என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாராளுமன்றம்"
- ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
- ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்புகிறேன்.
ரெயில்வே துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஜய் வசந்த் தனது தொகுதியில் கிடப்பில் உள்ள ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "இரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது."
"இதில் நானும் ஒரு உறுப்பினராக தமிழகத்திற்கு, குறிப்பாக குமரி மாவட்டத்தில் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் இரயில்வே திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- பாராளுமன்ற வளாகத்தில் வாசலின் முன் இருந்த காந்தி சிலை பின்னால் உள்ள பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
- எம்.பி சு.வெங்கடேசன் மீண்டும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி இன்று [அக்டோபர் 2] கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காந்தியின் திரு உருவச் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறனர். ஆனால் பாராளுமன்ற வளாகத்தில் வாசலின் முன் இருந்த காந்தி சிலை உட்பட வெவ்வேறு இடங்களுக்கு இருந்த தலைவரின் சிலைகள் கட்டடத்தின் பின்னே உள்ள பூங்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
பாஜக அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. அந்த வகையில் தற்போது காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மீண்டும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்னே இருந்த உனது திருவுருவச் சிலை இப்பொழுது பின்புற வாசலுக்கும் பின்னே வைக்கப்பட்டுள்ளது. பாசிஸ்டுகள் அவைக்குள் வருகிற பொழுது உன் முகத்தில் முழிக்கக்கூடாதென நினைக்கிறார்கள். நீ அல்லவோ எம் தேசத்தின் தந்தை. வாழ்க நீ எம்மான்.
என்றென்றும் வணங்குகிறோம் உன்னை.
என்று தெரிவித்துள்ளார்
- தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கமிட்டியின் தலைவராக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்த குழுவின் உறுப்பினராக நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டள்ளார்.
பாராளுமன்றத்தின் பல்வேறு துறைகளுக்கான நிலைக்குழு மாற்றியமைக்கப்பட்டன. குறிப்பாக முக்கியமான 24 கமிட்டிகள் மாற்றியமைக்கப்பட்டன. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பாதுகாப்பு விவகார கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கமிட்டியின் தலைவர் பா.ஜ.க. உறுப்பினர் ராதா மோகன் சிங் ஆவார்.
தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கமிட்டியின் தலைவராக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவின் உறுப்பினராக நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டள்ளார்.
பெண்கள், கல்வி, இளைஞர்கள் மற்றும் விளயைாட்டு விவகாரங்களுக்கான கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ் சுகாதார விவகார கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியுறவு விவகார கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நியமிக்கப்பட்டுள்ளார். நிலகக்கரி, சுருங்கம் மற்றும் ஸ்டீல் விவகார கமிட்டியின் தலைவராக அனுராக் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சோனியா காந்தி எந்த கமிட்டியின் தலைவராகவும், உறுப்பினராகவும் நியமிக்கப்படவில்லை.
பா.ஜ.க.-வின் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் முக்கியமான கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- பாலமுருகன் கோவிலில் புதிதாக பாலமுருகன் அடிமை சாமிகளுக்கு திருவுரு சிலை நிறுவப்பட்டுள்ளது.
- பெண்களுக்கு மன அழுத்ததை போக்க கல்வி நிறுவனங்களே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் செங்கோலை பார்க்கும் போதெல்லாம் ஒரு தமிழராக பூரித்து போவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவக் கல்லூரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் புதிதாக பாலமுருகன் அடிமை சாமிகளுக்கு திருவுரு சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சவிதா பல்கலைக்கழக வேந்தர் எம்.வீரையன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பாலமுருகனடிமை சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் குன்னகுடி திருவண்ணாமலை ஆதினம் பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேருர் ஆதினம்
சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மன அழுத்ததை போக்க கல்வி நிறுவனங்களே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்மீகம் மற்றும் தெய்வீகத்தை சொல்லி தருவதன் மூலமே மாணவர்களின் மன அழுத்ததை குறைக்க வேண்டும் . தமிழகத்தில் உள்ள ஆதினங்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்.
நாடாளுமன்றத்தில் செங்கோலை காணும் போதெல்லாம் ஒரு தமிழராக தான் மகிழ்ச்சியில் பூரிப்படைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கு அமர்ந்திருப்பவர்கள் தான் மிகப்பெரிய பயங்கரவாதிகள் என்று ஆளும் கட்சி எம்.பிக்களை சுட்டிக்காட்டி பேசினார்.
- ஆத்திரத்தால் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் திடீரென்று ஓடிச் சென்று பேசிக்கொண்டிருந்த அஹ்மத் சிக்கின் முகத்தில் தாக்கி கீழே தள்ளினார்.
