search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "budget"

    • தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருகிறது.
    • கோவையில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

    இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கின்ற தொலைநோக்குத் திட்டமாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டியுள்ளது.

    இது தொடர்பாக விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருகிறது. தற்போது வறுமையில் இருக்கும் ஐந்து லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படுவதாக இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது ஏழை மக்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுள்ள அரசாக இது திகழ்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இருக்கும் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான மாபெரும் திட்டம் உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அந்தத் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன.

    2011 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்தத் திட்டத்தை அதிமுக அரசு நிறுத்திவிட்டது. தற்போது கலைஞர் அவர்களின் வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் அவர்கள், 'குடிசை இல்லா தமிழ்நாடு' திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆறு ஆண்டுகளில் 8 இலட்சம் வீடுகள் கட்டப்படுமென்றும், நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறதென்றும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதனைப் பாராட்டி வரவேற்கின்றோம். வீடு ஒன்றுக்கு 3.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாக இதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை ரூ.5 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

    பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்திய "புதுமைப்பெண் திட்டம்" பெருமளவில் பயனளித்துள்ளது. அதனை ஆண்களுக்கும் விரிவு படுத்துவதற்காக 'தமிழ்ப் புதல்வன் திட்டம்' என்கிற புதிய திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மனமுவந்து வரவேற்கிறோம்.

    புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டம் இரண்டையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்திருப்பது எளிய மக்களின் கோரிக்கையை இந்த அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

    கோவையில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

    அறிவு சார் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடியில் "விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா" அமைக்கப்படும் என்றும்; தமிழ்நாட்டில் முதன்முறையாக "உலகப் புத்தொழில் மாநாடு" நடத்தப்படும் என்றும்; மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் "தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்" உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பது தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதில் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டியாக விளங்குகிறது என்பதற்குச் சான்றுகளாக உள்ளன.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி, ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிப்பதாகும்.

    சென்னையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கென்று பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'வடசென்னை வளர்ச்சித் திட்டம்' அறிவிக்கப்பட்டிருப்பதை மகிழ்வோடு வரவேற்கிறோம்.

    பழங்குடியின மக்களின் வாழ்விடங்களில் சாலை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'தொல்குடி' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் பாராட்டி வரவேற்கிறோம்.

    ஒட்டுமொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்குமான தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய செயல் திட்டமாக விளங்குகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் மற்றும் நிதித் துறை அமைச்சர் அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
    • பட்ஜெட்டில் 7 முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

    நாளை(பிப் 20) தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.Tamil Nadu government announcement that big 7 Tamil dreams will be included in the budget

    நாளை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், "சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், நீ அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

    • கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
    • கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    அதன் பிறகு பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்று காலை பாராளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் இன்று தாக்கல் செய்தார்.

    நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடி நடைபெறுவதை தடுப்பதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    நுழைவுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தாலும் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் பாரபட்சமான போக்கை எதிர்த்து குரல் எழுப்பினேன்.
    • மத்திய அரசு வழங்கும் மானியத்தில் கர்நாடகா மற்றும் கன்னடர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக காங்கிரஸ் எம்.பி. டி.கே.சிவக்குமார் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கும்போது தென் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வட இந்தியாவுக்கு திருப்பி விடுவதால் தென் இந்தியாவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. வளர்ச்சி நிதி சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டால் தென் மாநிலங்கள் தனி நாடு தேட வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பா.ஜனதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் மீது புகார் செய்தனர். அதில் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை நிலைநாட்டுவதாக சத்தியபிரமாணம் செய்துள்ள எம்.பி. பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். எனவே அவர்மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இதற்கிடையே பெங்களூரு பன்னார்கட்டாவில் காவிரி குழாய் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டி.கே.சுரேஷ் கூறியதாவது:-

    மத்திய அரசின் பாரபட்சமான போக்கை எதிர்த்து குரல் எழுப்பினேன். மத்திய அரசின் பாரபட்சமான கொள்கைக்கு எதிராக தமிழகம் உள்பட தென் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் குரல் எழுப்பி உள்ளன. மத்திய அரசிடம் மாற்றான் தாய் மனப்பான்மையை கைவிட சொன்னேனே தவிர நாடு பிரிவினை பற்றி பேசவில்லை.

