என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajinikanth"

    • அவர் உடனே எழுந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டு எப்படி இதை யோசித்தீர்கள் என்று வியந்தார்.

    தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று முன் தினம் விழா நடைபெற்றது.

    இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பாக்யராஜை வெகுவாக பாராட்டினார். இதற்கிடையே பாக்யராஜ் நேர்காணல் ஒன்று பங்கேற்று பேசியுள்ளார். அதில் ரஜினியின் தளபதி படத்திற்கு தான் யோசித்த வேறு மாதிரியான கிளைமாக்ஸ் குறித்து பாக்யராஜ் மனம் திறந்துள்ளார்.

    1991 இல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி திரைப்படம் வெளியாகி கிளாசிக் அந்தஸ்து பெற்றது அனைவரும் அறிந்ததே. மகாபாரதத்தில் துரியோதனன், கர்ணன் நட்பை இன்ஸபிரேசனாக கொண்டு அர்ஜுனனாக அரவிந்த் சாமியை வைத்து தளபதி கதையை மணிரத்னம் அமைத்திருப்பார்.

    இந்த படத்தின் தாதா மம்மூட்டி தனக்கு இடையூறு தரும் கலெக்டர் அரவிந்த் சாமியை கொல்ல வேண்டும் என தனது உயிர் நண்பன், தளபதி ரஜினியிடம் கூறுவார். ஆனால் மம்மூட்டி இவ்வாறு சொல்வதற்கு முன் ரஜினி தனது தாயை சந்தித்து, அரவிந்த் சாமி தனது தம்பி என்பதை அறிந்துகொள்வார்.

    எனவே மம்மூட்டி கேட்கும் போது தன்னால் கொலை செய்ய முடியாது என ரஜினி கூறுவார். ஒரு கட்டத்தில் அவன் என் தம்பி, எனது உயிரை எடுத்துக்கோ, நான் உன் உயிர் நண்பன் ஆனால் அவனை கொல்ல சொல்லாதே என மம்மூட்டி இடம் கூற, ரஜினியின் நட்பை பார்த்து அவர் பூரித்துப்போவார்.

    நண்பனுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரணடையலாம் என அரவிந்த் சாமியை பார்க்க இருவரும் போக, வில்லன் அந்நேரம் வந்து துப்பாக்கியால் சுட்டவுடன் மமூட்டி ரஜினியின் கண் முன்னேயே உயிரிழப்பார். இது கதை.

    நேர்காணலில் பாக்கியராஜ் கூறியதாவது, தளபதி படம் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றியது. அவன் என் தம்பி, அவனை கொல்ல முடியாது என ரஜினி செல்லும்போது அந்த தேவா கதாபாத்திரத்தின் உயிர் நட்பு என்பது விழுந்துவிடுகிறது.

    மம்மூட்டி சொன்னவுடன் எதுவும் சொல்லாமல் ரஜினி சிறு புன்னகையுடன் கையை நீட்டி துப்பாக்கியை வாங்கிக்கொண்டு தம்பியை கொல்ல புறப்பட வேண்டும்.

    ரஜினி சென்றவுடன் அங்கு வரும் உண்மை தெரிந்த மற்றொருவன் இதை மாமூட்டியிடம் சொல்ல, மம்மூட்டி தனது நண்பன் தனக்காக தம்பியையே கொல்ல சென்றிருக்கிறான் என நெகிழ வேண்டும்.

    ரஜினியை தடுக்க மம்மூட்டி கிளம்ப வேண்டும். மம்மூட்டி செல்லும் வழியில் வில்லன் கும்பல் அவரை இடைமறித்து தடுக்க வேண்டும். இப்போது ரஜினி அரவிந்த் சாமியை கொன்றுவிடுவாரா, அல்லது மம்மூட்டி வில்லன் கும்பலை சமாளித்து ரஜினியை சரியான நேரத்தில் தடுத்து நிறுத்துவாரா என்ற விறுவிறுப்பு படம் பார்பவர்களிடையே ஏற்படும்.

