என் மலர்
நீங்கள் தேடியது "ஐபிஎல்2025"
- ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன.
- கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது
நேர்காணல் ஒன்றில் ஐபிஎல் கேப்டன்சி குறித்து கேஎல் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "10 மாதம் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்படும் களைப்பை விட 2 மாதம் ஐபிஎல் விளையாடுவதில் அதிகமாக சோர்வடைந்தேன்.
ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அளவுக்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன. அணியில் ஏன் மாற்றம் செய்யப்பட்டது, அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை. எதிர் அணியினர் 3 ஸ்பின்னர்களுடன் ஆடுகிறார்களே நீங்கள் ஏன் ஆடவில்லை. எதிர் அணியால் மட்டும் எப்படி 200 அடிக்க முடிந்தது, உங்களால் ஏன் அடிக்க முடியவில்லை? ஒரே மைதானத்தில் எதிர் அணியின் ஸ்பின்னர்கள் எப்படி நன்றாக ஸ்விங் செய்கின்றனர், உங்களால் ஏன் முடியவில்லை.. இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டன.
இப்படியான கேள்விகளை எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்க முடியாது அல்லவா? இதற்கு பதில் அளிக்க தான் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் இதற்கு பதில் அளிக்க முடியாது. அணியில் அனைத்துமே சரியாக இருந்தாலும் உங்களால் வெற்றியை பெறமுடியாது, அதுதான் விளையாட்டின் தன்மை. என்ன செய்வது, கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது" என்று வேதனையுடன் தெரிவித்தார் .
லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை விமர்சித்து தான் கே.எல்.ராகுல் இவ்வாறு பேசியுள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டு லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் இருந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி படுமோசமான தோல்வியை தழுவியது.
இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை இந்தாண்டு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
- தோனி ஓய்வு குறித்து கடந்த 6 -7 ஆண்டுகளாக நிறைய வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது.
- போன சீசனில் அதிகமாக களத்தில் இருந்து அவரால் விளையாட முடியாது என பயிற்சியாளர் பிளெமிங் கூறியிருந்தார்.
ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக பட்சமாக மும்பை, சென்னை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை பேசப்பட்டு வரும் பெயராக எம்எஸ் தோனி இருக்கிறது. இந்திய அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அவர் சிஎஸ்கே மூலமும் பல ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் அவரது ஓய்வு குறித்து கடந்த 6 -7 ஆண்டுகளாக நிறைய வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த வதந்தியால் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது தான் மிச்சம். இருந்தாலும் அவரது பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கம் இல்லாததால் பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக போன ஆண்டு அதிக என்றே சொல்லலாம்.
போன சீசனில் அதிகமாக களத்தில் இருந்து அவரால் விளையாட முடியாது என பயிற்சியாளர் பிளெமிங் கூறியிருந்ததால் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் இடையே எழுந்து வருகிறது. ஏனென்றால் தற்போது அவருக்கு 44 வயதாகிறது.
இந்நிலையில் அவர் அடுத்த ஆண்டு விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சூசகமாக தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
2020-ம் ஆண்டு IPL-ன் கடைசி லீக் போட்டியின்போது "இதுதான் நீங்க மஞ்சள் ஜெர்சியில் விளையாடும் கடைசி போட்டியா?" என்ற கேள்விக்கு 'கண்டிப்பாக இல்லை' என பதிலளித்திருந்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி. அந்த புகைப்படத்தை வெளியிட்ட சிஎஸ்கே marks 5 years of #DefinitelyNot என பதிவிட்டிருந்தது.
இந்த பதிவை வைத்து அடுத்த ஆண்டும் தோனி விளையாடுவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
- ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
- 18 வருட காத்திருப்புக்கு பின்பு பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
18 வருட காத்திருப்புக்கு பின்பு பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், 18 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், 'காத்திருந்தது போதும், 18 வயதானால் வாக்காளராக பதிவு செய்யுங்கள்' என கோரிக்கை விடுத்துள்ளது.
- பல வருட மன வேதனைகள், ஏமாற்றங்களுக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது.
- இது கடினமான நேரங்களில் என்னோடு பயணித்த ஆர்.சி.பி ரசிகர்களுக்கானது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் கோப்பையை வென்ற புகைப்படங்களை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சாம்பியன் என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற டிசர்ட் அணிந்து, கோப்பையை பிடித்தபடி விராட் கோலி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த இன்ஸ்டா பதிவில் "ஐபிஎல் கோப்பையே! உன்னை கையில் ஏந்திக் கொண்டாட, என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே..! இந்த சீசனை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். பல வருட மன வேதனைகள், ஏமாற்றங்களுக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது கடினமான நேரங்களில் என்னோடு பயணித்த ஆர்.சி.பி ரசிகர்களுக்கானது" என்று பதிவிட்டுள்ளார்.
- ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
- இந்த பேரணியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.
இந்நிலையில், ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி பேரணி பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அந்த அணி அறிவித்துள்ளது.