    மத்திய அரசு வழங்கும் மானியத்தில் கர்நாடகா மற்றும் கன்னடர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. கன்னடர்களின் குரலாக இதை பேசினேன். ஆனால் எனது அறிக்கை நாட்டை பிரிப்பது போல் திருத்தி வெளியிடப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடி வரிப்பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ரூ.50ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்படுகிறது. மாநில வருமானத்தில் 17 சதவீதம் கிடைக்கிறது. வரி வருவாயில் 337 சதவீதம் உத்தர பிரதேசத்திற்கும், 430 சதவீதம் பீகார் மாநிலத்திற்கும் வழங்கப்படுகிறது. இந்த அநீதியை சரிசெய்து சட்டப்படி அரசுக்கு உரிய பங்கை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

    நாட்டை பிரிக்க வேண்டும் என்று நான் எங்கும் கூறவில்லை. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் கன்னடர்களின் சுய மரியாதைக்காக சிறை செல்லவும் தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ம் தேதி தொடங்க வாய்ப்பு.
    • பிப்ரவரி 20ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் என தகவல்.

    bu2024ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், பிப்ரவரி 19ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து, பிப்ரவரி 20ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி பிறகு பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தொடர்ந்து ஐந்து முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
    • மொரார்ஜி தேசாய் ஆறுமுறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைத்தபோது நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.

    அதில் இருந்து தற்போது வரை அவர்தான் நிதியமைச்சராக இருந்து வருகிறார். வருகிற 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்கு முன்னதாக முழுமையாக 5 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது 6-வது முறையாக பட்ஜெட் (இடைக்கால) தாக்கல் செய்ய இருக்கிறார்.

    இதன்மூலம் தொடர்ந்து ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது நிதியமைச்சர் என்ற சாதனையைப் படைக்க இருக்கிறார்.

    இதற்கு முன்னதாக மொரார்ஜி தேசாய் (1959-1964) ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் ஐந்து முறை முழுமையான பட்ஜெட். ஒருமுறை இடைக்கால பட்ஜெட். இதுபோன்றுதான் நிர்மலா சீதாராமனும் ஐந்து முறை முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

    மோடி தலைமையிலான பா.ஜனதா கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்தது. அப்போது அருண் ஜெட்லி நிதியமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவர் ஐந்து பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். 2017-ல் பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 1-ந்தேதிக்கு மாற்றி முதன்முறையாக தாக்கல் செய்தார்.

    உடல்நலக்குறைவால் அவரிடம் இருந்த நிதியமைச்சர் பதவி பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. அவர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, பி. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் தொடர்ந்து ஐந்து முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை.
    • அடுத்த மாதம் கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்த அழைக்கப்படுவாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதம் சட்டசபை கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் இருந்த காரணத்தால் இந்த மாதம் சட்டசபை கூடுவதற்கு வாய்ப்பில்லை.

    மதுரையில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை 24-ந் தேதி திறந்து வைக்க செல்கிறார். 25-ந்தேதி சென்னையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். 26-ந்தேதி குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை தொடர்ந்து 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ளார்.

    இதனால் சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-வது வாரம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொது பட்ஜெட் தனியாகவும், வேளாண் பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்படுகிறது.

    பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கலாம் என்பதை அறிய துறை வாரியான ஆய்வுக் கூட்டங் கள் தலைமைச் செயலகத் தில் நேற்று முதல் நடை பெற்று வருகிறது.

    நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தொழில்துறை மற்றும் சிறு தொழில் துறை நிறுவனங்களின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து கலந்தாலோசனை நடத்தினார். இதேபோல் ஒவ்வொரு துறை வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கூட்டங்கள் முடிந்த பிறகு வணிகர் சங்க பிரதிநிதிகளையும் அழைத்து நிதி அமைச்சர் ஆலோசனைகள் நடத்த இருக்கிறார்.

    இதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படும். முதலமைச்சர் கூறும் கருத்துக்களுக்கு ஏற்ப பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெறும்.

    அந்த வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என்பதால் தேர்தலில் மக்களை கவரும் வகையில் பல புதிய அறிவிப்புகளை பட்ஜெட்டில் இடம்பெற செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    அதேபோல் பெண்கள் மாணவ-மாணவிகளை கவரும் வகையில் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப் புகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

    தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்று உள்ளதால் புதிதாக தொழில் துவங்கும் நிறுனங்களுக்கு பட்ஜெட்டில் புதிய சலுகைகள் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    உலக நாடுகளுடன் தமிழ்நாட்டுக்கு வலுவான இணைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிறு-குறு நடுத்தர நிறுவனங்கள் பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சி அடைந்து வருவதால் அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் மக்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை அளித்து பட்ஜெட்டில் அவற்றை இடம் பெற செய்வார் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் சலுகைகள் இடம்பெறும் வகையிலும் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என தெரிகிறது. அதற்கேற்ப பட்ஜெட் உரை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் வேளாண் பட்ஜெட்டும் தயாராகி வருகிறது.

    அடுத்த மாதம் கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்த அழைக்கப்படுவாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    ஏனென்றால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அரசின் சார்பில் தயாரித்து வழங்கப்பட்ட உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்கவில்லை. சில வரிகளை தவிர்த்துவிட்டார். அதுமட்டுமின்றி சில வார்த்தைகளை சொந்தமாக சேர்த்து படித்தார். இதனால் கவர்னர் சொந்தமாக சேர்த்து படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை.