    இதை ஏன் மணிரத்னம் யோசிக்கிக்கவில்லை என்று தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு பிறகு ரஜினியின் வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டிருந்தபோது இந்த மாற்று கிளைமாக்ஸை அவரிடம் கூறினேன்.

    அவர் உடனே எழுந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டு எப்படி இதை யோசித்தீர்கள் என்று வியந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளனாக படம் பார்க்கும்போது எனக்கு இயல்பாகவே இது தோன்றியது. அந்த தேவா கதபாத்திரம் அந்த இடத்தில் சட்டென விழுந்துவிட்டதே என்று தோன்றியது என்று ரஜினியிடம் கூறினேன்" என்று தெரிவித்தார்.  

    நான் ஆவேசமாக பேசும்போது முதலமைச்சருக்கு affect ஆகிடுச்சு.

    தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.

    அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

    இன்னொரு ஒரு நிகழ்வு. என் வாழ்க்கையிலே பாக்யராஜை மறக்க முடியாது. இங்க வந்ததுக்கு முக்கிய காரணம் கூட இதை சொல்லணும். 1995-ல் சிவாஜி சாருக்கு மலேசியாவில் விருது கொடுத்தார்கள்.

    அதற்காக அவரை தமிழ் திரைப்படத்துறை பாராட்டணும், அது அரசும் சேர்ந்து பாராட்டணும் என்று சொல்லி சேப்பாக்கத்தில் மிகப்பெரிய விழா வைத்திருந்தார்கள். அதற்கு சிறப்பு விருந்தினர் முதலமைச்சர் தான் அவர் தலைமையில் தான் விழா.

    விழாவில் நன்றி தெரிவித்து நான் பேசுகையில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து கொஞ்சம் ஆவேசமாக பேசினேன். எப்பவுமே இந்த கோபத்துக்கு ஆயுள் கம்மி. ஆனால் கோபத்தில் உதிர்ந்த வார்த்தைக்கு ஆயுள் ரொம்ப அதிகம். இதனால் தான் கோபத்தில் இருக்கும்போது வார்த்தைகளை அளந்து, அளந்து பேசணும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

    நான் ஆவேசமாக பேசும்போது முதலமைச்சருக்கு affect ஆகிடுச்சு. விழாவில் சிவாஜி சார் இருந்தாலும் கூட நான் ஏதோ பேசிட்டேன். அதன்பிறகு என்பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்ரீதேவி ஏன் இப்படியெல்லாம் என்று கேட்டார்கள்.

    ஆனால் எனக்கு ஒன்னும் புரியவில்லை. அதன் பிறகு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் என்னை நிறைய பேர் சூழ்ந்து தலையில் அடிக்கிறாங்க, திட்டுறாங்க... எனக்கு ஒன்னும் புரியவில்லை.

    அந்த இடத்தில் எஸ்.ஐ. எல்லாம் இருக்காங்க. ஆனா அவங்க எதுவும் செய்யவில்லை. அப்போ பாக்யராஜ் ஓடி வந்து அவர்களை பார்த்து கத்தி என்னை வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அதை என்னால் மறக்கவே முடியாது. அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் கூட ஒன்றும் கிடையாது. அருமையான மனிதர், நீங்க நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    படையப்பா கதை குறித்து பாக்யராஜ்யிடம் கூப்பிட்டு சொன்னேன்.

    தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.

    அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

    பாக்யராஜ்க்கு மிகப்பெரிய ப்ரஸண்ட் என்றால் நம்ம பூர்ணிமா பாக்யராஜ். அவர் கூட தங்கமகன் படத்தில் நடித்தேன். அப்போ அவங்க இந்தியில தான் பேசுவாங்க. மும்பையில் பிறந்து வளர்ந்தது. எல்லோர்கிட்டயும் இங்கிலீஷ்ல தான் பேசுவாங்க. யார்கிட்டயும் ரொம்ப பேசமாட்டாங்க.

