என் மலர்
நீங்கள் தேடியது "ராமநாதபுரம்"
- வீடியோவில், மாணவரை கீழே தள்ளி அடித்ததோடு சித்ரவதை செய்தது வெளியாகி இருந்தது.
- விடுதியில் மாணவரை சக மாணவர்கள் தாக்கிய நேரத்தில் அரசு சமூக நல விடுதி காப்பாளர், சமையலர் எங்கே என கேள்வி எழுந்துள்ளது.
ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அம்மா பூங்கா பகுதியில் உள்ள அரசு சமூக நல விடுதியில் 8-ம் வகுப்பு மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளனர். வீடியோவில், மாணவரை கீழே தள்ளி அடித்ததோடு சித்ரவதை செய்தது வெளியாகி இருந்தது.
இந்நிலையில் விடுதியில் மாணவரை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை குழு அமைத்த ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் சக மாணவர்களை விடுதியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
விடுதியில் மாணவரை சக மாணவர்கள் தாக்கிய நேரத்தில் அரசு சமூக நல விடுதி காப்பாளர், சமையலர் எங்கே என கேள்வி எழுந்துள்ளது.
- முதுகுளத்தூர், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை, மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
- தனுஷ்கோடியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம் நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை 3-வது நாளாக இன்று காலையும் நீடித்து வருகிறது. அவ்வப்போது பெய்து வரும் மிதமான முதல் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளிகளில் தண்ணீர் தேங்கியால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தீபாவளி விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தண்ணீர் தேங்கி கிடந்த இடங்களில் நகராட்சி சேர்மன் கார்மேகம் அறிவுறுத்தலின்படி ஊழியர்கள் மோட்டார் எந்திரம் மூலம் தண்ணீரை அகற்றினர்.
இதேபோல் முதுகுளத்தூர், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை, மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் வழக்கத்தை விட கடல் ஆக்ரோஷமாக காணப்பட்டது. அலைகள் பனைமர உயரத்துக்கு எழும்பின. வங்கக்கடலில் 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்துக்கு கடல் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பெரும்பாலான படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.
ராமேசுவரத்தில் அவ்வப்போது விட்டுவிட்டு பெய்யும் மழையால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். தனுஷ்கோடியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் சாலைகளை மணல்கள் மூடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம் 30, மண்டபம் 55.10, ராமேசுவரம் 7, பாம்பன் 21.50, தங்கச்சிமடம் 41.50, பள்ளமோர் குளம் 18.40, திருவாடானை 16, தொண்டி 34, வட்டாணம் 11.80, தீர்த்தண்ட தானம் 83.20, ஆர்.எஸ். மங்கலம் 52, பரமக்குடி 51.80, முதுகுளத்தூர் 29.70, கமுதி 21, கடலாடி, வாலிநோக்கம் 23.
மாவட்டத்தில் மொத்த மழையின் அளவு 519 மில்லி மீட்டர் ஆகும்.
- ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
- ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே தொடங்கிய முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் மக்களை சென்றடைவதை கண்காணிக்கும் முறையிலும், கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ராமநாதபுரம் செல்கிறார். ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்க உள்ளார். பேருந்து நிலையம், அறிவுசார் மையம், சமூக நீதி மையம் உள்ளிட்டவற்றை அவர் திறந்து வைக்கிறார்
ராமநாதபுரம் அருகே புல்லங்குடி பகுதியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
முதலமைச்சர் பயணத்தின் எதிரொலியாக இன்றும், நாளையும் அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
- 2 மாத காலம் தடை உத்தரவு அமலில் இருக்கும்.
ராமநாதபுரம்:
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் 2 மாத காலம் தடை உத்தரவு அமலில் இருக்கும். மேலும் தடை உத்தரவு அமலில் உள்ள நாட்களில் இன்று முதல் 15-ந்தேதி வரை மற்றும் அக்டோபர் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பிறப்பித்துள்ளார்.
- இடத்தை தேர்வு செய்ய 4 மாதங்களுக்கு முன் தமிழக அரசு உத்தரவு.
- 500 முதல் 600 ஏக்கர் நிலம் போதுமானதாக இருக்கும் என டிட்கோ அறிவிப்பு.
ராமநாதபுரத்தில் விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்ய 4 மாதங்களுக்கு முன் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் விமான நிலையம் அமைக்க கீழக்கரை, உச்சிப்புளி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு 500 முதல் 600 ஏக்கர் நிலம் போதுமானதாக இருக்கும் டிட்கோ அறிவித்துள்ளது.
- வேப்பங்கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்தனர்.
- மின்னல் தாக்கி மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேப்பமரத்தடியில் வேப்பங்கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
அஸ்பியா பானு (13), சபிகா பானு (10) மின்னல் தாக்கி மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
- சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் கருப்பு நிற சட்டையை அணிந்து வந்தார்.
- தலைமை ஆசிரியருக்கு எதிராக பாஜகவினர் முழக்கமிட்டனர்.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ராமநாதபுரம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய அரசுப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் கருப்பு நிற சட்டையை அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியருக்கு எதிராக பாஜகவினர் முழக்கமிட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர்.
இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் தினமும் பள்ளிக்கு கருப்பு நிற சட்டை அணிந்து தான் வருகை தருகிறார் என்று குறிப்பிடத்தக்கது.
- ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த கடற்காற்று வீசிவருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட கடலில் வழக்கத்தை விட காற்று அதிகளவில் வீசுகிறது. இதனால் 2 நாட்களாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
இதையொட்டி மீனவர்களின் பாதுகாப்பை கருதி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்காக அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இன்று அதிகாலை கடலுக்கு செல்ல வந்த மீனவர்கள் தடை உத்தரவை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதன்காரணமாக இன்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஏர்வாடி, தொண்டி, தங்கச்சிமடம், பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இறங்குதளத்தில் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டி ருந்தன.
இதேபோல் 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என கடலோர போலீசார் எச்சரித்தனர்.
மீன்பிடி தடை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலையிழந்தனர். மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் ரூ.5 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,853 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
- பரமக்குடி-ராமநாதபுரம் இடையே உள்ள 46 கி.மீ. தூரம் 4 வழிச்சாலையாக விரிவாக்கப்பட உள்ளது.
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மதுரை –ராமேஸ்வரம்–தனுஷ்கோடி முனையம் ஆகிய புனிதத் தலங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது. மதுரை–பரமக்குடி வரையில் ஏற்கனவே 4 வழி தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது.
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,853 கோடி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 46.7 கி.மீ. தூரத்துக்கு பரமக்குடி – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்– தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை திட்டம் குறித்து பிரதமர் மோடியின் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தி. பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கவும் செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.
- பரமக்குடி-ராமநாதபுரம் இடையே உள்ள 46 கி.மீ. தூரம் 4 வழிச்சாலையாக விரிவாக்கப்பட உள்ளது.
- இத்திட்டத்தால் தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும்.
சென்னை:
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மதுரை –ராமேஸ்வரம்–தனுஷ்கோடி முனையம் ஆகிய புனிதத் தலங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது. மதுரை–பரமக்குடி வரையில் ஏற்கனவே 4 வழி தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது.
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,853 கோடி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 46.7 கி.மீ. தூரத்துக்கு பரமக்குடி – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்– தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்த சாலையில் செல்லும் வாகனங்களின் பயண நேரம் 40 சதவீதம் குறையும். இத்திட்டத்தின் மூலம் தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் பெரிதும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றினர்.
- குழந்தையின் தலையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் இரண்டரை வயது பெண் குழந்தையை தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தை லெமோரியாவை தனது சொந்த மாமா சஞ்சய் கொலை செய்து தலையை துண்டித்துள்ளார். குழந்தையின் கழுத்தறுத்து கொலை செய்து தலையை குளத்தில் வீசிவிட்டு தப்பியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றினர்.
பிறகு, குழந்தையின் தலையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குளத்தில் வீசப்பட்ட குழந்தையின் தலையை போலீசார் மீட்டனர்.
கொலைக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகாத நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கடந்த 10-ந்தேதி பூக்குழி இறங்குதல் விமரிசையாக நடந்தது.
- பூக்குழியில் நிலைதடுமாறி விழுந்தார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 56). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதற்கிடையே அந்த பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடை பெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 10-ந்தேதி பூக்குழி இறங்குதல் விமரிசையாக நடந்தது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதேபோல் ரியல் எஸ்டேட் அதிபரான கேசவனும் வேண்டுதல் நிறைவேற பூக்குழி இறங்கினார். அப்போது அவர் நெருப்புடன் கூடிய மரக்கட்டைகள் நிரப்பப்பட்டு இருந்த பூக்குழியில் நிலைதடுமாறி விழுந்தார்.
இதைப்பார்த்த சக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தயார் நிலையில் இருந்த மீட்பு குழுவினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
உடலின் பெரும்பாலான பகுதியில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கேசவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி விக்னேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






