search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Starc"

    • முதல் வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார்.
    • 4-வது வீரராக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான்.

    புதுடெல்லி:

    10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் உலககோப்பை தொடருக்கான கனவு 11 அணியில் தான் தேர்வு செய்த முதல் 5 வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார். அதில் இரண்டு இந்திய வீரர்கள், ஒரு ஆஸ்திரேலிய வீரர் , ஒரு தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் ஒரு ஆப்கானிஸ்தான் வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    முதல் வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் எனவும் கூறியுள்ளார். 2-வது வீரராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். இவர் ஐசிசி மற்றும் இருதரப்பு தொடர்களில் அதிக ரன்களை குவித்து சிறப்பான வீரர் என நிரூபித்துள்ளார்.

    3-வது வீரராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்துள்ளார். 4-வது வீரராக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். 5-வது வீரராக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடாவை தேர்வு செய்துள்ளார்.

    • 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
    • 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது.

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதே போல் 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது.

    இதில் சுவாரசியம் என்னவென்றால், நடப்பு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட டாப் 2 வீரர்களின் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

    ஐபிஎல் தொடரில் மினி ஏலம் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாக அரங்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

    ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் டைரஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போவது முதல் முறையாகும். இதற்கு முன்னதாக முன்னதாக பேட் கம்மின்சை 20.50 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.

    நடப்பு ஐ.பி.எல். தொடர் ஏலத்தில் அதிகம் விலை போன வீரர்களின் விவரம் வருமாறு:

    மிட்செல் ஸ்டார்க்: ரூ.24.75 கோடி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்)

    பேட் கம்மின்ஸ்: ரூ.20.50 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

    டேரில் மிட்செல்: ரூ.14 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    ஹர்ஷல் படேல்: ரூ.11.75 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)

    அல்ஜாரி ஜோசப்: ரூ.11.50 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

    • ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
    • விராட் கோலி 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று காலை (இந்திய நேரப்படி 9.30) தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் சுப்மன் கில், ரோகித் சர்மா, அஸ்வின் சேர்க்கப்பட்டு ஜூரெல், படிக்கல், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டனர்.

    ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்திலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் வீசிய முதல் பந்தில் ஜெய்ஸ்வால் எல்.பி.டபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார்.

    அடுத்து கே.எல். ராகுல் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். சுப்மன் களம் இறங்கியதில் இருந்து அடித்து விளையாடினார். கே.எல். ராகுல் முதலில் நிதானமாக விளையாடினார். அதன்பின் அடித்து விளையாட தொடங்கினார்.

    இந்த ஜோடி சிறப்பாக விளையாடிய நிலையில் இந்தியா 69 ரன் எடுத்திருக்கும்போது கே.எல். ராகுல் (37) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 7 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இந்த இரண்டு விக்கெட்டையும் ஸ்டார்க் வீழ்த்தினார்.

    மறுமுனையில் விளையாடிய சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆனார். இதனால் இந்தியா 81 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    5-வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்தியா 23 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருக்கும்போது டின்னர் இடைவேளை விடப்பட்டது.

    ரிஷப் பண்ட் 4 ரன்னுடனும், ரோகித் சர்மா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய 69 ரன்னிற்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்து 81 ரன்னுக்குள் 4 விக்கெட் இழந்தது. அதாவது 12 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    • முதல் இன்னிங்சில் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தி இந்திய பேட்டிங் ஆர்டரை சீர்குலைத்தார்.
    • ஐ.பி.எல். மெகா ஏலத்தில் டெல்லி அணி அவரை 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு பிங்க்-பால் போட்டியாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது. இதற்கு முக்கிய காரணம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்தான். இவர் 6 விக்கெட்டுகள் சாய்த்தார். நேர்த்தியான பவுன்சர் மற்றும் ஸ்விங் மூலம் இந்திய பேட்டிங் ஆர்டரை சீரிகுலைத்தார்.

    இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் ஸ்டார்க்கை நோக்கி ஐபிஎல் தொடரில் சம்பளம் குறைக்கப்பட்டது தொடர்பாக கோசம் எழுப்பினர்.

    கடந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவர் 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்த முறை நடைபெற்ற மெகா ஏலத்தில் 11.75 கோடி ரூபாய்க்கு டெல்லி எடுத்தது.

