என் மலர்
நீங்கள் தேடியது "வா வாத்தியார்"
- சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
- இப்படம் பொங்கலையொட்டி கடந்த 14-ந்தேதி வெளியானது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான படம் "வா வாத்தியார்". இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்.ஐ.கே., ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கார்த்தியின் 26-வது படமான இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலையொட்டி கடந்த 14-ந்தேதி வெளியான நிலையில், ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில், "வா வாத்தியார்" படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, "வா வாத்தியார்" படம் நாளை (ஜன.28) அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாயகன் கார்த்தியின் தாத்தா ராஜ்கிரண், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் போதே அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி ராஜ்கிரணுக்கு வருகிறது. அதிர்ச்சியுடன் அந்த இடத்திலிருந்து வெளியே வரும்போது, அவருக்கு பேரனாக கார்த்தி பிறக்கிறார்.
பேரன் பிறந்ததால், "இவன்தான் அடுத்த எம்.ஜி.ஆர்" என்ற நம்பிக்கையுடன், கார்த்தி நேர்மையான மனிதனாக வளர வேண்டும் என ராஜ்கிரண் நினைக்கிறார். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் மாதிரியான நல்ல பழக்கங்களுடன் கார்த்தி வளர்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் நம்பியார் இன்ஸ்பிரேஷனில், தவறான வேலைகளில் ஈடுபட்டு போலீசாக மாறுகிறார்.
இதற்கிடையில், "மஞ்சள்முகம்" என்ற ஹாக்கர் கும்பல் அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக மாறுகிறது. அவர்களை பிடித்தால் நல்ல பணம் கிடைக்கும் என்று நினைத்து, கார்த்தி அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில், கார்த்தியின் உண்மை முகம் ராஜ்கிரணுக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கார்த்தி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக நெகட்டிவ் ஷேட்ஸ் உள்ள கதாபாத்திரங்களில் அவர் இன்னும் சிறப்பாக செயல்படுகிறார்.
நம்பியார் இன்ஸ்பிரேஷனில் அவர் செய்யும் செயல்கள் கலாட்டாவாக இருக்க, பின்னர் எம்.ஜி.ஆர் போன்று மாறும் தருணங்களில் அவரது மேனரிசங்கள் கவனம் ஈர்த்து இருக்கிறார்.
படத்தின் முதல் பாதி, கார்த்தி தனது தாத்தாவுக்கு தெரியாமல் பல கோல்மால் வேலைகள் செய்து பணம் சம்பாதிப்பதை மையமாக கொண்டு நகர்கிறது. அந்த உண்மை தெரிந்த பிறகு ராஜ்கிரண் இறப்பதும், அதன் பின்னர் "எம்.ஜி.ஆர் மீண்டும் வருகிறார்" என்ற கான்செப்ட் படத்திற்கு முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது.
கார்த்தியை தவிர, படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களை நன்றாக செய்துள்ளனர். கீர்த்தி ஷெட்டிக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லாதது வருத்தம். அதுபோல், சத்யராஜ், ஷில்பா மஞ்சுநாத், ஆகியோருக்கு வலுவான கதாபாத்திரம் இல்லை.
இயக்கம்
நலன் குமாரசாமி இயக்கத்தில் வழக்கமாக இருக்கும் ஒன்-லைனர் காமெடி இந்த படத்தில் குறைவு. அந்த காமெடியும் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் எம்.ஜி.ஆர் வந்து கார்த்தியின் தவறுகளை தட்டி கேட்கும் காட்சிகள் மட்டும் ஆறுதல்.
இரண்டாம் பாதியில் சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது போல திரைக்கதை அமைந்து இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்வையாளர்கள் முன்கூட்டியே உணர முடிவது பலவீனம்.
இசை மற்றும் ஒளிப்பதிவு
டெக்னிக்கல் அம்சங்களைப் பொறுத்தவரை, ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளன.
குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை 60-களின் இசையை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் வழங்கியுள்ளது. எம்.ஜி.ஆர் பாடல்களின் ரீமிக்ஸ் அவரின் பங்கிற்கு சிறப்பாக அமைந்துள்ளது.
ரேட்டிங்-2/5
- கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக நாளை வெளியாகிறது
- இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் பராசக்தி படம் ஜனவரி 10 ஆம்ட தேதி வெளியானது.
பொங்கல் வெளியீடாக பராசக்தி மட்டும் வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.
கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக நாளை (ஜனவரி 14) வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், வா வாத்தியார் பட வெளியீட்டை ஒட்டி முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நடிகர்கள் கார்த்தி, சத்யராஜ், ஆனந்தராஜ் ஆகியோர் மரியாதையை செலுத்தினர். இது தொடர்பான புகைப்படங்களை கார்த்தி தந்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என நிபந்தனை விதித்தது.
- இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் இன்று பராசக்தி படம் வெளியானது.
பொங்கல் வெளியீடாக பராசக்தி மட்டும் வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.
கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் ரிலீஸ் அறிவிப்பால் கார்த்தியின் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாட தயாராகினர்.
ஆனால் வா வாத்தியார் படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் பெற்ற ரூ.21.78 கோடியில் ரூ.3.75 கோடியை இன்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செலுத்திய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த நிபந்தனையை விதித்தது.
இத்தானில் படம் ஜனவரி 14 வெளியாகுமா என்ற கேள்வி எழுத்தது. இந்நிலையில், அனைத்து தடைகளும் கிளியரானதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் புதிய போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதில், 'வா வாத்தியார்' படம் வருகிற 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் இன்று பராசக்தி படம் வெளியானது.
