search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kochi"

    • சென்னையின் அணி அக்டோபர் 10-ந் தேதி மோகன் பகானை எதிர்கொள்கிறது.
    • இந்த போட்டித் தொடரில் புதிதாக பிளே-ஆப் சுற்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

    கொச்சி:

    11 அணிகள் கலந்து கொள்ளும் 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது. 

    தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 10-ந்தேதி மோகன் பகானை கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது.

    அதே சமயம் சென்னை அணிக்குரிய முதல் உள்ளூர் ஆட்டம் (பெங்களூரு அணிக்கு எதிராக) நேரு ஸ்டேடியத்தில் 14-ந்தேதி நடக்கிறது. 2 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டிக்கான அட்டவணையில் புதிதாக 'பிளே-ஆப்' சுற்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும்.

    புள்ளி பட்டியலில் 3-வது முதல் 6-வது வரை இடம் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாடும். இவற்றில் இருந்து மேலும் இரு 2 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

    கேரளாவில் ஆண்கள் பள்ளிகளில் ‘நாப்கின்’ எந்திரம் வைத்ததாக கூறி மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளதால், அதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.#SanitaryNapkinMachines
    கொச்சி:

    பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை எரித்து அழிப்பதற்காக எந்திரங்கள் உள்ளன. பல மாநிலங்களில் இவற்றை பெண்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் நிறுவி இருக்கிறார்கள்.

    கேரள மாநிலத்திலும் இதேபோல பல பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் எந்திரம் மற்றும் நாப்கினை எரிக்கும் எந்திரங்களை வைத்துள்ளனர்.

    கொச்சி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் எந்திரம் வைக்கப்பட்டது. கடந்த 2017-18 நிதியாண்டில் வைக்கப்பட்ட நாப்கின் எந்திரங்களுக்கான செலவு தொகைகளை கணக்கிட்டு நிதி தணிக்கை குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதில் பள்ளிகளில் நாப்கின் எந்திரங்களை பொருத்த ரூ.26 லட்சத்து 90 ஆயிரம் செலவிட்டதாக கூறப்பட்டிருந்தது.

    நிதி தணிக்கை குழு அதிகாரிகள், இந்த கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஆண்கள் பள்ளிகளிலும் நாப்கின் எந்திரம் வைத்ததாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. இதை கவனித்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

    அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஆண்கள் பள்ளிகளுக்கு சென்று பார்த்தபோது, சில இடங்களில் எந்திரங்கள் பொருத்தப்படாமல், அறையில் வைக்கப்பட்டிருந்தது. சில பள்ளிகளில் பொருத்தப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருந்தது தெரியவந்தது.  

    இதையடுத்து ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்திற்கான செலவுக்கு நிதி தணிக்கை துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும், இதில் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளதால் அதுபற்றி விசாரணை நடத்தவும் தணிக்கை துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்த மோசடியின் பின்னணியில் யார், யார் இருந்தார்கள்? என்பது இனிமேல் தான் தெரியவரும். #SanitaryNapkinMachines

    கேரளா மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூர் உறவினர்கள் கொச்சியில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர். #Congress #ShashiTharoor #relativesjoinBJP
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பான பணிகளில் தேர்தல் கமிஷனும் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளில் உள்ளோர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறியும் வருகின்றனர். 
     
    இந்நிலையில், கேரள மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூருக்கு நெருங்கிய உறவினர்கள் கொச்சியில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

    பாலக்காட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் உறவினர்களான சோபனா சசிகுமார் மற்றும் அவரது கணவர் சசிகுமார் ஆகியோர் பாஜக ஆதரவாக இருந்து வந்த நிலையில், அவர்கள் இன்று கொச்சியில் உள்ள அலுவலகத்தில் மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை முன்னர் அக்கட்சியில் இணைந்தனர்.

    டெல்லி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான டாம் வடக்கண் நேற்று பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. #Congress #ShashiTharoor #relativesjoinBJP
    கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொன்னான நேரத்தை பிரதமர் மோடி பொய்கள் பேசியே வீணாக்கி விட்டார் என குற்றம்சாட்டினார். #Congress #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக தொடங்கி உள்ளன.
     
    கேரளாவிலும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆளும் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. கேரளாவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட பா.ஜனதா கட்சியும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை கருத்தில் கொண்டு காய்களை நகர்த்தி வருகிறது.

    சபரிமலை விவகாரத்தை பாராளுமன்ற தேர்தலில் கையில் எடுத்து ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை கைப்பற்ற பா.ஜ.க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:



    மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகள் பயிர்க்கட்ன்களை தள்ளுபடி செய்துள்ளோம். இதேபோல், வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் மோடி செய்த தவறுகளை எல்லாம் சரிசெய்வோம்.

    கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொன்னான நேரத்தை பிரதமர் மோடி வீணாக்கி விட்டார். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் ஒன்றையும் நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார்.

    ராகுல்காந்தியின் வருகையால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #Congress #RahulGandhi 
    கொச்சியில் சென்னை வியாபாரியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்தனர். #Drugsseized

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போதை பொருட்களை விற்பனை செய்ய ஒரு கும்பல் முயற்சிப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கொச்சி உள்பட மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு வருவோரும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர்.

    இதுபோல வியாபார நிமித்தம் கேரளா வருவோரையும், அவர்களின் வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

    கொச்சி போதை பொருள் தடுப்புப்பிரிவு உதவி கமி‌ஷனர் விஜி ஜோர்ஜ், சப்-இன்ஸ்பெக்டர் விபின் தலைமையிலான போலீசார் கொச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த சொகுசு காரை தடுத்து சோதனை நடத்தினர்.

    அந்த காரில் ஹாசிஸ் ஆயில் மற்றும் போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.

    போதை பொருள் கடத்தி வந்த காரில் இருந்த இப்ராகிம் ஷெரீப் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கைதான இப்ராகிம் ஷெரீப், சென்னை அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் தெரிய வந்தது.

    அங்கு துணி வியாபாரம் செய்து வருகிறார். துணிகளை வெளிமாநிலங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதுபோல் போதை பொருட்களை மறைத்து எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இப்ராகிம் ஷெரிப்பிடம் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்டுள்ளது.

    சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு வந்து சேரும் போதை பொருட்களை ஏஜெண்டுகள் மூலம் வாங்கி அதனை பெங்களூர், ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கார்களில் கடத்திச் சென்று இக்கும்பல் விற்பனை செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்தியாவுக்கு போதை பொருட்களை அனுப்பி வைக்கும் வெளிநாட்டு கும்பல் யார்? இவர்களுக்கு உதவி செய்யும் உள்ளூர் நபர்கள் யார்? யார்? என்பதை கண்டுபிடிக்க கொச்சி தனிப்படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    வெளிநாட்டு கும்பல் பற்றிய விவரம் தெரிய வரும் போது மேலும் பல முக்கிய புள்ளிகள் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று கேரள போலீசார் தெரிவித்தனர்.  #Drugsseized

    துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ஆப்கானிஸ்தான் நாட்டு ஆசாமியிடம் இருந்து 10.81 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். #KochiAirport #AfghanNational #ForeignCurrency
    திருவனந்தபுரம்:

    துபாயில் இருந்து கேரளவின் கொச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அதில் இறங்கி வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு வந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரிடம் அமெரிக்க டாலர்கள் மற்றும் சவுதி அரேபியாவின் ரியால் என வெளிநாட்டு பண நோட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

    அவரிடம் இருந்த சுமார் 10.61 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு பண நோட்டுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக விமான நிலைய சுங்கத்துறையினர் கூறுகையில்,  இந்த நிதியாண்டில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக சுமார் 254 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். இதில் சுமார் 87 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளோம்  என தெரிவித்துள்ளனர். #KochiAirport #AfghanNational #ForeignCurrency
    கொச்சி அருகே கோவில் குளத்தில் பள்ளி வேன் பாய்ந்து 2 குழந்தைகள், ஆயா பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட டிரைவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் நாயர் (வயது 42). இவரது மனைவி பிரியா (38). இவர்களது மகன் ஆதித்தியன் (4½).

    இதே பகுதியை சேர்ந்த சனல்குமார் மற்றும் ஸ்மிதா மகள் வித்யலட்சுமி (5). இவர்கள் 2 பேரும் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தனர்.

    நேற்று பள்ளி வேனில் ஆதித்தியனும், வித்யலட்சுமியும் அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி முடிந்ததும் மீண்டும் குழந்தைகளை அவரவர் வீட்டில் விட வேனில் ஏற்றப்பட்டனர்.

    வேனை அனில்குமார் (45) ஓட்டினார். ஆதித்தியன், வித்யலட்சுமி உள்பட மேலும் 6 குழந்தைகள் மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் இருந்தனர். வேன் சுமார் அரை கி.மீட்டர் தூரம் வந்ததும் வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    வேனில் இருந்த குழந்தைகள் அலறி சத்தம்போட்டனர். அங்குள்ள பகவதியம்மன் கோவில் குளத்தில் வேன் பாய்ந்தது. இந்த குளம் சேறு நிறைந்த குளமாகும். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேனை பார்த்தபோது வேன் சேற்றில் மூழ்க தொடங்கியது.

    அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேன் கண்ணாடியை உடைத்து 6 குழந்தைகளை மீட்டனர். இதனிடையே கொச்சி போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். படுகாயங்களுடன் மூழ்கி கொண்டிருந்த டிரைவர் அனில்குமாரை மீட்டனர்.



    இதில் குழந்தைகள் ஆதித்தியன், வித்யலட்சுமி மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் குளத்தில் மூழ்கி பலியானார்கள். பலியான 3 பேரின் உடல்கள் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டிரைவர் அனில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    கேரளாவில் சிமி இயக்கம் நடத்திய பயிற்சி முகாம் தொடர்பான வழக்கில் 18 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    நாட்டிற்கு எதிராக சிமி என்ற இயக்கம் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா, மத்திய பிரேதசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பயிற்சி முகாம்களை நடத்தியது. இதைதொடர்ந்து, கேரளா மாநிலம் கோட்டயம் என்ற பகுதியிலும் சிமி இயக்கம் ரகசிய முகாம் நடத்தியது.

    இந்த முகாமில்,  ஆயுத பயிற்சி, வெடி குண்டு தயாரித்தல், கயிறு ஏறும் பயிற்சி, மோட்டார் சைக்கிள் ரேஸ் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வந்தது.
     
    இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றம்சாடப்பட்ட 35 பேர்களில், 18 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். 17 பேரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.

    இந்நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. 18 குற்றவாளிகளுக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். #WagamonSIMIcampcase #KochiSpecialNIAcourt
    ஏமனில் நடந்த குண்டு வெடிப்பில் இருகைகள் மற்றும் பார்வையை முழுவதுமாக இழந்த மாணவருக்கு கொச்சி மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஒரு கண்ணில் பார்வை கிடைத்துள்ளது.
    கொச்சி:

    ஏமனில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மத்திய ஏமனை சேர்ந்த இஸ்லாம் உசைன் என்ற 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் தனது வீட்டுக்கு அருகில் புதைக்கப்பட்ட கன்னி வெடியில் சிக்கி, இரு கைகள் மற்றும் இரு கண் பார்வையை இழந்தார். மேலும், கால்களிலும் பலமாக அடிபட்டதால் நடப்பதும் சிரமாகியது.

    இதனை அடுத்து, தனது மகனை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என உறுதி கொண்ட உசைனின் பெற்றோர் முதலில் சிகிச்சைக்காக எகிப்து சென்றுள்ளனர். ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர். இதன் பின்னர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்த உசைன் குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உசைனின் கால்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டனர்.

    பின்னர், கேரளாவின் கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை உசைனுக்கு சமீபத்தில் நடந்துள்ளது. எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர், உசைனின் இடது கண்ணில் தற்போது மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.

    “நான் முழுவதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஆனால், மருத்துவர்கள் என்னை உற்சாகமூட்டிக்கொண்டே இருந்தனர். சிகிச்சைக்கு பின்னர் எனது அம்மாவை பார்த்தேன். அது விவரிக்க முடியாத மகிழ்ச்சியை தந்தது” என உசைன் கூறியுள்ளார். 
    ×