    அப்படி இருக்கும்போது இவங்க பாக்யராஜை கல்யாணம் பண்ணிக்கப்போறதா சொன்னப்போ என்னால நம்ப முடியலை. ஏன் என்றால் நம்ம ஆளுக்கு இங்கிலீஷ் தெரியாது, இந்தி சுத்தம்.. இது எப்படி என்று சொல்லும்போது.

    இங்க பார்த்தீங்கன்னா பாக்யராஜை படப்பிடிப்பு தளத்தில் ஒரு தடவை இயக்குனராக, நடிகராக பார்த்தாங்கண்ணு சொன்னா ஆம்பளைங்களுக்கே அவர் மேல காதல் வரும்.

    நான் இப்போ சொல்றேன். மாடலேஷன் எல்லாம் பாக்யராஜ் சொல்லி கொடுத்தது தாங்க எனக்கு. சில சப்ஜெட்களில் டவுட் வந்தது என்றால் பாக்யராஜ் கிட்ட தான் கேட்பேன். படையப்பா கதை குறித்து பாக்யராஜ்யிடம் கூப்பிட்டு சொன்னேன். அதற்கு அவர் கதையை கேட்டு சொன்னார்.

    சார் கதை ரொம்ப நல்லா இருக்கு. நீலாம்பரி கேரக்டரை மட்டும் சரியா எழுதணும். அதை செய்தாலும் படம் ஹிட்ஆகிடும். படம் எங்கேயோ போயிடும் என்றார். அதேப்போல் பாபா படக்கதை சொல்லும் போது, இது கொஞ்சம் ரிஸ்க்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாக்யராஜ் எப்போதும் யாருக்கும் ஜால்ரா போட்டது கிடையாது.

    தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.

    அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

    என்னை பொறுத்தவரைக்கும் பாக்யராஜ்-க்கு கிடைக்க வேண்டிய மதிப்பு, மரியாதை, ஊதியம் கொஞ்சம் கூட கிடைக்கலை. அவர் எப்போதும் யாருக்கும் ஜால்ரா போட்டது கிடையாது. மனதில் என்ன பட்டதோ அதை உடனே சொல்லிவிடுவார். அதில் உண்மை இருக்கும் நியாயம் இருக்கும்.

    மக்கள் திலகம், புரட்சி தலைவர் எம்ஜிஆர் சார் அவர்கள், என்னுடைய திரையுலக வாரிசு பாக்யராஜ் என்று சொன்னால் எந்த மாதிரி அவரை நேசித்திருப்பார்கள். அதுமட்டுமில்லை அவரே நேரில் வந்து திருமணத்தை நடத்தி வைத்தார். அவ்வளவு எளிதில் எம்ஜிஆர் இதயத்தில் போக முடியாது. எப்படி அண்ணா இதயத்தில் எம்ஜிஆர் சார் போனார்களோ அந்த மாதிரி எம்ஜிஆர் சார் இதயத்தில் பாக்யராஜ் போனார். அவர் இதயக்கனி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ‘தலைவர் 173’ படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
    • நடிகர் சிவகார்த்தியேன் நடிப்பில் உருவாகி உள்ள ‘பராசக்தி’ வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது.

    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. முதலில் இப்படத்தை சுந்தர் சி. இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதனை தொடர்ந்து இயக்குநரை பட நிறுவனம் வலைவீசி தேடியது.

    இதனிடையே, எங்களின் நாயகருக்கு பிடிக்கும் வரை கதையைக்கேட்டுக்கொண்டு இருப்போம் என கமல்ஹாசன் தெரிவித்தார். இதற்கிடையே, 'தலைவர் 173' படத்தை 'பார்க்கிங்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்குவதாக தகவல் வெளியானது.

