என் மலர்
நீங்கள் தேடியது "சுந்தர் சி"
- சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
- ரஜினிகாந்த் படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்க இருந்தார். மூவரும் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு படத்தின் தொடக்கம் குறித்து ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவித்தது.
ஆனால் சில நாட்களிலேயே படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார். எதிர்பாராத காரணங்களால் விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அண்மையில் செய்தியார்களிடம் பேசிய கமல் ஹாசன், 'அவரின் நிலைப்பாட்டை அவர் சொல்லி இருக்கிறார். அது பத்திரிகைகளில் பார்த்தோம். நான் முதலீட்டாளன். எனது நட்சத்திரத்திற்கு பிடித்தார் போல் கதை இருக்க வேண்டும். அவருக்கு கதை பிடிக்கும் வரை புதிய இயக்குனரை தேடிக் கொண்டு இருப்பேன்' என்றார்.
இந்நிலையில், ரஜினியின் 173 வது படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருப்பதாக ராஜ் கமல் பட தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- நயன்தாரா அம்மனாக நடிக்க, சுந்தர் சி இயக்கியத்தில் படம் உருவாகியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்' படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் பாகம் 2-ஐ தயாரிக்க வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் முன்வந்தது. இந்த நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
நயன்தாரா அம்மனாக நடிக்க, சுந்தர் சி இப்படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்பட பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டாக நடைபெற்றது. கடந்த 6 மாதங்களுக்கு மேலான நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மூக்குத்தி அம்மன் 2 மிகப்பிரமாண்டாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ரெஜினா கசான்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சுந்தர் சி மற்றும் நயன்தாரா இருவரும் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளதால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு உள்ளனர். இப்படத்தை 2026 கோடை விடுமுறையின்போது ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
- பல்வேறு யூகங்களை தெரிவித்து வருகின்றனர்.
- சில நாட்களில் தவிர்க்க முடியாத காரணங்களில் அப்படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி தெரிவித்தார்.
கடந்த 2004-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி. மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான குஷ்பு ஆகியோர் இணைந்து தொடங்கப்பட்ட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் அவ்னி சினிமேக்ஸ். சுந்தர் சி. இயக்கும் படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தற்போது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதாவது, இது ஒரு முக்கியமான மெசேஜ்... உங்க சார்ஜர்ல இருக்கிற ஹோல்ல இருந்து படிங்க... என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சுந்தர் சி-யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, தமன்னா மீண்டும் நடிக்க வருகிறார் என பல்வேறு யூகங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் படி அது Sundar C's Next Loading என தெரியவருகிறது.
முன்னதாக, கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சில நாட்களில் தவிர்க்க முடியாத காரணங்களில் அப்படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி தெரிவித்தார். இதனால் இது அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.
- படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர்.
- 2005-ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.
செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம். புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
புதுமுக நடிகர் - நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

2005-ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி வெளியிட்டு, படத்தின் ஒரு பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவை பாராட்டினார்.
- அவருக்கு கதை பிடிக்கும் வரை புதிய இயக்குனரை தேடிக் கொண்டு இருப்பேன்' என்று கமல் கூறினார்.
- சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்க இருந்தார். மூவரும் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு படத்தின் தொடக்கம் குறித்து ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவித்தது.
ஆனால் சில நாட்களிலேயே படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார். எதிர்பாராத காரணங்களால் விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அண்மையில் செய்தியார்களிடம் பேசிய கமல் ஹாசன், 'அவரின் நிலைப்பாட்டை அவர் சொல்லி இருக்கிறார். அது பத்திரிகைகளில் பார்த்தோம். நான் முதலீட்டாளன். எனது நட்சத்திரத்திற்கு பிடித்தார் போல் கதை இருக்க வேண்டும். அவருக்கு கதை பிடிக்கும் வரை புதிய இயக்குனரை தேடிக் கொண்டு இருப்பேன்' என்றார்.