பொங்கல் வெளியீடாக பராசக்தி மட்டும் வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.
கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதனால் கார்த்தியின் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாட தயாராகினர்.
வா வாத்தியார் படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை அளித்துள்ளது.
அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் பெற்ற ரூ.21.78 கோடியில் ரூ.3.75 கோடியை இன்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செலுத்திய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் இன்று பராசக்தி படம் வெளியானது.
- 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது.
தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் இன்று பராசக்தி படம் வெளியானது.
பொங்கல் வெளியீடாக பராசக்தி மட்டும் வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.
இந்நிலையில், கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதனால் கார்த்தியின் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாட தயாராகியுள்ளனர்.
- உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு
- 'வா வாத்தியார்' படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உத்தரவு
'மெய்யழகன்' படத்திற்கு பிறகு. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'வா வாத்தியார்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் எப்போதோ வெளியாகி கவனம் ஈர்த்தன. ஆனால் ரிலீஸுக்கு தயாராகியும் படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் உள்ளது. காரணம் படத்தை ஸ்டுடியோ க்ரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் என்பவரிடம் இருந்து ரூ.21 கோடியை கடனாகப் பெற்றதாக கூறப்படுகிறது. இப்பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடக்கூடாது என, அர்ஜுன்லால் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டுடியோ கிரீன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தது.
இந்நிலையில் ரூ. 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்த பட நிறுவனம் தயாராக இருப்பதால், படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ஞானவேல் ராஜா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற ஏற்கனவே போதுமான கால அவகாசம் அளித்து விட்டதாக தெரிவித்து படத்திற்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து, 'வா வாத்தியார்' படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உத்தரவிட்டனர்.
- தணிக்கை சான்றிதழ் வழங்காததால் நீதிமன்றத்தை பட தயாரிப்பு நிறுவனம் நாடியது.
- உலகம் முழுவதும் நாளை வெளியாக இருந்த ‘ஜன நாயகன்’ வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு திரைப்படத்தை எடுத்து வெளியிட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களுக்கு படாதபாடு ஆகி விடுகிறது. இதிலும் விஜய் படம் என்று சொன்னாலே சில ஆண்டுகளாக வெளியாவதற்கு முன்னமே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அந்த வகையில், 'தலைவா', 'மெர்சல்' உள்ளிட்ட படங்கள் வரிசையில் இன்று 'ஜன நாயகன்' படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தணிக்கை சான்றிதழ் வழங்காததால் நீதிமன்றத்தை பட தயாரிப்பு நிறுவனம் நாடியது. இவ்வழக்கு தொடர்பாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் நாளை காலை தீர்ப்பு வெளியிடுவதாக கூறியது. இதனால் உலகம் முழுவதும் நாளை வெளியாக இருந்த 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.
'ஜன நாயகன்' படத்திற்கு ஏற்பட்ட சிக்கலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள 'பராசக்தி' படத்திற்கும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கலை குறித்து இந்த படங்கள் வெளியாக இருந்த நிலையில், மற்ற திரைப்படங்கள் வேறு தேதிகளுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 'வா வாத்தியார்' படத்தை பொங்கலுக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் யாருடைய ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- தீவிர எம்ஜிஆர் ரசிகரும், போலீஸ் அதிகாரியுமான கார்த்தி எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு ‘வா வாத்தியார்’ எடுக்கப்பட்டுள்ளது.
- ‘வா வாத்தியார்’ திரைப்படம் கடந்த மாதமே உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கார்த்தியின் 26-வது படமான இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தீவிர எம்ஜிஆர் ரசிகரும், போலீஸ் அதிகாரியுமான கார்த்தி எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு 'வா வாத்தியார்' எடுக்கப்பட்டுள்ளது.
'வா வாத்தியார்' திரைப்படம் கடந்த மாதமே உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியாகவில்லை.

இந்த நிலையில், 'வா வாத்தியார்' திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து படம் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படங்களுக்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்காதது குறிப்பிடத்தக்கது.
- ரிலீஸுக்கு தயாராகியும் படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் உள்ளது.
- பட வெளியீட்டிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
'மெய்யழகன்' படத்திற்கு பிறகு, நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'வா வாத்தியார்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் எப்போதோ வெளியாகி கவனம் ஈர்த்தன. ஆனால் ரிலீஸுக்கு தயாராகியும் படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் உள்ளது. காரணம் படத்தை ஸ்டுடியோ க்ரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் என்பவரிடம் இருந்து ரூ.21 கோடியை கடனாகப் பெற்றதாக கூறப்படுகிறது. இப்பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடக்கூடாது என, அர்ஜுன்லால் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இதனால் படவெளியீடு இன்னும் தள்ளிப்போகும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஸ்டுடியோ கிரீன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.
- 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
- கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. இப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடனாக பெற்ற ரூ.21 கோடியை ஞானவேல் ராஜா திருப்பிச் செல்லும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், வா வாத்தியார் திரைப்படத்தை அனைத்து ஓடிடி தளங்களிலும் வெளியிட அனுமதி இல்லை.
திவாலான தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நாளை இப்படம் வெளியாக வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. இப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடனாக பெற்ற ரூ.21 கோடியை ஞானவேல் ராஜா திருப்பிச் செல்லும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், வா வாத்தியார் திரைப்படத்தை அனைத்து ஓடிடி தளங்களிலும் வெளியிட அனுமதி இல்லை.
திவாலான தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னிடம் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.21.78 கோடி பணத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






