என் மலர்
நீங்கள் தேடியது "சுரேஷ் கோபி"
- திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- மத்திய அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து சினிமாவில் நடிக்காமல் உள்ளார்.
மலையான நட்சத்திர நடிகரில் ஒருவர் சுரேஷ் கோபி. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார். கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பாஜக எம்.பி. இவர்தான். இதனால் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பதவியால், சினிமாவில் நடிக்க முடியவில்லை. இதனால் தன்னுடைய தனிப்பட்ட வருமானம் முற்றிலும் இல்லாமல் போகியுள்ளது. உண்மையிலேயே மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். இன்னும் பணம் சம்பாதிப்பது அவசியமானதாக உள்ளது. எனது சினிமா வாழ்க்கையை துறந்துவிட்டு, அமைச்சர் பதவியை ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியால் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்ட சதானந்தன் மாஸ்டருக்கு மத்திய அமைச்சரவை பதவி வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து சினிமாவில் நடிக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுரேஷ் கோபி அதை பகிரங்கமாக ஏற்க மறுத்துவிட்டார்.
- இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான பிறகு, அவரது நடத்தை நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
செப்டம்பர் 12 அன்று, கேரளாவின் திருச்சூரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில், வேலாயுதன் என்ற முதியவர் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியிடம் அரசின் வீட்டு வசதி மூலம் வீடு கேட்டு மனு கொடுக்க முயன்றார்.
இருப்பினும், சுரேஷ் கோபி அதை பகிரங்கமாக ஏற்க மறுத்துவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான பிறகு, அவரது நடத்தை நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சுரேஷ் கோபி, "ஒரு மக்கள் பிரதிநிதியாக, நான் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது குறித்து எனக்கு தெளிவான புரிதல் உள்ளது.
வீட்டுவசதி என்பது மாநில அரசின் எல்லைக்குள்பட்ட விஷயம். மாநில அரசு அந்த விஷயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது எனது பாணி அல்ல" என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
சிலர் இந்த சம்பவத்தை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். இதற்கிடையே கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சி முதியவருக்கு வீடு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
- பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்துக்கு சீதா தேவியின் பெயரான ஜானகி என்ற பெயரை வைக்கக்கூடாது
- 96 வெட்டுக்களை (EDIT) சென்சார் வாரியம் பரிந்துரைத்தது.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நடித்த 'ஜானகி vs. ஸ்டேட் ஆப் கேரளா' படம் சென்சார் வாரியம் மூலம் பிரச்சனையை சந்தித்தது.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்துக்கு சீதா தேவியின் பெயரான ஜானகி என்ற பெயரை வைக்கக்கூடாது என சென்சார் வாரியம் கூறியது.
மேலும் படத்தில் 96 வெட்டுக்களை (EDIT) சென்சார் வாரியம் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது.
இதன் விசாரணையில், சென்சார் வாரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் தங்கள் வாதங்களை முன்வைத்தார். படத்தின் தலைப்பை கதாநாயகியின் பெயரை பிரதிபலிக்கும் வகையில் 'வி. ஜானகி vs. கேரளா மாநிலம்' அல்லது 'ஜானகி வி. vs. கேரளா மாநிலம்' என்று மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
படத்தில் வரும் நீதிமன்ற காட்சியில் கதாநாயகியின் பெயரை மியூட் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதுபோன்ற காட்சிகள் எதிர்காலத்தில் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும் என்று அவர்கள் கூறினர்.
வாரியத்தின் வாதங்களைக் கேட்ட பிறகு, இந்த மாற்றங்கள் குறித்து படக்குழுவினர் தங்கள் கருத்தை தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய இடைவேளைக்கு பிறகு ஆஜரான தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரன், பரிந்துரைத்தபடி படத்தின் தலைப்பை மாற்றுவதற்கும், வசனங்களை மாற்றுவதற்கும் தனது தரப்பு சம்மதிப்பதாக தெரிவித்தார்.
