என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவி கலெக்டர்"

    • சிறுமியாக இருந்த பார்வதி 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
    • கிருஷ்ண தேஜா அளித்த ஊக்கமும் அறிவுரையும், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை பார்வதியின் மனதில் விதைத்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் அம்பலப்புழையை சேர்ந்தவர் கே.எஸ்.கோபகுமார். இவர் ஆலப்புழை கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவருடயை மனைவி ஸ்ரீ கலா, ஆசிரியர். இவர்களது மகள் பார்வதி கோபகுமார் (வயது27). இவர் கடந்த 2010-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து கொண்டு இருந்த போது, ஒரு நாள் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நடந்த விபத்தில் வலது கையை இழந்தார். அதன்பின்பு அவருக்கு செயற்கை கை பொருத்தப்பட்டது.

    எழுதுவது உள்பட வலது கையின் அனைத்து செயல்பாடுகளையும் இடது கையால் நிறைவேற்ற தொடங்கினார். சிறுமியாக இருந்த பார்வதி 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

    தொடர்ந்து பெங்களூருவில் சட்ட கல்லூரியில் படிப்பை முடித்த அவர், இடைக்கால பயிற்சிக்காக ஆலப்புழை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அப்போது ஆலப்புழை கலெக்டராக எஸ்.சுகாஸ் பணியாற்றினார். அந்த அலுவலகத்தில் அப்போது உதவி கலெக்டராக கிருஷ்ண தேஜா பணியாற்றி வந்தார். அப்போது அவர் அளித்த ஊக்கமும் அறிவுரையும், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை பார்வதியின் மனதில் விதைத்தது. அந்த விதையை மரமாக்க கடினமாக உழைத்த பார்வதி 2024-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் 282-வது இடத்தை (ரேங்க்) பிடித்து வெற்றி பெற்றார். தற்போது எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

    ஒரு கை பலத்தாலும் மன உறுதியாலும், கடின உழைப்பாலும், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று உதவி கலெக்டராக பொறுப்பேற்றுள்ள பார்வதி கோபகுமாருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. உதவி கலெக்டர் பார்வதியின் தங்கை ரேவதி திருவனந்தபுரத்தில் படித்து வருகிறார்.

    • ராமநாதபுரம்: சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் கூறினார்.
    • உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்று த்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ராமநாத புரம் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா தலைமை தாங்கி 210 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.

    அவைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா பேசும்போது கூறியதாவது:-

    மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகின்றன. அடையாள அட்டை பெறாதவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்ப டுகிறது. தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இதுபோன்ற சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு உபகரணங்கள் வேண்டுபவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி பயில்வோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டமும் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்க ளுக்கு தேவையான பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. தகுதியுடைய பயனாளிகள் இதுபோன்ற அரசின் திட்டங்களை விண்ணப்பித்து பெறலாம்.

    இதேபோல் தண்டு வடம் பாதித்த மாற்றுத்திற னாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படு கிறது. மேலும் உயர் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் அவ்வப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், ஊன்றுகோல், கருப்பு கண்ணாடி, காதொலி கருவி, செயற்கைகால் மற்றும் கடிகாரம் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற சிறப்பு முகாம் மற்றும் தங்கள் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாம் ஆகியவற்றில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு உடல் ஆரோக்கி யத்தை பாதுகாத்து கொள்ளுவதுடன் அரசின் திட்டங்களையும் பெற்று பயன்பெற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், ஆனந்த சொக்கலிங்கம், கார்த்திகேயன், சுபா சங்கரி, முட நீக்கியல் வல்லுநர் ஜெய்சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விடுதிகளை முசிறி கோட்டாட்சியர் மாதவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • உணவின் தரத்தையும் பரிசோதனை செய்த கோட்டாட்சியர் மாதவன் மாணவிகள் படித்து உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கில் அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளை பயன்படுத்தி சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.

    திருச்சி :

    தா.பேட்டை அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்கி படிப்பதற்கு வசதியாக தனித்தனி விடுதிகள் அமைந்துள்ளது. இந்த விடுதிகளை முசிறி கோட்டாட்சியர் மாதவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மாணவர்கள் தங்கும் இடம், சமையலறை மற்றும் விடுதி சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்தார்.

    மேலும் மாணவிகளுக்கு மதியம் கோழிக்கறி குழம்புடன் தயார் செய்யப்பட்டிருந்த உணவின் தரத்தையும் பரிசோதனை செய்த கோட்டாட்சியர் மாதவன் மாணவிகள் படித்து உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கில் அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளை பயன்படுத்தி சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.

    இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் கீதாஞ்சலி, கிராம நிர்வாக அதிகாரி சிவபிரபு, விடுதி காப்பாளர் எழிலரசி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    ×