    ஆனால் கடைசியாக 'தலைவர் 173' படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ராம்குமார் பாலகிருஷ்ணனின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால் அவர் அடுத்து எந்த நடிகரை கொண்டு படம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

     

    இந்த நிலையில், ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது அடுத்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனை அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நடிகர் சிவகார்த்தியேன் நடிப்பில் உருவாகி உள்ள 'பராசக்தி' வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வளவு வேலையை விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார்.
    • தேர்தல் நேரம் என்று சொன்னால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிக்க முடியாது.

    சினிமா தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் ரஜினி பேசியதாவது:-

    ஏ.வி.எம். நிறுவனத்தில் நான் 11 படம் நடித்து இருக்கிறேன். அதில் 9 படங்கள் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படங்கள் ஆகும். ஒவ்வொரு படத்திலும் கதையை நாம் கேட்கவே வேண்டாம்.

    எந்த நடிகருக்கு எந்த மாதிரி படம் பண்ணனும், அவரது ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள். அது வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் ஆய்வு செய்து திரைக்கதை செய்து வைத்து விட்டு, நடிகர்களுக்கு அந்தந்த கதாபாத்திரத்துக்கு என்னென்ன பண்ணனும் என்பதை செய்து, இசை, படத்தொகுப்பு எல்லாவற்றிலும் அவரது கை இருக்கும். ஆனால் யாருக்கும் தெரியாது.

    மகாபாரத குருஷேத்திர யுத்தத்தில் கண்ணன் எந்த ஆயுதமும் ஏந்தாமல் ரதத்தில் உட்கார்ந்து எப்படி ஜெயித்தாரோ, அந்த மாதிரி அவர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே எல்லா படத்தையும் ஜெயிக்க வைத்தார். எல்லா படத்தையும் வெற்றிப்படமாக்கினார்.

    சினிமா மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் ஏ.வி.எம்.சரவணன் எனக்கு நிறைய உதவி செய்துள்ளார். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் இருக்கும் இடம் காலியாக இருந்த போது அதை ஏ.வி.எம்.சரவணன் பார்த்துள்ளார்.

    என்னிடம் அந்த இடத்தை ஏன் அப்படியே விட்டு விட்டீர்கள் என்று கேட்டார். காலி இடத்தை அப்படியே விடக்கூடாது. ஏதாவது கட்டணும் என்று சொல்லி அவரே பார்த்து டிசைன் பண்ணி அவரே ஆர்க்கிடெக்ட் செய்து கட்டியதுதான் ராகவேந்திரா மண்டபம்.

    எனது போயஸ்கார்டன் வீட்டுக்கு அவர் வந்தார். அதன் அருகில் காலி இடம் இருந்தது. அதை 15 மடங்கு விலை சொன்னார்கள். அதற்கு ஏ.வி.எம். சரவணன் அது என்ன விலை இருந்தாலும் சரி நீங்க வாங்கிடுங்க. அங்கு வேறு யாராவது வந்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்றார். இந்த மாதிரி எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது.

    சிவாஜி படம் பண்ணிய போது என்னிடம் சொன்னார். நீங்க 1990 கால கட்டத்தில் இருந்து 2 வருடத்துக்கு ஒரு படம், 3 வருடத்துக்கு ஒரு படம் பண்ணுகிறீர்கள். வயது ஆக ஆக பிசியா இருக்கணும், சுறுசுறுப்பா இருக்கணும். அது உடம்புக்கும், மனதுக்கும் நல்லது. வருடத்துக்கு ஒரு படம் பண்ணுங்க என்றார். அதை இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன்.

    சினிமா உலகத்துக்கு வெளியேயும் ஏ.வி.எம். சரவணனுக்கு மரியாதை இருந்தது. ஏனென்றால் அவர் அப்படி வாழ்ந்தார். அவர் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. இருந்தாலும் எம்.ஜி.ஆர். அவரை ஷெரீப் ஆக்கி அழகு பார்த்தார். ஜெயலலிதா அவர் மீது அவ்வளவு மரியாதை வைத்திருந்தார். கலைஞரும் அவர் மீது நிறைய மரியாதை வைத்திருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வளவு வேலையை விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார். தேர்தல் நேரம் என்று சொன்னால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிக்க முடியாது. அந்த மாதிரி இருந்தும் அதை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறார். இங்கு வந்திருப்பதால் அவருக்கு 100 ஓட்டுகள் அதிகமாக கிடைத்து விடாது.