அதே நேரம் படத்தில் பரிந்துரைக்கப்பட்ட 96 வெட்டுகளுக்கு பதிலாக 2 காட்சிகளில் மட்டும் வெட்டுக்கள் மேற்கொள்ள இரு தரப்புக்கும் இடையில் முடிவு எட்டப்பட்டது.
- பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் பெயரை வைக்கக்கூடாது.
- அது எந்த குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தது அல்ல
மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா'
பிரவீன் நாராயண் இயக்கியுள்ள இந்தப் படம், ஜானகி என்ற பெண்ணின் சட்டப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர்.
இருப்பினும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் மற்றொரு பெயரான 'ஜானகி' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதற்கு சென்சார் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து சான்றிதழ் அளிக்க மறுத்தது.
ஜூன் 27 அன்று படத்தை வெளியிட படக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் மறுப்பால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்ற நீதிபதி என். நாகரேஷ் விசாரித்தார்.
அப்போது 'ஜானகி' என்ற தலைப்பை மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து சென்சார் வாரியத்தை கேள்வி எழுப்பிய அவர், 'ஜானகி' என்பது எல்லா இடங்களிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெயர் என்றும், அது எந்த குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தது அல்ல என்றும், அந்தப் பெயர் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவை எவ்வாறு பாதிக்கும் என்றும் வினவினார்.
மேலும், "சீதா அவுர் கீதா என்ற பெயரில் திரையரங்குகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜானகி என்பது சீதா. ஆனால் அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. ராம் லகன் என்ற படம் உள்ளது. அதற்கும் யாரும் புகார் கூறவில்லை.
பிறகு, ஜானகி என்று பெயரில் என்ன பிரச்சனை வந்தது?. ஏன் தலைப்பையும் பெயரையும் மாற்ற வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இதற்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் விளக்கத்தை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
- பிரவீன் நாராயண் இயக்கியுள்ள இந்தப் படம், ஜானகி என்ற பெண்ணின் சட்டப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர்.
- பாதிக்கப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவி என்று பெயரிடுவது பொருத்தமற்றது என்று வாரியம் உணர்ந்ததாக அவர் கூறினார்.
மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா'
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தின் தலைப்புடன், அனுபமா நடித்த முக்கிய கதாபாத்திரமான 'ஜானகி' என்ற பெயருக்கும் சென்சார் வாரியம் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. படத்திற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது.
பிரவீன் நாராயண் இயக்கியுள்ள இந்தப் படம், ஜானகி என்ற பெண்ணின் சட்டப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர்.
இருப்பினும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் மற்றொரு பெயரான 'ஜானகி' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதற்கு சென்சார் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இயக்குனர் பிரவீன் நாராயணும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். படத்தின் திரையிடலுக்கு சென்சார் வாரியம் அனுமதி மறுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு (FEFCA) பொதுச் செயலாளரும் பிரபல இயக்குநருமான உன்னி கிருஷ்ணன், படத்தில் 'ஜானகி' என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று தணிக்கை வாரியம் படத் தயாரிப்பாளர்களிடம் தெளிவாகக் கூறியுள்ளதாக கூறினார். படத்தின் தலைப்போடு முக்கிய கதாபாத்திரத்தின் பெயரையும் மாற்றுமாறு வாரியம் பரிந்துரைத்ததாக உன்னி கிருஷ்ணன் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவி என்று பெயரிடுவது பொருத்தமற்றது என்று வாரியம் உணர்ந்ததாக அவர் கூறினார். கடந்த காலத்தில் மற்றொரு மலையாளப் படத்திலும் இதேபோன்ற பிரச்சினை எழுந்ததை அவர் நினைவு கூர்ந்தார், அப்போது 'ஜானகி' என்ற பெயர் 'ஜெயந்தி' என்று மாற்றப்பட்டு சென்சார் சான்றிதழ் பெறப்பட்டது.