    இந்த பிரச்சினை காரணமாக தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து வெளியேறிவிட்டார். இதன்பிறகு கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துவிட்டது.

    இந்த சூழலில் இந்த ஆண்டு ஜனவரி மாதம்கூட வேண்டிய சட்டசபைக் கூட்டம் இதுவரை தொடங்க படவில்லை.

    அடுத்த மாதம் தான் (பிப்ரவரி) சட்டசபை கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்த கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்கு கவர்னர் அழைக்கப்படுவாரா? அல்லது கவர்னர் உரை இல்லாமலேயே சட்டசபை கூட்டம் தொடங்குமா? என்பது இனிமேல் தான் தெரியவரும்.

    • மத்திய அரசு அறிவிக்கும் பட்ஜெட்டில் தில்லுமுல்லு இருப்பதாக தகவல்.
    • நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகம் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    மத்திய அரசு சார்பில் வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024- 25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்நிலையில், மத்திய அரசு அறிவிக்கும் பட்ஜெட்டில் தில்லுமுல்லு இருப்பதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," பல்வேறு உண்மைகளை பல கட்டங்களாக மூடி மறைத்த பிறகே பட்ஜெட் வெளியிடப்படுகிறது. அரசின் வரவு, செலவு கணக்கு வெளியிப்படையாக இருந்தால் உண்மையான நிதி நிலைமை தெரிந்துவிடும்" என்றார்.

    சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகம் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2024-2025-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வருடாந்திர நிதியுதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் அல்லது ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

    புதுடெல்லி:

    வருகிற 31-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    2024-2025-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டத்தொடரில் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார்.

    வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட்டில் புதிய வரிகள் அதிகம் விதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும், தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    முக்கியமாக பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    அந்த வகையில் விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இடம் பெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு தற்போது ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் நிலம் வைத்திருக்கும் 11 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

    அவர்களுக்கு வருடாந்திர நிதியுதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் அல்லது ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டால் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 4 தவணைகளாகவும், தலா ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்பட்டால் ரூ.3 ஆயிரம் 3 தவணைகளாக செலுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுதவிர விவாசயிகள் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், அதிக உரம் மற்றும் இடுபொருள் விலைகளின் பாதிப்பில் இருந்து அவர்களை காப்பாற்றுவதாகவும், மானியத்தை உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 15 தவணைகளில் 2.8 லட்சம் ரூபாய்க்கு மேல் அரசு வழங்கியுள்ளது.

    இந்த சூழலில் நிதியுதவியை உயர்த்துவதோடு அதனை பெறுவதற்கான தகுதியை தளர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசுக்கும் ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ரஷியாவிற்கு, போரினால் ஏற்படும் செலவினங்களின் அதிகரித்திருக்கிறது
    • ராணுவ தளவாடங்கள், உபகரணங்கள் உற்பத்தி ரஷியாவில் அதிகரித்திருக்கிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.

    இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவத்தின் துணையோடு உக்ரைன் போரிட்டு வருகிறது.

    ரஷிய- உக்ரைன் போர் 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் போரினால் ஏற்படும் செலவினங்களின் அதிகரிப்பால் ரஷியாவின் 2023-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உள்ள ராணுவ செலவினங்களுக்கான தொகை இரு மடங்காகியுள்ளது. 2023-க்கான ராணுவ செலவுக்கு ரஷியா சுமார் ரூ.45 ஆயிரம் கோடி ($54 பில்லியன்) திட்டமிட்டிருந்தது. ஆனால் முதல் அரையாண்டிலேயே இதைவிட 12 சதவீதம் அதிகம் செலவிட்டிருக்கிறது.

    போரை தீவிரமாக ரஷியா நடத்தி வந்தால், அதனால் ஏற்படும் அதிகமான ராணுவ செலவின் காரணமாக பட்ஜெட் தொகையில் விழும் துண்டு இன்னும் அதிகமாகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    போரின் காரணமாக ராணுவ தளவாடங்கள், உபகரணங்கள் தொடர்புடைய உற்பத்திகள் ரஷியாவில் அதிகரித்திருக்கும் வேளையில் ஏற்றுமதி வருவாய் குறைந்திருப்பது மட்டுமல்லாமல் பிற தொழில்களும் போரினால் மிகவும் நலிந்து வருகிறது.

    உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் போர் விரைவில் முடிவுக்கு வருவது அனைத்து நாடுகளுக்கும் நல்லது என பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • பட்ஜெட் போட்டு செயல்படும் போது செலவுகளை எளிதாக குறைக்க முடியும்.
    • ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத்தினால் பெருமளவு செலவை குறைக்கலாம்.

