என் மலர்
நீங்கள் தேடியது "Pongal"
- மாலை 4 மணிக்கு முடியும் படகு போக்குவரத்து 1 மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடந்தது.
- அனைவரும் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது.
இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து கடந்த 15-ந்தேதி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து அன்று முதல் இன்று வரை 2 மணி நேரம் முன்னதாக அதிகாலை 6 மணிக்கு தொடங்கியது. அதேபோல மாலை 4 மணிக்கு முடியும் படகு போக்குவரத்து 1 மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடந்தது.
தொடர் விடுமுறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை 56 ஆயிரத்து 609 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர். போகிப்பண்டிகையான 14-ந்தேதி 9 ஆயிரத்து 593 பேரும், பொங்கல் பண்டிகையான 15-ந்தேதி 16 ஆயிரத்து 564 பேரும், மாட்டுப்பொங்கல் தினமான நேற்று முன்தினம் 14 ஆயிரத்து 737 பேரும், காணும் பொங்கல் தினமான நேற்று 15 ஆயிரத்து 715 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- நெல்லையில் இருந்து சென்னை, கோவை, சேலம், திருப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன.
- பயணிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கல் விடுமுறை நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது.
நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படுவதால், விடுமுறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு நேற்று முதலே வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு நேற்று முதல் புறப்பட்டு வருகின்றனர். இன்றும் அதிகாலை முதலே ரெயில்களிலும், பஸ்களிலும் செல்ல தொடங்கி உள்ளனர்.
இதனால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்தும், வழியாகவும் இயக்கப்பட்ட ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஏற்கனவே ரெயில்களில் இருக்கை நிரம்பி விட்ட நிலையில், புதிதாகவும் சிறப்பு ரெயில்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவையும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. நேற்று அந்தியோதயா ரெயிலில் ஏற்கனவே பெரும்பாலான இருக்கைகள் நிரம்பியதால், நடைபாதை, படிக்கட்டு அருகில் ஏராளமானவர்கள் அமர்ந்தும், நின்றும் பயணம் செய்தனர். இன்றும் காலையிலேயே வந்த ரெயில்களில் பயணிகள் முண்டியடித்து ஏறிச்சென்றனர். இன்று மாலை இயக்கப்படும் அந்தியோதயா ரெயிலில் இடம் பிடிக்கவும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளிலு பயணிக்கவும் காலை முதலே ரெயில் நிலையத்தில் வரிசை போட்டு பயணிகள் இடம் பிடிக்க காத்திருந்தனர்.
இதேபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்திலும் நேற்று இரவு முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு புறப்பட்ட பஸ்களில் ஏராளமானோர் போட்டிப்போட்டு ஏறி பயணம் செய்தார்கள். மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சாா்பில் நெல்லையில் இருந்து சென்னை, கோவை, சேலம், திருப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு புறக்காவல் நிலைய போலீசார் பஸ் நிலைய நடைமேடைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒலிப்பெருக்கு மூலமாகவும் பயணிகளுக்கு எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு கொண்டே இருந்தது.
தலைவர் தம்பி தலைமையில் படம் ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் ஜீவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விஜய் அண்ணனின் நடனம், ஆக்ஷன் அவருடைய படங்கள், அவருடைய நடிப்பு என நாங்க பார்த்து வளர்ந்திருக்கிறோம். அவருடன் நண்பன் படத்தில் நடித்திருக்கிறேன்.
அதுவும் பொங்கல் ரிலீஸ் தான். 14 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனுக்காக தம்பி (டிடிடி) பொங்கலில் ரிலீஸ் செய்திருக்கிறோம்.
என்னைக்குமே மக்கள் என்னை கொண்டாடி இருக்கிறார்கள். அவருக்காக பூவே உனக்காக படத்தில் இருந்து படங்கள் பண்ணிட்டு வந்திருக்கிறோம்.
தலைவர் தம்பி படத்திலேயும் தாங்க்ஸ் நண்பன் என இருக்கும். உண்மையிலேயே அது அவருக்கு தான் சொல்லி இருக்கிறோம்.
எனக்கும், அவருக்கும் இடையே இருக்கும் பாண்ட் எப்படி சொல்றதுனு தெரியல. என்னைக்குமே அவருடைய ஆதரவு எங்களுக்கு எப்போதுமே இருக்கும்.
எங்களுடைய ஆதரவும் அவருக்கு எப்போதும் இருக்கும். இந்த பொங்கலை தம்பி பொங்கலாக எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம் தேதி ரூ.33.16 கோடிக்கு விற்பனை.