ஜூன் 27 அன்று படத்தை வெளியிட படக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், சென்சார் சான்றிதழ் கிடைக்காததை தொடர்ந்து படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு குறித்து படக்குழு என்ன முடிவு எடுக்கும், சென்சார் வாரியத்தின் அறிவுறுத்தல்களின்படி கதாபாத்திரத்தின் பெயர் மாறுகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- விபத்தில் காயம் அடைந்த சைன்டாம் சாக்கோ, சி.பி.சாக்கோ, மரியம் கார்மல் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- மத்திய மந்திரியும் நடிகருமான சுரேஷ் கோபி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் சைன்டாம் சாக்கோ, தனது பெற்றோர் சி.பி.சாக்கோ (வயது 76)-மரியம் கார்மல் (63) மற்றும் தம்பி ஜோஜோன் சாக்கோ ஆகியோருடன் காரில் கேரளாவில் இருந்து நேற்று பெங்களூரூவுக்கு புறப்பட்டார். இவர்கள் பயணித்த காரை டிரைவர் அனீஸ் (42) ஓட்டினார்.
இந்த கார் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சென்ற போது சரக்கு லாரி மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த சைன்டாம் சாக்கோ, சி.பி.சாக்கோ, மரியம் கார்மல் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே சி.பி.சாக்கோ பரிதாபமாக இறந்தார்.
இதனை தொடர்ந்து நடிகர் சைன்டாம் சாக்கோ மற்றும் அவரது தாயார் திருச்சூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சைன்டாம் சாக்கோவை மத்திய மந்திரியும் நடிகருமான சுரேஷ் கோபி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் கூறுகையில் சைன்டாம் சாக்கோவின் சகோதரிகள் இன்று இரவு வருகிறார்கள். எனவே நாளை சி.பி.சாக்கோ இறுதிச்சடங்கு நடைபெறும் என்றார்.
- 2024-ம் ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பாரதிய ஜனதா தென் மாநிலங்களில் பல முன்னேற்பாடு பணிகளை தொடங்கி உள்ளது.
- சுரேஷ் கோபிக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்தால் இப்போது நடக்க உள்ள 9 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் அவரை பயன்படுத்தி கொள்ள கட்சி தலைமை கருதுகிறது.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி.
சுரேஷ் கோபி, தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். மாநிலம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திரையுலகில் இருந்தாலும் இவர் அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.
இதையடுத்து அவருக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டது. பாரதிய ஜனதாவில் சேர்ந்த பின்னர் அக்கட்சி சார்பில் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதன்பின்பு, கேரளா சட்டசபை தேர்தலிலும் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும் அவர் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார்.
இந்நிலையில் 2024-ம் ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பாரதிய ஜனதா தென் மாநிலங்களில் பல முன்னேற்பாடு பணிகளை தொடங்கி உள்ளது.
அதன் ஒரு கட்டமாக கேரளாவில் பாரதிய ஜனதாவுக்கு வலுவான வாக்கு வங்கியை உருவாக்க நடிகர் சுரேஷ் கோபியை பயன்படுத்தி கொள்ள கட்சியின் மூத்த தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதன் ஒரு பகுதியாக மத்திய மந்திரி சபையில் நடிகர் சுரேஷ் கோபிக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுரேஷ் கோபிக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்தால் இப்போது நடக்க உள்ள 9 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் அவரை பயன்படுத்தி கொள்ள கட்சி தலைமை கருதுகிறது.
எனவே அடுத்து வர இருக்கும் மத்திய மந்திரி சபை மாற்றத்தின்போது நடிகர் சுரேஷ் கோபி மத்திய மந்திரியாகலாம் எனக்கூறப்படுகிறது.
மேலும் அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலின்போது நடிகர் சுரேஷ் கோபியை திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் களம் இறக்கவும் பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.
இந்த தொகுதியில் இப்போது காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் எம்.பி.யாக உள்ளார். அடுத்த முறையும் அவர் இத்தொகுதியில் போட்டியிட்டால் அங்கு சுரேஷ் கோபியை களம் இறக்கி வெற்றியை ருசிக்க பாரதிய ஜனதா வியூகம் வகுத்துள்ளது. அதற்கு முன்னேற்பாடாகவே சுரேஷ் கோபிக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
- கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி
- மத நம்பிக்கை இல்லாதவர்களை குறித்து இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேல்சபை எம்.பி.யாகவும் இருந்தார். இவர் கேரளாவில் மகா சிவராத்திரியை யொட்டி நடந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது, மத நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்து போக வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவேன் என்று பேசினார். சுரேஷ் கோபியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஆலப்புழாவை சேர்ந்த சுபாஷ் என்பவர் போலீசில் புகார் செய்தார். அதில் கேரளாவில் மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிராக பிரச்சினையை ஏற்படுத்த முயல்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி.