    அவருடைய சம்பளம் 13 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்த நிலையில்தான் பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த மிட்செல் ஸ்டார்க்கை நோக்கி இந்திய ரசிகர்கள், ஐபிஎல், ஐபிஎல், ஸ்டார்க்கிற்கு ஐபிஎல் பிடிக்கும். கே.கே.ஆர்., கே.கே.ஆர். என கோஷம் எழுப்பினர்.

    மேலும் கே.கே.ஆர். சம்பளத்தில் இருந்து எவ்வளவு (Howmuch) குறைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும் கோசம் எழுப்பினர்.

    • பாலோ-ஆன் தவிர்க்க இந்தியா 245 ரன்கள் எடுக்க வேண்டும்.
    • மழை குறுக்கீட்டால் இந்தியாவை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வைத்து ஆல்அவுட் ஆக்க ஆஸி. முயற்சிக்கும்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கியது. 51 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கே.எல். ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    இந்த மூன்று நாட்களும் மழையால் ஆட்டம் தடைபட்டுள்ளது. இன்னும் இரண்டு நாள் ஆட்டத்தில் ஒரு செசன் மழையால் தடைபட்டால் போட்டி டிரா ஆக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவை குறைந்த ரன்னில் சுருட்டி பாலோ-ஆன் கொடுக்க முயற்சிப்போம் என ஸ்டார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மிட்செல் ஸ்டார்க் கூறுகையில் "இந்தியா 51 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் நாங்கள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளோம். விக்கெட் (ஆடுகளம்) இன்னும் பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது. நாளை நாங்கள் பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்தோம் என்றால், முன்னதாகவே இந்திய விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். இது இந்தியாவை பாலோ-ஆன் ஆக்க கூடுதல் வாய்ப்பை கொடுக்கும்" என்றார்.

    மழை குறுக்கீடு இருப்பதால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யாமல் இந்தியாவை பேட்டிங் செய்ய வைக்க முயற்சிக்கும்.

    245 ரன்கள் அடித்தால்தான் இந்தியா பாலோ-ஆன் தவிர்க்க முடியும். அதற்குள் இந்தியாவை ஆல்-அவுட் ஆக்கி, தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வைத்து, அதிலும் குறைந்த ரன்னில் சுருட்டி வெற்றி பெற விரும்பும். இதனால் பாலோ-ஆன் ஆக்க முயற்சிப்போம் என ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீரர் ஸ்டார்க் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. #Starc #INDvAUS
    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதன் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.

    இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.

    முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 27-ந்தேதியுடன் 20 ஓவர் முடிகிறது. ஒருநாள் தொடர் மார்ச் 2-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. மார்ச் 13-ந்தேதியுடன் ஒரு நாள் தொடர் முடிகிறது.

    உலக கோப்பைக்கு முன்பு நடைபெறும் இந்த ஒரு நாள் தொடர் மீத அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீரர் ஸ்டார்க் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் கானே ரிச்சர்ட்சன் அணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார்.

    பீட்டர் சிடில், மிட்செல் மார்ஷ், ஸ்டான்லேக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    ஆரோன்பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஹேன்ட்ஸ்ஹோம், மேக்ஸ்வெல், ஆஸ்டன் டர்னர், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, கும்மின்ஸ், நாதன் கோல்ட்டர், கேன் ரிச்சர்ட்சன், ஜோசன் பெக்ரன் மார்ப், நாதன் லயன், ஆடம் ஜம்பா. டி ஆர்சி ஷார்ட், ஜியே ரிச்சர்ட்சன்.

    இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் விளையாடி வருகிறது. வருகிற 10-ந் தேதியுடன் இந்த தொடர் முடிகிறது. அதன் பிறகு இந்தியா- ஆஸ்திரேலியா தொடர் நடைபெறும். #Starc #INDvAUS
    ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணி 366 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
    கான்பெரா:

    ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பெராவில் நடந்தது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 215 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது.

    319 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கைக்கு 516 ரன் நிர்ணயிக்கப்பட்டது.

    இலங்கை அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 499 ரன் தேவை. கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து விளையாடியது.

    ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி நிலை குலைந்தது. இலங்கை அணி 51 ஓவர்களில் 149 ரன்னில் சுருண்டது.

    இதனால் ஆஸ்திரேலியா 366 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெண்டீஸ் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். ஸ்டார்க் 5 விக்கெட்டும், கும்மின்ஸ் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த டெஸ்டில் ஸ்டார்க்கின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் மொத்தம் 10 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த வெற்றிமூலம் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. #SLvAUS
    ×