என் மலர்
நீங்கள் தேடியது "Pongal"
- முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது
- 'தளபதி 69' படம் இந்த வருடம் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என்று கூறப்பட்டது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "தளபதி 69" என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்துக்கு 'நாளைய தீர்ப்பு' என பெயர் வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் கதாநாயகனாக நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு (1992 ) என்பதால் சென்டிமெண்டாக அந்த பெயரை விஜய் ஓகே செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த அக்டோபரில் தொடங்கிய "தளபதி 69" முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஏப்ரலில் படப்பிடிப்பு நிறைவடையும்.
இந்நிலையில் தற்போது தளபதி 69 அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக'தளபதி 69' படம் இந்த வருடம் அக்டோபரில் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போவது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ள நிலையில் இந்த 69 படம் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என்று கூறப்பட்டது.
எனவே 2026 பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்தால் அதற்கடுத்த 3 மாதத்தில் வர உள்ள தேர்தலுக்கு விஜய்க்கு நல்ல ரீச் கிடைக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதற்கிடே நாளை மறுநாள் குடியரசு தினத்தன்று படத்தின் அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 9-ந் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.
- சுமார் 75 சதவீத மக்கள் ரேசனில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டனர்.
சென்னை:
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது. இலவச வேட்டி-சேலைகளும் ரேசனில் வழங்கப்படுகிறது.
கடந்த 9-ந் தேதி முதல் இவை வழங்கப்பட்டு வந்தது. சுமார் 75 சதவீத மக்கள் ரேசனில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டனர். சிலர் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரேசனில் பொருள் வாங்காமல் உள்ளனர்.
இதனை தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காத பொதுமக்கள் ரேசன் கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக பயணிக்கவும்.
- சிரமம் இன்றி மக்கள் சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படுகிறது.
நாளை மறுநாள் கிளாம்பாக்கத்தில் பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலாக 500 பஸ்கள் அதிகாலை முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பஸ்களுடன் சேர்த்து மொத்தம் 982 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோரின் வாகன நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
* வெளியூரில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பரனூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாற்றம்.
* கனரக வாகனங்கள் இல்லா சாதாரண வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்லவும்.
* திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக பயணிக்கவும்.
* கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் செல்ல இன்று பகல் 2 மணி முதல் வரும் திங்கட்கிழமை வரை தடை.
* பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பகல் 2 மணி முதல் வரும் திங்கட்கிழமை பகல் 12 மணி வரை சென்னை நோக்கி ஒருவழி போக்குவரத்தாக தேவைக்கு ஏற்ப மாற்றப்படும்.
* ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுபடுத்த ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும்.
சிரமம் இன்றி மக்கள் சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- விழாவை முன்னிட்டு கிராம தேவதையான அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது.
- பொங்கல் விளையாட்டு விழாவில் கிராமத்தை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், தமிழக சுற்றுலாத் துறை சார்பில் காஞ்சிபுரம் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதனை பார்க்க கனடா, ஜெர்மனி நாட்டை சேர்ந்த வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் தேவரியம்பாக்கம் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி மலர்மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு, மேளதாளம் முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு கிராம தேவதையான அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள கோவில் வளாகத்தில் பொங்கல் விழா விளையட்டு போட்டிகள் விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சிக்கு தேவரியம் பாக்கம் ஊராட்சித் தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மண்பானை செய்தல், வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், இளவட்டக்கல் தூக்குதல், சாக்குப்பை ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி கோலப் போட்டி (வீதி முழுதும்), ஜோசியம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளான பரதநாட்டியம், சிலம் பாட்டம், வில்லுப்பாட்டு பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெற்றன.
கிராம மக்களுடன் இணைந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உறி அடித்தல், மண்பானை செய்தல் உள்ளிட்ட போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்ட னர். வெளி நாட்டினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று கிராமத்தை பார்வையிட்டு மகிழ்ந்தனர். பொங்கல் விளையாட்டு விழாவில் கிராமத்தை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
- ரெயில் நாளை காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மதுரை வந்தடையும்.
- ரெயில் திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ந்தேதி முதல் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. அரசு விடுமுறை நாட்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் வழக்கமான பணிகள் தொடங்கி உள்ளது. இருந்த போதும் வார இறுதி நாட்களை கணக்கில் வைத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை எடுத்துள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து மதுரை வரை முன்பதிவில்லா மெமூ ரெயில் இயக்கப்படுகிறது.