    ஆனாலும் கூட அவர் இங்கு வந்திருப்பது ஏ.வி. எம்.சரவணன் எந்த மாதிரி வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன மாதிரி ஒரு அன்பும், பண்பும் கொண்டவர், உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்பதற்கு எடுத்துக்காட்டு.

    அசையாத சொத்துக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். நம் வாழ்க்கையில் நம்மை விரும்புகிறவர்கள், நமது நலனில் அக்கறை கொண்டவர்கள் ஒரு சில பேர்தான் இருப்பார்கள். அவர்கள் அசையாத சொத்துக்கள். எனக்கு அசையாத சொத்துக்களாக கே.பாலச்சந்தர், சோ, பஞ்சு அருணாசலம், ஆர்.எம்.வீரப்பன், சரவணன், கலைஞர் ஆகியோர் இருந்தனர்.

    காலத்தின் சட்டமோ என்னவோ, நாம் யார் மீது பிரியமாக இருக்கிறோமோ அவர்களை காலம் சீக்கிரமே கொண்டு சென்று விடுகிறது. ஒவ்வொருவரும் பிரியும் போது நமக்கு எவ்வளவு பணம், பேர், புகழ், குடும்பம் இருந்தாலும், அனாதையாக உணர்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கமல்ஹாசன் பேசியதாவது:-

    நான் சொல்ல வேண்டிய கதை 65 வருடத்து கதை. அதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. சின்ன குழந்தையாக நான் ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு போனேன். அங்கிருந்த மாந்தோப்பில் மாம்பழத்தை கடித்து விட்டு சினிமா என்றால் என்ன என்று புரிந்து கொண்டேன்.

    என்னை அந்த வயதில் இருந்து பார்த்துக் கொண்டவர்கள். அவர்கள் ஒரு குழந்தையை கொஞ்சுவது போல்தான் எனது படத்தின் தலைப்பை வைத்தனர். ஏ.வி.எம்.சரவணனுக்கு பொருந்தும் விஷயங்கள் எனக்கும் பொருந்தும்.

    அவரும் சகலகலா வல்லவர்தான். தனக்கு இருக்கும் புகழை எல்லாம் அவர் மற்றவர்களுக்கு கொடுப்பார். அவரிடம் நான் தைரியமாக பேசுவேன். அவர் ஒரு முதலாளி என்று புரிவதற்கே எனக்கு நிறைய நாள் ஆகி விட்டது. அதிக பிரசங்கம் செய்யக்கூடாது என்று எனக்கு சொல்லிக் கொடுத்தவர் எஸ்.பி.முத்துராமன்.

    ஏ.வி.எம். குடும்பத்துடன் ஒட்டிக் கொள்வதில் எனக்கு பெரிய பெருமை. அந்த உரிமையை அவர்கள் கொடுத்ததற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

    ஏ.வி.எம். நிறுவனத்தில் படித்தேன் என்பது எனக்கு பெருமை. நான் அங்கு படித்த விஷயங்கள்தான் எனக்கு இன்று வரை கை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    இங்கு பள்ளிக்கூடம் கட்டி இருந்தால் நான் படித்தும் இருப்பேன். என்னை வேறு பள்ளிகளில் சேர்க்க யோசித்தார்கள். என்னுடைய குணாதிசயம் தெரிந்து என்னை எப்படி வழி நடத்த வேண்டும் என்று தெரிந்த பள்ளி ஏ.வி.எம். பள்ளி. சிறப்பாக கற்றுக் கொடுத்தார்கள். நான் தவறு செய்யும் போது சத்தமாக சொல்லாமல், நான் நல்லது செய்யும் போது என்னை தோளில் தூக்கி கொண்டாடியவர் ஏ.வி.எம்.சரவணன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • ரஜினிகாந்த் படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.

    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்க இருந்தார். மூவரும் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு படத்தின் தொடக்கம் குறித்து ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவித்தது.

    ஆனால் சில நாட்களிலேயே படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார். எதிர்பாராத காரணங்களால் விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே அண்மையில் செய்தியார்களிடம் பேசிய கமல் ஹாசன், 'அவரின் நிலைப்பாட்டை அவர் சொல்லி இருக்கிறார். அது பத்திரிகைகளில் பார்த்தோம். நான் முதலீட்டாளன். எனது நட்சத்திரத்திற்கு பிடித்தார் போல் கதை இருக்க வேண்டும். அவருக்கு கதை பிடிக்கும் வரை புதிய இயக்குனரை தேடிக் கொண்டு இருப்பேன்' என்றார்.

    இந்நிலையில், ரஜினியின் 173 வது படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருப்பதாக ராஜ் கமல் பட தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புத்தாண்டு அன்று ஆண்டுதோறும் ரசிகர்களை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறுவார்.
    • ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    2025-ம் ஆண்டு விடைபெற்று 2026-ம் ஆண்டு இனிதே பிறந்துள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

    புத்தாண்டு பிறந்ததையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    புத்தாண்டு அன்று ஆண்டுதோறும் ரசிகர்களை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறுவது வழக்கம். சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் வந்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில், ரஜினிகாந்த் 'முத்து' படக் காட்சியை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

    "நான் எப்பவுமே போற ரூட்டை பத்தி கவலை பட்டதே கிடையாது. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு வண்டி எந்த ரூட்ல போகுதோ.. அந்த ரூட்ல, 'சிவா'-ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்..!" என்ற 'முத்து' திரைப்படக் காட்சியை பதிவிட்டு ரஜினிகாந்த் 2026 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    • மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
    • புத்தாண்டு பிறந்ததையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    2025-ம் ஆண்டு விடைபெற்று 2026-ம் ஆண்டு இனிதே பிறந்துள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

    புத்தாண்டு பிறந்ததையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    புத்தாண்டு அன்று ஆண்டுதோறும் ரசிகர்களை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறுவது வழக்கம்.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் வந்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது.

    நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்'. ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய சூரியபிரதாப் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    ஒய்.ஜி. மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'ரூட்' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார்.

    இந்த நிலையில் புத்தாண்டு தினமான நாளை காலை 11 மணிக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

    • விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
    • அடுத்தப்படங்களில் அதிக விமர்சனங்களை தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடப்போகிறேன்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி.' கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மேலும் படம் வசூல் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'கூலி' படம் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், 'கூலி' படம் மீது 1000 விமர்சனங்கள் இருந்தன. விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அடுத்தப்படங்களில் அதிக விமர்சனங்களை தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடப்போகிறேன்.

    ரசிகர்களிடமிருந்து ஒரு படத்திற்கு விமர்சனம் வரும்போது, அதை ஏற்றுக்கொள்வது முக்கியம். அதே நேரத்தில், விமர்சனங்களை தாண்டியும் ரஜினி சாருக்காக மக்கள் தியேட்டரில் போய் படம் பார்த்து இருக்காங்க. படம் 500 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. மக்களுக்கு நன்றி.

    அடுத்த படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததாலும், வாய்ப்பு கிடைக்காததாலும், படம் வெளியான நேரத்தில் விமர்சனம் குறித்து பேச முடியவில்லை என்று கூறினார்.

    • 'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார்.
    • ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் பாலய்யா நடிக்கிறார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது.

    'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

    இதனிடையே, ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், 'ஜெயிலர்2' படத்தின் நடிகர்கள் தேர்வு நாளுக்கு நாள் பெரிதாகி எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

    அதன்படி, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிப்பதாக இப்படத்தின் வில்லனாக நடிக்கும் மிதுன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.

    ×