search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kushbu"

    • கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன் தலைமையில் பட குழுவினர் சென்றுள்ளனர்.
    • இதில் நடிகை குஷ்புவும் இந்திய பிரதிநிதியாக பங்கேற்றார்.

    பிரான்சில் உலக புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இந்த விழா வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது. இதில் உலகில் பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவில் இருந்து அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி, ராகுல்ராய் நடித்த ஆக்ரா, மணிப்பூரில் 1990-ல் வெளியான இஷானோ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.



    இந்த விழாவில் கலந்து கொள்ள மத்திய மந்திரி எல்.முருகன் தலைமையில் பட குழுவினர் சென்றுள்ளனர். நடிகை குஷ்புவும் இந்திய பிரதிநிதியாக பங்கேற்றார். இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நடிகை குஷ்பு கையால் நெய்யப்பட்ட காஞ்சீவரம் புடவையை உடுத்தி சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான குஷ்பு தற்போது தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார்.
    • இவர் தனது டுவிட்டர் கணக்கில் புளூ டிக்கை இழந்துள்ளார்.

    தமிழ் திரையுலகிற்கு 1988-ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.


    குஷ்பு

    குஷ்பு

    இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியல் வாதியாகவும் வலம் வருகிறார். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை குஷ்பு தனது டுவிட்டர் கணக்கின் புளு டிக்கை இழந்தார். இது குறித்து டுவிட்டரிடம் கேள்வி எழுப்பிய குஷ்பு, டியர் டுவிட்டர், என் புளூடிக் ஏன் ஒரே இரவில் காணாமல் போனது?? எனது கணக்கு செயலில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

    இந்திய பயனாளர்கள் மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் என்றும் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் சின்னதம்பி.
    • இப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை குஷ்பு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 1991ம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. இப்படத்தின் கதாநாயகனாக பிரபு, கதாநாயகியாக குஷ்பு நடித்திருந்தனர். மேலும் ராதாரவி, மனோரமா, ராஜேஷ் குமார், உதய் பிரகாஷ், கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.


    சின்னதம்பி

    சின்னதம்பி

    இந்நிலையில் சின்னதம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் சினிமா வரலாற்றில் சின்னதம்பி படம் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தி 32 ஆண்டுகள் ஆகிவிட்டதென நம்பவே முடியவில்லை!


    குஷ்பு - பி.வாசு - பிரபு 

    குஷ்பு - பி.வாசு - பிரபு 


    என் மீது பொழிந்த அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருப்பேன். என் இதயம் எப்போதும் பி.வாசு சார் மற்றும் பிரபு சாருக்காக துடிக்கும். இளையராஜா சாரின் ஆன்மாவைக் கிளப்பிய இசைக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நந்தினி, எப்போதுமே அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் நிறைந்திருப்பார்! மீண்டும் ஒருமுறை நன்றி என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.

    • வம்சி இயக்கிவரும் வாரிசு படத்தில் விஜய்யுடன் சரத்குமார், பிரபு, குஷ்பு ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
    • இப்படத்தின் படப்பிடிப்பில் சரத்குமார், பிரபுவுடன் எடுத்தபுகைப்படங்களை குஷ்பு பகிர்ந்துள்ளார்.

    வம்சி இயக்கிவரும் வாரிசு படத்தில் விஜய்யுடன் சரத்குமார், பிரபு, குஷ்பு ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 100-வது நாளை எட்டி உள்ளது. இதில் நாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

     

    சரத்குமார் - குஷ்பு - பிரபு

    சரத்குமார் - குஷ்பு - பிரபு

    இந்நிலையில் குஷ்புவும் வாரிசு படப்பிடிப்பில் தன்னோடு நடித்த சரத்குமார், பிரபு ஆகியோருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இவர்கள் இருவருடன் இருந்தால் ஒருபோதும் சோகமான மனநிலை இருக்காது என்ற பதிவையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

     

    சரத்குமார் - குஷ்பு - பிரபு

    சரத்குமார் - குஷ்பு - பிரபு

    சரத்குமாருடன் நாட்டாமை படத்திலும், பிரபுவுடன் சின்னத்தம்பி படத்திலும் குஷ்பு நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் பெரிய வெற்றி பெற்றன. நீண்டகால இடைவெளிக்கு பிறகு இருவருடன் இணைந்து நடிக்கும் மகிழ்ச்சியில் இந்த புகைப்படங்களை குஷ்பு வெளியிட்டு இருக்கிறார். வாரிசு படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் படத்தின் டிரைலரை தீபாவளிக்கு வெளியிடவும், படத்தை பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.

