என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DK Sivakumar"

    • சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.
    • சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார்

    கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.

    இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2 ½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், நவம்பரில் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய சித்தராமையா, "நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். நான் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன். மேலும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் தொடர்வேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருப்பதாக அவரது மகன் யதீந்திரா தெரிவித்துள்ளார். இது கர்நாடகா அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

    • சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.
    • சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார்

    நவம்பர் புரட்சி பற்றி சிலர் பேசுகின்றனர். 5 ஆண்டுகளும் நானே முதலமைச்சராக நீடிப்பேன். ஆனால் மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்

    கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.

    இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2 ½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சித்தராமையா மற்றும் டிகே. சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே முதல்-மந்திரி பதவி தொடர்பாக கடும் விவாதம் நடந்து வருகிறது.

    மேலும் இது தொடர்பாக அடிக்கடி சித்தராமையாவும், டி.கே. சிவகுமாரும் டெல்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நவம்பரில் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய சித்தராமையா, "நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். நான் சொல்ல வருவது என்னவென்றால், மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.

    நான் இரண்டாவது முறையாக முதலமைச்சராக வரமாட்டேன் என்று சிலர் கணித்தார்கள், ஆனால் நான் முதலமைச்சரானேன். என் காரில் காகம் அமர்ந்திருப்பது ஒரு கெட்ட சகுனம் என்றும் நான் முதலமைச்சராகத் தொடர மாட்டேன் என்றும் பலர் சொன்னார்கள். நான் பட்ஜெட்டை தாக்கல் செய்ய மாட்டேன் என்றும் சொன்னார்கள், ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்தேன்.

    நான் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன். மேலும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் தொடர்வேன்" என்று தெரிவித்தார்.

    • ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே' பாடலை பாடினார்
    • தாலுகா மற்றும் மாவட்ட மையங்களில் கள அளவில் கல்வி நிறுவனங்களை அமைப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் அதன் அமைப்பை எவ்வாறு பலப்படுத்துகிறது என்பது எனக்குத் தெரியும்

    நேற்று கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தில் அவையில் காங்கிரசை சேர்ந்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பாடலை பாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

    பாஜகவை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் ஆர். அசோகா, டி.கே. சிவகுமார் அவரது அரசியல் வாழ்வில் முந்தைய காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்து இயங்கியதை சுட்டிக்காட்டினார்.

    உடனே இருக்கையில் இருந்து எழுந்த சிவகுமார் ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே' பாடலை பாடினார். இதனால் எதிர் இருக்கைகளில் இருந்த பாஜகவினர் தங்கள் மேசைகளை தட்டி சிவகுமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் அவர் பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

    இதுகுறித்து இன்று ஊடகங்களிடம் பேசிய அவர், பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ் உடன் கைகோர்ப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. நான் ஒரு அர்ப்பணிப்புள்ள காங்கிரஸ்காரன். என் வாழ்க்கை, என் இரத்தம் காங்கிரஸ் கட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்சியை வழிநடத்தி வரும் நான், ஒரு தூணாக நிற்பேன்.

    ஆர்.எஸ்.எஸ் கீதத்தைப் பாடுவது குறித்து கேட்டபோது, "நான் ஜனதா தளம் மற்றும் பாஜகவை பற்றி படித்திருக்கிறேன். மேலும் ஆர்.எஸ்.எஸ் பற்றியும் கற்றுக்கொண்டேன்.

    ஒவ்வொரு அரசியல் கட்சியைப் பற்றியும் எனக்குத் தெரியும். தாலுகா மற்றும் மாவட்ட மையங்களில் கள அளவில் கல்வி நிறுவனங்களை அமைப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் அதன் அமைப்பை எவ்வாறு பலப்படுத்துகிறது என்பது எனக்குத் தெரியும்.

    அரசியல் ரீதியாக நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு தலைவராக, என் எதிரிகளில் யார் நண்பர், யார் எதிரி என்பதை நான் அறியாமல் இருக்க முடியாது? அதனால்தான் நான் ஆர்எஸ்எஸ் வரலாற்றையும் படித்திருக்கிறேன்.

    சில நேரங்களில் சில அமைப்புகளில் சில நல்ல குணங்கள் இருக்கும். அவற்றை நாம் கவனிக்க வேண்டும், இல்லையா? நான் அதைத்தான் செய்திருக்கிறேன்" என்று சிவகுமார் கூறினார்.

