என் மலர்
நீங்கள் தேடியது "Tamilnadu"
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.
- பாஜக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருக்கோகர்ணத்தில் பாலன் நகர் அருகே பள்ளத்திவயல் பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.
இன்று மாலை புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை பயண நிறைவு விழாவில் அமித் ஷா பங்கேற்க உள்ள நிலையில், தமிழகம் வந்தனைந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாடு பாஜக-க்கான மண் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்," தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பாஜகவுக்கு தமிழ் மண்ணில் இடம் அளிக்க மாட்டார்கள்" என்றார்.
- 2025-ம் ஆண்டில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடந்தது.
- பெரிய மாநிலங்களில் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக 'தமிழ்நாடு' பெயர் பெறப்போகிறது.
சென்னை:
ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் ஒரு சக்திவாய்ந்த கருவி, எழுத்தறிவு. மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் 100 சதவீதம் எழுத்தறிவு பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், 95 சதவீதத்தை தாண்டினாலே அது முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கருதப்படுகிறது. ஏனென்றால், மிகவும் வயதானவர்கள், தன்னிச்சையாக செயல்பட முடியாதவர்களால் எழுத்தறிவை பெற முடியாது என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனை 2027-ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களும் எட்டிவிட வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு திட்டங்களை வகுக்கிறது.
இந்த எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவும், நிதிசார் கல்வி, டிஜிட்டல் கல்வி மற்றும் முக்கியமான வாழ்க்கைத் திறன் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேர்வும் நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறுபவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
மத்திய அரசு 2027-ல் இலக்கை நிர்ணயித்தாலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்த நிலையை கடந்த ஆண்டிலேயே (2025) அடைந்துவிட்டோம். ஆனாலும் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் முறையாக இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த ஒப்புதலுக்காகவும், அந்த ஒப்புதல் அளித்ததும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்காகவும் தமிழ்நாடு அரசு ஆவலோடு காத்திருக்கிறது.
95 சதவீதத்தை தாண்டுவது மட்டுமல்லாமல், முடிந்த வரை 100 சதவீதத்தை எப்படியாவது நெருங்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழ்நாடு அரசும் எழுத்தறிவு பயிற்சி வழங்கி, அதன் மூலம் தேர்வை நடத்தி வருகிறது. 2025-ம் ஆண்டில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடந்தது. ஜூனில் நடந்த தேர்வை 5 லட்சத்து 38 ஆயிரத்து 29 பேரும், டிசம்பரில் நடந்த தேர்வை 9 லட்சத்து 63 ஆயிரத்து 169 பேரும் என மொத்தம் 15 லட்சத்து ஆயிரத்து 38 பேர் எழுதியுள்ளனர். இதன் தேர்ச்சியும், முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலம் என்ற அறிவிப்பும் ஒருசேர வரும் சூழல் இருக்கிறது.
அப்படி அறிவிப்பு வந்தால், முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெறும். இதற்கு முன்பு மிசோரம், கோவா, திரிபுரா, இமாசல பிரதேசம், லடாக் ஆகிய மாநில, யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன.
இவைகள் எல்லாவற்றிலும் மக்கள் தொகை என்பது மிகவும் குறைவு. இந்த மாநிலங்களின் மக்கள் தொகையைவிட பல மடங்கு அதிகம் கொண்டவையாக தமிழ்நாடு உள்ளது. அந்த வகையில் பெரிய மாநிலங்களில் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக 'தமிழ்நாடு' பெயர் பெறப்போகிறது.
கேரளாவை பொறுத்தவரையில், 1991-ம் ஆண்டிலேயே யுனெஸ்கோ அமைப்பால் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என்ற பிரிவுகளின் அடிப்படையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பது தான் நெருடுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என்ற பிரிவுகளின் அடிப்படையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26,94,672 மற்றும் இரட்டைப் பதிவுள்ளவர்கள் எண்ணிக்கை 3,39,278 என்பதை ஏற்றுக் கொள்ளலாம். முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பது தான் நெருடுகிறது. எல்லா அரசியல் கட்சிகளின் தோழர்களும் இந்த எண்ணில் கவனம் செலுத்தவேண்டும்.
இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. மெய்யான நபர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பது தான் நம்முடைய நோக்கம்". எனக் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் 97,37,832 லட்சம் வாக்களர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
- சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிகம் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு 6,41,14, 587 வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 5, 43, 76,755 பேர் உள்ளனர். இடம்பெயர்ந்தோர் பட்டியல் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
தமிழ்நாட்டில் 97,37,832 லட்சம் வாக்களர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் படிவம் வழங்காவதவர்கள், பூத் கமிட்டி வாரியாக இரண்டு வாரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதில் வழங்கலாம். பெயர் விடுபட்டவர்கள் இன்றுமுதல் ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம். வாக்களர் பூத் கமிட்டிகளில் இந்த பட்டியல் இருக்கும், கொடுக்கப்படும்.
2002, 2005ஆம் ஆண்டுகளில் இடம்பெறாதவர்கள் கொடுத்த படிவங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முகவரியின் இருப்பை வைத்தே பட்டியல் தயாரிக்கப்பட்டது. முகவரியில் இல்லாதவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிகம் நீக்கப்பட்டுள்ளனர். நடைமுறைகளின் அடிப்படையிலேயே பெயர்கள் நீக்கப்பட்டன. 12 ஆயிரம் பேர் படிவத்தை திருப்பி அளிக்க விருப்பமில்லை." என தெரிவித்தார்.
- படிவங்களை நிரப்பி கொடுக்க கால அவகாசம் வரும் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
- இறந்தவர்கள், நிரந்தரமாக இருப்பிடத்தை மாற்றியவர்கள், காணவில்லை போன்ற காரணங்கள் அடிப்படையில் வாக்களர்கள் நீக்கம்
தமிழ்நாடு உட்பட அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் பல மாநிலங்களில், எஸ்ஐஆர் நடைமுறையை கையிலெடுத்தது தேர்தல் ஆணையம். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் கடந்த மாதம் 4ஆம் தேதி முதல் வாக்களர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டன.
இந்த படிவங்களை நிரப்பி கொடுக்க இன்றுதான் (டிச.4) கடைசிநாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கால அவகாசம் வரும் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 77.52 லட்சம் பேர் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாக்களர்கள் வாக்களிக்க தகுதியற்றவர்கள் எனவும் கூறப்படுகிறது.
இறந்தவர்கள், நிரந்தரமாக இருப்பிடத்தை மாற்றியவர்கள், காணவில்லை மற்றும் பிற காரணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வாக்களர்கள் நீக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புற மாவட்டங்கள் அதிக நீக்கங்களைக் காண்கின்றன. சென்னை மற்றும் பிற நகர்ப்புற மாவட்டங்கள் அதிக நீக்க விகிதங்களைப் பதிவு செய்துள்ளன. இதற்கு நேர்மாறாக, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில் இதுவரை 6.37 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. தங்கள் பெயர் தவறான காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது என எண்ணும் வாக்காளர்கள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநிலங்களவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
- மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து நேற்று முன்தினம் (டிச.1ம் தேதி) தொடங்கி இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாநிலங்களவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து எம்.பி. நீரஜ் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.
அதில் அவர்," நாடு முழுவதும் 2022-ல் புற்றுநோயால் 14.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2023ம் ஆண்டில் 15.33 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 2500 பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.
- கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக மூட வேண்டும்.
- தி.மு.க.வின் பலம் கூட்டணி தான் என்று முதலமைச்சர் அடிக்கடி கூறுவார்.
தஞ்சாவூர்:
2025 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஹாக்கி ஆண்களுக்கான உலக கோப்பை போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடைபெற உள்ளது.
இதற்கான உலகக் கோப்பை அறிமுக நிகழ்ச்சி இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் முதன் முறையாக ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதற்காக பெருமுயற்சி மேற்கொண்ட முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி.
உலகக்கோப்பை நடத்துவதன் மூலம் உலக நாடுகளின் பார்வை தமிழகம் மீது திரும்பி உள்ளது. இந்தியாவில் விளையாட்டின் தலைநகரமாக தமிழகம் மாறி உள்ளது.
பொதுவாகவே மழைக்காலம் என்று சொன்னால் எந்தெந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பள்ளிகளில் தண்ணீர் தேங்க கூடாது, அப்படி தேங்கினால் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும், கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக மூட வேண்டும். மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.
தி.மு.க.வின் பலம் கூட்டணி தான் என்று முதலமைச்சர் அடிக்கடி கூறுவார். ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்துகள் , கொள்கைகள் கொண்டவர்களாக இருந்தாலும் பொது எதிரியாக இருக்கக்கூடிய கொள்கை எதிரியாக இருக்கக் கூடியது யார் என்பது நாட்டு மக்கள் அறிவார்கள். அவர்களை எதிர்க்க வேண்டிய மிகப்பெரிய கட்டாயம் நமக்கு உள்ளது. ராகுல்காந்தி விஜயிடம் பேசியது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
- இயற்கை விவசாயம் குறித்த மாநாடு 19-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
- மாநாடு முடிந்து தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை மோடி சந்தித்து பேச வாய்ப்பு.
பிரதமர் மோடி கடைசியாக கடந்த ஜூலை மாதம் தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு வருகை தந்தார்.
3 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் மோடி வருகிற 19-ந் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயம் குறித்த மாநாடு 19-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த தகவலை தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி 19-ந் தேதி கர்நாடக மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். அன்று மதியம் கொடிசியாவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.
