search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DK Sivakumar"

    • நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது
    • நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது

    கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பேசினார் டி.கே.சிவகுமார். அப்போது, "நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது. ஏற்கெனவே முடிந்து போன விவகாரத்தில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

    நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் இந்தியா கூட்டணி நிச்சயம் பதிலடி கொடுக்கும். தோல்வி பயத்தில்தான் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    • காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள்.
    • பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான்.

    பெங்களூரு:

    பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா எம்.பி. சதானந்தகவுடா. முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் முதல்-மந்திரியுமான இவருக்கு 71 வயதாகிறது. வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் சதானந்தகவுடாவிடம் இருந்து மத்திய மந்திரி பதவி பறிக்கப்பட்டு இருந்தது. மேலும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் மீண்டும் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார்.ஆனால் அவருக்கு பதிலாக பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி ஷோபா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    இதன் காரணமாக சதானந்தகவுடா பா.ஜனதா தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். அவரை காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள். இதுபற்றி சதானந்தகவுடாவுடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் சதானந்தகவுடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சதானந்தகவுடாவுக்கு பிறந்தநாள் ஆகும். இதையடுத்து பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஷோபா மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் சதானந்தகவுடாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் சதானந்தகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய அரசியல் எதிர்காலம், நிலைபாடு என்ன? என்பது குறித்து கூற நாளை (அதாவது இன்று) டாலர்ஸ் காலனியில் உள்ள எனது வீட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன். அங்கு எனது அரசியல் நிலைபாடு பற்றி தெரிவிப்பேன். பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான். அதுபற்றி எனது குடும்பத்தினருடன் ஆலோசிக்க வேண்டியது உள்ளது. நான் எப்போதும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுப்பதில்லை. அதனால் குடும்பத்தினருடன் கலந்து பேசி, எனது அரசியல் எதிர்காலம் குறித்து தெரிவிப்பேன். எங்கள் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் என்னை சந்தித்து பேசினார்.

    அவர் என்ன சொன்னார் என்பதை இப்போது பகிரங்கப்படுத்த முடியாது. எனது மனதில் இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது தெரிவிக்கிறேன். ஈசுவரப்பா தனது மகனுக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள் பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு முடிவு செய்திருந்தோம். அதற்குள் சுயேச்சையாக போட்டியிடுவதாக ஈசுவரப்பா தெரிவித்துள்ளார். இது அவரது தனிப்பட்ட முடிவாகும். சுயேச்சையாக போட்டியிடுவது பற்றி எங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2023 மே மாதம் இந்திய தேசிய காங்கிரஸ், ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது
    • சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக குமாரசாமி அறிவித்தார்

    2007ல் ஜனதா தள் மற்றும் பா.ஜ.க. கூட்டணியின் சார்பாக கர்நாடகா முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி இருந்த போது ராமநகரா மாவட்டம் உருவாக்கப்பட்டது. பெங்களூரூவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் ராமநகரா உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வருடம் மே மாதம் முதல் கர்நாடகாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி, ராமநகராவை பெங்களூரூவுடன் இணைத்து "பெங்களூரூ தெற்கு" (Bangaluru South) என புது மாவட்டத்தை உருவாக்க முயன்று வருகிறது.

    உருவாக்கப்பட உள்ள இந்த தெற்கு பெங்களூரூ மாவட்டம், ராமநகரா, சென்னபட்டனா, மாகடி, கனகபுரா மற்றும் ஹரோஹல்லி ஆகிய 5 தாலுக்காக்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் என்றும் கனகபுரா, எதிர்காலத்தில் பெங்களூரூவின் ஒரு பகுதியாகும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருந்தார்.