ஏற்கனவே ரெயிலில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ், அரசு பஸ் மற்றும் வாகனங்கள் மூலம் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் நாளை காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மதுரை வந்தடையும். மறுநாள் 19-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, 20-ந்தேதி காலை 9.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்தடையும்.
இந்த ரெயில் திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வில் பொங்கலுக்கு முன்பு மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.
- பொங்கல் பரிசு தொகுப்புடன் ஏழை மக்களுக்கு ரொக்க பணம் வழங்கினால் மகிழ்ச்சி தான்.
சென்னை:
தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்கவில்லை.
இதுகுறித்து பொங்கலுக்கு முன்பே தகவல் வெளியானது. இதையடுத்து, பொங்கல் பரிசுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் பா.ஜ.க.வைச் சேர்ந்த வக்கீல் ஏற்காடு மோக்ன தாஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வராததால், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வில் பொங்கலுக்கு முன்பு மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரிக்கை செய்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் வக்கீல் மோகன்தாஸ் முறையிட்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஏழை மக்களுக்கு ரொக்க பணம் வழங்கினால் மகிழ்ச்சி தான். ஆனால், இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. ரொக்கம் வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டனர்.
- திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திக்குளம் கிராமத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது.
- வெற்றி பெற்ற தம்பதிகளுக்கு கொப்பரை அண்டா பரிசாக வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தம்பதிகளுக்காக வித்தியாசமான விளையாட்டு போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது.
ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திக்குளம் கிராமத்தில் தம்பதிகள் தங்களது வாயில் பந்துகளை வைத்து கீழே விழாமல் பத்திரமாக கொண்டு போய் சேர்க்கும் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் அதிக பந்துகளை சேர்த்து வெற்றி பெற்ற தம்பதிகளுக்கு கொப்பரை அண்டா பரிசாக வழங்கப்பட்டது.
இந்து கலாசாரத்திற்கு எதிரான இது போன்ற விளையாட்டுகளை முளையிலே கிள்ளி எறிய வேண்டும் அர்ஜுன் சம்பத் அண்ணா pic.twitter.com/0BZ6UtrkgM
— Galadriel 2.0 (@DevarArmy2) January 16, 2025
- சுமார் 70 சதவீத மக்கள் ரேசனில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டனர்.
- சிலர் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரேசனில் பொருள் வாங்காமல் உள்ளனர்.
சென்னை:
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது. இலவச வேட்டி-சேலைகளும் ரேசனில் வழங்கப்படுகிறது.
கடந்த 9-ந் தேதி முதல் இவை வழங்கப்பட்டு வந்தது. சுமார் 70 சதவீத மக்கள் ரேசனில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டனர். சிலர் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரேசனில் பொருள் வாங்காமல் உள்ளனர்.
இது குறித்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரி கூறுகையில், "விடுமுறை முடிந்து வந்தாலும் ரேசனில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளோம். எனவே பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காத பொதுமக்கள் ரேசன் கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
- காலை 8 மணிக்கு பதில் 2 மணி நேரம் முன்னதாக இன்று காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
- காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரி:
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசனும் தொடங்கி உள்ளது. இதனால் தினமும் கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர். இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகை, உழவர் திருநாள், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் காணும் பொங்கல் போன்ற தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமானோர் திரண்டனர். ஆனால் மழைமேகம் திரண்டு இருந்ததன் காரணமாக சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.
கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத் துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி காலை 8 மணிக்கு பதில் 2 மணி நேரம் முன்னதாக இன்று காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, கலங்கரை விளக்கம், விவேகானந்தபுரத்தில் உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் போன்றவற்றிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தொடர் விடுமுறையயொட்டி இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- அனைத்து வாகனங்களையும் புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்த மாமல்லபுரம் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
- பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
காணும் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காணும் பொங்கல் விழா, இன்று காலையிலேயே களை கட்டியது. இன்று காலை முதலே சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.
சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களை பொருத்தவரை பொதுமக்கள் அதிகம் பேர் கூடுவது மெரினா கடற்கரை ஆகும். காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இன்று மதியத்துக்கு மேல் லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரினாவில் திரண்டனர்.
இதனால் மெரினா கடற்கரையில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் மெரினாவில் குவிந்த மக்கள் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். குழந்தைகள் கடற்கரை மணலில் உற்சாகமாக விளையாடினார்கள்.
