search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special camps"

    • சிறப்பு முகாம்கள் இம்மாதம் 4,5, 18,19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது.
    • முகாம்களில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் இணைப்பதில் ஆர்வம் காட்டிட வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், பெயர் பிழை திருத்தம்,முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்வதற் காக இம்மாதம் 4,5,18,19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது. எனவே தென்காசி தெற்கு மாவட்ட பகுதிக்குட் பட்ட தென்காசி, ஆலங்குளம், கடையநல் லூர் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இம் முகாம்களில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், பாக முகவர்கள், பாக பொறுப் பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, பெயர் நீக்கம், பிழை திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றில் ஈடுபடுவதுடன். 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் இணைப்பதில் ஆர்வம் காட்டிட வேண்டும். குறிப்பாக இளைஞர்களை அதிகளவில் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட ஆணை பிறப்பித்து உள்ளார்.
    • முகாம்கள் இந்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் நிறைவு பெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப்பெறாத கிராமங்களில் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட ஆணை பிறப்பித்து உள்ளார்.

    அதன்படி 2023-24-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 20 முகாம்கள் வீதம் 300 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    முகாம்கள் இந்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இம்முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும்.

    நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கிராமங்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது.

    முகாம்கள் நடத்தப்படும் நாள் மற்றும் இடம் அந்தந்த கால்நடை உதவி மருத்து வர்களால் அறிவிக்கப்படும். அந்த நாளில் கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகளை அழைத்து சென்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் தி.மு.க.வினர் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
    • நேரடியாக பூர்த்தி செய்து கொடுத்தமைக்கு ஒப்புகை சீட்டு தங்களிடம் இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லையெனில் புகார் அளிக்க வசதியாக இருக்கும்.

    திருப்பூர்:

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் தி.மு.க.வினர் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு சிறப்பு முகாம் அடுத்த மாதம் 4-ந் தேதி, 5-ந் தேதி, 18-ந் தேதி, 19-ந் தேதி ஆகிய நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் இறுதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    1-1-2024 அன்று 18 வயது நிரம்பி அதாவது 1-1-2006-ம் நாளுக்கு முன் பிறந்து இருக்க வேண்டும். புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தங்களை மேற்கொள்வதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களையும், புதிதாக குடி பெயர்ந்துள்ள வாக்காளர்களின் பெயர்களையும வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    வருகிற 27-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு அந்தந்த வாக்குச்சாவடி அமைவிட அலுவலரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுத்து அற்கான ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இதுமட்டுமின்றி ஆன்லைன் மூலமும் www.nvsp.இந்த மற்றும்Voters helpline App-ல் பதிவு செய்து குறுஞ்செய்தி மூலம் பதிவை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு ஆன்லைனை பயன்படுத்தி வாக்காளர் சேர்ப்பது மட்டுமில்லாமல் இறந்து போன வாக்காளரை நீக்கலாம். ஆன்லைனை பயன்படுத்தி படிவங்களை பதிவேற்றம் செய்து ஒருவர் எத்தனை வாக்காளர்களை வேண்டுமானாலும் நீக்கலாம். அவ்வாறு செய்ய விரும்புவோர் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

    நேரடியாக பூர்த்தி செய்து கொடுத்தமைக்கு ஒப்புகை சீட்டு தங்களிடம் இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லையெனில் புகார் அளிக்க வசதியாக இருக்கும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, ஊர் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் மற்றும் கட்சியினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • கொடைக்கானல் மலை கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு உரிமை தொகை சரியாக கிடைக்கப்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது
    • மறுபதிவு செய்ய பெண்களுக்கு கூடுதலாக முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 தமிழக அரசு மூலம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது . கொடைக்கானல் மலை கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு உரிமை தொகை சரியாக கிடைக்கப்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இதில் விண்ணப்பம் செய்த பெண்களில் நிராகரிப்பு செய்த விண்ணப்பங்கள் அரசு அறிவித்தது போல் மீண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டுமென தெரிவித்து இருந்தது .

    இதன் அடிப்படையில் பலரும் தங்களது மறுபதிவு விண்ணப்பங்களை அனுப்பி வரும் நிலையில் கொடைக்கானலில் மலை கிராமப் பகுதி பெண்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர் . குறிப்பாக இ-சேவை மையங்கள் மேல் மலை மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் முறையாக செயல்படாததால் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையத்தை மக்கள் நாடும் நிலை தொடர்ந்து வருகிறது.

    இதனால் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் பதிவு செய்யும் இடத்தில் ஒரு நபர் மட்டுமே பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருவதாலும் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது . இதனால் வயதானவர்கள் முதல் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலையானது ஏற்பட்டுள்ளது .

    மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு விண்ணப்பம் மறுப்பதிவு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது . எனவே மறுபதிவு செய்ய பெண்களுக்கு கூடுதலாக முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிளஸ்-2 முடித்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர சிறப்பு முகாம்கள் நடந்தது.
    • வருகிற 4-ந்தேதி சிவகாசி யிலும், 8-ந்தேதி சாத்தூரிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ- மாணவிகளுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்து முகாமின் மூலம் பயன்பெற்ற 11 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வ தற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    நமது விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7,575 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். அதில் 7226 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 4,421 பேர் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

    இதில் 3,332 பேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களிலும், 595 பேர் பொறி யியல் கல்லூரிகளிலும், 48 பேர் மருத்துவக் கல்லூரி களிலும் சேர விண்ணப் பித்துள்ளனர்.

    உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 2,805 மாணவ-மாணவிகளை கண்டறிந்து, அவர்களை மேல் படிப்பில் சேர்ப்ப தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தற்போது 586 மாணவர்கள் மேல் படிப்பில் சேராமல் உள்ளனர்.

    அவர்களும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் வகையில், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி மற்றும் திருச்சுழி பகுதிகளில், இதுவரை கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத 202 மாணவ- மாணவிகளை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் இன்று நடந்தது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 4-ந்தேதி சிவகாசி யிலும், 8-ந்தேதி சாத்தூரிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    தமிழக அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணாக்கர்களை சேர்ப்பதற்கு அனுமதியும், மாணவர்கள் சேர்க்கைக்கான கால நீட்டிப்பும் செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1-ந் தேதி முதல் 10 நாட்கள் நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனா ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் (கி.ஊ) வழங்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனா ளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீலநிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் இது வரை 2067 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும் இருமா தங்களுக்கு ஒருமுறை 2-வது செவ்வாய்க்கிழமை இணைஇயக்குநர், திட்டஇயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னிலையில் குறைகேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன்தொடர்ச்சியாக வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதிவரை அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட முகாம் நடைபெறும் நாட்களில் தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி நீலநிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 2022-2023 ம் நிதியாண்டில் தமிழ்நாட்டை சார்ந்த சிறுபான்மையின மக்களுக்கு கடன் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு 2022-2023 ம் நிதியாண்டிற்கு ரூ.1.55 கோடி அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளது.

    தமிழ்நாடு சிறுபான்மையினர்பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் டாம்கோ விராசாட் (Virasat) கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடனுதவி சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.

    புதிய தொழில், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்போர் ரூ.98,000, நகர்புறங்களில் வசிப்போர் ரூ.1,20,000 இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் சாதிச்சான்று, ஆதார் கார்டு, வருமான சான்று, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்- திட்ட தொழில் அறிக்கை, டிரைவிங் லைசென்ஸ் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுபவர்கள் மட்டும்) மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    கடன் உதவி முகாம்கள் நடைபெறும் இடங்கள் : திருப்பூா் வடக்கு வட்டத்தில் திருப்பூா் நகர கூட்டுறவு வங்கி, திருப்பூா் தெற்கு வட்டத்தில் கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் வருகிற1-ந் தேதியும், அவிநாசி வட்டத்தில் ராக்கியாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி வட்டத்தில், ஊத்துக்குளி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 2-ந் தேதியும், பல்லடம் வட்டத்தில், பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில் காங்கயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 5 ந் தேதியும் முகாம்கள் நடைபெறும்.

    அதேபோல தாராபுரம் வட்டத்தில் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, உடுமலை வட்டத்தில் உடுமலை நகர கூட்டுறவு வங்கி, மடத்துக்குளம் வட்டத்தில் கணியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 6ந்தேதியும் முகாம் நடைபெறும். முகாம் காலை 10-30 மணி முதல் மாலை 4மணி வரை நடைபெறும்.

    மேலும், தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்.0421-2999130 மற்றும் மின்னஞ்சல் dbcwotpr@gmail.com – ஐ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் உள்ள வீடுகள், கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாயத்திற்கான மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நெல்லை மின் பகிர்மான வட்ட மத்திய அலுவலகத்தில் இன்று தொடங்கப்பட்டது.
    • நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் உள்ள வீடுகள், கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாயத்திற்கான மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நெல்லை மின் பகிர்மான வட்ட மத்திய அலுவலகத்தில் இன்று தொடங்கப்பட்டது.

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ் மணி, நெல்லை நகர்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் வீர லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைமை பொறியாளர் செல்வக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாம் அலுவலக த்தை திறந்து வைத்தார்.

