என் மலர்
நீங்கள் தேடியது "தலைவர் தம்பி தலைமையில்"
தலைவர் தம்பி தலைமையில் படம் ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் ஜீவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விஜய் அண்ணனின் நடனம், ஆக்ஷன் அவருடைய படங்கள், அவருடைய நடிப்பு என நாங்க பார்த்து வளர்ந்திருக்கிறோம். அவருடன் நண்பன் படத்தில் நடித்திருக்கிறேன்.
அதுவும் பொங்கல் ரிலீஸ் தான். 14 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனுக்காக தம்பி (டிடிடி) பொங்கலில் ரிலீஸ் செய்திருக்கிறோம்.
என்னைக்குமே மக்கள் என்னை கொண்டாடி இருக்கிறார்கள். அவருக்காக பூவே உனக்காக படத்தில் இருந்து படங்கள் பண்ணிட்டு வந்திருக்கிறோம்.
தலைவர் தம்பி படத்திலேயும் தாங்க்ஸ் நண்பன் என இருக்கும். உண்மையிலேயே அது அவருக்கு தான் சொல்லி இருக்கிறோம்.
எனக்கும், அவருக்கும் இடையே இருக்கும் பாண்ட் எப்படி சொல்றதுனு தெரியல. என்னைக்குமே அவருடைய ஆதரவு எங்களுக்கு எப்போதுமே இருக்கும்.
எங்களுடைய ஆதரவும் அவருக்கு எப்போதும் இருக்கும். இந்த பொங்கலை தம்பி பொங்கலாக எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தம்பி ராமையா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- அரசியல் சூழலை சுற்றி நடக்கும் சம்பவங்கள் எளிமையாக சொல்லப்பட்டுள்ளன.
மலையாள இயக்குநர் இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள தலைவர் தம்பி தலைமையில் படம் இன்று வெளியாகியுள்ளது.
ஒரு அரசியல் குடும்பத்தில் "தலைவரின் தம்பி" என்ற அடையாளத்துடன் வாழும் நாயகன் ஜீவா, அதிகாரம், அரசியல் சூழ்ச்சி மற்றும் குடும்ப அரசியலுக்குள் சிக்கிக்கொள்கிறார். தலைவரின் பெயரும் புகழும் நிழலாக இருக்கும் போது, தம்பியாக இருப்பவரின் அடையாளம் என்ன? அவர் உண்மையில் என்ன செய்ய விரும்புகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்துள்ள ஜீவா, அமைதியான நடிப்பை தேர்வு செய்து கதாபாத்திரத்திற்கு தேவையான அளவிலேயே தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல், அரசியல் அழுத்தங்களுக்கு நடுவே சிக்கித் தவிக்கும் ஒருவரின் மனநிலையை இயல்பாக காட்டுகிறார். சில இடங்களில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
தம்பி ராமையா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கமான காமெடி பாணியை விட, இந்த படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார். குடும்பம், அரசியல், அதிகாரம் ஆகியவற்றின் இடையில் சிக்கிய ஒரு மனிதனின் குழப்பத்தை அவர் நன்றாக பிரதிபலித்துள்ளார். படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களை நேர்த்தியாக செய்துள்ளனர்.
இயக்கம்
குடும்ப அரசியலையும் அதிகார அரசியலையும் மிகைப்படுத்தாமல், ஒரு நடுத்தர பார்வையில் எடுத்துச் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர் நிதிஷ் சகாதேவ். சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், படத்தின் கருத்து தெளிவாக பார்வையாளர்களிடம் சென்றடைகிறது. அரசியல் சூழலை சுற்றி நடக்கும் சம்பவங்கள் எளிமையாக சொல்லப்பட்டுள்ளன. கதைக்கு தேவையான அளவிலேயே திருப்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தலைவர் தம்பி தலைமையில் குடும்ப அரசியல், அதிகாரத்தின் நிழல் மற்றும் அடையாள தேடல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைந்த அரசியல் காமெடி படமாக உருவாகியுள்ளது.
இசை
விஷ்ணு விஜயின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
பப்லு அஜுவின் ஒளிப்பதிவு படத்தின் அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
ரேட்டிங்: 3/5
கடந்த 2024-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 30-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. வருகிற 15-ந்தேதி பொங்கலன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தலைவர் தம்பி தலைமையில் படத்தின் டிரெய்லர் வெளியானது.
- 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 15-ந்தேதி பொங்கலன்று வெளியாகிறது.
- நேற்று 'தலைவர் தம்பி தலைமையில்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 30-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், வருகிற 15-ந்தேதி பொங்கலன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஜயின் ஜனா நாயகன் படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையாக நேற்று வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வருகிற 21-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில்தான் ஜீவா படம் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று தலைவர் தம்பி தலைமையில்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஜீவா, "நான்தான் சென்சார் போர்டின் பிராண்ட் அம்பாசிடர். ஜிப்ஸி திரைப்படத்தில் 48 கட்கள் கொடுத்தனர். என்னைதான் சென்சார் போர்டு முதலில் செய்தார்கள் அவர்களோடு சேர்த்து கொரோனாவும் என்னை செய்தது" என்று கிண்டலாக தெரிவித்தார்.
கடந்த 2024-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 30-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், வருகிற 15-ந்தேதி பொங்கலன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஜயின் ஜனா நாயகன் படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையாக நேற்று வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வருகிற 21-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில்தான் ஜீவா படம் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
- இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. இப்படத்தி 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 30-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
- இப்படத்தை இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார்.
- ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. இப்படத்தி 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கல்யாணத்தில் நடக்க உள்ள பிரச்சனையை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளதை டீசரில் சொல்லப்பட்டுள்ளது.
இதோ 'தலைவர் தம்பி தலைமையில் படத்தின் வேடிக்கையான மேக்ஸ் டீஸர்! குழப்பத்தை அனுபவியுங்கள்... என்று நடிகர் கார்த்தி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.






