என் மலர்
நீங்கள் தேடியது "Rajinikanth"
- மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இளையராஜாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி. உஷாவும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இருவரும் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக ஆகின்றனர்.
இதையடுத்து, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டரில், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டரில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்க வேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என பதிவிட்டுள்ளார்.
- ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார்.
- அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு "ஜெயிலர்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். "ஜெயிலர்" என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் வில்லனாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

ஜெயிலர்
இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தின் தலைப்பில் தற்போது மலையாளத்தில் புதிய படம் ஒன்று தொடங்கி உள்ளதாகவும், இதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருதாகவும் கூறப்படுகிறது. தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தை மலையாளத்தில் வெளியிடும் பொழுது அதற்கு சில தலைப்பு சிக்கல் வரலாம் என தெரிகிறது. இதனால் ரஜினியின் ஜெயிலர் படம் மலையாளத்தில் வேறு தலைப்பில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
- விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் டாக்டரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரஜினிகாந்த் - விஜயகாந்த்
இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
— Rajinikanth (@rajinikanth) June 21, 2022
- விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் டாக்டரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், என் அருமை நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார்.
- இப்படத்தின் பெயரை சில தினங்களுக்கும் முன்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினியின் 169-வது படத்திற்கு ஜெயிலர் என்ற பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியிட்டதில் இருந்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் லேசான சலசலப்பு எழுந்து வருகிறது. முதல் போஸ்டர் வெளியிட்டதில் ரஜினியின் முகம் இல்லாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.
இதனை இணையத்தில் கருத்து தெரிவித்து பகிர்ந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்தும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஒருவரின் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த ரஜினியிடம் சில ஊடகத்தினர் இதைக் கேள்வியாகவே கேட்டனர். அப்போதுதான் ரஜினிக்கே இந்த விஷயம் புரிந்திருக்கிறது. ஒரு நிமிடம் நின்றவர் காருக்குள் ஏறி அமர்ந்துவிட்டார்.

ஜெயிலர்
இந்த போஸ்டரை வெளியிட்ட பிறகு ரசிகர்கள் தாங்களாகவே ரஜினியின் முகம் இருக்கும்படியான போஸ்டர் டிசைனை வெளியிட்டிருக்கிறார்கள். விதவிதமான ரஜினியின் முகம் இந்த போஸ்டர்களை அலங்கரிக்கிறது. குறிப்பாக ஜெயிலர் போஸ்டரில் உள்ள குறையைச் சொல்லி நெல்சன் மீது கடுமையான விமர்சனத்தை வைக்கிறார்கள். ஒரு போஸ்டர் வெளியிடும்போது அதற்கு தனியாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதையே படத்தின் பெயரோடு வெளியிடப்படும்.
ஆனால் எந்தவித புதிய போட்டோவும் இல்லாமல் இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பழைய தொழிற்சாலையின் பின்னணியில் ரத்தம் தோய்ந்த கத்தியை தொங்கவிட்டிருக்கிறார்கள். ரஜினி ரசிகர்கள் இதை அப்படியே விட்டுவிடாமல் இந்தத் தொழிற்சாலையின் ஒரிஜினல் போட்டோவை தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். அதையும் வெளியிட்டு இவ்வளவு அஜாக்கிரதையாகவா ரஜினி பட போஸ்டரை வெளியிடுவது என்று குமுறியிருக்கிறார்கள்.
- ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார்.
- இப்படத்தின் பெயரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் தலைவர் 169 படம் பற்றிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி விவாதமாக மாறியிருந்தது. இருந்தும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

"ஜெயிலர்"
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன்படி தலைவர் 169 படத்திற்கு "ஜெயிலர்" என்று பெயிரடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
#Thalaivar169 is #Jailer@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/tEtqJrvE1c
— Sun Pictures (@sunpictures) June 17, 2022




