என் மலர்tooltip icon

    இந்தியா

    25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை
    X

    25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை

    • ஜனாதிபதி தனது உரையை தொடங்கிய உடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர்.
    • கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூட்டப்படும். அதன்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 2 அமர்வாக நடைபெறுகிறது. முதல் அமர்வு இன்று தொடங்கி முதல் வருகிற 13-ந் தேதி வரையும், 2-ம் அமர்வு மார்ச் மாதம் 9-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரையும் நடக்கிறது.

    தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில சட்டமன்றங்களில் ஆளுநரின் செயல்பாடு உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். ஜனாதிபதி தனது உரையை தொடங்கிய உடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர்.

    மத்திய அரசின் கடந்த கால சாதனைகளை விளக்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மத்திய அரசால் கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது.

    * 2 கோடி மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

    * கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

    * எல்லோருக்கும் எல்லாமுமான வளர்ச்சியை நோக்கி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    * பல்வேறு துறைகளில் நாடு புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

    * ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 12.5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×