- இவர் தமிழில் தீனா, ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. தமிழில் தீனா, ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். பா.ஜ.க. கட்சியை சேர்ந்த சுரேஷ்கோபி, கொச்சியில் ஒரு விழாவில் பங்கேற்றார்.

அப்போது அவர், மறு பிறவியில் நம்பிக்கை கொண்டவன் நான். எனது மறு பிறவியில் தந்திரி குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன். பூணூல் அணியும் சமூகத்தில் பிறந்து சபரிமலை தந்திரியாக வேண்டும். சபரிமலையில் வெளியில் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்தால் மட்டும் போதாது. கோவிலுக்குள் சென்று அமர்ந்து பூஜை செய்து தரிசிக்க வேண்டும். அய்யப்பனை கட்டிப்பிடித்து முத்தமிட விரும்புகிறேன் என்றார்.
சுரேஷ் கோபி இதற்கு முன்பு ஒரு முறை இதுபோல பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆக்ஷன் ஹீரோவாக பல வெற்றி படங்களில் நடித்தவர் சுரேஷ் கோபி
- பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சரும் பங்கேற்கலாம் என தெரிகிறது
மலையாள திரையுலக முன்னணி நடிகர்களாக பல தசாப்தங்களாக இருப்பவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால்.
ஆனால், 90களில் அவர்கள் இருவருக்கும் இணையாக பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்ற முன்னணி ஹீரோ சுரேஷ் கோபி. ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களிலும், குணசித்திர வேடங்களில் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சுரேஷ் கோபி.
65 வயதாகும் அவர், சில வருடங்களாக நடிப்பதை குறைத்து கொண்டு அரசியலில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
2016ல் ராஜ்ய சபா நியமன எம்.பி.யாக பாராளுமன்றம் சென்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேரளாவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சுரேஷ் கோபி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்.
சுரேஷ் கோபியின் மகளான பாக்யாவிற்கும் தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் கேரளாவின் புகழ் பெற்ற இந்து கோயிலான குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் வரும் 17 அன்று திருமணம் நடைபெற உள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரம் க்ரீன்ஃபீல்டு மைதானத்தில் (Greenfield Stadium) ஜனவரி 20 அன்று நடைபெறும்.
இந்நிலையில், தங்கள் இல்ல திருமண விழாவில் பங்கேற்குமாறு சுரேஷ் கோபி தனது குடும்பத்தினருடன் சென்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் வைத்தார்.
இதையடுத்து, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.
முன்னதாக மோடி, காலை 08:00 மணியளவில் குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். பிறகு, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கொச்சி செல்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திருமணத்தில் பங்கேற்பார் என தெரிகிறது.
திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகர் சுரேஷ் கோபி களமிறக்கப்படலாம் என சில நாட்களாக செய்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.
அஜித் நடித்த "தீனா", சரத்குமார் நடித்த "சமஸ்தானம்", விக்ரம் நடித்த "ஐ" உட்பட பல தமிழ் படங்களிலும் நடித்தவர் சுரேஷ் கோபி.
- பிரதமர் மோடி பாரம்பரிய உடை அணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார்.
- பிரதமர் மோடிக்கு நடிகர் சுரேஷ்கோபி தங்க தகடு ஒன்றை பரிசாக வழங்கினார்.
திருவனந்தபுரம்:
பிரதமர் நரேந்திரமோடி கடந்த 3-ந்தேதி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்த நிலையில், தற்போது 2-வது முறையாக கேரளா வந்துள்ளார். அவர் நேற்று மாலை தனி விமானத்தில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சிக்கு வந்தார்.