    • மீனாவின் கணவர் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
    • நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே வித்யாசாகர் இறப்புக்கு காரணம் என தகவல்.

    தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இவர் காலமானார். அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.


    இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அவர் அதிலிருந்து குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே நுரையீரல் அலர்ஜி இருந்ததால், கொரோனாவுக்குப் பின் அது தீவிரமடைந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன் திடீரென அவருக்கு நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து உள்ளது.

    அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் போனது. மாற்று நுரையீரலுக்காக சென்னை உட்பட பல இடங்களில் மூளைச்சாவு அடைந்தவர்கள் உறுப்புகள் கிடைக்கிறதா என்று தேடும் பணியில் மீனாவுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் உறுப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் நேற்று (28.06.2022) உயிரிழந்தார்.

    குஷ்பு 

    குஷ்பு 

    மீனாவின் கணவர் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.திரையுலகினர் பலரும் தங்கள் ஆறுதலை மீனாவிற்கு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை குஷ்பு, மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு குறித்து சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மீனாவின் கணவர் சாகர் இறந்த செய்தி அறிந்து மனமுடைந்து போனேன். நுரையீரல் பிரச்சனையால் அவர் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். அவரை இழந்து வாடும், மீனா மற்றும் அவரது குழந்தைக்கு என் ஆழ்ந்த இரங்கல். வாழ்க்கை குரூரமானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    மேலும் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என ஊடகத்தினரை கேட்டுக்கொள்கிறேன். மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. அவர் 3 மாதங்களுக்கு முன்னர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அப்போது அவரது நுரையீரலில் பாதிப்பு தீவிரமானதால் தான் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். அதனால் இப்போது அவர் கொரோனாவால் தான் உயிரிழந்தார் எனக்கூறி அச்சத்தை கிளப்ப வேண்டாம் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



    • இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'அண்ணாமலை'.
    • இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு joமுதல்முறையாக தேவா இசையமைத்திருந்தார்.

    ரஜினிகாந்த் நடிப்பில் 1992-ஆம் ஆண்டு ஜூன் 27 தேதி வெளியான திரைப்படம் 'அண்ணாமலை'. இயக்குனர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி இருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். சரத் பாபு, மனோரம்மா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு முதல்முறையாக தேவா இசையமைத்திருந்தார். ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் குறிப்பிடப்படும் படங்களில் 'அண்ணாமலை' திரைப்படம் இன்று வரை முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில் இப்படம் திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.

    அண்ணாமலை

    அண்ணாமலை

    'அண்ணாமலை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்திருந்தார். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    அண்ணாமலை

    அண்ணாமலை

    இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்த குஷ்பூ ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "அண்ணாமலை, என் கேரியரில் மிக சிறந்த படங்களில் ஒன்று, 30 ஆண்டுகள் கடந்துவிட்டதை என்னால் நம்பமுடியவில்லை. ரஜினிகாந்த் சாரிடம் பணிபுரிந்தது மகிழ்ச்சியாகவும் மரியாதையாகவும் உணர்கிறேன். மேலும், சுரேஷ்கிருஷ்ணா சாருக்கும், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் சாருக்கும் நான் கண்டிப்பாக கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • விஜய் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.

    பீஸ்ட் படத்துக்கு பிறகு விஜய் வாரிசு என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 66-வது படம். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். பணக்கார குடும்பத்தை சேர்ந்த விஜய் தனது குடும்பத்துக்கு வரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு எப்படி முறியடிக்கிறார் என்ற கதையம்சத்தில் படம் தயாராவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். விஜய்யின் தந்தையாக சரத்குமாரும் சகோதரராக ஷ்யாமும் நடிப்பதாக கூறப்படுகிறது.

    விஜய் - குஷ்பு

    விஜய் - குஷ்பு

    இந்நிலையில் இப்படத்தில் குஷ்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 1999-இல் வெளியான மின்சார கண்ணா படத்தில் விஜய்யும் குஷ்புவும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாரிசு படத்தில் குஷ்பு நடிக்கவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். விஜய்யின் பிறந்தநாள் அன்று விஜய்யுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குஷ்பு வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதன் மூலம் வாரிசு படத்தில் குஷ்பு நடிப்பதை உறுதிப்படுத்துவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    குஷ்பு

    குஷ்பு

    விஜய் நடிப்பில் வெளியான வில்லு படத்தில் ஒரு பாடலுக்கு குஷ்பு சிறப்பு நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×