என் மலர்

    நீங்கள் தேடியது "voters"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது.
    • 290 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் சட்டமன்ற தொகுதி 9.11.22ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி 1லட்சத்து90 ஆயிரத்து379 ஆண்களும், 1லட்சத்து94ஆயிரத்து38 பெண்களும், 69 திருநங்கைகளும் ஆக மொத்தம் 3லட்சத்து 84 ஆயிரத்து486 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த 2 நாள் முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது. அதில் நேரடியாகவும் மற்றும் இணையதளம் மூலமாகவும் 1841 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

    அதே போல் 290 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருத்தம் மற்றும் குடிமாற்றத்திற்காக 816 பேர் விண்ணப்பித்துள்ளனர். முகாமில் நேரடியாக 2218 விண்ணப்பங்களும், இணையதளம் மூலமாக 729 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 2947 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று பல்லடம் தாசில்தார் நந்தகோபால் தெரிவித்தார்.

    மேலும் வரைவு வாக்காளர் பட்டியிலில் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு வருகிற 8.12.22 வரை அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். வருகிற 26-ந் தேதி மற்றும் 27-ந் தேதி ஆகிய 2 நாட்களும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5.1.23 அன்று வெளியிடப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதற்கிடையே பல்லடம் நகராட்சி பகுதியில் 253 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கவும், ஒருவர் நீக்கத்திற்கும்,திருத்தம் மற்றும் குடிமாற்றத்திற்காக 65 பேரும் ஆக மொத்தம் 319 பேர் விண்ணப்பித்துள்ளனர்.மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாமில் தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.
    • மாவட்டத்தின் மொத்தம் உள்ள 5 தொகுதிகளிலும் 13,51,178 வாக்காளர்கள் உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.

    கலெக்டர் வெளியிட்டார்

    மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம், பயிற்சி கலெக்டர் கோகுல், தேர்தல் தாசில்தார் கந்தப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி காசி மணி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சங்கர், அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் சிந்து முருகன், காங்கிரஸ் சார்பில் சொக்கலிங்க குமார், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதிதாக 7,722 பேர் சேர்ப்பு

    5.1.2022-ன் படி நெல்லை மாவட்டத்தில் 13,86,140 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு நெல்லை தொகுதியில் 1,374 பேரும், அம்பையில் 1,241 பேரும், பாளையில் 2,059 பேரும், நாங்குநேரியில் 1,779 பேரும், ராதாபுரத்தில் 1,269 பேரும் என புதிதாக 7,722 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதே போல் 42 ஆயிரத்து 684 பேர் நீக்கப்பட்டும், 5,283 பேர் திருத்தம் செய்யப்பட்டும், 1,006 பேர் முகவரி மாற்றமும் செய்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி மாவட்டத்தின் மொத்தம் உள்ள 5 தொகுதிகளிலும் 13,51,178 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6,61,503 பேர் ஆவர். பெண்கள் 6,89,557 பேர் ஆவர். 3-ம் பாலினத்தவர் 118 பேர் ஆவர்.

    வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    சிறப்பு முகாம்

    வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இதனை பார்த்து பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றை ஆன்-லைன் மூலமாகவும், நேரடியாகவும் செய்து கொள்ளலாம்.

    இதற்காக இந்த மாதம் 12,13,26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும். நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை 51.76 சதவீதம் பேர் இணைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 01.08.2022 முதல் தொடங்க அரசு உத்தரவிட்டது.
    • அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் வருகிற 17.09.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

    தென்காசி:

    இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இரு வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 01.08.2022 முதல் தொடங்க அரசு உத்தரவிட்டது.


    தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் வருகிற 17.09.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

    அதன்படி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் VHA (Voter Help Line Mobile App), என்ற செயலி மூலமாகவும் இணைக்கலாம். மேலும் https://tenkasi.nic.in/ இணையத்தளத்தின் மூலம் படிவம் -6பி -ஐ பதிவிறக்கம் செய்தும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

    அனைத்து வாக்காளர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் பணித்துள்ளதை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடி களிலும் சிறப்பு முகாம்
    • முகாமில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிறப்பு முகாம்

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் பணித்துள்ளதை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடி களிலும் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்பட உள்ளது. முகாமில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    பொதுமக்கள் தங்கள் முகவரிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் சென்று அங்கு பணியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் படிவம் 6 பி பூர்த்தி செய்து தங்களது ஆதார் அட்டை விவரங்களை முன்வந்து http://www.nvsp.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது Play store-ல் Voter's Help Line App-ஐ பதிவிறக்கம் செய்து ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம்.