இன்று மாலை 3.30 மணிக்கு விதான சவுதாவில் தொடங்கும் பேரணி சின்னசாமி மைதானத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெங்களூரு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
- 18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
- இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி- சால்ட் களமிறங்கினர். விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சால்ட் அதிரடியாக விளையாடி 9 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மயங்க் அகர்வால் 24, பட்டிதார் 26 என ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடி வந்த விராட், அதிரடியாக விளையாட ஆரமித்தார். ஆனால் அதற்குள் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 35 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து லிவிங்ஸ்டன் - ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2 சிக்சர்கள் விளாசிய லிவிங்ஸ்டன் 25 ரன்னிலும் 2 பவுண்டரி 2 சிக்சர் விளாசிய ஜித்தேஷ் 10 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி திறமையுடன் விளையாடியது. பஞ்சாபின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் இறங்கினர்.
இதில் பிரியன்ஷ் ஆர்யா 24 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னிலும் அவுட் ஆனார்கள். தொடர்ந்து களத்திற்கு வந்த இங்கிலிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 39 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து இளம் வீரர்களான நேஹல் வதேரா மற்றும் ஷஷாங் சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் வதேரா 15 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 6 ரன்னிலும், ஓமர்சாய் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.
20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவ்வணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
- 2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது.
ஆர்.சி.பி. அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் காயம் காரணமாக குவாலிபையர் 1 போட்டியில் விளையாடவில்லை.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் டிம் டேவிட் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், "இன்று நடைபெறவுள்ள இறுதி போட்டியில் டிம் டேவிட் பங்கேற்பாரா என்பது எனக்கே இன்னும் தெரியவில்லை. மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகிறது. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக இறுதிப்போட்டியில் பில் சால்ட் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
- 2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடும் ஆர்சிபி அணிக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நெகிழ்ச்சி வாழ்த்து
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது.
இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு வாழ்த்து தெரிவித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கர்நாடகா உங்களோடு இருக்கிறார்கள். அரசு சார்பில் உங்களை வாழ்த்துகிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த கோப்பைக்காகக் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- மும்பை அணிக்கு எதிரான 'குவாலிபையர்2' ஆட்டத்தில் ஸ்ரேயஸ் 8 சிக்சர்கள் அடித்தார்.
- நடப்பு ஐபிஎல் சீசனில் நிக்கோலஸ் பூரன் (லக்னோ) 40 சிக்சர்களை அடித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்களை எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர்களுக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப் படும்.
இந்த சீசனில் தமிழக வீரர் சாய்சுதர்சன் முதல் இடத்தில் உள்ளார். குஜராத் அணியின் தொடக்க வீரரான அவர் 759 ரன் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்ய குமார் 717 ரன்னுடனும், குஜராத் கேப்டனான சுப்மன் கில் 650 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.
இறுதிப்போட்டியில் ஆடும் பெங்களூரு அணி வீரர் வீராட்கோலி 614 ரன்னுடன் 5-வது இடத்திலும், பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 603 ரன்னுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். இருவரும் சாய் சுதர்சனை நெருங்குவது மிகவும் கடினமானது. இதனால் ஆரஞ்சு தொப்பி சாய் சுதர்சனுக்கு கிடைக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் ஸ்ரேயஸ் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
மும்பை அணிக்கு எதி ரான 'குவாலிபையர்2' ஆட்டத்தில் அவர் 8 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் 39 சிக்சர்களுடன் 2-வது இடத்துக்கு முன்னேறினார். முதல் இடத்தில் உள்ள நிக்கோலஸ் பூரன் (லக்னோ) 40 சிக்சர்களை அடித்துள்ளார். இன்றைய இறுதிப் போட்டியில் 2 சிக்சர்கள் அடித்தால் ஸ்ரேயஸ் முதல் இடத்தை பிடிப்பார். பஞ்சாப் அணி தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் 28 சிக்சர்களுடன் 7-வது இடத்தில் உள்ளார்.
குஜராத் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 25 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். பெங்களூரு அணி வீரர் ஹேசல்வுட் 21 விக்கெட் கைப்பற்றி 4-வது இடத்தில் உள்ளார். அவர் முதல் இடத்தை பிடிக்க இன்னும் 4 அல்லது 5 விக்கெட் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
- பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இந்திய முப்படையினரின் புகழை பாட உள்ளார்.
- பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி இருக்கும்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
இந்நிலையில், ஐ.பி.எல். இறுதிப்போட் டிக்கு முன்பு மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிது.
இதில், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இந்திய முப்படையினரின் புகழை பாட உள்ளார். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் இடம் பெற்றிருந்த ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும், பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இசை நிகழ்ச்சி இருக்கும் என்று கூறப்படுகிறது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
- இந்த வீடியோவை பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் வெற்றிபெற பஞ்சாப் அணிக்கு வாழ்த்து தெரிவித்து கேப்டன் ஸ்ரேயஸின் சகோதரி மற்றும் தாய் ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
முன்னதாக குவாலிபையர் 2 போட்டியின் வெற்றியை தனது தாய் மற்றும் தங்கையுடன் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
- இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியின் தொடக்க வீரரான பில் சால்ட் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பில் சால்ட்டின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் பில் சால்ட் ஈடுபடவில்லை. ஆதலால் அவர் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.
குவாலியையார் 1 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக அரைசதம் அடித்து பெங்களூரு அணியை வெற்றி பெற வைத்த பில் சால்ட் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை என்றால் அது ஆர்.சி.பி. அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக ஆர்.சி.பி. அணி தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.