பின்பு பிரதமர் மோடி கொச்சியில் நடந்த பிரமாண்ட ரோடு-ஷோவில் பங்கேற்றார். திறந்த வாகனத்தில் நின்றபடி சென்ற பிரதமர் மோடியை சாலையில் இருபுறமும் நின்ற பாரதிய ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். பின்னர் கொச்சியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கினார்.
பிரதமர் மோடி இன்று காலை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதற்காக அவர் கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக குருவாயூருக்கு வந்தார். அவர் இன்று காலை 7.35 மணியளவில் ஸ்ரீகிருஷ்ண கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். பின்பு அங்கிருந்து காரில் குருவாயூர் கோவிலுக்கு சென்றார்.
பிரதமர் மோடி பாரம்பரிய உடை அணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார். அவர் கோவிலின் அனைத்து பகுதிகளுக்கும் நடந்து சென்று வழிபட்டார். சுமார் 1 மணி நேரம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
அதன் பிறகு காலை 8.45 மணியளவில் குருவாயூர் கோவிலில் நடந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யான நடிகர் சுரேஷ்கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரதமர் மோடிக்கு நடிகர் சுரேஷ்கோபி தங்க தகடு ஒன்றை பரிசாக வழங்கினார்.
திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு குருவாயூர் கோவிலில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, திருப்பாறையாறு ஸ்ரீராம சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மற்றும் திருப்பாறையாறு ஸ்ரீராமசுவாமி கோவிலில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு கடற்படைக்கு சொந்தமான சர்வதேச கப்பல் பழுது நீக்கும் மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் மராமத்து உலர் பணியகத்தை தொடங்கி வைக்கிறார்.
அதன் பிறகு எர்ணாகுளம் அருகே மரைன் டிரைவ் பகுதியில் பாரதிய ஜனதா சார்பில் நடக்கும் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் நரேந்திரமோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு குருவாயூர் மற்றும் கொச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சுரேஷ் கோபி மீதான நம்பிக்கையில் 2019 மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா களம் இறக்கியது.
- திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி வெற்றிக்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் எந்த மக்களவை தொகுதியிலும் கால் பதிக்க முடியவில்லை. அதற்கான நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா ஈடுபட்டது. இதற்காக சில திட்டங்களை கேரளாவில் செயல்படுத்தி வருகிறது.
முக்கியமாக அங்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகர் சுரேஷ்கோபி மூலமாக அதனை நிறைவேற்ற பாரதிய ஜனதா முடிவு செய்தது. கேரளாவில் 1990-களில் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்களில் ஒருவராக சுரேஷ்கோபி இருந்தார். அவர் மீதான நம்பிக்கையில் 2019 மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா களம் இறக்கியது.
அந்த தேர்தலில் நிலவிய மும்முனை போட்டியில் சுரேஷ்கோபி 3 லட்சம் வாக்குகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தார். இது கேரளாவில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு 11.1 சதவீதத்தில் இருந்து 28.2 சதவீதமாக அதிகரிக்க உதவியது. திருச்சூரில் பாரதிய ஜனதாவின் அதிர்ஷ்டத்தை உயர்த்த பிரதமர் மோடி, சுரேஷ்கோபியை கையில் எடுத்தார்.
அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்கியது. அந்த பதவி 2022-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. அதன் பிறகு திருச்சூரில் பாரதிய ஜனதா செல்வாக்கை உயர்த்த பிரதமர் மோடி, சுரேஷ் கோபியை தேர்ந்தெடுத்தார். அவர் மூலம் பல்வேறு பணிகளை பிரதமர் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து தற்போதைய மக்களவை தேர்தலிலும் திருச்சூர் தொகுதியில் போட்டியிட சுரேஷ்கோபிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரசின் மூத்த தலைவரான முரளீதரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் சுனில்குமார் ஆகியோரை எதிர்த்து களம் காண்கிறார்.
திருச்சூர் தொகுதியில் அவரது வெற்றிக்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளனர். அவரது வெற்றியின் மூலம் கேரளாவில் தனது கணக்கை திறக்க வேண்டும் என்று நம்பிக்கையில் பாரதிய ஜனதா உள்ளது.