    இந்த வாய்ப்பினை தகுதி உள்ள அனைவரும் பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 லட்சத்து 63 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
    • 295 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    உடுமலை :

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி இந்த பணிகள் கடந்த 1 ந்தேதி தொடங்கியது. உடுமலை சட்டமன்ற தொகுதியில் சுமார் 2 லட்சத்து 63 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

    மொத்தம் 295 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்கு சாவடிக்கு உட்பட்ட பகுதியிலும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கான சிறப்பு முகாம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. முகாமை ஆடியோ ஆர் .ஜஸ்வந்த் கண்ணன் தொடங்கி வைத்தார். உடுமலை நகராட்சி தலைவர் மத்தின், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், தேர்தல் துணை தாசில்தார் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முகாமிற்கு வந்திருந்த பொதுமக்கள் 50 பேருடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது.

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 32 மாணவ மாணவிகளின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட்டது. உடுமலை சட்டமன்ற தொகுதியில் இதுவரை 20 சதவீத வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
    • வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் சக்கராப்பள்ளி கிராம ஊராட்சியின் வார்டு எண்-3க்கான உறுப்பினர் தேர்தல் சக்கராப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் முகமது அனஸ் ராஜா, முகமது இஸ்மாயில், சம்சுதீன் ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர். ஒரு வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்காளர்கள் 494, பதிவான வாக்கு எண்ணிக்கை 285, இதில் ஆண் வாக்காளர்கள் 122, பெண் வாக்காளர்கள் 163, மொத்தம் 58 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    வாக்கு முடிந்தவுடன் வாக்கு எந்திரங்களை மூடி முத்திரையீட்டு பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    முன்னதாக தேர்தல் பார்வையாளர் சங்கரன் வாக்கு பதிவு நடைபெறும் மையத்தினை பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் காந்திமதி, கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன், மண்டல அலுவலர் கண்ணன், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் சுகுமார், உதவியாளர்கள் மோகன்ராஜ், தங்கப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப் இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் செய்திருந்தனர். வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 8 பெயர்கள் விடுபட்டுள்ளதாக அப்பகுதி வாக்காளர்கள் அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • உரிய ஆவணம் இருந்தும் இப்போது மட்டும் எங்களை வாக்களிக்க அனுமதிக்காததை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டத்தில் கைரேகை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் முதியோர் உள்ளிட்ட மாற்றுதிறனாளிகளுக்கு கைரேகை பதிவாகாமல் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே அவர்கள் பயன்பெறும் வகையில் அவினாசி தாலுகா அலுவலகத்தில் ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடந்தது. இதில் முதியோர் உள்ளிட்டநூற்றுக்கு மேற்பட்டவர்கள் காலை 8 மணி முதல் ஆதார் சேவை மையத்தில் காத்திருந்தனர். 10.30 மணி அளவில அலுவலர் வந்து 60 நபர்களுக்கு மட்டுமே இன்று பதிவு செய்யப்படும் என்றதால் பயனாளிகள் அனைவரும் நாங்கள் காலை 8 மணிமுதல் இதற்காக காத்து நிற்கிறோம். அனைவருக்கும் இன்றே பதிவு செய்ய வேண்டும் என்று அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆதார் பதிவு அலுவலர் கூறுகையில் ,ஒரு நபருக்கு முழுமையாக பதிவு செய்வதற்கு 20 நிமிடங்கள் ஆகிறது.

    இரவு 8 மணி வரை எவ்வளவு பேருக்கு பதிவு செய்ய முடியுமோ அதை செய்யஉள்ளதாக கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இப்பகுதியில் மொத்தமாக 10 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தனித்தனியே வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
    • வாக்கு சீட்டு முறையில் நடைபெறும் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி தேர்தல் பதவிக்களுக்கான ஒரு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், ஒரு ஊராட்சி மன்ற தலைவர், 3 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் மடப்புரம் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மீதமுள்ள நான்கு இடங்களில் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி கீழையூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினருக்கான தேர்தல் துவங்கியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி வாக்காளர்கள் வாக்கு சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க, சுயேட்சை என 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன. 5749 வாக்காளர்கள் கொண்ட இப்பகுதியில் மொத்தமாக 10 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தனித்தனியே வாக்குபதிவு நடைப்பெற்று வருகிறது.

