என் மலர்
நீங்கள் தேடியது "ஐபிஎல்2025"
- முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வென்றது.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
நாங்கள் 5 விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்துவிட்டோம். அதன்பிறகு கிளாசனும், அபினவும் அபாரமாக விளையாடி ஒரு கவுரவமான இலக்கை எட்ட உதவினார்கள்.
இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு அணியை சரிவிலிருந்து மீட்க வழியை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி எங்களுக்கு நடக்கவில்லை. தொடர்ந்து சரிவிலே நாங்கள் சென்று விட்டோம்.
முதல் போட்டியில் நாங்கள் 280 ரன்களுக்கு மேல் அடித்தோம். ஆனால் அதன்பிறகு சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறோம். இது மிகப்பெரிய சரிவு. ஆனால் டி20 போட்டி என்பது இப்படித்தான் இருக்கும்.
எங்கே தவறு நடக்கிறது என்று உங்களால் சொல்லமுடியாது. இந்த சீசன் எங்களுக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. தற்போது எங்களுக்கு சில வெளியூரில் நடைபெறும் போட்டிகள் இருக்கிறது. அங்கு செல்லும்போது ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணித்து, அதன்பிறகு ரன்கள் சேர்க்க வேண்டும்.
சில நாள் முதல் பந்தில் இருந்து அதிரடியாக ஆடும் நிலைக்கு தள்ளப்படலாம். சில நாள் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டி வரும் என தெரிவித்துள்ளார்.
- டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.
ஐதராபாத்:
ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சனரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி டிரண்ட் போல்டின் துல்லிய பந்து வீச்சில் சிக்கியது. இதனால் முன்னணி வீரர்கள்
விரைவில் அவுட்டாகினர்.
ஹெட் 0, இஷான் கிஷன் 1, அபிஷேக் சர்மா 8, நிதிஷ் குமார் 2, அன்கிட் வர்மா 12 என அவுட்டாகி 35 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.
6வது விக்கெட்டுக்கு இணைந்த கிளாசன்-அபினவ் மனோகர் ஜோடி பொறுப்புடன் ஆடியது. கிளாசன் அரை சதம் கடந்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
மும்பை அணி சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரியான் ரிக்கல்டன் 11 ரன்னில் அவுட்டானார். வில் ஜாக்ஸ் 22 ரன்னில் வெளியேறினார்.
தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 40 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இது மும்பை அணிக்கு கிடைத்த 5வது வெற்றி ஆகும். ஐதராபாத் அணியின் 6வது தோல்வி இதுவாகும்.
- சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25ம் தேதி மோதுகிறது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி பெற்றுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (4 புள்ளி), எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் (16 புள்ளி) மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒரு வேளை 5ல் மட்டும் வென்றால் (14), மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25ம் தேதி மோதுகிறது.
இந்நிலையில், சி.எஸ்.கே அணி நிச்சயம் மீண்டு வரும் என்று அந்த அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்சியில் பேசிய காசி விஸ்வநாதன், "நடப்பு சீசனில் சி.எஸ்.கே. அணியின் ஆட்டத்தால் நீங்கள் அதிருப்தியாக இருப்பீர்கள். ஆனால் விளையாட்டில் இது சகஜம். இப்போது நன்றாக விளையாடவில்லை என்பது உண்மைதான். நிச்சயம் மீண்டு வருவோம். வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் எங்கள் பாய்ஸ் உறுதியாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.
- 6 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- அஸ்வின் விளையாடிய கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
மும்பையில் நடந்த 38வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 6 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசிய அஸ்வின் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய அணியின் முன்னாள் வீரர் கடுமையாக ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "அஸ்வின் என்ன நினைத்து கொண்டிருக்கிறார். அவர் 2 விக்கெட் எடுத்திருந்தால் போட்டியை வென்றிருக்கலாம். ஆனால் அஷ்வின் என்ன செய்கிறார்? அவர் ரன்களை கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் பந்துவீசுகிறார். அவர் விக்கெட்டுகளை எடுக்க விரும்பவில்லை. மும்பை அணி வீரர்கள் அஸ்வின் பந்துவீச்சை சிங்கிள்ஸ் எடுத்து புத்திசாலித்தனமாக விளையாடினார்கள். போட்டியின் சூழ்நிலையை அவர் புரிந்து கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.