இந்த சூழலில் தான் ரஜினியின் 173 வது படத்தை தனுஷ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுடன் கடந்த வருடம் விவாகரத்து பெற்று தனுஷ் பிரிந்தார். இருப்பினும் மகன்களுக்காக மனைவியுடன் நல்லிணக்கத்துடன் தனுஷ் பொது இடங்களில் காணப்படுகிறார்.
மேலும் பவர் பாண்டி மூலம் இயக்குனராக தன்னை நிலை நிறுத்திய தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன், இட்லி கடை உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடைசியாக வெளியான இட்லி கடை வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில் ரஜினியின் மாஸ் பிம்பத்துக்கு நியாயம் செய்யும் வகையில் தனுஷ், கதையை உருவாக்குவாரா அல்லது எதார்த்தமான கதையில் அவரை நடிக்க வைக்கப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. அதேநேரம் தனுஷ்க்காக சுந்தர் சி கதையை ரஜினி நிராகரித்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- எனது தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்திற்கான வேலைகள் முதலில் முடிக்கப்படும்.
- அந்த கதைக்கான விவாதம் போய் கொண்டு இருக்கிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில் திடீரென இயக்குநர் சுந்தர் அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன். புதிய படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். ஆர்வத்துடன் காத்திருந்தவர்களை அதிருப்திக்குள்ளாக்கியதில் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.
ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி விலகியது தொடர்பாக பல்வேறு யூகங்கள் உலா வந்தன. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் உங்கள் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்த படத்தில் இருந்து திடீரென அவர் விலகி உள்ளார். மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், 'அவரின் நிலைப்பாட்டை அவர் சொல்லி இருக்கிறார். அது பத்திரிகைகளில் பார்த்தோம். நான் முதலீட்டாளன். எனது நட்சத்திரத்திற்கு பிடித்தார் போல் கதை இருக்க வேண்டும். அவருக்கு கதை பிடிக்கும் வரை புதிய இயக்குனரை தேடிக் கொண்டு இருப்பேன்' என்றார்.
மீண்டும் உங்களுடன் இணைவதற்கு முயற்சி எடுக்கப்படுமா? என்ற மற்றொரு கேள்விக்கு, பதில் அளித்த அவர், 'ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்றார் போல், பிடித்தார் போல் கதை அமைய வேண்டும்' என்று கூறினார்.
'நீங்களும், ரஜினியும் இணையும் படம் எப்போது?' என்று கேட்ட போது, 'அது வேறொரு கதை. அந்த கதைக்கான விவாதம் போய் கொண்டு இருக்கிறது. அதற்கு முன்பாக எனது தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்திற்கான வேலைகள் முதலில் முடிக்கப்படும். அந்த கதை எப்படி இருக்கும்?' என்ற கேள்விக்கு 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்றார்.
- கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகி உள்ளார்.
- புதிய படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகி உள்ளார்.
ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில் இயக்குநர் சுந்தர் சி இந்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக சுந்தர் சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன். புதிய படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
ஆர்வத்துடன் காத்திருந்தவர்களை அதிருப்திக்குள்ளாக்கியதில் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார்.
- 1997ல் ரஜினிகாந்தின் 'அருணாச்சலம்' படத்தை இயக்கியவர் சுந்தர்.சி.
தமிழ் சினிமாவின் மூத்த முன்னணி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினர்.
அதன்படி, ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படமாக இது அமைய உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளது. இந்நிலையில் படத்தின் துவக்கம் தொடர்பாக ரஜினி- கமல் - சுந்தர்.சி சந்தித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
இப்படம் 2027 பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1997ல் ரஜினிகாந்தின் 'அருணாச்சலம்' படத்தை இயக்கிய சுந்தர்.சி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கமல் ஹாசனின் அன்பே சிவம் படத்தையும் சுந்தர் சி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.
இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினார்.
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது. இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்று சொல்லப்பட்டது.
இதற்கிடையே, ரஜினி- கமல் கூட்டணியில் வெளியாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
இத்தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ரஜினி- கமல்- சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் அறிவிப்பு ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது.
1997ல் ரஜினிகாந்தை முதல் முறையாக 'அருணாச்சலம்' படத்திற்காக இயக்கிய சுந்தர்.சி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

- ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது.
- 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.
இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினார்.
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது. இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்று சொல்லப்படுகிறது.
மேலும் இப்படம் தான் ரஜினிகாந்தின் கடைசி படம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துடன் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறலாம் என்று ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் தாவல் வெளியாகியுள்ளது. இப்படத்தியும் கமல்ஹாசனே தயாரிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
- இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடித்து வருகிறார்.
- 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்' படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'மூக்குத்தி அம்மன்' முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும், ஆர்.ஜே. பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கும் இப்பாகத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
முதல் பாகம் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்தினை பிரமாண்டமாக தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் அம்மனாக நடித்து இருக்கும் நயன்தாரா சோகத்தில் அமர்ந்து இருப்பது போன்று உள்ளது. ரசிகர்கள் போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இதனிடையே, சுந்தர் சி மற்றும் நயன்தாரா இருவரும் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளதால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.
- இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
- திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. ஒரு பெரும் பணத்தை சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து திருடுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை வெளியிட்டுள்ளது.