    • பெங்களூரு சின்னசாமி மைதான கூட்டநெரிசல் குறித்த விவாதம் நடைபெற்றது.
    • உடனே இருக்கையில் இருந்து எழுந்த சிவகுமார் ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே' பாடலை பாடினார்.

    கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டி.கே. சிவகுமார் துணை முதல்வராக உள்ளார்.

    இந்நிலையில் நேற்று சட்டமன்றக் கூட்டத்தில் அவையில் டி.கே. சிவகுமார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பாடலை பாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

    பெங்களூரு சின்னசாமி மைதான கூட்டநெரிசல் குறித்த விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பாஜகவை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் ஆர். அசோகா, டிகே சிவகுமார் அவரது அரசியல் வாழ்வில் முந்தைய காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்து இயங்கியதை சுட்டிக்காட்டினார்.

    உடனே இருக்கையில் இருந்து எழுந்த சிவகுமார் ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே' பாடலை பாடினார். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.

    எதிர் இருக்கைகளில் இருந்த பாஜகவினர் தங்கள் மேசைகளை தட்டி சிவகுமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    2025 ஐபிஎல் போட்டியில் ஆர்சிவி வெற்றியை கொண்டாட சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவின்போது வெளியே நுழைவாயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர், 56 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஓட்டுநர் மயிரிழையில் உயிர் தப்பினார் .
    • எஸ்கார்ட் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.

    கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் கான்வாய் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பணியாளர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். ஓட்டுநர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

    நேற்று (சனிக்கிழமை) மாலை மண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டணா பகுதியில் உள்ள விரைவுச் சாலையில் கவுடஹள்ளி அருகே இந்த விபத்து நடந்தது.

    சிவகுமார் பயணித்த காருக்கு பின்னல் வந்த எஸ்கார்ட் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. காயமடைந்தவர்கள் மைசூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு டி.கே. சிவகுமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதற்கிடையில், கான்வாய் விபத்துக்குப் பிறகு டி.கே. சிவகுமார் பெங்களூருக்குத் திரும்பினார்.  

    • கர்நாடக சட்டப்பேரவையில் இன்று உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சட்டப்பேரவை வளாகத்துக்கு கர்நாடக துணை முதலமைச்சர் சைக்கிளில் வந்தார்.

    உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு சட்டப்பேரவை வளாகத்துக்கு கர்நாடக துணை முதலமைச்சர் சைக்கிளில் வந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    கர்நாடக சட்டப்பேரவையில் இன்று காலை உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நடைப்பயணத்தை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த நடைப்பயணத்தை முடித்துவிட்டு, சட்டப்பேரவை வளாகத்துக்கு டி.கே.சிவக்குமார் சைக்கிளில் வந்தார். அப்போது சைக்கிளை நிறுத்தும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அவரது அருகில் இருந்த பாதுகாப்புப் படையினர் டி.கே.சிவக்குமாரை பிடித்ததால், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

    • 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி.
    • 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வீரர்களை காணும் ஆர்வத்தில் வந்த ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கர்நாடக பாஜக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அம்மாநில துணை முதலமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    மேலும், "பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதால்தான் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது" என்றார்.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
    • 2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்.

    ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடும் ஆர்சிபி அணிக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நெகிழ்ச்சி வாழ்த்து

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது.

    இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு வாழ்த்து தெரிவித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கர்நாடகா உங்களோடு இருக்கிறார்கள். அரசு சார்பில் உங்களை வாழ்த்துகிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த கோப்பைக்காகக் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • என் பாஜக நண்பர்களுக்கு நமஸ்காரம், உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்
    • யாத்திரையில் இறங்கியவர்களுக்கு இப்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன.

    வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.

    ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.803 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேஸ் சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    முன்னதாக கர்நாடக பாஜக நேற்று 16 நாள் 'ஜனக்ரோஷ யாத்ரே' என்ற மாநில அளவிலான ஜனக்ரோஷ யாத்திரை பிரச்சாரம் ஒன்றை தொடங்கியது. கர்நாடகாவில் விலைவாசி உயர்வு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி இந்த பிரசார யாத்திரையை கர்நாடக பாஜக தொடங்கியது.

