search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jailor"

    • ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் அப்டேட்டை படக்குழு இன்று வெளியிடவுள்ளது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஜெயிலர்

    ஜெயிலர்

    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் காத்திருந்தது போதும் என்றும் குறிப்பிட்டு ஜெயிலர் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    • ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பை சில தினங்களுக்கு முன்பு ரஜினி நிறைவு செய்ததாக தகவல் வெளியானது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஜெயிலர் - ரஜினி

    ஜெயிலர் - ரஜினி

    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சென்னையிலும் ஜெயில் அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கினர். சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் நிறைவு செய்ததாக தகவல் வெளியானது.


    ஜெயிலர் படக்குழு

    ஜெயிலர் படக்குழு

    இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பை ரஜினி நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஜெயிலர்

    ஜெயிலர்

    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சென்னையிலும் ஜெயில் அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கினர்.


    ஜெயிலர்
    ஜெயிலர்

    இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் நிறைவு செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது டப்பிங், ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    • அனிருத் தற்போது ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
    • இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின் வெளியான எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலை இல்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, வேதாளம், விவேகம், பேட்ட, பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

     

    ஆட்டோகாரனாக மாறிய அனிருத் 

    ஆட்டோகாரனாக மாறிய அனிருத் 


    இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை வைப் செய்ய வைத்துள்ளது. காக்கி சட்டை அணிந்து ஆட்டோகாரன் கெட்டப்பில் ஆட்டோவில் அமர்ந்து ரஜினியின் நான் ஆட்டோகாரன் என்ற பாடலை இணைத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    ரஜினி

    ரஜினி

    இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்கள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருக்கும் அடுத்த படத்திலும் அதன்பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கும் படத்திலும் ரஜினி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
    • இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.


    ஜெயிலர்

    இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள நிலையில் இதர நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    அதுமட்டுமல்லாமல் அதற்கான செட் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் இப்படத்தின் பல காட்சிகள் ஜெயிலில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கான ஜெயில் செட் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள நிலையில் இதர நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் பெயர் அடிபடுகிறது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் எந்திரன் படத்தில் நடித்திருந்தார்.

    இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க யோகிபாபுவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் தொடர்ச்சியாக அனைத்து காட்சிகளிலும் நடிக்கும் வகையில் யோகிபாபு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்குமுன் தர்பார் படத்தில் ரஜினியுடன் யோகிபாபு நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    யோகிபாபு

    யோகிபாபு

    நெல்சன் திலீப்குமாரின் முந்தைய படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய 3 படங்களிலும் யோகிபாபு நடித்து இருந்தார். ஜெயிலுக்குள் நடக்கும் மோதலை மையமாக வைத்து ஜெயிலர் படம் தயாராவதாகவும், ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

    • ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார்.
    • அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு "ஜெயிலர்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். "ஜெயிலர்" என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் வில்லனாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    ஜெயிலர்

    ஜெயிலர்

    இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தின் தலைப்பில் தற்போது மலையாளத்தில் புதிய படம் ஒன்று தொடங்கி உள்ளதாகவும், இதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருதாகவும் கூறப்படுகிறது. தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தை மலையாளத்தில் வெளியிடும் பொழுது அதற்கு சில தலைப்பு சிக்கல் வரலாம் என தெரிகிறது. இதனால் ரஜினியின் ஜெயிலர் படம் மலையாளத்தில் வேறு தலைப்பில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

    • ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார்.
    • இப்படத்தின் பெயரை சில தினங்களுக்கும் முன்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினியின் 169-வது படத்திற்கு ஜெயிலர் என்ற பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியிட்டதில் இருந்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் லேசான சலசலப்பு எழுந்து வருகிறது. முதல் போஸ்டர் வெளியிட்டதில் ரஜினியின் முகம் இல்லாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.

    இதனை இணையத்தில் கருத்து தெரிவித்து பகிர்ந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்தும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஒருவரின் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த ரஜினியிடம் சில ஊடகத்தினர் இதைக் கேள்வியாகவே கேட்டனர். அப்போதுதான் ரஜினிக்கே இந்த விஷயம் புரிந்திருக்கிறது. ஒரு நிமிடம் நின்றவர் காருக்குள் ஏறி அமர்ந்துவிட்டார்.

    ஜெயிலர்

    ஜெயிலர்


    இந்த போஸ்டரை வெளியிட்ட பிறகு ரசிகர்கள் தாங்களாகவே ரஜினியின் முகம் இருக்கும்படியான போஸ்டர் டிசைனை வெளியிட்டிருக்கிறார்கள். விதவிதமான ரஜினியின் முகம் இந்த போஸ்டர்களை அலங்கரிக்கிறது. குறிப்பாக ஜெயிலர் போஸ்டரில் உள்ள குறையைச் சொல்லி நெல்சன் மீது கடுமையான விமர்சனத்தை வைக்கிறார்கள். ஒரு போஸ்டர் வெளியிடும்போது அதற்கு தனியாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதையே படத்தின் பெயரோடு வெளியிடப்படும்.

    ஆனால் எந்தவித புதிய போட்டோவும் இல்லாமல் இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பழைய தொழிற்சாலையின் பின்னணியில் ரத்தம் தோய்ந்த கத்தியை தொங்கவிட்டிருக்கிறார்கள். ரஜினி ரசிகர்கள் இதை அப்படியே விட்டுவிடாமல் இந்தத் தொழிற்சாலையின் ஒரிஜினல் போட்டோவை தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். அதையும் வெளியிட்டு இவ்வளவு அஜாக்கிரதையாகவா ரஜினி பட போஸ்டரை வெளியிடுவது என்று குமுறியிருக்கிறார்கள்.

    ×