    வாக்கு சீட்டு முறையில் நடைபெறும் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இதே போல திருமுருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் 3 பேர் போட்டியிடுகின்றனர்.3240 வாக்காளர்களைக் கொண்ட ஊராட்சியில் 5 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இதேபோல தலைஞாயிறு ஒன்றியம் பனங்காடி, நாகை ஒன்றியம் சங்கமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் வார்டு உறுப்பினருக்கான தேர்தலும் தலா ஒரு வாக்கு சாவடி மையத்திலும் என அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்கு சாவடி மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளன‌. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலுள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழ்நாட்டில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் (1.3 சதவீதம்) எந்த வேட்பாளர்களையும் விரும்பாமல் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க. கூட்டணி மொத்தம் பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 (51.5 சதவீதம்) வாக்குகளை பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 1 கோடியே 26 லட்சத்து 6  ஆயிரத்து 636  வாக்குகளை (29.8 சதவீதம்) பெற்றது.



    மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் மொத்தமாக 72 லட்சத்து 50 ஆயிரத்து 210 (17.1 சதவீதம்) வாக்குகளை  பெற்றுள்ளன. 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் (1.3 சதவீதம்) நோட்டா சின்னத்தில் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்காளர்கள் 21 ஆயிரத்து 861 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.

    இதேபோல் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களிலும் 47 ஆயிரத்து 191 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாராளுமன்ற தேர்தலில் இதர மாநிலங்களுக்கு மாறாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் தங்களது தீர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பல மாநிலங்களில் பாஜக வேட்பாளர்கள் அபாரமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர். சில மாநிலங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர்களும் காங்கிரஸ் கூட்டணி மற்றும் அம்மாநிலங்களில் செல்வாக்கு பெற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் சரிசமமான பலத்துடன் இறுதிச்சுற்று முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

    ஆனால், இவற்றுக்கு எல்லாம் மாறாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் தங்களது தீர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதிமாறன் (மத்திய சென்னை), டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்), ஆ.ராசா (நீலகிரி), ஜெகத் ரட்சகன் (அரக்கோணம்), பழநிமாணிக்கம் (தஞ்சாவூர்) மற்றும் கனிமொழி (தூத்துக்குடி) ஆகிய முக்கிய பிரமுகர்கள் காலையில் இருந்தே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

    மேலும் மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலைகள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், வடசென்னை, சேலம், கடலூர், பொள்ளாச்சி, தென்காசி ஆகிய தொகுதிகளில் லட்சத்துக்கும் அதிமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

    தி.மு.க.வின் வெற்றிக் கணக்கில் முதல் வரவாக நீலகிரி தொகுதியில் மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


    தி.மு.க. கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த 2 தொகுதிகளிலும் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. பல வேட்பாளர்கள் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் இவர்களின் வெற்றி உறுதியாகி விட்டதாக கருதப்படுகிறது.

    நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் முன்னிலையில் உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சிவகங்கை, திருச்சி, ஆரணி, கிருஷ்ணகிரி, தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், திருவள்ளூர், கரூர், திருவள்ளூர் ஆகிய 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

    சிவகங்கையில் முன்னாள் மத்திய மந்திரியின் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும், திருச்சியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், ஆரணியில் விஷ்ணுபிரசாத்தும், கன்னியாகுமரியில் வசந்தகுமாரும் முன்னிலையில் உள்ளனர்.

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தார். பின்னர் சற்று பின்தங்கி மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.

    விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலையில் உள்ளார். ஈரோடு தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலையில் உள்ளார்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய 2 தொகுதியிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மதுரை, கோவை ஆகிய 2 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த கட்சி வேட்பாளர் நவாஸ்கனி தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் உள்ளார்.

    அ.தி.மு.க. கூட்டணி ஒரே ஒரு தொகுதியான தேனியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இங்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுமான ரவிந்திரநாத் குமார் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

    இதேபோல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே புதுவையிலும் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.