    இதையும், மத்திய அரசு கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வையும் தொடர்புபடுத்தி டி.கே.சிவகுமார் விமர்சனம் வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட காணொளியில் கூறியதாவது, "என் பாஜக தோழர்களுக்கு நமஸ்காரம், நீங்கள் அனைவரும் ஜனக்ரோஷ யாத்திரை செய்கிறீர்கள், உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். ஆனால் அதே நேரத்தில் இந்திய அரசு, உங்கள் பாஜக அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்தியுள்ளது.

    இப்போது மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்களின் எதிர்வினையை நான் அறிய விரும்புகிறேன். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் போதிலும், மத்திய அரசு ஏன் பெட்ரோலியப் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது என்பதை பாஜக தலைவர்கள் மாநில மக்களுக்கு விளக்க வேண்டும்.

     ஜனக்ரோஷ யாத்திரையில் இறங்கியவர்களுக்கு இப்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று மத்திய பாஜக அரசு உயர்த்தியுள்ள விலைகளைக் குறைக்க பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், அல்லது அவர்கள் யாத்திரையை முடித்துவிட்டு, பொருட்களை எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும்.

    இதை விட்டுவிட்டு, இந்த யாத்திரையின் கேலிக்கூத்தை அவர்கள் தொடர்ந்தால், அவர்கள் நிச்சயமாக பொதுமக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று தெரிவித்துள்ளார். 

    • கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார்.
    • அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் கறுப்புக்கொடி போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த டி.கே.சிவகுமார், "அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    இந்த வீடியோவை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "சித்தராமையாவை முதல்வர் நார்காலியில் இருந்து அகற்றி கர்நாடக முதல்வராக பாடுபடும் டி.கே.சிவகுமாரின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் முடிந்து கர்நாடகா புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.கே.சிவகுமார், "அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியவில்லை.. தன்னுடைய கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை" என்று தெரிவித்தார்.

    • நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் அமைந்துள்ளது.
    • ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம்.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது

    இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார், "கூட்டாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்டடத்தில், ஒவ்வொரு செங்கலாக உருவி கூட்டாட்சியை சிதைக்கின்றனர். ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் அமைந்துள்ளது. தனது காலில் ஏற்பட்ட காயத்தால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது மற்ற மாநிலங்கள் மீது நடத்தப்படும் அரசியல் தாக்குதல். இது வடக்கு - தெற்கு இடையேயான போர் கிடையாது. மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம். மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது"

    • கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி
    • டி.கே. சிவக்குமார் மட்டுமே காங்கிரசை ஆட்சியில் அமர்த்தவில்லை என மந்திரி விமர்சனம்

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை நீக்கி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல் மந்திரயாக பதவி ஏற்ற நிலையில், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    கர்நாடகாவில் பெற்ற வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா அளவில் மிகப்பெரிய உத்வேகமாக பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநில வெற்றிக்கு டி.கே. சிவக்குமாரின் உழைப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவர் மீது வருமானத்து அதிகமாக சொத்து குவித்த வழக்கு உள்ளது. இந்த வழக்கு அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில், கர்நாடக மாநில மந்திரி சதிஷ் ஜராகிகோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் ''சிவக்குமார் தனியாக காங்கிரஸ் கட்சியை ஆட்சி அதிகாரத்திற்கு கொணடு வரவில்லை'' எனக் கூறியிருந்தார்.

    இதுகுறித்து டி.கே. சிவக்குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பதில் அளிக்கையில் ''கட்சியில் உள்ள எந்தவொரு தனிப்பட்ட விவகாரம், அரசு தொடர்புடைய விவகாரம் குறித்து எம்.எல்.ஏ.-க்கள் முதலமைச்சர் மற்றும் என்னிடம் ஆலோசிக்க முடியும்.

    ஆனால், அவர் எந்தவொரு காரணத்திற்காகவும், மீடியா முன் பேசியிருக்கக் கூடாது. கட்சி தொண்டர்கள், நாங்கள், நீங்கள், நாட்டின் மக்கள் ஆகியோரால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. இன்று, நாளை, ஒருபோதும், என்னால்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது எனக் கூறமாட்டேன்'' என்றார்.

    ×