search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MP"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரேத பரிசோதனைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுகாத்தி:

    அசாமின் சில்சார் பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர் ராஜ்தீப் ராய். இவரது வீட்டில் வீட்டில் கச்சார் மாவட்டத்தின் பலோங் காட் பகுதியை சேர்ந்த பெண் வேலை செய்து வருகிறார். இதற்காக ராஜ்தீப் ராய் எம்.பி.யின் வீட்டில் ஒரு பகுதியில் அந்த பெண், தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் 10 வயது மகன் நேற்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினான். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுவன் வீடியோ கேம் விளையாட அவனது தாய் மொபைல் போன் கொடுக்காததால் தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு உடனடியாக, தனது பெயரிலேயே கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.
    • பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார், மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு 20.06.2023 அன்று எழுதியுள்ள கடிதம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அக்கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், தமிழ்நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதாகவும், அத்திட்டங்களை நியாயப்படுத்தும் தமிழ் நாடு அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கும் இரட்டை நிலையை எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    கடிதம் எழுதிய கையோடு 30.6.2023 அன்று மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

    முதலமைச்சர், தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக செயல்படும் கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு உடனடியாக, தனது பெயரிலேயே கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இப்பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை சேர்ந்த 38 உடனடியாக புது டெல்லிக்கு படையெடுத்து, கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநில அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சையில் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை 2ம் இடத்தை பெற்றுள்ளது.
    • பழமையான கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்களை கட்டுவது குறித்து ஆய்வு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மகப்பேறு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமில்லாமல் அருகிலுள்ள பிற மாவட்டத்தில் இருந்தும் பெண்கள் வந்து செல்கின்றனர். மாநில அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சையில் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

    பழமையான இந்த மருத்துவமனையில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது பொது மக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்யலாம், பழமையான கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்களை கட்டுவது குறித்து ஆய்வு செய்தனர். மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

    இந்த ஆய்வின் போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், மருத்துவமனை நிலைய அலுவலர் செல்வம், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 2ம் தேதி, தனியார் பஸ்சில் தெக்கலுார் செல்வதற்காக, செல்வி என்பவர் ஏறினார்.
    • திருப்பூரிலிருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவிநாசி :

    அவிநாசி அடுத்த அம்மாபாளையத்தில், கடந்த 2ம் தேதி, தனியார் பஸ்சில் தெக்கலுார் செல்வதற்காக, செல்வி என்பவர் ஏறினார். அவரிடம், கண்டக்டர் அவிநாசி, தெக்கலுாருக்குள் பஸ் செல்லாது என கூறி இறங்க சொன்னார். செல்வி இறங்குவதற்குள் அஜாக்கிரதையாக டிரைவர் பஸ்ஸை நகர்த்தியுள்ளார். நிலைதடுமாறி கீழே விழுந்த செல்வி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்த செல்வி பலியானார். பல்வேறு சமூக நல அமைப்புகள், தன்னார்வலர்கள், அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் பஸ்ஸை இயக்கிய கண்டக்டர் மற்றும் டிரைவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் படி கண்டனத்தை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அவிநாசி வந்த நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவிடம், பொதுமக்கள் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அதில் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் கோவையிலிருந்து செல்லும் பஸ்களும், சேலம், ஈரோடு, திருப்பூரிலிருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும் பயணிகளை இறக்கி, ஏற்றி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.பி. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆலங்குளத்தில், பிரதான சாலையில் இருந்த காமராஜர் சிலை, மாற்று இடத்தில் நிறுவ உள்ள நிலை யில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நான்கு வழிச் சாலை பணி காரணமாக, ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நிறுவப்பட உள்ளது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில், பிரதான சாலையில் இருந்த காமராஜர் சிலை, மாற்று இடத்தில் நிறுவ உள்ள நிலை யில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    நான்கு வழிச் சாலை பணி காரணமாக, ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நிறுவப்பட உள்ளது. அதற்காக, அம்பா சமுத்திரம் சாலையில் உள்ள வேன் நிறுத்துமிடம் பகுதியில், மாற்று இடத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.


    இதையடுத்து, சிலை அமைப்புக் குழு சார்பில், அதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    சிலை அமைப்பு குழுத் தலைவர் ஜாண்ரவி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஞான திரவியம், எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், பழனி நாடார், ஊர்வசி அமிர்தராஜ், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணா, முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, கே.ஆர்.பி. பிரபாகரன், தொழிலதிபர் டி.பி.வி.கருணாகர ராஜா, நெல்லை மண்டல வியா பாரிகள் பேரமைப்பு சங்கத் தலைவர் டி.பி.வி.வைகுண்ட ராஜா, தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே.காளிதாசன், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.காமராஜ், காங்கிரஸ் வடசென்னை- கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ். திரவியம், தொழிலதிபர்கள் மாரிதுரை, செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி போஸ், யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், பா.ஜ.க. அன்புராஜ், தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் பழனிசங்கர், மாவட்டச் செயலாளர் கணபதி,