- மனமகிழ் மன்றங்கள் மூலம் 15ம் தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனை.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
டாஸ்மாக் மூலம் 14ம் தேதி ரூ.184.05 கோடிக்கும், 15ம் தேதி ரூ.251.23 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.
மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம் தேதி ரூ.33.16 கோடிக்கும், 15ம் தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.
சென்னை மண்டல டாஸ்மாக் கடைகளில் மட்டும் ரூ.98 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
கடந்த பொங்கல் விடுமுறையின்போது 4 நாளில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்தாண்டு 2 நாளிலே ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.
- லாரி டிரைவர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று மாட்டுப் பொங்கலும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலையொட்டிய தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிறுவனங்களை நடத்தி வருபவர்களும் தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து விட்டு அவர்களும் ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.
குறிப்பாக வடசென்னை பகுதிகளில் கனரக வாகனங்கள் எப்போதுமே அணிவகுப்பதை காண முடியும். துறைமுகம் நோக்கி செல்லும் கனரக வாகனங்களால் செங்குன்றம், புழல், மாதவரம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் கண்டெய்னர் லாரிகள் அதிக அளவில் சென்று வரும்.
பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறைவிடப்பட்டுள்ளதால் லாரி டிரைவர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக வடசென்னை பகுதிகளும் வாகனப் போக்குவரத்து இன்றியே காணப்படுகிறது.
நாளை காணும் பொங்கலுக்கு இன்று இருப்பதை விட வாகனப் போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
- சேவல் பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள் நல்ல நேரம் ஜாதகம் பார்த்த பிறகு தங்களது சேவல்களை பந்தயத்திற்கு விட்டனர்.
- சேவல்களின் கால்களில் கூர்மையான கத்தி கட்டப்பட்டு சேவல்கள் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன.
சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சேவல் பந்தயம் களைகட்டியது.
ஆந்திராவில் மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, டாக்டர் அம்பேத்கர் கோனசீமா, கிருஷ்ணா, போலவரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேவல் பந்தயம் நடந்தது.
பந்தயங்களில் கலந்து கொண்ட சேவல்கள் மீது பார்வையாளர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பந்தயம் கட்டினர்.
ஆந்திராவில் சேவல் பந்தயத்திற்கு மாநில அரசு தடை விதித்து இருந்தாலும் அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் பந்தயத்தை தொடங்கி வைப்பதால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பந்தயத்தில் வெற்றி பெறும் சேவல் உரிமையாளர்களுக்கு கார்கள், பைக்குகள், தங்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
கிருஷ்ணா மாவட்டத்தில் பந்தயம் கட்டும் பணத்தை எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டது. சேவல் பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள் நல்ல நேரம் ஜாதகம் பார்த்த பிறகு தங்களது சேவல்களை பந்தயத்திற்கு விட்டனர்.
சேவல்களின் கால்களில் கூர்மையான கத்தி கட்டப்பட்டு சேவல்கள் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. கத்தி வெட்டுப்பட்டு சில பந்தய சேவல்கள் சம்பவ இடத்திலேயே இறந்தன.
கிழக்கு வாதவரி மாவட்டம், வெங்கட்ராமய்யா பகுதியில் நேற்று நடந்த சேவல் சந்தையில் குடிவாடா பிரபாகர் மற்றும் ராஜமுந்தி ரமேஷ் சேவல்கள் மோதிக்கொண்டன. இதில் ராஜமுந்திரி ரமேஷின் சேவல் வெற்றி பெற்றது. அவருக்கு ரூ.1.53 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் தெலுங்கு மாநிலங்களில் நடந்த சேவல் பந்தயத்தில் ரூ .100 கோடிக்கு மேல் பந்தயம் நடந்ததாக பந்தைய போட்டியாளர்கள் தெரிவித்தனர்.
- உணவு அடுக்கி வைத்து இருந்த அறையில் கண்ணை கட்டிய துணியை அவிழ்த்து விட்டனர்.
- பல்வேறு இடங்களில் புதுமாப்பிள்ளைகளுக்கு 100-க்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நர்சிப்பட்டினம், சாந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மனைவி கலாவதி. இவர்களின் மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
மருமகனுக்கு பல்வேறு வகையான உணவுகளை சமைத்து பரிமாற கலாவதி முடிவு செய்தார். அதன்படி நேற்று ஆடு, கோழி, முட்டை, மீன்கள், இனிப்பு வகைகள், கார வகைகள் என 290 வகையான உணவுகளை சமைத்து அறை முழுவதும் பரப்பி வைத்திருந்தனர். மருமகனுக்கு பிரமிப்பு ஏற்படுத்துவதற்காக அவரது கண்ணை துணியில் கட்டி அழைத்து வந்தனர்.
