என் மலர்
நீங்கள் தேடியது "சென்சார் போர்டு"
- கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும்.
- கூலி படத்தில் அதிக வன்முறை இருப்பதாக தணிக்கை சான்றிதழ் குழு A சான்றிதழ் வழங்கியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் படைத்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதைதொடர்ந்து, கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசa மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
கூலி படத்தில் அதிக வன்முறை இருப்பதாக தணிக்கை சான்றிதழ் குழு A சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனுவில்," அதிக வன்முறை காட்சிகள் இருந்த கேஜிஎப் மற்றும் பீஸ்ட் படங்களுக்கு U/A சான்றிதழ்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகளவிலான சண்டை காட்சிகள் உள்ளதால், கூலி படத்துக்கு A சான்றதழ் வழங்கப்பட்டதாக சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் பெயரை வைக்கக்கூடாது.
- அது எந்த குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தது அல்ல
மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா'
பிரவீன் நாராயண் இயக்கியுள்ள இந்தப் படம், ஜானகி என்ற பெண்ணின் சட்டப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர்.
இருப்பினும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் மற்றொரு பெயரான 'ஜானகி' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதற்கு சென்சார் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து சான்றிதழ் அளிக்க மறுத்தது.
ஜூன் 27 அன்று படத்தை வெளியிட படக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் மறுப்பால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்ற நீதிபதி என். நாகரேஷ் விசாரித்தார்.
அப்போது 'ஜானகி' என்ற தலைப்பை மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து சென்சார் வாரியத்தை கேள்வி எழுப்பிய அவர், 'ஜானகி' என்பது எல்லா இடங்களிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெயர் என்றும், அது எந்த குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தது அல்ல என்றும், அந்தப் பெயர் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவை எவ்வாறு பாதிக்கும் என்றும் வினவினார்.
மேலும், "சீதா அவுர் கீதா என்ற பெயரில் திரையரங்குகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜானகி என்பது சீதா. ஆனால் அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. ராம் லகன் என்ற படம் உள்ளது. அதற்கும் யாரும் புகார் கூறவில்லை.
பிறகு, ஜானகி என்று பெயரில் என்ன பிரச்சனை வந்தது?. ஏன் தலைப்பையும் பெயரையும் மாற்ற வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இதற்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் விளக்கத்தை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
- பிரவீன் நாராயண் இயக்கியுள்ள இந்தப் படம், ஜானகி என்ற பெண்ணின் சட்டப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர்.
- பாதிக்கப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவி என்று பெயரிடுவது பொருத்தமற்றது என்று வாரியம் உணர்ந்ததாக அவர் கூறினார்.
மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா'
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தின் தலைப்புடன், அனுபமா நடித்த முக்கிய கதாபாத்திரமான 'ஜானகி' என்ற பெயருக்கும் சென்சார் வாரியம் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. படத்திற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது.
பிரவீன் நாராயண் இயக்கியுள்ள இந்தப் படம், ஜானகி என்ற பெண்ணின் சட்டப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர்.
இருப்பினும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் மற்றொரு பெயரான 'ஜானகி' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதற்கு சென்சார் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இயக்குனர் பிரவீன் நாராயணும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். படத்தின் திரையிடலுக்கு சென்சார் வாரியம் அனுமதி மறுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு (FEFCA) பொதுச் செயலாளரும் பிரபல இயக்குநருமான உன்னி கிருஷ்ணன், படத்தில் 'ஜானகி' என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று தணிக்கை வாரியம் படத் தயாரிப்பாளர்களிடம் தெளிவாகக் கூறியுள்ளதாக கூறினார். படத்தின் தலைப்போடு முக்கிய கதாபாத்திரத்தின் பெயரையும் மாற்றுமாறு வாரியம் பரிந்துரைத்ததாக உன்னி கிருஷ்ணன் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவி என்று பெயரிடுவது பொருத்தமற்றது என்று வாரியம் உணர்ந்ததாக அவர் கூறினார். கடந்த காலத்தில் மற்றொரு மலையாளப் படத்திலும் இதேபோன்ற பிரச்சினை எழுந்ததை அவர் நினைவு கூர்ந்தார், அப்போது 'ஜானகி' என்ற பெயர் 'ஜெயந்தி' என்று மாற்றப்பட்டு சென்சார் சான்றிதழ் பெறப்பட்டது.