அஸ்வின் விளையாடிய கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.
- சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25ம் தேதி மோதுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்வியினால் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி பெற்றுள்ளது.
புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (4 புள்ளி), எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் (16 புள்ளி) மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒரு வேளை 5ல் மட்டும் வென்றால் (14), மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25ம் தேதி மோதுகிறது.
- சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை ஆயுஷ் மாத்ரே படைத்தார்
- ஆயுஷ் மாத்ரே தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இதன் மூலம் சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் இழந்ததை அடுத்து வெளியேறிய ஆயுஷ் மாத்ரேவை சூர்யகுமார் யாதவ் தட்டி கொடுத்து பாராட்டினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
- 76 ரன்கள் விளாசி ரோகித் 'ஆட்ட நாயகன்' விருதை வென்றார்.
- 'ஹிட்மேன் இஸ் பேக்' என்று மும்பை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் சீசனின் தொடக்கம் முதலே சொற்ப ரன்களின் அவுட்டாகி வந்த ரோகித் சர்மா, இந்த போட்டியில் 76 ரன்கள் விளாசி 'ஆட்ட நாயகன்' விருதை வென்றார். இதனால் 'ஹிட்மேன் இஸ் பேக்' என்று மும்பை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை ஆயுஷ் மாத்ரே படைத்தார்.
- ஆயுஷ் மாத்ரே தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இதன் மூலம் சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார்.
ஆயுஷ் மத்ரேவின் துணிச்சலான ஆட்டத்தை டிரஸ்ஸிங் ரூமில் நின்றிருந்த சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ். தோனி புன்னகையுடன் ரசித்து பார்த்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
- சிஎஸ்கே-ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
- ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 25-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சேப்பாக்கத்தில் நடக்கும் 5-வது ஆட்டம் இதுவாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.
ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது.
- 6-வது தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மும்பை:
மும்பையில் நேற்று நடந்த 38வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 6வது தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு சென்னை கேப்டன் தோனி கூறியதாவது:
அணியில் எதுவும் சரியாக செல்லாத நிலையில் அதற்காக உணர்ச்சி வசப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
ஒருவேளை நாங்கள் தகுதியாக முடியாத சூழல் இருந்தால் அடுத்த சீசனுக்கு சிறந்த லெவனை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த 2020 ஐ.பி.எல். சீசனும் எங்களுக்கு மோசமான சீசனாக இருந்தது. அதிலிருந்து எப்படி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.
வீரர்களை மாற்றுவதில் அதிகமாக விருப்பம் காட்ட வேண்டியதில்லை. அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தாலே போதுமானது.
சிறப்பாக செயல்பட்ட மும்பை அணிக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.
- சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது.
மும்பை:
மும்பையில் நேற்று நடந்த 38வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய மும்பை அணி 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது.
இதற்கிடையே, ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 260 போட்டிகளில் 8,326 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதில் 8 சதங்கள், 59 அரை சதங்கள் அடங்கும்.
இந்நிலையில், சென்னைக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 76 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ரோகித் சர்மா 258 போட்டிகளில் 6,786 ரன்களுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். இதில் 2 சதங்கள், 44 அரை சதங்களும் அடங்கும்.
இந்தப் பட்டியலில் ஷிகர் தவான் 222 போட்டிகளில் 6,769 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதில் 2 சதங்கள், 51 அரை சதங்கள் அடங்கும்.
- பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
- 73 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
சண்டிகர்:
ஐ.பி.எல். தொடரில் முல்லான்பூரில் நேற்று நடந்த 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூரு அணி 18.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் 50+ ரன்கள் அடிப்பது விராட் கோலிக்கு இது 67-வது முறையாகும். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை விராட் கோலி படைத்தார்.
இவருக்கு அடுத்து டேவிட் வார்னர் 66 முறையும், ஷிகர் தவான் 53 முறையும், ரோகித் சர்மா 45 முறையும் எடுத்துள்ளனர்.