மெரினா கடற்கரையில் இன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாராவது கடலில் இறங்கி மூழ்கினால் அவர்களை மீட்பதற்காக நீச்சல் தெரிந்த 200 பேர் தயாராக உள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மெரினா கடற்கரைக்கு செல்பவர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 2 நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்தனர்.
காணும் பொங்கலையொட்டி இன்று காலையில் இருந்தே வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்கள் வருகை அதிகரித்தது. இன்று மதியம் ஏராளமான மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்து குவிந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளை பார்வையிட்டனர்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு பெற்றோரின் தொடர்பு விவரங்களுடன் கை வளையம் வழங்கப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவில் 5 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள் அதிகம் உள்ளது. இந்த சிறுவர் பூங்கா பராமரிப்பு பணிகள் முடிவடைந்து சிறுவர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இங்கும் ஏராளமான சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

காணும் பொங்கலை கொண்டாட இன்று காலை முதலே, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக மாமல்லபுரத்திற்கு வரத் தொடங்கினர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம், புலிக்குகை, வெண்ணை உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட சிற்பங்களை கண்டுகளித்தனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூர் பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வழிபாட்டிற்கு வரும் கர்நாடக மாநில செவ்வாடை பக்தர்களும், மாமல்லபுரம் கடலில் குளித்து செல்ல வந்தனர்.
அனைத்து வாகனங்களையும் புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்த மாமல்லபுரம் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். புறவழிச்சாலையில் இருந்தும், ஓ.எம்.ஆர். பகுதியில் இருந்தும் பயணிகள் மாமல்லபுரம் நகருக்குள் வருவதற்கு வசதியாக மினி பஸ் இயக்கப்படுகிறது. மாமல்லபுரம் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு நீச்சல் தெரிந்த வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பெண்களை கேலி செய்வோர், பாலியல் சீண்டல் செய்வோரை கண்காணித்து பிடிக்க சாதாரண உடையில் பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று அதிகளவில் கூட்டம் வரும் என்பதால் புராதன சின்னங்களை பார்க்க தொல்லியல்துறை இலவசமாக அனுமதிக்கும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால் வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600-ம், உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.40-ம் வசூலிக்கப்பட்டது.
சென்னையை அடுத்துள்ள பழவேற்காட்டில் இன்று காலை 8 மணி முதல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் பழவேற்காட்டில் உள்ள டச்சு கல்லறை நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைகளை பார்த்து ரசித்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 10 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் தயார் நிலையில் உள்ளனர். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவமனை வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரியில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, கோவளம் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள் ஆகிய சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னையில் காணும் பொங்கலையொட்டி இன்று பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசாரும், 1,500 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக இன்று 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
- பண்டிகை காலங்களின் போது, ‘டாஸ்மாக்' கடைகளில் திருவிழா கூட்டம் போன்று மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதும்.
- திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று ‘டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் 4,500-க்கும் மேற்பட்ட 'டாஸ்மாக்' மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் 'டாஸ்மாக்' நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மதுக்கடைகளில் வார நாட்களில் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரைக்கும், வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை தினங்களில் ரூ.120 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம். பண்டிகை காலங்களின் போது, 'டாஸ்மாக்' கடைகளில் திருவிழா கூட்டம் போன்று மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதும்.
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13-ந்தேதி (போகி) ரூ.185 கோடியே 65 லட்சத்துக்கும், 14-ந்தேதி (பொங்கல் தினத்தில்) ரூ.268 கோடியே 46 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.454 கோடியே 11 லட்சம் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகின.
இந்த விற்பனை விவரம் 'டாஸ்மாக்' வட்டாரத்தில் வெளியாகி உள்ளது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போதும் ரூ.450 கோடிக்கு மேல் மது விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- தருணம் படத்தில் கிஷன் தாஸ்க்கு ஜோடியாக ஸ்ம்ருதி நடித்துள்ளார்.
- இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.
'தேஜாவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் நடிப்பில் உருவான தருணம் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் கிஷன் தாஸ்க்கு ஜோடியாக ஸ்ம்ருதி நடித்துள்ளார். இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று திரையரங்குகளில் வெளியான 'தருணம்' திரைப்படத்தின் திரையிடல் திடீரென நிறுத்தி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே இத்திரைப்படம் வெளியானதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
#Tharunam pic.twitter.com/MzkOnbBFjn
— Arvindh Srinivasan (@dirarvindh) January 15, 2025