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
- நாளை கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெற 522 ரன்கள் தேவை.
கவுகாத்தி:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் கொடுக்கவில்லை.
ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 58 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினார்கள். மார்கோ யான்சென் 6 விக்கெட்டும், ஹார்மர் 3 விக்கெட்டும், கேசவ் மகராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
288 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது. ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். உடனே கேப்டன் பவுமா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 548 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணி 549 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து கடினமான இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல்- ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 13 ரன்னிலும் கேஎல் ராகுல் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. 15-வது ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது போதிய வெளிச்சமின்மை காரணமாக 4-ம் வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
நாளை கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெற 522 ரன்கள் தேவை. கைவசம் 8 விக்கெட்டுகள் மீதம் உள்ளது.
- ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
- தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
கவுகாத்தி:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் கொடுக்கவில்லை.
ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 58 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினார்கள். மார்கோ யான்சென் 6 விக்கெட்டும், ஹார்மர் 3 விக்கெட்டும், கேசவ் மகராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
288 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன் எடுத்து இருந்தது. ரிக்கெல்டன் 13 ரன்னுடனும், மர்க்கிராம் 12 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 314 ரன்கள் முன்னிலை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து ஆடியது.
ரிக்கெல்டன் 35 ரன்னிலும், மர்க்கிராம் 29 ரன்னிலும் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பவுமா 3 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் வெளியேறினார். 77 ரன்னில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டை இழந்தது.
4-வது விக்கெட்டான ஸ்டப்ஸ்-சோர்சி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் சோர்சி 49 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஸ்டப்ஸ் உடன் முல்டர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஸ்டப்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து விளையாடிய ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். உடனே கேப்டன் பவுமா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 548 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணி 549 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை எட்டி வரலாறு படைக்குமா அல்லது தொடரை இழக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- ஸ்டப்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார்
- தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 220 ரன்கள் எடுத்துள்ளது.
கவுகாத்தி:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் கொடுக்கவில்லை.
ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 58 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினார்கள். மார்கோ யான்சென் 6 விக்கெட்டும், ஹார்மர் 3 விக்கெட்டும், கேசவ் மகராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
288 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன் எடுத்து இருந்தது. ரிக்கெல்டன் 13 ரன்னுடனும், மர்க்கிராம் 12 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 314 ரன்கள் முன்னிலை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து ஆடியது.
ரிக்கெல்டன் 35 ரன்னிலும், மர்க்கிராம் 29 ரன்னிலும் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பவுமா 3 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் வெளியேறினார். 77 ரன்னில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டை இழந்தது.
4-வது விக்கெட்டான ஸ்டப்ஸ்-சோர்சி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் சோர்சி 49 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஸ்டப்ஸ் உடன் முல்டர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஸ்டப்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார்.
இதனால் 4-ம் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 220 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 515 ரன்கள் முன்னிலை பெற்று இந்த டெஸ்டில் மிகவும் வலுவான நிலையில் இருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த டெஸ்டிலும் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. போட்டி டிராவில் முடிந்தாலும் தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றிவிடும்.
- இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணியே வெற்றி பெறும் சூழல் உள்ளது.
- ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டனாக நியமிக்காதது ஏன் என பிசிசிஐக்கும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் செல்வராகன் கேள்வி.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் எடுத்தது. இந்தியா வெறும் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 1-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலை வகித்து வருகிறது. மேலும் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணியே வெற்றி பெறும் சூழல் உள்ளது.
இதனால் பலரும் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டனாக நியமிக்காதது ஏன் என பிசிசிஐக்கும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நான் எப்போதும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன். ஜஸ்ப்ரித் பும்ராவை ஏன் கேப்டனாக்கவில்லை? என குறிப்பிட்டுள்ளார்.