உணவு அடுக்கி வைத்து இருந்த அறையில் கண்ணை கட்டிய துணியை அவிழ்த்து விட்டனர். 290 வகையான உணவு வகைகளை கண்ட மருமகன் என்ன செய்வது என்று தெரியாமல் அசந்து போனார். இதேபோல் பல்வேறு இடங்களில் புதுமாப்பிள்ளைகளுக்கு 100-க்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.
- இந்தப் பொங்கல் நன்னாள், நம் அனைவரது வாழ்விலும் புதிய ஒளியை ஏற்றி வைக்கட்டும்.
- நாம் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்பட ஊக்கமளிக்கட்டும்
இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "உழைப்பின் உன்னதத்தையும், இயற்கையின் கொடையையும் போற்றும் உன்னதத் திருவிழாவான இந்தப் பொங்கல் நன்னாள், நம் அனைவரது வாழ்விலும் புதிய ஒளியை ஏற்றி வைக்கட்டும்.
இந்த அறுவடைப் பண்டிகை, மக்களிடையே நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் பகிரப்பட்ட செழிப்பு ஆகிய பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என விழைகிறேன்.
ஒரு சமூகம் முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டுமானால், அங்கு சமத்துவமும் நீதியும் நிலைபெற வேண்டும். அந்த வகையில், இந்தப் பொங்கல் திருநாள்:
அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கவும், ஒவ்வொரு மனிதரும் தகுந்த கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யவும், அனைவரது நல்வாழ்விற்காகவும் நாம் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்பட ஊக்கமளிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
- குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.
இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
இந்த கொண்டாட்டத்தில் அவரது மனைவி துர்கா, துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் அவரது மனைவி கிருத்திகா மற்றும் பேரன் இன்பநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொங்கல் கொண்டாட்டத்தின் போது குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
- மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது.
- பிரபுதேவா - வடிவேலு மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது.
மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது. இப்படத்தில் வரும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட்டானது. இதில் பிரபுதேவா - வடிவேலு மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது.
வொய் ப்ளட் சேம் ப்ளட், வடிவேலு ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். இன்று வரை நாம் அனைவராலும் பார்த்து ரசிக்கப் பட்ட காட்சிகள் அவை. இன்றும் அவை இன்ஸ்டாகிராமில் மீம் டெம்ப்லேட்டுகளாக உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.
மனதை திருடிவிட்டாய் படத்திற்கு அடுத்து பிரபு தேவாவும், வடிவேலும் இணைந்து படம் நடிக்கவில்லை. இந்நிலையில், வடிவேலுவுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பிரபுதேவா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ""தை பிறந்தால் வழி பிறக்கும். உடற்பயிற்சி செய்தால், உடம்பு சிறக்கும். இப்படிக்கு, புயலும் புயலும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது.
- 2014 இல் தனியாக நின்று திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 23.9% தான். அதாவது 24% கூட இல்லை.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பொங்கல் திருநாளில் காங்கிரஸ் ஏம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை சீண்டி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய ஒரு மாடல்.
கேரளாவின் UDF மாடல். கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதையை காட்டுகிறது.
காங்கிரஸ் தலைமையேற்கிறது — ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது.
நட்பு +பங்கு. இதுவே UDF அரசியலின் அடித்தளம்.
UDF-ல் நாங்கள் தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். பரஸ்பர நம்பிக்கையும், ஒரே அரசியல் நோக்கமும் அவர்களின் பலம்.
முக்கியமானது — தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கு "பை-பை" சொல்லுவதில்லை. தேர்தலில் கூட்டாளிகள், ஆட்சியிலும் பங்கு பெறும் கூட்டாளிகளே.
அமைச்சர் பதவிகளும் முக்கிய துறைகளும் பலத்தையும், உடன்பாட்டையும், பொறுப்பையும் அடிப்படையாகக் கொண்டு பகிரப்படுகிறது — ஆட்சி ஆதிக்கத்திற்காக அல்ல.
IUML, Kerala Congress (M), RSP உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிதி, கல்வி, பொதுப்பணித்துறை, தொழில், சமூக நலன், நீர்வளம் போன்ற முக்கிய அமைச்சகங்களை பொறுப்புடன் நிர்வகித்தன.
இது பெயருக்கான பங்கீடு அல்ல. கூட்டணிக் கட்சிகள் மைய துறைகளை நிர்வகித்து, முடிவெடுத்து, முழுப் பொறுப்பையும் ஏற்றன.
முக்கிய கொள்கை முடிவுகள் UDF ஒருங்கிணைப்பின் மூலம், கேரளாவின் சமூக-அரசியல் பல்வகைமையை மதித்து எடுக்கப்பட்டன.
