என் மலர்
நீங்கள் தேடியது "Karthi"
- உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது.
- வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் 'உழவர் விருதுகள் 2025' விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது. இந்த ஆண்டு விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழவர் விருதோடு இரண்டு இலட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அவர்கள் பேசும் போது, "இந்த நிகழ்வுக்காக ஆண்டு முழுக்க காத்திருக்கிறோம். நமக்கு நிறைய வெளிச்சம் கிடைக்கிறது. அந்த வெளிச்சத்தின் மூலம் தங்களின் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்களை,
குறிப்பாக உழவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மக்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், இவர்கள்தான் நாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் அதற்காகதான் உழவர் விருதை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
"இவ்வாறு செய்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும். இவர்கள் அங்கீகாரம் பெறுவதின் மூலம், மேலும் பலர் இவர்களை போல் மாற வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் பல உழவர்கள் பயனடைவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது, "இதுவரை எல்லா மேடையும் நம்மை மேலே தூக்கி செல்லும் வகையில் தான் இருக்கும். ஆனால், இந்த மேடை தான் நாம் யார், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், நமது அடிவேர் என்ன என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது. விவசாயத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்பதை இங்கு வந்த பிறகு தான் அறிந்து கொண்டேன். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது," இந்த விழாவில் கலந்துக் கொண்டதே பெருமையாக இருக்கு" என்று கூறினார்
இந்த சிறப்பம்சங்கள் இன்னும் பல கோடி பேரை சென்று சேரும் பொருட்டு, உழவன் ஃபவுன்டேஷனின் 'கார்த்தியின் உழவர் திருநாள்' விழா, ஜனவரி 14, தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் கார்த்தி ஃபெஞ்சல் புயல் பாதிப்பிற்காக நிவாரணம் வழங்கினார்.
- கார்த்தி தற்பொழுது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் கார்த்தி அவர்கள், ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பெரும்பாதிப்பால் அவதிப்படும் மக்களின் நிவாரணத்திற்காக, பதினைந்து இலட்சம் (ரூ. 15,00,000) ரூபாயை துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார். அப்பொழுது அவர் கூறியதாவது
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத மழையால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,
குறிப்பாக, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் முதன்மையான தொழிலாக விவசாயம் உள்ளதால் இப்புயலில் விவசாயிகள் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊடகங்களில் வெளிவரும் செய்திகளைவிட கள நிலவரம் மிக மிக மோசமானதாக உள்ளது.
விவசாயிகளை காப்பாற்றும் கால்நடைகள், வீடுகள், அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள், ஆயிரக்கணக்கான கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், மோட்டார்கள். இன்னும் பிற உடைமைகள் என அனைத்தும் ஒரே இரவில் நாசமாகியுள்ளன. விவசாயத்திற்கு தேவைப்படும் மொத்த அமைப்பும் ஒரே இரவில் சீர்குழைந்துள்ளது.
ஏற்கனவே தங்கள் விளைப் பொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் தங்கள் உழைப்பை கொடுத்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மொத்தமாக இப்புயல் புரட்டி போட்டுள்ளது. இந்நேரத்தில் மத்திய மாநில அரசுகள் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளைப் பொருட்கள், கால்நடைகள் மற்றும் உடைமைகளுக்கு உரிய மதிப்பீட்டை ஆராய்ந்து இழப்பீட்டை வெகு விரைவாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இந்த இழப்பீடு மட்டுமே அவர்களின் ஒரே நம்பிக்கையான விவசாயத்தையும், அதற்கான பிற பணிகளையும் மீண்டும் தொடங்க பெருந்துணையாக இருக்கும்.
எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் இழப்புகளை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயிகளின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முதல்படியாக என் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 15,00,000/- (பதினைந்து இலட்சம்) நிவாரணத் தொகையாக அளிக்கிறேன்.
கார்த்தி தற்பொழுது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- '96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கினார்.
- இப்படம் செப் மாதம் 27-ந்தேதி வெளியானது.
'96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கினார். இது கார்த்தியின் 27-வது படமாகும். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் செப் மாதம் 27-ந்தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்தது.
திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு பல நாட்டு மக்களின் ஆதரவை பெற்றது. இந்நிலையில் பாலிவுட் பிரபல நடிகரான அனுபம் கெர் திரைப்படத்தை பார்த்து பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் " மெய்யழகன் திரைப்படத்தை பார்த்தேன். எம்மாதிரியான படைப்பு. அழகான ஒரு திரைப்படம் . நிறைய அழுதேன். அரவிந்த் சுவாமி மற்றும் கார்த்தி பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் ச. பிரேம் குமாருக்கு எனது வாழ்த்துக்கள்" என பதிவிட்டுருந்தார்.