    இதில் உதவி செயற்பொறியாளர்கள் எட்வர்ட் பொன்னுசாமி, தங்கமுருகன், சின்னசாமி, ராஜகோபால், சங்கர, சண்முகராஜன், சலோமி வாசுகி, சசிரேகா, உதவி மின் பொறியாளர்கள் வெங்கடேஷ், சங்கரநா ராய ணன், சரவணன் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த சிறப்பு முகாம் இன்று முதல் வருகிற டிசம்பர் 31-ந் தேதி வரை நடைபெறும். மேலும் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள 103 பிரிவு அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி சிறப்பு முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமினை பயன்படுத்தி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.

    இத்தகவலை நெல்லை மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம்: சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் கூறினார்.
    • உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்று த்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ராமநாத புரம் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா தலைமை தாங்கி 210 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.

    அவைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா பேசும்போது கூறியதாவது:-

    மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகின்றன. அடையாள அட்டை பெறாதவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்ப டுகிறது. தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இதுபோன்ற சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு உபகரணங்கள் வேண்டுபவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி பயில்வோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டமும் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்க ளுக்கு தேவையான பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. தகுதியுடைய பயனாளிகள் இதுபோன்ற அரசின் திட்டங்களை விண்ணப்பித்து பெறலாம்.

    இதேபோல் தண்டு வடம் பாதித்த மாற்றுத்திற னாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படு கிறது. மேலும் உயர் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் அவ்வப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், ஊன்றுகோல், கருப்பு கண்ணாடி, காதொலி கருவி, செயற்கைகால் மற்றும் கடிகாரம் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற சிறப்பு முகாம் மற்றும் தங்கள் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாம் ஆகியவற்றில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு உடல் ஆரோக்கி யத்தை பாதுகாத்து கொள்ளுவதுடன் அரசின் திட்டங்களையும் பெற்று பயன்பெற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், ஆனந்த சொக்கலிங்கம், கார்த்திகேயன், சுபா சங்கரி, முட நீக்கியல் வல்லுநர் ஜெய்சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று நடத்தப்பட்டது.
    • மாவட்டத்தை பொறுத்தவரை ஏராளமான முகாம்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் வரவில்லை.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது.

    நெல்லை

    நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதியிலும் இன்று ஏராளமான இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

    இது தவிர மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை செலுத்த தவறியவர்கள், முன்னெச்சரிக்கை தவணை செலுத்த தகுதியானவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண்ணுடன் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள முகாமிற்கு சென்று உரிய தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.

    பூஸ்டர் டோஸ்

    மாநகரப் பகுதியில் பெரும்பாலான முகாம்களில் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டு இன்னும் சுமார் 10 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது.

    இதேபோல், இருதவணை தடுப்பூசி செலுத்திய பெரும்பாலானோர் இன்னும் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை. மாநகர பகுதியில் மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரியில் இன்று காலை சிலர் தடுப்பூசி போட வந்திருந்தனர். அவர்களுக்கு நர்சுகள் தடுப்பூசி செலுத்தினர். இதேபோல் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடமான சந்திப்பு ரெயில் நிலையத்திலும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    காரணம் என்ன?

    மாவட்டத்தை பொறுத்தவரை ஏராளமான முகாம்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் வரவில்லை.

    கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டதால் மக்களிடையே தடுப்பூசி செலுத்துவதற்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
    • நெல்லை மாநகரில் மட்டும் மொத்தம் 251 மையங்களில் நாளை தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் கொரோனா புதிய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சிறப்பு முகாம்கள்

    தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2,012 மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர 102 நடமாடும் குழுக்கள் மூலம் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லை மாநகரில் மட்டும் மொத்தம் 251 மையங்களில் நாளை தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதில் 12 வயதுக்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூரில் காய்ச்சலை தடுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.
    வேலூர்:

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் காய்ச்சல் அதிகரித்து வருவதால், நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகரம் மட்டுமல்லாது கிராமங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குகிறது. இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் ஒன்றியத்துக்கு 3 மருத்துவ முகாம் என 20 ஒன்றியங்களில் மொத்தம் 60 முகாம்கள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்த பின்னர், 'டெங்கு' அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்வார்கள்.

    அத்துடன் காய்ச்சல் பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் பொதுமக்களும் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

    உதாரணமாக, மழைக்காலத்தில் தண்ணீரை நன்கு காயவைத்து குடிக்க வேண்டும். உணவுகளை சமைத்த உடனே சிறிது நேரத்தில் உட்கொள்வது நல்லது. நீண்ட நேரம் கழித்து உட்கொள்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உணவுக்கு முன் தங்கள் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

    அதுமட்டுமின்றி, திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையோ, அரசு மருத்துவமனைகளையோ அணுகி சிகிச்சை பெற வேண்டும். வீட்டின் அருகில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×