சுமார் ஒரு மணி நேரம் இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். இந்த ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே மோடி பங்கேற்க உள்ளதாகவும், அதன்பிறகு கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாநாடு முடிந்து தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை மோடி சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் தற்போதைய தமிழக பயணம் பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
இதனால் பா.ஜ.க.வினர் உற்சாகத்தில் உள்ளனர். மீண்டும் பீகாரில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில், அது அடுத்தடுத்த தேர்தல்களில் எதிரொலிக்கும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர்.
பீகார் தேர்தல் முடிவடைந்த சூழலில், பா.ஜ.க.வின் பார்வை அடுத்து தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்தநிலையில் மோடி வருகை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இனி வரும் காலங்களில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பயணம் தமிழகத்தில் தொடரும் என பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வருகை தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது இதுவரை தங்களுக்கு முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை எனவும், அறிவிப்பு வந்தால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் கூறினர்.
- நான் படிக்கிற வயதில் ஒரு மும்மொழி ஒன்றை சொல்லுவார்கள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிங்க.. படிங்க.. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் இயக்குனர் பிரேம் குமார் கூறியதாவது:-
நான் படிக்கிற வயதில் ஒரு மும்மொழி ஒன்றை சொல்லுவார்கள். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.
பிச்சை எடுத்தாலும் படிக்க வேண்டும் என்று சொல்வார்கள். தமிழ்நாடு பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, கல்வி அறிவுக்கும் பெயர் போனது. கல்வியை தன்மானத்திற்கு இணையாக கருத வேண்டும்.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிங்க.. படிங்க.. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். என்று நம் முதல்வர் சொல்வதை கேட்டு கல்வியின் முக்கியத்துவம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு பள்ளிகளில் கிடைக்கக்கூடிய சலுகைகளை பார்த்து ஆச்சரியமாக உள்ளது. நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர உள்ளார் என கூறப்பட்டது.
- பிரதமர் மோடியின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது.
புதுடெல்லி:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க., நாம் தமிழர் மற்றும் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, பிரதமர் மோடி கடந்த மாதம் 26-ம் தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த விழாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை, முப்பெரும் விழாவில் பங்கேற்று ரூ.1,000 மதிப்பிலான, பேரரசர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.
இதையடுத்து, வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வர உள்ளார் என்று கூறப்பட்டது. சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் பிரதமர் அங்கு சாமி தரிசனம் செய்வார் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 26-ந்தேதி பிரதமர் தமிழகம் வரவிருந்த நிலையில் அவரது சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.
மாற்றுப் பணி மற்றும் முக்கிய அலுவல்கள் காரணமாக இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
- மாநில வாரியாக அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது.
- 2-வது இடத்தில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் உள்ளன.
சென்னை:
நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சத்து 72 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. அதில் 10 லட்சத்து 21 ஆயிரம் பள்ளிகள் அதாவது 69.14 சதவீதம் அரசு பள்ளிகள் ஆகும். அதேபோல மொத்தமுள்ள 24 கோடியே 80 லட்சம் பள்ளி மாணவர்களில் 12 கோடியே 75 லட்சம் பேர் அதாவது 51.4 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால் ஆண்டுக்கு, ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 2021-22-ம் ஆண்டின் நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 14.32 கோடியாக இருந்தது. ஆனால் இது தற்போது 1 கோடியே 54 லட்சம் குறைந்து போய் 12 கோடியே 78 லட்சம் ஆகி இருக்கிறது.
மாநில வாரியாக அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் ஒரு கோடியே 74 லட்சத்து 66 ஆயிரத்து 574 பேர் படிக்கின்றனர். 2-வது இடத்தில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் தலா 1.58 கோடி மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். 10-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 48 லட்சத்து 40 ஆயிரத்து 34 மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.
ஆனால் தமிழகத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டுகளில் 53 லட்சத்து 14 ஆயிரத்து 845 மாணவர்களும், 2022-23-ம் ஆண்டுகளில் 50 லட்சத்து 42 ஆயிரத்து 26 மாணவர்களும் அரசு பள்ளிகளில் படித்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இந்த எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.
- கொல்கத்தாவில் சக ஓட்டுநர்கள் உடனான வாக்குவாதத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
- ராகுல் கழுத்தில் கொல்கத்தாவை சேர்ந்த நபர் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
கொல்கத்தாவில் தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் படியூர் ரோஸ்கார்டன் பகுதியை சேர்ந்த ராகுல் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் சக ஓட்டுநர்கள் உடனான வாக்குவாதத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
ராகுல் கழுத்தில் கொல்கத்தாவை சேர்ந்த நபர் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வௌியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