அனுபம் கெர் மற்றும் அரவிந்த் சுவாமி இதற்கு முன் 1998 ஆம் ஆண்டு வெளியான சாத் ரங் கி சப்னே திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விவசாயிகளுக்கும் உதவிகளை செய்து வருகிறார்.
- இந்த மருத்துவமனைக்கு நடிகர் கார்த்தி சென்று வந்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் கார்த்தி. தொடர்ச்சியாக வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வரும் கார்த்தி பல்வேறு சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். மேலும் விவசாயிகளுக்கும் உதவிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான மெய்யழகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ஜீவன் அறக்கட்டளை நடத்தும் மயோபதி மருத்துவமனையின் குழந்தைகளின் அவசர தேவையை அறிந்து படுக்கை வசதிகளை நடிகர் கார்த்தி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். கொம்பன் திரைப்பட படப்பிடிப்பு சமயங்கள் மற்றும் பல முறை இந்த மருத்துவமனைக்கு நடிகர் கார்த்தி சென்று வந்துள்ளார்.
அப்படியாக மருத்துவமனை குழந்தைகளுக்கு தேவை என்ற தகவல் கிடைத்ததும், நடிகர் கார்த்தி குழந்தைகள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 35 படுக்கைகளை வாங்கி கொடுத்துள்ளார். இதற்கு மயோபதி மருத்துவமனையின் மருத்துவர் டேனியல் மற்றும் குழந்தைகள் நடிகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருக்கிறது.
- படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கிறார்.
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' படத்தில் முன்னணி நடிகரான கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி செட்டி, ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமேஷ் திலக், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வா வாத்தியார் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருக்கிறது.
சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கிறார். இப்படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரைக்குக் கொண்டு வர உள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் வித்தியாசமான வில்லனாக சத்யராஜ் நடதுள்ளார். மேலும் அவர் இரண்டு ரோல்களில் நடித்திருக்கிறார். டீசரில் ஒரு கெட்டப்தான் காண்பிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
- சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
- நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் கார்த்தி இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் 'மெய்யழகன்' படத்தில் நடித்திருந்தார். தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' திரைப்படத்திலும் நடித்து வருகிறார் கார்த்தி. இவர் அடுத்ததாக 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்தியின் 26வது படமான இந்த படத்திற்கு 'வா வாத்தியார்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரேட் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரைக்குக் கொண்டு வர உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கார்த்தி நடித்த 'வா வாத்தியார்' படத்தின் டீசர் இன்று வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
- நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் கார்த்தி இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் 'மெய்யழகன்' படத்தில் நடித்திருந்தார். தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' திரைப்படத்திலும் நடித்து வருகிறார் கார்த்தி. இவர் அடுத்ததாக 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்தியின் 26வது படமான இந்த படத்திற்கு 'வா வாத்தியார்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரேட் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரைக்குக் கொண்டு வர உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த நிவையில், கார்த்தி நடித்த 'வா வாத்தியார்' படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
'வா வாத்தியார்' படத்தின் டீசரை நாளை கங்குவா வெளியாகும் திரையரங்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தின் நடித்துள்ளார்.
- வரும் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகவுள்ளது.
சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தின் நடித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடித்த திரைப்படம் திரையரங்கிள் வெளியாவதால் கங்குவா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகவுள்ளது.
திரைப்படக்குழு நேற்று விசாகபட்டினத்தில் படத்தை ப்ரோமோட் செய்வதற்காக விழா நடத்தினர். அதில் சூர்யா, இயக்குனர் சிவா, சந்தீப் கிஷன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
அப்பொழுது சூர்யா அவர் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப்போகும் திரைப்படங்களின் தகவல்களை கூறினார். அதில் ஒன்று லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள கைதி 2 திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளேன் மற்றும் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்திற்கான தனி திரைப்படத்திலும் நடிக்கவுள்ளேன் ஆனால் இப்படங்கள் எல்லாம் டிஸ்கஷன் ஸ்டேஜில் உள்ளன விரைவில் இப்படங்களில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 நடித்து முடித்துள்ளார் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த வாரம் பிளாக் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- நாயகனாக ஜீவா நடித்துள்ளார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் அடுத்ததாக ஜீவா நடித்துள்ள பிளாக் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். டைம் லூப் திரைப்படமாக இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
கடந்த வாரம் பிளாக் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியுள்ளார். இதில் நாயகனாக ஜீவா நடித்துள்ளார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் கார்த்தி படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் " வாழ்த்துக்கள் ஜீவா ப்ரோ. ப்ளாக் திரைப்படம் முழுவதுமாகவே பார்ப்பவர்களை த்ரில்லிங்கான அனுபவத்தை அடிக்கடி கொடுத்த வண்ணம் இருந்தது. மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். ஒரு பெரிய அறிவுசார்ந்த விஷயத்தை மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் அமைத்ததற்கு பாராட்டுகள்" என பதிவிட்டுள்ளார்.
