என் மலர்
நீங்கள் தேடியது "Rajinikanth"
- நல்லகண்ணு மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- நல்லகண்ணு இன்று பிற்பகல் 1.55 மணி அளவில் காலமானார் என அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. அவருக்கு வயது 101. வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்லகண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
இதனை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி நல்லகண்ணு இன்று பிற்பகல் 1.55 மணி அளவில் காலமானார் என அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து நல்லகண்ணு மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நல்லகண்ணு மறைவிற்கு நடிகர் ரஜினிகாந் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.
- வயது மூப்பின் காரணமாக நல்லகண்ணு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது.
- நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்ல கண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு கண்விழித்து பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்று காலையிலும் அதே நிலை நீடித்து வருகிறது. அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். ஆனாலும் வயது மூப்பு என்பது தவிர்க்க முடியாத இயற்கையான செயலாகும். அதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அதனை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையில் நல்ல கண்ணுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.
- கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.
- முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணலின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நேர்காணலின் டீசரில் மோகன்லால் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நீங்கள் பழைய நேர்காணல்களில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளீர்கள் என்று கேட்க, அதற்கு ஆம் என்று கூறிய பினராயி விஜயன், ரஜினிகாந்தின் ஆக்சன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் "தாய் கிழவி." ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தாய் கிழவி திரைப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இந்தப் படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் (தலைவர் 173) ஏப்ரல் மாத மத்தியில் தொடங்கும். நான் ஒரு கிராமத்திலிருந்து வருகிறேன், சிவகார்த்திகேயன் போன்ற ஒரு ஹீரோவை இயக்குவது ஒரு கனவாக இருந்தது. நான் முதலில் அவரிடம் ஒரு கதையைச் சொன்னபோது, அவர் அதை நிராகரித்தார். பின்னர் நான் பல ஹீரோக்களை அணுகி இறுதியில் அவரிடம் திரும்பினேன்.
இந்த முறை அவர் அதை ஏற்றுக்கொண்டார். அப்போதிருந்து, அவர் எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்து வருகிறார். எதிர்மறையான கட்டங்களில் கூட, அவர் என்னுடன் நின்றார். கடந்த டிசம்பரில் நான் "தாய்கிழவி" படத்தை பார்த்தேன், ஒரு விஷயம் என்னைத் தாக்கியது. இது ஒரு அற்புதமான படம், இயக்குநர் சிவா அதை மிகவும் எளிதாக கையாண்டுள்ளார்.
ஒரு வலுவான கிராமப்புறக் கதை வந்து சிறிது காலம் ஆகிவிட்டது, இது நிச்சயமாக அந்த ஒன்றாக இருக்கும். ராதிகா மேடம் தான் அந்த பெண் கமல்ஹாசன். இதற்காக அவர் நிச்சயமாக தேசிய விருதை வெல்வார்," என்றார்.
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஒரே திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ப்ரோமோ வீடியோவில் அனிருத்தின் துள்ளலான ரெட்ரோ இசை அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், இந்த பின்னணி இசையை உருவாக்கின்போது வைப் செய்த வீடியோவை அனிருத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது. திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஒரே திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பலரும் இந்தப் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணையும் படம் குறித்த இயக்குநர் நெல்சனின் X தளப்பதிவுக்கு இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா பதிலளித்துள்ளார்.

இது குறித்த பதிவில் அவர், "ஆஹா, என்ன ஒரு பெருமையான தருணம், இரண்டு வெற்றியாளர்களும் ஒன்றாக நடந்து வருவது கண்கொள்ளாக் காட்சி. என்ன ஒரு காட்சி நெல்சன் திலிப் குமார் சார். அனிருத் நீங்கள் எப்போதும் போல் கலக்குகின்றீர்கள். ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெருமையான தருணத்தை உருவாக்கியது," என குறிப்பிட்டுள்ளார்.
- KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
- ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ரஜினி மற்றும் கமலின் பிறந்த தேதிகளைக் குறிக்கும் வகையில் நாளை (இன்று) 12:07 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து ரஜினி- கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ப்ரோமோ வீடியோவில் ரஜினி, கமல், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வீடியோவில் டீம் மியூசிக் ரெடியா இருக்கு என்று அனிருத் சொல்ல, யாரு ஹீரோ? என்று கமல்ஹாசன் கேட்க, கேட்குறாங்களா சொல்லுங்க ஜீ என்று ரஜினிகாந்த் சொல்ல இயக்குனர் நெல்சனும், அனிருத்தும் செய்வதறியாது திகைக்கின்றனர். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நெல்சனின் ஆஸ்தான நடிகர்களான யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
- புரோமோ வீடியோவில் அதிகாரப்பூர்வமான முழு நட்சத்திரப் பட்டியல் தெரியவரும்
- இப்படத்திலும் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ ரஜினி மற்றும் கமலின் பிறந்த தேதிகளைக் குறிக்கும் வகையில் நாளை 12:07 மணிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் இயக்குநர் நெல்சன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. மேலும் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் பணியாற்றவுள்ளார். படப்பிடிப்பு ரஜினி தனது தற்போதைய படங்களான ஜெயிலர் 2 மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படங்களை முடித்த பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்சனின் முந்தைய படமான 'ஜெயிலர்' பாணியிலேயே, இப்படத்திலும் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. குறிப்பாக, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நெல்சனின் ஆஸ்தான நடிகர்களான யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை வெளியாகவுள்ள புரோமோ வீடியோவில் அதிகாரப்பூர்வமான முழு நட்சத்திரப் பட்டியல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இதையடுற்றது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தப் படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி மற்றம் கமல் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ரஜினி-கமல் 47 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் இணையும் படத்திற்கான ப்ரோமோ வீடியோ நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது.
கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இதையடுற்றது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தப் படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு 7.12 மணிக்கு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில், ரஜினி மற்றம் கமல் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
போஸ்டரில் ரஜினி மற்றும் கமல் ஹாசனின் கைகள் ரெட்ரோ தோற்றத்தில் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் போதிலும், இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலேயே உள்ளது.
- ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்
- படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.
இதையடுற்றது ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார்.
படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று இரவு 7.12 மணிக்கு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
தான் கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அடுத்த அறிவிப்பு நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.
- ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
- படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.
இதையடுற்றது ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார்.
படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று இரவு 7.12 மணிக்கு புதிய படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
அந்த போஸ்டரில் "உலகங்கள் ஒன்றிணையும் போது,ஒரு பக்கம் சாய்வதேது?" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்காக தான் கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.






