என் மலர்
நீங்கள் தேடியது "காங்கிரஸ்"
- பாஜக தேசிய தலைவருக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக இருந்தது.
- நிதின் நபினை தவிர்த்து வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பாஜக கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நேற்று மனுதாக்கல் நடைபெற்றது. நிதின் நபின் மட்டுமே மனுதாக்கல் செய்ததால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று முறையாக முடிவு அறிவிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் பாஜக-வின் புதிய தேசியத் தலைவர் அறிவிக்கப்பட்டதை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெர்ரா கூறியதாவது:-
தேர்தல் எங்கே. நீங்கள் இதை தேர்தல் என்று ஏன் அழைக்கிறீர்கள்?. நீங்கள் முதலில் தலைவரை அறிவிக்கிறீர்கள். அதன்பின் தேர்தல் நடைபெறும் என சொல்கிறீர்கள். அதன்பின் தேர்தல் இல்லை.
இந்த தேர்தலில் தனக்கு பங்கு இல்லை. தன்னால் ஆதிக்கம் செலுத்தக்கூட முடியவில்லை. எந்தவிமான முறைகேடும் செய்ய முடியவில்லை என்பதற்காக எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய விரும்புகிறார்.
இவ்வாறு பவன் கெர்ரா தெரிவித்தார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுப்படுத்தும் அரசியல் கேரளாவை மோசமான சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.
- மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு ஒரு பொறிக்காகக் காத்திருப்பவர்களின் கைகளில், எரியும் தீப்பந்தம் வழங்கப்படுகிறது.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, வாக்குகளுக்காக ஆர்.எஸ்.எஸ். பாணியில் பிளவுப்படுத்தும் அரசியலை பின்பற்றுவதாக காங்கிரஸ் தலைவரும், அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான வி.டி. சதீசன் குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்குகளை பெறுவதற்காக மக்களை பிளவுப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். வழியான அதே பாதையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பயணம் செய்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் இதற்கு அதரவு தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பாக வி.டி. சதீசன் கூறியதாவது:-
UDF ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாத கலவரங்கள் வெடிக்கும் என்று சி.பி.எம். தலைவர் ஏ.கே. பாலன் கூறிய கருத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரிக்கிறார். அதேவேளையில் மலப்புரம் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் காசர்கோடு நகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் மதத்தை பற்றி அமைச்சர் சஜி செரியன் குறிப்பிடுகிறார். கேரள மாநில சட்டசபை வரலாற்றில் இதுபோன்று எந்த உறுப்பினரும் வகுப்புவாதம் குறித்து கருத்து தெரிவித்ததில்லை. வெற்றி பெற்றவர்களின் மதத்தை பார்க்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுப்படுத்தும் அரசியல் கேரளாவை மோசமான சூழ்நிலைக்கு தள்ளிவிடும். மாநிலத்தின் முக்கிய மதிப்பை அழித்துவிடும். மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு ஒரு பொறிக்காகக் காத்திருப்பவர்களின் கைகளில், எரியும் தீப்பந்தம் வழங்கப்படுகிறது. பினராயி விஜயனும் தானும் ஒரு நாள் நினைவுகளாகிவிடுவார்கள், ஆனால் கேரளா தொடர்ந்து நிலைத்திருக்கும்.
சிபிஐ(எம்) கட்சி கேரளாவின் அடித்தளங்களையே எரித்துக்கொண்டிருக்கிறது. இது மாநிலத்தின் எதிர்காலத்திற்கு எதிரான ஒரு கொடூரச் செயலாகும். வரும் தலைமுறைகளுக்கு இதுபோன்ற அநீதியை இழைத்துவிடாதீர்கள்.
இவ்வாறு சதீசன் தெரிவித்தார்.
- மதுரை, கோவை - தென் இந்தியாவின் முக்கிய வளர்ச்சி மையங்கள் ஓசூர் - தொழில், லாஜிஸ்டிக்ஸ், வேலைவாய்ப்பின் முதுகெலும்பு.
- ஏன் இந்த பாரபட்சம், மோடி? ஏன் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது?
விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மதுரை மெட்ரோ ❌ No
கோவை மெட்ரோ ❌No
இப்போது ஓசூர் விமான நிலையமும் ❌No
ஒன்றுக்கொன்று தமிழ்நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் மறுக்கப்படுகின்றன. இந்த மாற்று அணுகுமுறை ஏன்?
ஜிடிபி, ஏற்றுமதி, எம்.எஸ்.எம்.இ., வேலைவாய்ப்பு -
இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது.
ஆனால் மத்திய திட்டங்களில் மட்டும் புறக்கணிப்பா?
மதுரை, கோவை - தென் இந்தியாவின் முக்கிய வளர்ச்சி மையங்கள் ஓசூர் - தொழில், லாஜிஸ்டிக்ஸ், வேலைவாய்ப்பின் முதுகெலும்பு.
இந்த திட்டங்களை மறுப்பது கோடிக்கணக்கான மக்களின் வாய்ப்புகளை மறுப்பதுதான்.
அரசியல் ஒத்துழைப்பின் அடிப்படையிலா வளர்ச்சி?
கூட்டாட்சி என்பது பேச்சுக்காக மட்டுமா, நடைமுறையில்லையா?
தமிழ்நாடு சலுகை கேட்கவில்லை.
தன் உரிமையான பங்கையே கேட்கிறது.
வளர்ச்சியில் பாகுபாடு ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஏன் இந்த பாரபட்சம், மோடி?
ஏன் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது?
மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களுக்கும் மக்கள் No சொல்லுவார்கள் 2026 யில்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- புதியவர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பே மாவட்ட தலைவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் பட்டியல் வெளியிடப்படவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதியவர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னை கிழக்கு கராத்தே ஆர்.செல்வம், மத்திய சென்னை மேற்கு கோபி, வட சென்னை கிழக்கு மதர்மா கனி, வட சென்னை மேற்கு தில்லிபாபு, தென் சென்னை மத்திய ஜோதி பொன்னம்பலம், தென் சென்னை கிழக்கு விஜயசேகர், தென் சென்னை மேற்கு திலகர், செங்கல்பட்டு வடக்கு செந்தில்குமார், செங்கல்பட்டு தெற்கு பிரபு ஆகியோர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர்களுக்கான பட்டியல் இந்த அறிவிப்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜ.க அரசு அசாமின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறது.
- அசாமில் முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்கள் வாக்குகளுக்காக நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்தன.
பிரதமர் மோடி இன்று அசாமின் நாகலாண்ட் மாவட்டத்தில் உள்ள காளியாபோரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.6,950 கோடி மதிப்புள்ள காசி ரங்கா மேம்பாலத் திட்டத் திற்கு அடிக்கல் நாட்டினார்.
86 கி.மீ நீளமுள்ள காசிரங்கா மேம்பாலத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு தேசிய நெடுஞ்சாலைத் திட்டமாகும்.
மேலும், காணொளி காட்சி மூலம் 2 புதிய அம்ரித் பாரத் விரைவு ரெயில்களான கவுகாத்தி (காமாக்யா)- ரோஹ்தக் அம்ரித் பாரத் விரைவு ரெயில், திப்ருகர்- லக்னோ (கோமதி நகர்) அம்ரித் பாரத் விரைவு ரெயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அசாமில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள், வளர்ச்சியே பிரதானம் என்ற பா.ஜ.கவின் தாரக மந்திரத்தை வலுப்படுத்தியுள்ளன. அசாமின் காசிரங்கா உயர்மட்டப் பாலம் வெள்ளக் காலங்களில் வனவிலங்குகளுக்குப் பாதுகாப்பான பாதையை வழங்க உதவும்.
நிலங்களை ஆக்கிரமித்த ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவதன் மூலம் பா.ஜ.க அரசு அசாமின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறது.
அசாமில் முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்கள் வாக்குகளுக்காக நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்தன. வெறும் அரசாங்கத்தை அமைப்பதற்காகவும், சில வாக்குகளைப் பெறுவதற்காகவும் அவர்கள் உங்கள் நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.
ஊடுருவல்காரர்கள் அசாம் மற்றும் நாட்டிற்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். பல தசாப்தங்களாக அசாமில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஊடுருவல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. நீங்கள் காங்கிரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாட்டில் அனைவரின் முதல் தேர்வாக பா.ஜ.க மாறியுள்ளது.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பா.ஜ.க மீதான நாட்டின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீகார் தேர்தலில் பா.ஜ.கவுக்கு மக்கள் பெரிய வெற்றியை தந்தனர். மராட்டியம் மற்றும் கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க சாதனை படைத்தது.