நீண்ட நாளுக்கு பிறகு ஜீவாவுக்கு ஒரு கம் பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்திற்கு பிறகு பிரியா பவானி சங்கருக்கு மேலும் ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.
Congratulations bro @JiivaOfficial. #Black had enough moments to keep a full house audience screaming every now and then out of thrill and excitement. Kudos to the team for simplifying a high concept and making everyone stay with the characters. Sound n edit ???@priya_Bshankar… pic.twitter.com/hLnWGN9v6J
— Karthi (@Karthi_Offl) October 18, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மெய்யழகன் படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.
- மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில்தான் இப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பிரேம் குமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. திரைமொழியின் வழக்கமான பாணியில் இருந்து விலகிய ஒரு திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி. ஏராளமான அனுபவ பகிர்வுகள் இந்த படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன. மெய்யழகனை உணர்ந்து புரிந்துகொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன.
படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டு வந்த நிலையில், ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது. எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். அதுவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறு.
எனவே இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை" என தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன்.
- படத்தை பார்த்த நடிகர் நாகர்ஜுனா படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது.96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் நாகர்ஜுன் படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் " அன்புள்ள தம்பி கார்த்தி, உங்கள் படமான மெய்யழகன் திரைப்படத்தை பார்த்தேன். நீங்களும் அரவிந்த் சாமி இருவரும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாய். இப்படம் பார்க்கும் பொழுது என் முகத்தில் ஒரு புன் சிரிப்பு இருந்துக் கொண்டே இருந்தது. இப்படம் என்னுடைய சிறுவயது நினைவுகளை நினைவுப்படுத்தியது. உன்னுடைய நடித்த தோழா திரைப்பட நியாபகங்கள் வந்தது. முழு படக்குழுக்கும் எனது பாராட்டுகள்." என கூறினார்.
நாகர்ஜூனா தற்பொழுது ரஜினிகாந்துடன் கூலி மற்றும் துனுஷுடன் இணைந்து குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Dear brother Karthi, I saw your film #SatyamSundaram last night!! You and Arvind ji were just too too good… I had a smile throughout watching you and went to sleep with the same smile… Brought back so many childhood memories… and also memories of our film #oopiri .I'm so…
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) September 30, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லட்டு விவகாரத்தில் பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க, உடனே நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார்.
- கார்த்தி பேசியதற்கு பவன் கல்யாண் கோவப்படுவதில் அர்த்தமில்லை என்று சீமான் தெரிவித்தார்.
திருப்பதி லட்டில் மாட்டுக்கறி கொழுப்பு கலந்த விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதம் இருந்து வருகிறார். கோவிலின் படிக்கட்டுகளை பவன் கல்யாண் சுத்தம் செய்யும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் மெய்யழகன் படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அப்போது கார்த்தியின் பிரபல காமெடி காட்சியான கண்ணா லட்டு தின்ன ஆசையா காமெடியின் புகைப்படத்தை திரையில் போட்டு காண்பித்து கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு கார்த்தி, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கூறினார்.
இதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க, உடனே நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார். இதனையடுத்து நடிகர் கார்த்தியின் மெய்யழகன் படத்திற்கு பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமானிடம் கார்த்தி - பவன் கல்யாண் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சீமான் , "கார்த்தியிடம் நெறியாளர் லட்டு பற்றி கேட்டிருக்க கூடாது. ஆனாலும் அந்த கேள்விக்கு கார்த்தி நாகரீகமாக பதில் சொல்கிறார். அவரது பேச்சு யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் இல்லை. இதற்கு பவன் கல்யாண் கோவப்படுவதில் அர்த்தமில்லை.
உடல் எடையை குறைக்க தான் பவன் கல்யாண் விரதம் இருக்கிறார் என்று அவர் கிண்டலாக தெரிவித்தார்.