தேர்தலுக்குப் பின் துரோகம் இல்லை. வாக்குகள் எண்ணப்பட்டதும் கூட்டணியை ஒதுக்கும் அரசியல் இல்லை. இதுதான் UDF மாடலின் வித்தியாசம்.
UDF மாடல் = கூட்டணி தர்மம் செயல்பாட்டில். ஒன்றாகப் போராடு. ஒன்றாக ஆட்சி செய். ஒன்றாக மக்களுக்கு வழங்கு.
இந்த ஜனநாயகமான UDF மாடல் 2026-லும் வெற்றி பெற வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்.. நல்ல ஆட்சியாக மாறட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் பகிர்ந்த மற்றொரு பதிவில், "தை பிறந்தால் வழி பிறக்கும். அனைத்து தமிழ் பெருங்குடி மக்களுக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அப்படி கேட்பதே குற்றம், ஆர். எஸ். எஸ் மனப்பான்மை என்கின்றனர் திமுக தோழர்கள். முக்கியமாக திமுக ஆன்லைன் வாரியர்ஸ். காங்கிரஸ் நன்றி இல்லாமல் பேசுகிறது என்று சொல்கிறார்கள்! சிரிப்பாய் தான் வருகிறது.
நாங்கள் தான் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவித்தோம் மற்ற கூட்டணி கட்சிகள் அதை செய்ய முன்வரவில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள் .
2016 இல் தங்களுக்கு மந்திரி பதவிகள் வேண்டும், தாங்களும் அதிகாரத்தில் அமர வேண்டும் என முடிவு செய்து மக்கள் நல கூட்டணி ஆரம்பித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இப்போதைய திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக , சிபிஎம், சிபிஐ , மற்றும் தமாகா தனித்து நின்ற போது, "திமுக தலைவர் கலைஞர் அவர்களை தான் முதல்வராக ஆக்க வேண்டும்" என்று திமுகவிற்கு உற்ற துணையாக தோழனாக இருந்து களம் கண்டது காங்கிரஸ் பேரியக்கம் மட்டும் தான். உடன் சின்ன கட்சிகளான முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மட்டுமே இருந்தது.
அதிமுக 136 சீட்டுகளுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது அதிமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 40.9%
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 98 சீட்டுகளுடன் பெற்ற வாக்கு சதவீதம் 39. 4%.
அதிமுக கூட்டணி- திமுக கூட்டணி வித்தியாசம் வெறும் 1.5% தான்.
திமுக பெற்ற வாக்கு சதவீதம் 31.39% (காங்கிரஸ் IUML மமக கூட்டணி). இதே தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 6.47%
ம.ந.கூ பெற்ற சீட்டுகள் 0 தான். 6 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பெற்ற வாக்கு சதவீதம் 19.6%
2014 முதல் 2016 காலகட்டத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்த போது கூட பெற்ற வாக்குகள் 6.47%
2014 இல் தனியாக நின்று திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 23.9% தான். அதாவது 24% கூட இல்லை.
2016 இல் அனைத்து கூட்டணி கட்சிகளும் கலைஞர் அவர்களை கைவிட்ட போதிலும் அவர் தான் எங்களின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி காங்கிரஸ் அவரை கை விடாமல் உடன் நின்றது . ஆகவே நன்றி விசுவாசம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை. இதனை ஆன்லைன் உடன்பிறப்புகள் உணர வேண்டும். எழுதும் போது பொறுப்புணர்ந்து கண்ணியம் குறையாமல் எழுதுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- பொங்கல் திருநாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
- பொங்கல், உங்கள் இலக்குகளை நிறைவேற்ற புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும்.
இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பொங்கல் திருநாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மக்களை ஒன்றிணைத்து, நம் சமூகத்தில் அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகையைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மரியாதையையும் நினைவூட்டும் இந்தத் திருநாள், நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது. இந்தப் பொங்கல், உங்கள் இலக்குகளை நிறைவேற்ற புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், நலமும் கிடைக்க வேண்டும் என மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கிறேன்.
மேலும், பிரதமர் மோடி மற்றொரு பதிவில், " சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவை முன்னிட்டு அண்மையில் நான் சோம்நாத்திற்குச் சென்றிருந்தபோது, நான் சந்தித்த மக்கள், காசி தமிழ் சங்கமம், சௌராஷ்ட்ர தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளைப் பாராட்டினார்கள். இன்று சிறப்புமிக்க பொங்கல் பண்டிகையின் போது, காசி தமிழ் சங்கமத்தின் வளர்ச்சி குறித்தும், 'ஒரே பாரதம் உன்னத பாரதத்தின்' உணர்வை அது எவ்வாறு வலுப்படுத்துகிறது என்பது பற்றியும் எனது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.






