என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "TamilNadu"
- தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.
- கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி:
1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பின்பு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்க ஆலோசிக்கப் பட்டது. 1956 ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டது. அவரவர் மாநிலங்களுக்கு அவரவர் விரும்பிய பெயர்கள் சூட்டப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு மதராஸ் என்ற பெயரே நீடித்தது. மதராஸ் மாகாணம் தமிழ்நாடு எனும் பெயர் சூட்ட பல போராட்டங்கள் நடைபெற்றது. தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். 1957-ல் மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் வைக்க தி.மு.க. சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்தது. பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் அது தோல்வியில் முடிந்தது.
1967-ல் தி.மு.க. அரசு அமைந்த போது ஜூலை 18-ந் தேதி சட்டமன்றத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் அண்ணா பெரும்பான்மை ஆதரவுடன் மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்ற தீர்மானம் நிறை வேற்றினார். அதனைத் தொடர்ந்து 1968-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி அதிகா ரப்பூர்வமாக மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என அறிவிக்கப் பட்டது.
இதனை நினைவு கூறும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் என அறிவித்தார். அதன்படி கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இதில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழ்நாடு என்ற பிரமாண்ட எழுத்து வடிவில் அமர்ந்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், மேனாள் ஓவிய ஆசிரியர் வேல்முருகன் உள்பட பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- குஜராத் மாநில அமைச்சர் ருஷிகேஷ் பாய்படேல் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
- பல வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து சவுராஷ்ட்டிரா மக்கள் புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
நெல்லை:
குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து சவுராஷ்டிரா தமிழ்சங்கம் விழாவை கடந்த 17- ந்தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறது.
சவுராஷ்டிரா தமிழ்சங்கமம் விழா
இதன் தொடர்ச்சியாக பாளை கே.டி.சி. நகரில் உள்ள தனியார் அரங்கத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா சங்க மாநிலத் தலைவர் அனந்தராமன் தலை மையில் நடைபெற்றது.
இதில் குஜராத் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உயர் மற்றும் தொழில்நுட்பக்கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ருஷிகேஷ் பாய்படேல் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு சங்கமம் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
பல வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து சவுராஷ்ட்டிரா மக்கள் புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர். இங்கு தமிழ் மக்களோடு இணைந்து தமிழக மக்களாகவே மாறி தொழில், கல்வி, வியாபாரம் என அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். மேலும் இங்குள்ள மக்களுக்கு சேவை யாற்றியும் வருகின்றனர். அந்த மக்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாடு, குஜராத் என அனைத்தும் ஓரே நாடுதான். ஒருவரோடு ஒருவர் நன்கு நட்பு பாராட்ட வேண்டும். இரு மாநிலங்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை இரு மாநிலத்த வர்களும் அறிந்து கொள்ள வேண்டும்்.
தொழில் ரீதியாக, வியாபார ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே இந்த சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பாதுகாப்பான மாநிலம்
தமிழ்நாட்டை பொறுத்த வரை அனைத்து மொழி பேசுபவர்களும் வாழ பாதுகாப்பான அமைதியான மாநிலமாகும். இங்குள்ளவர்கள் நட்பை பேணுவதிலும், வரவேற்ப திலும் சிறந்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் குஜராத் மாநிலம் மகேஷன் மாவட்ட கலெக்டர் நாகராஜன், சவுராஷ்டிரா பல்கலைக்கழக துணை வேந்தர் க்ரிஷ்பாய்பீமணி, மற்றும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த சவுராஷ்டிரா மக்கள் கலந்து கொண்டனர்.
- மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக அரசு விழாவில் கலந்து கொள்ள 7-ந்தேதி நெல்லை வருகிறார்.
- கன்னியாகுமரியில் இருந்து நெல்லை வரும் அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
நெல்லை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள்(புதன்கிழமை) நெல்லை வருகிறார். 8-ந்தேதி காலை நெல்லை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்கும் அவர் நலத்திட்ட உதவிகள், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்து முடிந்த பணிகளை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
இதையொட்டி நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-
மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று முதல்முறையாக அரசு விழாவில் கலந்து கொள்ள 7-ந்தேதி நெல்லை வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து நெல்லை வரும் அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அன்று இரவு தாழையூத்தில் தங்கும் அவர், மறுநாள் காலை (8-ந்தேதி) நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற உள்ள விழாவில் கலந்து கொள்கிறார். நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுமார் ரூ.330 கோடி மதிப்பில் சுமார் 29 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். தமிழகத்தில் 88 சதவீதம் பேர் திராவிட இயக்க மக்கள் தான் உள்ளனர். தமிழகத்தில் திராவிட ஆட்சிதான் எப்போதும் நடக்கும். வேறு யாரும் கால் ஊன்ற முடியாது.