எதிர்மறை அரசியல் செய்தியை வழங்குவதால் காங்கிரஸ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி மும்பையில் பிறந்திருந்தாலும் இன்று அந்த கட்சியை மும்பையில் நடக்கும் தேர்தலில் 4-வது அல்லது 5-வது இடத்தில் தான் பார்க்க முடிகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் இல்லாததால் அது நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது.
இவ்வாறு மோடி பேசினார்.
- எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும்.
- யார் அந்த டி.டி.வி.தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் பேஸ்ட் காப்பி அடிப்படையிலேயே உள்ளது. கடந்த தேர்தலின் போது மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினோம். அப்போது எடப்பாடி பழனிசாமி குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து படிக்க வைப்பதை போல் மகளிருக்கு ஆசை வார்த்தை கூறி உரிமைத்தொகை தர போகிறோம் என்று தி.மு.க. கூறியுள்ளது என்று சொன்னார்.
உங்களால் உரிமைத்தொகை கொடுக்க முடியாது என்று கூறியவர், இன்று 2000 ரூபாய் கொடுக்க முடியும் என்று கூறியதில் இருந்தே மகளிருக்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த அளவிற்கு மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள வரவேற்பையும் எடுத்துக்காட்டி உள்ளது என்பதை அறியலாம்.
எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும். அவசர அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஆனால் அங்கு பந்தியே போடவில்லை, அவர் காத்திருக்கத்தான் வேண்டும். பந்தி போட்டவுடன் நாங்கள் வந்து அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம். எடப்பாடியால் எந்த நிதி நிலையையும் சரி செய்ய முடியாது. அவரின் திறமை என்ன என்பதை மக்கள் பார்த்துவிட்டார்கள். அவரால் திறமையாக எதையும் செயல்படுத்த முடியாது.
ராகுல் காந்தி தான் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளது. எனவே கூட்டணிக்குள் எந்த குழப்பமும் ஏற்படாது. யாராலும் அதனை உடைக்க முடியாது. சிலர் எதிர்பார்க்கிறார்கள், அது நடக்காது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது, அந்த பழக்கமும் கிடையாது. அவர்களை அரவணைப்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் பழக்கம். தற்போதும் அவர்களை அரவணைத்து கொண்டு தான் இருக்கிறார். அந்த அரவணைப்பிலிருந்து யாராவது செல்ல வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் எங்களோடு இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதற்கு எங்கள் தலைவர் தெளிவான பதிலை சொல்லிவிட்டார்.
வரக்கூடிய தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என டி.டி.வி.தினகரன் ஜாதகம் பார்த்து ஜோசியம் சொல்கிறார். யார் அந்த டி.டி.வி.தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது. நாங்கள் தனித்து ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு வெற்றி பெறுவோம். நிச்சயம் தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்றார்.
- கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக் கூடாது.
- காங்கிரஸ் தலைமை 5 நபர் குழுவை தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நியமித்து உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும் என்று கேட்பதுடன், ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் கூட்டணி விவகாரம் பற்றி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் முடிவு செய்வார்கள் என்றும் மற்றவர்கள் சொல்வது அவரவர் சொந்த கருத்து என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறி இருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் தமிழக காங்கிரசாருடன் ராகுல்காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். கூட்டணி தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். இதில் பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் தி.மு.க.வுடன் கூட்டணி தொடர வேண்டும் என்றே வலியுறுத்தி பேசி உள்ளனர்.
அதுமட்டுமின்றி தி.மு.க. வுடன் கூட்டணியை தொடர ராகுல்காந்தி திட்டவட்டமாக முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக் கூடாது. சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிரக் கூடாது என்றும் நிர்வாகிகளிடம் அவர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தி.மு.க. செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி இதுவரை தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையோ அல்லது தேசிய காங்கிரஸ் தலைவரோ, தி.மு.க.வை விட்டு வேறு கட்சியில் பேசவில்லை என்றும், தி.மு.க.வுடன்தான் இருக்கிறோம் என்றும் பேசுகிறார்கள்.
காங்கிரஸ் தலைமை 5 நபர் குழுவை தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நியமித்து உள்ளது. எனவே மேலிடம் தௌிவாக உள்ளது. இங்கு லோக்கலில் சில பேர் வேறுவிதமாக பேசுகிறார்களே தவிர, காங்கிரஸ் அதிகாரப்பூர்வமான தலைமை தி.மு.க.வுடன் இருப்பதை இதுவரை உறுதி செய்துள்ளது.