துருக்கியில் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடு செய்த குற்றச் சாட்டில் எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் கேன் அட்டால் கைதாகி சிறையில் உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி அஹ்மத் சிக் பேசும்போது, அதிபர் எர்டோகனின் ஆளும் கட்சியை "பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டார். உங்களுக்கு [ஆளும் கட்சி] ஆதரவாக இல்லையென்று கேன் அட்டாலை பயங்கரவாதி என்கிறீர்கள்.ஆனால் இங்கு அமர்ந்திருப்பவர்கள் தான் மிகப்பெரிய பயங்கரவாதிகள் என்று ஆளும் கட்சி எம்.பிக்களை சுட்டிக்காட்டி பேசினார்.
இதனால் ஆளும் கட்சி எம்.பிக்கள் தரப்பில் கூச்சல் எழுந்தது. ஆத்திரத்தால் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் திடீரென்று ஓடிச் சென்று பேசிக்கொண்டிருந்த அஹ்மத் சிக்கின் முகத்தில் தாக்கி கீழே தள்ளினார். தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர் துணை சபாநாயகர் சொல்லச் சொல்ல கேட்காமல் எம்.பி.க்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அவர்களை பாது காப்பு அதிகாரிகள் விலக்கி விட்டனர். இந்த தாக்குதலில் பெண் எம்.பி. ஒருவர் உட்பட சிலருக்குக் காயம் ஏற்பட்டது. இதில் சிலரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பாராளுமன்றமே களேபரமாகக் காணப்பட்டது.
- கிராமத்தைச் சேர்ந்த பெண்களை RSF வீரர்கள் கடத்த முயன்றுள்ளனர்.
- சுமார் 80 கிராமவாசிகளை பாராளுமன்ற படை [RSF] வீரர்கள் சுட்டுக் படுகொலை செய்துள்ளனர்.
உள்நாட்டுப் போர்
உள்நாட்டுப் போரினால் சூடான் நாடு துண்டாடப்பட்டு வருகிறது. சூடான் ராணுவத்தின் இருவேறு பிரிவுகளான SAF மற்றும் RSF [பாராளுமன்ற படை] ஆகிய படைகளுக்கிடையே கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போராக வெடித்தது.
பசி - பஞ்சம் - பாலியல் பலாத்காரம்
இந்த போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் இறந்துள்ளனர். போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பசியால் மக்கள் மண்ணையும், இலைகளையும் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உணவுக்காக தினமும் ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட பெண்கள் வரிசையில் நிற்கும் அவல நிலையில்தான் தற்போது சூடான் உள்ளது.
பாராளுமன்றப் படுகொலை
இந்நிலையில் மத்திய சூடானில் உள்ள சினார்[Sinnar] மாகாணத்தில் ஜால்க்னி [Jalqni] என்ற கிராமத்தில் பாராளுமன்ற படை [RSF] வீரர்கள் சுமார் 80 கிராமவாசிகளை கடந்த வியாழனன்று சுட்டுக் படுகொலை செய்துள்ளனர்.
முன்னதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்களை RSF வீரர்கள் கடத்த முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமற்ற கிராம மக்கள் எதிர்த்து நின்ற நிலையில் அவர்களை நோக்கி RSF வீரர்கள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரம்
கடந்த புதன் கிழமை அன்று ஸ்விடர்லாந்தில் அமெரிக்காவால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க சூடான் ராணுவம் மறுத்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சூடான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி மக்களை எந்தவித வாரண்ட்டும் இன்றி கைது செய்யலாம் என்ற அதிகாரம் ராணுவத்துக்கு வழங்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது.
- டி-சர்ட்டும் அரைக்கால் டவுசரும் அணிந்திருந்த இளைஞர் ஒருவர் பல அடி உயரம் உள்ள சுவரை அளவெடுத்துக் கொண்டிருந்தார்.
- கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நுழைந்து மர்ம நபர்கள் வண்ணப் புகைகுண்டுகளை வீசினர்.
தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தின் சுவரை அளவெடுத்து உள்ளே குதித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் நேற்று மதியம் 2.45 மணியளவில் டி-சர்ட்டும் அரைக்கால் டவுசரும் அணிந்திருந்த இளைஞர் ஒருவர் பல அடி உயரம் உள்ள சுவரை அளவெடுத்துக் கொண்டிருந்தார்.
திடீரென சுவர்மீது ஏறி அவர் உள்ளே குதித்ததை சிசிடிவியில் பார்த்த மத்திய தொழிற் பாதுகாப்புப் படை போலீசார் [CISF] பார்த்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரைத் தடுத்து சோதனைக்கு உட்படுத்தினர். அந்த நபரிடம் ஆயுத்தங்கள் எதுவும் இல்லை. அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது மன நலம் பாதிக்கப்பட்டவர்போல் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக டெல்லி போலீசிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். அவரது பெயர் மனிஷ் என்றும் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி பாராளுமன்றத்தின் மக்களவைக்குள் நுழைந்து மர்ம நபர்கள் வண்ணப் புகைகுண்டுகளை வீசிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகியுள்ளது.
- பாராளுமன்ற கூட்டத்தொடர் திங்கட்கிழமை முடிவடைய இருந்த நிலையில் இன்றுடன் நிறைவடைந்தது.
- பிரதமர் மோடி மற்றும் ஓம் பிர்லா தலைமையில் தேனீர் விருந்து நடைபெற்றது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜூலை) 22-ந்தேதி தொடங்கியது. வரும் திங்கட்கிழமை வரை கூட்டத்தொடர் நடைபெற இருந்தது.
ஆனால் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா இன்றுடன் சபை நிறைவடைவதாக அறிவித்து அத்துடன் தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் அறிவிக்கப்படாத தேனீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மக்களவை கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கனிமொழி எம்.பி., துரை வைகோ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஷோபா ஒன்றில் ஓம் பிர்லா மற்றும் பிரதமர் அமர்ந்திருக்க, பிரதமருக்கு இடது பக்கம் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். வலது பக்கம் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
ராகுல் காந்தில் வந்தபோது பிரதமர் மோடியும் அவரும் பரஸ்பர நமஸ்காரம் (வாழ்த்து) தெரிவித்துக் கொண்டதாகவும், போட்டோவுக்கு இருவரும் புன்னகையுடன் போஸ் கொடுத்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாக என்டிடிவி செயதி வெளியிட்டுள்ளது.
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தாமரை வடிவிலான சக்கரவியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட ஆறு பேர் கட்டுப்படுத்துகிறார்கள். இவர்கள் அச்சம் என்ற சக்கரவியூகத்தில் மக்களை சிக்கவைத்துள்ளனர். தற்போதைய நிலையில் பாஜக எம்.பி.க்கள் கூட அச்சத்தில் உள்ளனர் என கடுமையாக விமர்சித்திருந்தார்.
- துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
- மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை மனு பாக்கர் சந்தித்தார்.
புதுடெல்லி:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் 200-க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தற்போது ஒலிம்பிக் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என மொத்தம் 5 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டெல்லி திரும்பிய மனுபாக்கர் பாராளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அறையில் ராகுல் காந்தியை தனது குடும்பத்தினருடன் இன்று சந்தித்தார். அப்போது இரு வெண்கல பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்ததுடன், அவர்களுக்கு இனிப்பும் வழங்கினார்.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் இதில் உள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், மசோதா குறித்து ஆய்வுசெய்ய கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின்படி கூட்டுக்குழு அமைக்கப்படும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய 31 பேர் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு பிறப்பித்துள்ளார்.
பா.ஜ.க.வின் ஜெகதாம்பிகா பால் தலைமையில் மசோதாவை ஆய்வுசெய்ய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுக் குழுவில் ஆ.ராசா, ஒவைசி, இம்ரான் மசூத், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்தக் குழுவில் உள்ளனர்.
இந்த கூட்டுக் குழுவானது மசோதா குறித்து ஆய்வுசெய்து அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
- நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23-ந்தேதி தாக்கல் செய்தார்.
- எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2024-2025-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை 23-ந்தேதி தாக்கல் செய்தார். அதன்பின் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது ராகுல் காந்தி மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இன்று மாநிலங்களவையில் ஜெயா பச்சன்- மாநிலங்களவை தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டதில் ஒரு அமர்வுக்கு முன்னதாகவே பட்ஜெட் கூட்டம் நிறைவடைந்துள்ளது.
- முல்லை பெரியாறு அணையால் அருகிலுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- தண்ணீர் தமிழகத்திற்கு, பாதுகாப்பு கேரளத்திற்கு என்பதே எங்களின் கோஷம்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் கேரளா எம்.பி. ஹிபி ஏடன் பேசும்போது, "முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
மேலும், "முல்லை பெரியாறு அணையால் அருகிலுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தண்ணீர் தமிழகத்திற்கு, பாதுகாப்பு கேரளத்திற்கு என்பதே எங்களின் கோஷம். மத்திய அரசு புதிய அணை கட்டி கேரளத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரளா தெரிவித்து வந்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி பெற்றது. தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் பயனடைகின்றன.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என உச்சநீதிமன்றமும் வல்லுநர்கள் குழுவும் திட்டவட்டமாக தெரிவிததுவிட்ட நிலையிலும் கேரளா மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையை பல ஆண்டுகளாக கேரளா எதிர்த்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்