    பனங்காட்டு படை கட்சி மாவட்டச் செயலாளர் ஆனந்தன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலடி சங்கரையா, திமுக நகரச் செயலாளர் நெல்சன், வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், நகரத் தலைவர் தாமஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாலமோன் ராஜா,சுந்தரம், சுபாஷ், சமக.நகர செயலாளர் ஜெயபாலன் நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சுரேஷ் சொக்கலிங்கம் மயில்,சிலை அமைப்புக் குழு அலெக்ராஜா, நிக்சன், செந்தில், அருமைராஜ், தமிழரசன், ஆசீர் சாம்சன், குமார், சதன்ராஜ், அமரா வதி ஜெகன், ஜெயபால், தங்க ராஜ், மார்க்கெட் சைமன், ரமேஷ் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். பர்வீன்ராஜ் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாராளுமன்ற மாநிலங்களவையில் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-
    • கடந்த 40 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தித் துறையில் நமது நாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. உணவு தானியங்கள் குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் அறுவடைக்குப் பின், இந்திய உணவுக் கழகம் அல்லது பிற தனியார் சந்தைக் குழுக்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை அடையும் வரை, அவற்றின் பாதுகாப்பான சேமிப்பு பெரும் கவலைக்குரிய செயலாக உள்ளது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-

    கடந்த 40 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தித் துறையில் நமது நாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. உணவு தானியங்கள் குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் அறுவடைக்குப் பின், இந்திய உணவுக் கழகம் அல்லது பிற தனியார் சந்தைக் குழுக்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை அடையும் வரை, அவற்றின் பாதுகாப்பான சேமிப்பு பெரும் கவலைக்குரிய செயலாக உள்ளது.

    கொள்முதல் மையங்கள் உணவு தானியங்களை விலைக்கு வாங்கும்பொழுது இழப்பு விகிதம் அதிகமாக இருப்பது ஒரு கவலைக்குரிய செய்தி ஆகும். துரதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சேமிப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் மழைக் காலங்களில் ஆயிரக்கணக்கில் அரிசி, கோதுமை, மக்காச்சோளம் மூட்டைகள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் திறந்தவெளியில் குவிக்கப் பட்டுள்ளன.

    கொள்முதல் மையங்களில் குறைந்த செலவில் கொட்டகைகளை நிறுவுவதன் மூலம் இத்தகைய இழப்பை எளிதில் தவிர்க்கலாம். இதன் மூலம் அரசுக்கு அதிக நிதிச்சுமை இல்லாமல் இதற்கு ஒரு தீர்வு காணமுடியும்.

    எனவே,கொள்முதல் மையங்களில் சேமிப்பு வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு மூலம் கிடங்குகளையும் குளிர்பதனக் கூடங்களையும் அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மிக அதிக வேலை வாய்ப்பை தருவது திருப்பூா் மாவட்டம் தான். .
    • மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ.11 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் 8 மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆர்.நடராஜன் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீராணம்பாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டப்பணிகளை பாா்வையிட்டு,பெண் தொழிலாளா்களிடம் பணிகள், ஊதியம் மற்றும் அவா்களது குறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

    அப்போது அவா் பேசியதாவது:-

    மத்திய, மாநில அரசுகளிடம் மக்கள் என்ன கோரிக்கை வைக்கிறாா்கள் என்பதை அறிந்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காகவே மக்கள் சந்திப்பு இயக்கத்தைத் தொடக்கியுள்ளேன்.

    இடுவாய் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் மறுக்கப்படாமல் வழங்குவதுடன், நிா்ணயிக்கப்பட்ட ஊதியமும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மிக அதிக வேலை வாய்ப்பை தருவது திருப்பூா் மாவட்டம் தான்.

    அதே வேளையில் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ.11 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் 8 மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.அதேபோல மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியையும் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.ஆகவே வரும் மக்களவை கூட்டத்தொடரில் 100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை, மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்படும் என்றாா்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதாத நிலை உருவாகியுள்ளது.
    • ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3600 மட்டுமே வழங்கப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் கோவை எம்.பி. நடராஜன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கேத்தனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கேத்தனூர் ஊராட்சியில் சீரான குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் மருத்துவ படிப்பு படிக்க தனி இட ஒதுக்கீடு மற்றும் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு கல்லூரி மேல்படிப்புக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பால் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை பெற்றோர் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர் அப்பள்ளிகளில் இருந்து தங்களது குழந்தைகளை விடுவித்து அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அதனால் அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதாத நிலை உருவாகியுள்ளது. இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். அதே போல் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3600 மட்டுமே வழங்கப்படுகிறது. அத்தொகையை உயர்த்தி வழங்கிட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார், ஊராட்சி தலைவர் சித்ரா ஹரிகோபால், ஒன்றிய கவுன்சிலர்கள் ஸ்ரீ பிரியா புருஷோத்தமன்,லோகு பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரன் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர்கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.
    • சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் ஒன்றியம்,இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீரங்ககவுண்டம்பாளையம் பகுதியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பணித்தளத்தில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.பின்னர் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இந்த நிகழ்ச்சியில் இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.மேலும் இதில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன்,திருப்பூர் தெற்கு தாசில்தார்,திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபு பாலசுப்பிரமணியம்,இடுவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரமசிவம்,இடுவாய் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

    இதனைத் தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சி மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இதில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி,மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட் மணி,மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin