என் மலர்
நீங்கள் தேடியது "paliament"
- மந்திரி சபையில் மறுசீரமைப்பை மேற்கொண்டார் அதிபர் எர்டோகன்.
- ஆளும்கட்சி எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது.
துருக்கியின் மந்திரி சபையில் மறுசீரமைப்பை அதிபர் எர்டோகன் மேற்கொண்டார். இதில் அரசாங்க தலைமை வக்கீல் அகின் குர்லெக்கை புதிய நீதி மந்திரியாக நியமித்தார். இதற்கு முக்கிய எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தநிலையில் பாராளுமன்றத்தில் அகின் குர்லெக் மந்திரியாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தபோது எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகின் குர்லெக்கின் பதவி பிரமாணத்தை தடுக்க முயற்சித்தனர். இதனால் ஆளும்கட்சி எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது.
ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் பாராளுமன்றத்தில் பரபரப்பு நிலவியது.
மோதலில் ஈடுபட்டவர்களை பாதுகாவலர்கள் தடுத்தனர். மோதல் ஏற்பட்டபோதிலும் அகின் குர்லெக் மந்திரியாக பதவி ஏற்று கொண்டனர். அவரை சுற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டு ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்தனர்.
- முத்ரா கடன் திட்டம், சுயவேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
- தனி நபர் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப் படுகிறது.
பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த பிரதமர் அலுவலகம் மற்றும் பணியாளர் துறை இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளதாவது:
வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 7,22,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரந்தர வேலை கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 38,850 பேர் மத்திய அரசுத் துறைகளில் நிரந்தர வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார். பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் மத்திய அரசு சுயவேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும் தனி நபர்கள் தொழில் தொடங்குவதற்கும் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. சாலையோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் இலவசக் கடன் மூலம் தங்களது தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.






