என் மலர்
நீங்கள் தேடியது "சிபி சக்கரவர்த்தி"
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
- இப்படம் ஜனவரி 14-ந்தேதி வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக 'மதராஸி' வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
'மதராஸி' படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14-ந்தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் 'டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாகவும் இப்படத்தில் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சிவகார்த்திகேயன் நவம்பர் மாதம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் தனது அடுத்த படத்தை தொடங்க உள்ளார்.
- படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் வரலாற்று கதையம்சத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா போன்றோர் நடித்துள்ளனர். இது அவரது 25-வது படமாகும். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் சிவகார்த்திகேயன் நவம்பர் மாதம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் தனது அடுத்த படத்தை தொடங்க உள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம்தான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
- அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்தது டான் திரைப்படம்.
- டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி ஒருவரானார்.
அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்தது டான் திரைப்படம். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி ஒருவரானார்.
இதையடுத்து சிபி சக்கரவர்த்தி ரஜினிகாந்த் மற்றும் நானி ஆகியோருக்கு கதை சொன்னார். ஆனால் இரண்டு பேருக்குமே அந்த கதை பிடிக்காத நிலையில் அந்த படங்கள் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய முதல் பட ஹீரோவான சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக சுகன் தயாரிக்க உள்ளாராம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவோடு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு பணிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின
- இது சிவகார்த்திகேயனின் 24 வது படமாகும்.
தமிழ் சினிமாவில் பிசியாக இயங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்த அமரன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த நிலையில்தான் கடந்த 2022 ஆம் ஆண்டு டான் படம் மூலம் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன்- இயக்குனர் சிபி சக்கரவர்த்தி காம்போ மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இது சிவகார்த்திகேயனின் 24 வது படமாகும்.

இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும், எஸ்.ஜே சூர்யா முக்கிய காதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. டான் படத்திலும் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்திருந்தது கவனிக்கத்தக்கது. இதற்கிடையில் இந்த படத்திற்கு 'பாஸ்' [BOSS] என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2022 ஆம் ஆண்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது டான் திரைப்படம்.
- இயக்குனரான சிபி சக்கரவர்த்திக்கு நேற்று திருமணம் நடைப்பெற்றது.
2022 ஆம் ஆண்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது டான் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, பிரியங்கா மோகன் மற்றும் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
காலேஜ் ஸ்டூடெண்ட் அவனுடௌய கனவை தேடும் பயணமாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டதால். இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிள் கலெக்ஷனின் பின்னியது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்திக்கு நேற்று திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமண விழாவில் சிவகார்த்திகேயன் மற்றும் பால சரவணன் கலந்துக் கொண்டனர். இவர்கள் கலந்துக் கொண்ட புகைப்படங்களை தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பால சரவணன் பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சி.பி.சக்ரவர்த்தியுடன் இணைய உள்ளார் சிவகார்த்திகேயன்.
- ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா
அமரன் படத்தை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக சி.பி.சக்ரவர்த்தியுடன் இணைய உள்ளார் சிவகார்த்திகேயன்.
இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன் -சிபி சக்ரவர்த்தி கூட்டணியில் டான் படத்தில் தன்னுடைய எதிர்காலம் குறித்த புரிதல் இல்லாத கல்லூரி மாணவனின் கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பாஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற இருந்த நிலையில் அதனை அடுத்த வாரத்திற்கு ஓத்திவைத்து படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் சிவகார்த்திகேயன் இணைய உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
- இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினி
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்கள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருக்கும் அடுத்த படத்திலும் அதன்பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கும் படத்திலும் ரஜினி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் போஸ்டரையும் படத்தில் இணைந்துள்ள பிரலங்கள் பற்றியும் படக்குழு அறிவித்திருந்தது. ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினி - சிபி சக்கரவர்த்தி
இந்நிலையில் ரஜினியின் 170-வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரஜினியின் 170-வது படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டான்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனது இரண்டாவது படத்திலேயே ரஜினியுடன் இணைவது ரசிர்களின் எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.