அதில் எந்த மாற்றமும் அவர்கள் சொல்லவில்லை. இந்த கூட்டணி அப்படியே தொடர்கிறது.
கே: காங்கிரசில் ஒரு சிலர், விஜய் கட்சியுடன் போகலாம் என்று பேசுகிறார்களே?
ப: அப்படி பேசுபவர்கள் தலைவர்கள் இல்லை. இஷ்டத்துக்கு அவர்கள் கருத்தை சொல்கிறார்கள். எங்கு சொல்ல வேண்டுமோ அங்கு சொல்லாமல் பொது வெளியில் பேசுவதுதான் குழப்பத்தை உண்டாக்குகிறது. அதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.
- இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல...
- நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல...
விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன். எனக்காக அல்ல..
என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்கார்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காக ..
அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்..
இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல ..
நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல..
மதவெறி கும்மல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல.
நட்புக்கு தோழ் கொடுப்போம்.
உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று கூறியுள்ளார்.
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
- காங்கிரசிற்கு சாதகமான தொகுதிகளுடன் மாநில நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியின் பிரதான கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், நடிகர் விஜய் த.வெ.க. என்னும் புதிய கட்சியை தொடங்கியது முதல் காங்கிரஸ் கட்சிக்குள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடங்களில் போட்டி என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதற்கிடையே ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர் மற்றும் தரவு பகுப்பாய்வு துறை தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அவ்வப்போது நடிகர் விஜய்யை சந்தித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி தலைமையில் ஜனநாயகன் பொங்கல் விழா கொண்டாடி தி.மு.க. கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக இடங்களில் போட்டி கோரிக்கையை மேலும் வலுப்படுத்தி உள்ளார்.
இந்தநிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைமையகமான டெல்லி, இந்திரா பவனில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழகத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் துணை அமைப்புகளின் தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தியை சந்திக்க உள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்தால் கூடுதல் சீட் கேட்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது. காங்கிரசிற்கு சாதகமான தொகுதிகளுடன் மாநில நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் சென்னையில் 19-ந்தேதி காங்கிரஸ் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இன்று எடுக்கப்படும் முடிவு செயற்குழுவில் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
செயற்குழுவிற்கு பின்னர் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை மறுநாள் காங்கிரஸ் வெளியிடுகிறது. 2029 பாராளுமன்ற தேர்தலையும் மனதில் வைத்து கூட்டணி முடிவை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் சென்னை வந்துள்ளார்.
- நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார் சச்சின் பைலட்.
சென்னை:
காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவருமான சச்சின் பைலட் நேற்று சென்னை வந்தார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சச்சின் பைலட் கூறியதாவது:-
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்ததாக உள்ளது.
பாரம்பரியமாக தமிழகத்தில் காங்கிரசுக்கு தனி வாக்கு சதவீதம் உள்ளது.
காங்கிரஸ் கட்சி எப்போதும் தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பல முயற்சிகளைச் செய்தாலும் ஒருபோதும் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது.
பா.ஜ.க.வை எதிர்க்க எப்போதும் கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஒருங்கிணைந்து செயல்படும்.
என்ன நடந்தாலும் வருங்காலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது.
நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
- சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
- தொகுதிப் பங்கீடு குறித்த ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில்,மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வரும் தேர்தல்களை எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளுடனான உறவு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளது.
மாநிலம் தழுவிய அளவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் இந்தக் கூட்டம் நடைபெறுவதால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் போராட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இந்தக் கூட்டத்திற்குப் பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
- கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது.
- எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் 30 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. நவி மும்பையில் இப்போது முழுமையாக பா.ஜ.க. கூட்டணியே ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த நிலையில், மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது. பொதுபணித்துறை, பாசனத் துறை, நெடுஞ்சாலைதுறை, சுரங்கங்கள், நகர்ப்புற வளர்ச்சி போன்ற "வளமிக்க" துறைகளை காங்கிரஸ் தேடி போவதில்லை.
மகாராஷ்டிரா, கேரளா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், மக்களை மையமாகக் கொண்ட துறைகள் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, பெண்கள் & குழந்தைகள் நலன், காதி & கைத்தறி ஆகியவற்றையே காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது.
எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல; மக்கள் சேவை. அதுவே காங்கிரஸ் மாடல் என்று கூறியுள்ளார்.