    வருமானத்திற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு செலவு செய்வதால் சேமிப்பு அதிகரிக்கும். பட்ஜெட் போட்டு செயல்படும் போது செலவுகளை எளிதாக குறைக்க முடியும். பெண்கள் மளிகைபொருட்கள் வாங்குகையில் சில வழிமுறைகளை பின்பற்றினால் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    மளிகைப்பொருட்களை சிறுக சிறுக வாங்காமல் ஒரு மாதத்திற்கு தேவையானவற்றை மொத்தமாக வாங்குவது நல்லது.

    ஒவ்வொரு மாதமும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு முன்பு பட்டியல் தயார் செய்வது அவசியமானது.

    சமையல் அறைக்குள் சென்று என்னென்ன பொருட்கள் தேவை? என்பதை கவனித்த பின்பு பட்டியல் போடலாம்.

    முந்தைய மாதத்தில் வாங்கிய பொருட்களில் ஏதேனும் மீதம் இருந்தால் இந்த மாதம் வாங்க இருக்கும் பொருட்களின் அளவை குறைத்து கொள்ளலாம்.

    அடிக்கடி சமைக்கும் உணவுகளுக்கு தேவையான பொருட்களை மட்டும் அதிகமாக வாங்கிகொண்டு மற்றவற்றை குறைத்து கொள்வது சிறந்தது.

    பலசரக்கு அங்காடிகளில் பொருட்கள் வாங்கும் போது கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்துக்கொண்டிருக்காமல் முதலில் நமக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின்னரே மற்றவற்றை வாங்க வேண்டும். இது பணம் விரயமாகாமல் தடுக்க உதவும்.

    பண்டிகை காலங்களில் தேவைக்கு ஏற்றவாறு மளிகைப்பொருட்கள் வாங்குவது பணத்தை சேமிக்க உதவும்.

    மளிகை பொருட்களளுக்கான பட்ஜெட் போடும் போது காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவற்றுக்கும் சேர்த்து பணம் ஒதுக்க வேண்டும்.

    ஷாப்பிங் செய்யும் போது தள்ளுபடி என்ற வார்த்தையை பார்த்து மயங்காமல் அவசியமான பொருட்களை மட்டும் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.

    அந்தந்த சீசனுக்குரிய காய்கறிகள், பழங்களை வாங்கினால் விலை குறைவாக இருக்கும். பணமும், மிச்சமாகும்.

    காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்து வீணாக்காமல் என்ன சமைக்கலாம் என்ற திட்டமிடுதலோடு வாராவாரம் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.

    மளிகைப்பொருட்களை பட்டியல் போடுவதற்கு முன்பு குடும்பத்தினரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

    உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் தாங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் உணவுகளுக்கு ஏற்றவாறு மளிகைப்பட்டியல் தயார் செய்யலாம்.

    இவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத்தினால் பெருமளவு செலவை குறைக்கலாம்.

    • மக்கள் தொகை அடிப்படையில் பெறப்படும் தண்ணீரின் அளவு நீர் பட்ஜெட்டில் இடம்பெறும்.
    • இந்தியாவிலேயே கேரளாவில் தான் நீர் மேலாண்மைக்காக இதுபோன்ற பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஏராளமான நீர்நிலைகள் இருந்தாலும் அங்கு அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    கேரளாவில் 44 ஆறுகள், உப்பங்கழிகள், ஓடைகள், நீர்நிலைகள் உள்ளன. இருந்தபோதிலும் பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    கோடை காலத்தில் இந்த பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது. இதனால் கேரள மக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    எனவே மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கேரளாவில் தண்ணீர் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதன் மக்கள் தொகை அடிப்படையில் பெறப்படும் தண்ணீரின் அளவு நீர் பட்ஜெட்டில் இடம்பெறும்.

    கேரளாவில் நீர் இருப்பு குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே நீர் சேமிப்பை உறுதி செய்யவும், நீர் நுகர்வை கணக்கிடுவதற்கும், அதற்கான திட்டங்களை வகுக்கவும் தண்ணீர் பட்ஜெட் உதவி புரியும்.

    இதன்மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்கவும், நீர் சேமிப்பை விஞ்ஞானரீதியில் மேம்படுத்தவும், இந்த திட்டம் உதவிபுரியும். இதனை நீர்வள மேம்பாட்டு மேலாண்மை மையத்தின் உதவியுடன், மாநில நீர்வள துறையின் பிரதிநிதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் நிபுணர்கள் அடங்கிய குழுவினரால் தண்ணீர் பட்ஜெட் தயாரிக்கப்படும்.

    இந்தியாவிலேயே கேரளாவில் தான் நீர் மேலாண்மைக்காக இதுபோன்ற பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆறுகள் சீரமைப்பு, கால்வாய்கள் புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×