திராவிட இயக்கத்தின் ஒரே தலைவராக நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உள்ளார்.
பெண்களுக்கு 50 சதவீதமும் பொறுப்புகள் அளித்து முன்மாதிரி கட்சியாக தி.மு.க. விளங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
தஞ்சாவூர் :
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1200 டன் நெல் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் அரவைக்காக சென்னை கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் மாநிலமாநாடு மற்றும் 8-ம் ஆண்டு விழா உடன்குடி பேரூராட்சி மண்டபத்தில் நடந்தது.
- மனித உரிமை ஆணையத்தின் மூலமாக மனித உரிமை மீறல்கள் எற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
உடன்குடி:
தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் மாநிலமாநாடு மற்றும் 8-ம் ஆண்டு விழா உடன்குடி பேரூராட்சி மண்டபத்தில் நடந்தது.
மாநிலத்தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழுவை சேர்ந்த காசிலிங்கம் ஆத்திமுத்து, முத்து, ரமேஷ், ஞானசேவியர், உடன்குடி நகர நிர்வாகி மகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட தலைவர் மூர்த்தி வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர் மனோகரன் தொகுப்புரை வழங்கினார்.
இந்த அமைப்பின் நிறுவனரும், மாநில பொதுச் செயலாளருமான முகைதீன்கல்வி உபகரணங்கள், சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி தீர்மானங்களை வாசித்தார்.
உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் விவசாய நிலங்களை எடுக்கக்கூடாது, தரிசு நிலங்களை தான் எடுக்கவேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட்ஆலையை எந்த சூழ்நிலையிலும் திறக்கஅரசுஅனுமதி வழங்கக்கூடாது.
தமிழகம் முழுவதும் மரங்கள் மீது போர்டுகளை வைத்து ஆணிகளால் சேதம் ஏற்படுத்துவது, கம்பியைவைத்து விளம்பரம் போர்டுகளை கட்டுவது போன்றவற்றை உடனடியாக தடுக்க வேண்டும். பனங்கருப்பட்டி கற்கண்டுகளில் கலப்படம் செய்ய கூடாது,
மனித உரிமை ஆணையத்தின் மூலமாக மனித உரிமை மீறல்கள் எற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவர் சுந்தர் உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் அன்பு ராணி, மும்தாஜ்பேகம், முன்னாள் கவுன்சிலர் சலீம், விவசாய சங்கத் தலைவர் சந்திரசேகர் சிவலூர், ஜெயராஜ், அசோக், சுப்பையா, முகைதீன் அப்துல் காதர், கலீல்ரகுமான், முரசுதமிழ்ப்பன், விடுதலை செழியன் உட்பட பலர் கலந்து கொன்டனர்.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
ராயலசீமா முதல் உள் தமிழகம் வழியாக குமரிக்கடல் வரை காற்று மண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதனாலும், நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையும் எதிர்பார்க்கலாம். உள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தேனி மாவட்டம் கூடலூரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
மதுரை மாவட்டம் சிட்டாம்பட்டி, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் ஆயக்குடியில் 3 செ.மீ. மழையும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகத்தை மிரட்டி வந்த பானி புயல் ஆந்திரா, ஒடிசாவை நோக்கி திசை திரும்பியுள்ள வேளையிலும் இந்த புயல் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு 4 மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அவ்வகையில் தமிழகம் உள்பட 4 மநிலங்களுக்கு ரூ.1,086 கோடி நிதி ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு ரூ.309 கோடி ரூபாயும், ஆந்திரா 200.25 கோடி ரூபாயும், ஒடிசா 340.87 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 235.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மே 3ந்தேதி ஒடிசாவின் பூரி மாவட்ட கடலோர பகுதியில் ஃபானி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. #CycloneFani
பாராளுமன்றத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் தங்கம், பரிசுப்பொருட்கள், சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏப்ரல் 24-ம் தேதி வரை நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருட்கள், தங்கம் மற்றும் பரிசுப் பொருட்களின் மதிப்பு ரூ.3152.54 கோடி ஆகும்.
அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.214.95 கோடி பணம், ரூ.708.69 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.3.54 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.38 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.8.13 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆந்திராவில் ரூ.137.27 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ரூ.48.68 கோடி, உத்தர பிரதேசத்தில் ரூ.40.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.524.34 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத் கடற்கரையில் மட்டும் ரூ.500 கோடி மதிப்பிலான 100 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElections2019 #ElectionFlyingSquad #CashSeizure