ஜூன் 27 அன்று படத்தை வெளியிட படக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், சென்சார் சான்றிதழ் கிடைக்காததை தொடர்ந்து படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு குறித்து படக்குழு என்ன முடிவு எடுக்கும், சென்சார் வாரியத்தின் அறிவுறுத்தல்களின்படி கதாபாத்திரத்தின் பெயர் மாறுகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- படத்தின் முதல் பாடலான Loading Bazooka நேற்று வெளியானது.
கடைசியாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
படத்தின் முதல் பாடலான Loading Bazooka நேற்று வெளியானது. இந்நிலையில் இப்படத்துக்கு U/A 13+ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதை படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதன் பொருள் படம் திரையிட தகுதியானது, ஆனால் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோரின் வழிகாட்டுதலின் பேரிலேயே இப்படத்தை காட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- படத்தில் இடம்பெறும் 'தீரா' பாடலின் லிரிக் வீடியோ, டிரைலர் சமீபத்தில் வெளியானது.
- எலக்சன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
உறியடி படத்தை இயக்கி அதில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விஜய்குமார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான "ஃபைட் கிளப்" படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
அதைதொடர்ந்து 'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் அடுத்ததாக இயக்கும் எலக்சன் திரைப்படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது.
'எலக்சன்' திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.
படத்தில் இடம்பெறும் 'தீரா' பாடலின் லிரிக் வீடியோ, டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், எலக்சன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எலக்சன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
- பாஜக எம்.பி கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி.
- படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் செல்வேன். நாடு தற்போது உள்ள சூழலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று கங்கனா தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975 ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடமானது 1977 மார்ச் 21 ஆம் தேதி வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையாக வைத்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி. இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் சீக்கிய சமூகத்தினரைத் தவறாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்சையைத் தொடர்ந்து படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அதை நீக்கும்படியும் சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக இந்திரா காந்தியின் படுகொலை, பஞ்சாப் கலவரங்கள் உள்ளிட்டவற்றை படத்தில் காட்டக்கூடாது என்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது. படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் செல்வேன். நாடு தற்போது உள்ள சூழலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று கங்கனா தெரிவித்திருந்தார்.
சீக்கியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் எமர்ஜென்சி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சிரோன்மணி அகாலிதளம் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் டிரைலர் நாளை [அக்டோபர் 2] வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
- 2 மணி நேரம் 43 நிமிடம் 25 நொடிகள் ரன்னிங் டைம் கொண்டதாக உருவாகியுள்ள வேட்டையன் உருவாகியுள்ளது
ஜெய்பீம் படத்தின்மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடத்தைப்பெற்ற நிலையில் படத்தின் டீசரும் வெளியாகி கவனம் பெற்றது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் டிரைலர் நாளை [அக்டோபர் 2] வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வேட்டையன் படத்துக்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 43 நிமிடம் 25 நொடிகள் ரன்னிங் டைம் கொண்டதாக உருவாகியுள்ள வேட்டையன் படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
- கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO அண்மையில் வெளியானது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வட இந்தியாவில் படக்குழு தொடங்கியது. படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது.

கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO என்ற பாடலை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த பாடலில் கவர்ச்சியான உடையில் திஷா பதானி நடனமாடியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில், YOLO பாடலில் படு கவர்ச்சியாக இருக்கும் திஷா பதானி காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையெனில் மாற்றியமைக்க வேண்டும் என சென்சார் போர்டு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






