என் மலர்
நீங்கள் தேடியது "இன்பநிதி"
- எப்போதும் ஒரு படத்தில் கமிட்டாகும் போது கதாநாயகனிடம் கதை சொல்லி தான் கமிட்டாவேன்.
- முதலில் கதையை ரெடி செய்த பிறகு தான் கதாநாயகனிடம் சொல்லி ஓகே வாங்குவேன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதனிடையே, 'பைசன்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்து உதயநிதியின் மகன் இன்பநிதியை கதாநாயகனாக வைத்து படம் எடுக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாயின. இருப்பினும் இத்தகவல் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், உதயநிதியின் மகன் இன்பநிதியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'பைசன்' படம் வெளியான பிறகு தனுஷை வைத்து தான் தன் அடுத்த படத்தை தொடங்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து இன்பநிதி மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதன்மூலம் இன்பநிதி திரைத்துறைக்கு வருவது உறுதியாகி உள்ளது.
மேலும் மாரிசெல்வராஜ் கூறுகையில், எப்போதும் ஒரு படத்தில் கமிட்டாகும் போது கதாநாயகனிடம் கதை சொல்லி தான் கமிட்டாவேன். ஒரு படத்தில் கமிட்டான பிறகு கதையை யோசிக்கலாம் என்று இருக்க மாட்டேன். முதலில் கதையை ரெடி செய்த பிறகு தான் கதாநாயகனிடம் சொல்லி ஓகே வாங்குவேன். கமிட்டாகிவிட்டு அதன் பிறகு நான் சொன்ன கதை அந்த கதாநாயகனுக்கு பிடிக்கவில்லை என்றால் எனக்கு கஷ்டமாக இருக்கும் என்றார்.
உதயநிதி கடைசியாக நடித்த 'மாமன்னன்' படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தான் இன்பநிதியின் முதல் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளது.
- இன்பநிதி தொடர்ந்து, பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில், உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளது. தனுஷின் 'இட்லி கடை' படத்தை வெளியிடுவதன் மூலம் விநியோகஸ்தராக அவர் களமிறங்கவுள்ளதை ரெட் ஜெயண்ட் நிறுவனம் உறுதிசெய்தது. இதை தொடர்ந்து இன்பநிதி தொடர்ந்து, பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார்.
இன்பநிதி தனது அப்பா வழியில் விநியோகஸ்தராக தனது கெரியரை தொடங்கியுள்ளார். உதயநிதியின் திரைப்பயணமும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வழியாக தான் தொடங்கியது.
விஜய், திரிஷா நடித்த 'குருவி' திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். கௌதம் மேனனின் 'விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் விநியோகஸ்தராக உருவெடுத்தார். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக பல வெற்றி படங்களை அவர் வெளியிட்டார்.
திரையில், 2009-ம் ஆண்டு வெளியான 'ஆதவன்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து 2012-ம் ஆண்டு 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார். அப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து 'மனிதன்', 'நிமிர்', 'கண்ணே கலைமானே', 'சைக்கோ','நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
திரைப்படங்களில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 2019-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
2023-ம் ஆண்டு வெளிவந்த 'மாமன்னன்' படத்துடன் தன்னுடைய திரையுலகை பயணத்தை முடித்துக் கொண்ட உதயநிதி, அதன் பின்னர் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றார்.
மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து திமுகவில் உதயநிதி தான் முதலமைச்சர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அப்பா வழியில் இன்பநிதி விநியோகஸ்தராக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து விரைவில் கதாநாயகனாகவும் இன்பநிதி அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது.
ஆகவே, உதயநிதியை போல இன்பநிதியும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது. இதன் தொடக்கமாக தான் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது






