என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரமக்குடி"

    • பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,853 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
    • பரமக்குடி-ராமநாதபுரம் இடையே உள்ள 46 கி.மீ. தூரம் 4 வழிச்சாலையாக விரிவாக்கப்பட உள்ளது.

    தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மதுரை –ராமேஸ்வரம்–தனுஷ்கோடி முனையம் ஆகிய புனிதத் தலங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது. மதுரை–பரமக்குடி வரையில் ஏற்கனவே 4 வழி தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது.

    பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,853 கோடி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 46.7 கி.மீ. தூரத்துக்கு பரமக்குடி – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்– தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை திட்டம் குறித்து பிரதமர் மோடியின் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தி. பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கவும் செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.

    • பரமக்குடி-ராமநாதபுரம் இடையே உள்ள 46 கி.மீ. தூரம் 4 வழிச்சாலையாக விரிவாக்கப்பட உள்ளது.
    • இத்திட்டத்தால் தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும்.

    சென்னை:

    தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மதுரை –ராமேஸ்வரம்–தனுஷ்கோடி முனையம் ஆகிய புனிதத் தலங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது. மதுரை–பரமக்குடி வரையில் ஏற்கனவே 4 வழி தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது.

    பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,853 கோடி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 46.7 கி.மீ. தூரத்துக்கு பரமக்குடி – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்– தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    இந்த சாலையில் செல்லும் வாகனங்களின் பயண நேரம் 40 சதவீதம் குறையும். இத்திட்டத்தின் மூலம் தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் பெரிதும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருடு போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
    • சித்திரை திருவிழா காண வந்த பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி ராதா, சித்திரை திருவிழாயை முன்னிட்டு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியை காண தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். பின்னர் அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

    அப்போது வழியில் ரவி தியேட்டர் எதிரே அமைக்கப்பட்ட அன்னதான கூடத்தில் அன்னதானம் வாங்கினார். அதே சமயம் ராதா கழுத்தில் அணிந்திருந்த 31 பவுன் நகையை 'மர்ம' நபர்கள் திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் நைசாக பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். என்ன நடந்தது என்று நினைவு திரும்புவதற்குள் அவர்கள் மின்னலாய் மறைந்தனர்.

    முன்னதாக சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் பகுதி மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடும் கும்பல் பக்தர்களோடு பக்தர்களாக கூட்டத்தில் கலந்து நைசாக நகைகளை திருடி சென்று விடுகிறார்கள்.

    அதேபோல் தான் நகையை பறிகொடுத்த ராதா கழுத்து நிறைய நகைகள் அணிந்திருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். அன்னதானம் வாங்கும் ஆர்வத்தில் ராதா இருந்தபோது பின்னால் இருந்து நகைகளை பறித்து சென்றுவிட்டனர். நேற்று மாலை முதல் விடிய, விடிய போலீஸ் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி சென்றதால் நகை திருடர்களால் கைவரிசை காட்ட முடியவில்லை. இதனால் இன்று அதிகாலை நேரத்தை பயன்படுத்தி திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து ராதா கூறுகையில், நான் அதிகாலை 5 மணியளவில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மொபட்டில் வந்து கொண்டிருந்த போது ரவி தியேட்டர் எதிரே அன்னதானம் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனது கழுத்தில் அணிந்திருந்த 31 பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் எப்படி திருடி சென்றார்கள் என்பது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. எனவே எனது தங்கச் சங்கிலியை போலீசார் மீட்டு தர வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தார். திருடு போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்து நகை பறிப்பு திருடர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சித்திரை திருவிழா காண வந்த பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    • எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து திரும்பியதும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

    2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து திரும்பியதும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதற்கிடையில் இந்த இரு கட்சிகள் நெருங்கி வருவது தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் பேசுபொருளாகி இருக்கிறது.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பா.ஜ.க. தனித்துவமான கட்சியாக செயல்பட வேண்டும். தேர்தலில் சீட்டுக்காக திராவிட கட்சிகளிடம் கை ஏந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததால் தான் கூட்டணி அமையாமல் போனது என்று பலர் ஆதங்கப்படுகிறார்கள். எனவே இந்த தேர்தலிலும் அந்த மாதிரி சூழ்நிலை வரக்கூடாது என்று அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் கருதுகிறார்கள்.

    இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

    இதையடுத்து தலைவர் பதவியை குறி வைத்து மூத்த நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகிறார்கள். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் இந்த ரேசில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும் என்று பரமக்குடியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில், வேண்டும்... வேண்டும்... மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும்... வேண்டாம்... வேண்டாம்... அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம்... என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பா.ஜ.க.வினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

    பா.ஜ.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலக உள்ளதாக கூறப்படும் நிலையில் பரமக்குடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    பரமக்குடி

    பரமக்குடி அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் மாணவ தலைவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி (எ) பாபு தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். எமனேஸ்வரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில் மாணவர்கள் கடமை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயசுதா அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் அணில், ஆசிரியர் கனிமொழி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  

    • பரமக்குடியில் வ.உ.சி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சிக்கு சபையின் தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

    பரமக்குடி

    பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகாசபையின் சார்பில் வ.உ.சி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சபையின் தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ராமலிங்கம் வரவேற்றனர். திரைப்பட நடிகர் ஆனந்தராஜ், அனைத்து வெள்ளாளர் மகாசபையின் நிறுவனர் டாக்டர் கார்த்திகேயன், பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், உயர் மட்ட நிர்வாகி கோவிந்தராஜ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் அமைப்பு செயலாளர் இருளப்பன், உயர்மட்ட குழு நிர்வாகி முனியாண்டி, வின்சென்ட் ஜெயக்குமார், ராதாகிருஷ்ணன், தி.மு.க. சார்பில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, ஓ.பி.எஸ் அணி சார்பில் தர்மர் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சதன்பிரபாகர், நகர் தலைவர் ஜமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடி அருகே சின்ன அக்கிரமேசி கிராமத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்தில் உள்ள சின்ன அக்கிரமேசி கிராமத்தில் ரூ.29.3 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடங்களை முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் நயினார்கோவில் ஒன்றிய சின்ன அக்கிரமேசி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம், சித்தனேந்தல், பந்தப்பனேந்தல் ஆகிய கிராமங்களிலும் தலா ரூ.29.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கூட கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் நயினார்கோயில் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் இளவரசி மணிமன்னன், நயினார்கோவில் ஒன்றிய துணைச்செயலாளர் திலகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசியல் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி.
    • ராமநாதபுரம் முழுவதும் போக்குவரத்தில் மாற்றம்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினத்தை யொட்டி இன்று அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    தி.மு.க சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ராஜலட்சுமி, அன்வர் ராஜா, மணிகண்டன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அ.தி.மு.க தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தர்மர் எம்.பி உட்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அதே போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி.டி.வி தினகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். தே.மு.தி.க சார்பில் விஜய பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து ம.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட் சன் தேவ ஆசீர்வாதம் மேற் பார்வையில் தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் தலைமையில் 3 டி.ஐ.ஜி, 19 எஸ்.பி, 61 டி.எஸ்.பி. உள்பட சுமார் 7 ஆயிரம் போலீசார் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பரமக்குடி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 150 நவீன சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் டிரோன் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு 163 (1) தடை உத்தரவு கலெக்டர் உத்தரவில் அமல்படுத்தப் பட்டுள்ளது.

    மேலும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அந்தந்த வழித்தடங்களில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

    • மொத்தம் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
    • வீட்டிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற என்ஜினீயராக பாரதிகண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது வாடிக்கையாளருக்கு சொந்தமாக பரமக்குடியில் உள்ள நான்கு வீட்டு மனைகளுக்கு நகராட்சியில் திட்ட ஒப்புதல் பெறுவதற்கு கட்டணமாக ரூ.76 ஆயிரத்து 850-ஐ கடந்த வாரம் செலுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் இதுதொடர்பாக நகராட்சியில் நகரமைப்பு திட்ட அலுவலராக பணிபுரியும் பர்குணன் என்பவரை சந்தித்து பாரதிகண்ணன் விவரம் கேட்டார். அப்போது ஒரு வீட்டு மனைக்கு ரூ.5 ஆயிரம் வீதம் நான்கு வீட்டுமனைகளுக்கு மொத்தம் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அதற்கு என்ஜினீயர் பாரதிகண்ணன், நகராட்சிக்கு கட்ட வேண்டிய அரசு பணத்தை முழுவதும் செலுத்தி உள்ளேன். ஆகையால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    ஆனாலும் நகராட்சி அதிகாரி பர்குணன் லஞ்சம் கொடுத்தால் மட்டும் அடுத்த கட்ட பணிகள் நடக்கும் என்றும், திட்ட ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வேறு வழியின்றி தவித்த பாரதி கண்ணன் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டு விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்து சென்றார்.

    இருந்தபோதிலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பாரதி கண்ணன், இது குறித்து ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார்.

    இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, இன்று காலை 'கூகுள்பே' மூலமாக நகராட்சி அதிகாரி பர்குணன் செல்போன் எண்ணிற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சப் பணத்தை அனுப்பினார்.

    அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லஞ்சம் பெற்ற பர்குணனை செல்போனுடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் இதுபோன்று வேறு யாரிடமாவது ஆன் லைன் பரிவர்த்தனை மூலம் லஞ்சம் பெற்றுள்ளாரா? என்று விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் அவரது வீட்டிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    பரமக்குடி நகராட்சியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உத்திரகுமார் என்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் உத்திரகுமார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

    இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×