என் மலர்
நீங்கள் தேடியது "விக்னேஷ் புத்தூர்"
- நடப்பு ஐ.பி.எல் தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது திறமையை வெளிக்காட்டினார்.
- விக்னேஷ் புதூருக்கு பதிலாக ரகு சர்மாவை மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 15 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 14 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விக்னேஷ் புத்தூர் அறிமுகமானார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது திறமையை வெளிக்காட்டினார். இதனால் அவரை பலரும் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் தான் காயம் காரணமாக விக்னேஷ் புத்தூர் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாதிப்பு என்றே கூறலாம். விக்னேஷ் புத்தூருக்கு பதிலாக ரகு சர்மாவை மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 32 வயதான இவர், உள்ளூர் போட்டிகளில் பஞ்சாப் மற்றும் புதுச்சேரி அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை 11 முதல் தர போட்டிகளில், 19.59 சராசரியுடன் 57 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- ஸ்டார்க் தனது பின்காலை வைட் லைனில் வைத்தார். இதனால் 3 ஆவது நடுவர் நோ-பால் கொடுத்தார்.
- நடுவரின் இந்த முடிவு இணையத்தில் பேசுபொருளானது.
டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. அடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் ஸ்டார்க்கின் அசத்தலான பந்துவீச்சால் டெல்லி அணி வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரின் நான்காவது பந்தை வீசும்போது ஸ்டார்க் தனது பின்காலை வைட் லைனில் வைத்தார். இதனால் 3 ஆவது நடுவர் நோ-பால் கொடுத்தார். நடுவரின் இந்த முடிவு இணையத்தில் பேசுபொருளானது.
மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் கூட வைட் லைனில் பின்கால் வைத்து தான் பந்துவீசினார், ஆனால் அவருக்கு நோ பால் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில், புத்தூர் விதிகளுக்கு உட்பட்டு தான் பந்துவீசியுள்ளார் என்று நடுவர் அணில் சவுத்ரி விளக்கம் அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
அதில், புத்தூர் தனது பின்னங்காலை வைட் லைனில் வைத்தார். ஆனால் பந்து வீசுவதற்கு முன்னாள் வைட் லைனில் இருந்து காலை தூக்கி விட்டார். அதனால் விதிகளுக்கு உட்பட்டு தான் அவர் பந்துவீசினார் என்று நடுவர் அணில் சவுத்ரி தெரிவித்தார்.
- குஜராத் அணிக்கு எதிராக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விக்னேஷ் புத்தூர் இடம்பெறவில்லை.
- சிஎஸ்கே அணியின் ருதுராஜ், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரில் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ், ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றவர் விக்னேஷ் புத்தூர்.
இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விக்னேஷ் புத்தூர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் சி.எஸ்.கே. அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக விளையாடிய விக்னேஷ் புத்தூர் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, விக்னேஷ் புத்தூர் நீக்கப்பட்டதற்கு எதிராக இணைய தளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.
இது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் ஓர் அதிர்ச்சியூட்டும் முடிவு. ரோகித்தின் மும்பை இந்தியன்ஸ் அணியை மிஸ் செய்கிறேன் என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
விக்னேஷ் புத்தூரை நீக்கி மும்பை இந்தியன்ஸ் அணி தவறு செய்ததால், குஜராத் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமாகிவிட்டது எனவும் பதிவிட்டுள்ளனர்.
- சென்னைக்கு எதிராக 3 விக்கெட்டுகளை விக்னேஷ் வீழ்த்தினார்.
- SA20 லீக்கில் மும்பை கேப்டவுண் அணியின் நெட் பவுலராக மும்பை அணி நிர்வாகம் சேர்த்தது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் என்னத்தான் மும்பை அணி தோற்று இருந்தாலும் அந்த அணியின் இளம் பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். போட்டி முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கி செல்லும் போது எம்.எஸ் தோனி விக்னேஷ் புத்தூரை அழைத்து பாராட்டும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.
இந்த போட்டியில், மும்பை அணியின் இடதுகை பந்து வீச்சாளராக பிற்பாதியில் மட்டும் (மாற்று வீரர்) களம் இறங்கிய விக்னேஷ் புத்தூர் துருதுருவென மைதானத்தில் வலம் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 23 வயதே ஆன இவர், 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து ருதுராஜ், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.
U-14 மற்றும் U-19 போட்டிகளில் மட்டுமே கேரளா அணிக்காக விளையாடியுள்ள அவரின் திறமையை கண்ட மும்பை அணி நிர்வாகம், SA20 லீக்கில் மும்பை கேப்டவுண் அணியின் நெட் பவுலராக சேர்த்தது. கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு எடுக்கப்பட்டார்.
கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் பெரிந்தல்மண்ணாவை சேர்ந்தவர் விக்னேஷ் புத்தூர். 23 வயதே ஆன அவர், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது விடாமுயற்சியால் கிரிக்கெட்டில் ஐ.பி.எல். வரை முன்னேறி வந்துள்ளார். வலது கை பேட்ஸ்மேனாகவும், இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் மும்பை அணிக்கு கிடைத்துள்ளார்.
தற்போது பெரிந்தல்மண்ணாவில் உள்ள பி.டி.எம். அரசு கல்லூரியில் இலக்கியத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது தந்தை சுனில் குமார் ஒரு ஆட்டோ டிரைவர். தாயார் கே.பி.பிந்து வீட்டு வேலை செய்பவர். குடும்பத்தை வறுமை வாட்டியபோதும், விக்னேஷ் புத்தூரின் கிரிக்கெட் கனவுக்கு பெற்றோர் தடைபோடவில்லை.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் ஏலம் நடந்த அன்று, விக்னேஷ் வீட்டில் இருந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது ஆச்சரியத்தில் துள்ளிக்குதித்தார். ஐ.பி.எல். கனவு பலித்துவிட்டதை எண்ணி ஆனந்தப்பட்டுக்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி.
"ரோஹித்தும், ஹார்திக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் எனக்கு பிடித்த வீரர்கள். இந்த சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து விளையாடுவதை மகிழ்ச்சியாக எண்ணுகிறேன்" என்று அவர் உணர்ச்சி பொங்க கூறியிருந்தார்.
முதலில், விக்னேஷ் புத்தூர் கேரள கிரிக்கெட் லீக்கில் ஆலப்பி ரிப்பிள்ஸ் அணிக்காக விளையாடினார். 3 போட்டிகளில் விளையாடிய அவர் 2 விக்கெட்டுகளே வீழ்த்தினாலும், ஆல்-ரவுண்டர் என்ற அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கவனத்தை ஈர்த்தார்.
சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து கிரிக்கெட்டில் முன்னணிக்கு வந்த விக்னேஷ் புத்தூரின் விடாமுயற்சி அவருக்கு ஐ.பி.எல். மூலம் விஸ்வரூப வெற்றியை கொடுத்துள்ளது.