    இது குறித்து சிவகுமார் பொதுமக்களிடம் தெரிவித்ததாவது:

    நீங்கள் பெங்களூரூ மாவட்டத்தை சேர்ந்தவர்கள்; ராமநகரா அல்ல. அதை முதலில் மனதில் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். தேவையின்றி நம்மை ராமநகரா மாவட்டத்தில் இணைத்தனர். நீங்கள் பிறர் சொல்வதை கேட்காதீர்கள். மீண்டும் பெங்களூரூவை பழையபடி மாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    குமாரசாமி இது குறித்து தெரிவித்ததாவது:

    ராமநகராவுடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிற்கு சொந்தமான சொத்துக்களை காக்கும் முயற்சிதான் காங்கிரஸின் இந்த நடவடிக்கை. நான் சிவகுமாருக்கு சவால் விடுகிறேன். ராமநகராவின் பெயர் மாற்றப்பட்டாலோ, அல்லது அதனை பெங்களூரூவுடன் இணைக்க முயன்றாலோ, நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ராமநகராவின் மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி
    • டி.கே. சிவக்குமார் மட்டுமே காங்கிரசை ஆட்சியில் அமர்த்தவில்லை என மந்திரி விமர்சனம்

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை நீக்கி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல் மந்திரயாக பதவி ஏற்ற நிலையில், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    கர்நாடகாவில் பெற்ற வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா அளவில் மிகப்பெரிய உத்வேகமாக பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநில வெற்றிக்கு டி.கே. சிவக்குமாரின் உழைப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவர் மீது வருமானத்து அதிகமாக சொத்து குவித்த வழக்கு உள்ளது. இந்த வழக்கு அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில், கர்நாடக மாநில மந்திரி சதிஷ் ஜராகிகோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் ''சிவக்குமார் தனியாக காங்கிரஸ் கட்சியை ஆட்சி அதிகாரத்திற்கு கொணடு வரவில்லை'' எனக் கூறியிருந்தார்.

    இதுகுறித்து டி.கே. சிவக்குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பதில் அளிக்கையில் ''கட்சியில் உள்ள எந்தவொரு தனிப்பட்ட விவகாரம், அரசு தொடர்புடைய விவகாரம் குறித்து எம்.எல்.ஏ.-க்கள் முதலமைச்சர் மற்றும் என்னிடம் ஆலோசிக்க முடியும்.

    ஆனால், அவர் எந்தவொரு காரணத்திற்காகவும், மீடியா முன் பேசியிருக்கக் கூடாது. கட்சி தொண்டர்கள், நாங்கள், நீங்கள், நாட்டின் மக்கள் ஆகியோரால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. இன்று, நாளை, ஒருபோதும், என்னால்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது எனக் கூறமாட்டேன்'' என்றார்.

    24 மணி நேரத்திற்குள் விவசாயிகள் கடனை ரத்து செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா விடுத்த எச்சரிக்கைக்கு, உங்களது விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என்று காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    24 மணி நேரத்திற்குள் விவசாயிகள் கடனை ரத்து செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா விடுத்த எச்சரிக்கைக்கு, உங்களது விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என்று  காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறியுள்ளார்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியமைத்து உள்ளது. முதல்-மந்திரியாக பதவியேற்ற குமாரசாமி, இன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார். அவருக்கு ஆதரவாக 117 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தார்கள்.

    இதற்கிடையே மாநிலத்தில் புதிய அரசு அமைந்து 24 மணி நேரங்களுக்குள் விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்றால் 28-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என எடியூரப்பா எச்சரிக்கையை விடுத்தார். பாரதிய ஜனதாவின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என காங்கிரஸ் பதிலளித்து உள்ளது.

    அவர்கள் பொதுமக்களின் பணத்தை வீணடிக்க முடியாது, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அது அவர்கள் உருவாக்கியதாக இருக்கும். அவர்கள் எங்களை கட்டாயப்படுத்தவும் முடியாது, மிரட்டவும் முடியாது. நாங்கள் பொறுப்பான அரசை நடத்துவோம், பாரதிய ஜனதாவின் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாம் செயல்பட முடியாது என காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறிஉள்ளார்.
    ×