என் மலர்
நீங்கள் தேடியது "murdered"
- டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு, பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
- கணவருடன் வாழ விருப்பமில்லையானால், பிரிந்து சென்றிருக்கலாமே? குழந்தைகளை கொலை செய்ததை ஏற்க முடியாது.
நாடு முழுவதுமே கள்ளக்காதல் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் நூற்றுக்கணக்கான கள்ளக்காதல் விவகாரங்கள் வெளிவருகிறது. ஒருவர் கள்ள உறவில் ஈடுபடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கள்ளக்காதலை ஒரு உறவிலிருந்து வெளியேறும் உத்தியாக பயன்படுத்தலாம். இல்லையெனில் தனது துணைக்கு தெரியப்படுத்தி அவர்களை பிரிய விரும்பலாம். ஆனால் கள்ளக்காதல் என்றவுடன் தமிழக மக்களுக்கு நினைவுக்கு வருபவர் குன்றத்தூர் அபிராமிதான்.
கடந்த 2018-ம் ஆண்டு இந்த அபிராமி செய்த கொடூரமான காரியம் இன்னும் நம் மக்களின் மனதில் இருந்து நீங்கி இருக்காது. அபிராமிக்கு இந்த வருடம்தான் நீதிமன்றம் தண்டனை அளித்தது. இந்த வருடம் நீதிமன்றங்கள் எத்தனையோ வழக்குகளுக்கு தீர்ப்பை தந்திருந்தாலும், அபிராமிக்கு தந்த தண்டனையை யாராலும் மறக்க முடியாது.
குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் (6) என்ற மகனும் கார்னிகா (4) என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.
டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவரான விஜய்க்கு தெரியவர அவர் கண்டித்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அபிராமி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து இதற்கு தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார். அவர்களை கொலை செய்து விடலாம் என்று சுந்தரம்தான் ஐடியா கொடுத்துள்ளார்.
இதையடுத்து, அபிராமி தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பினார். இருப்பினும் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கணவர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிராமியை தேடினர். அப்போது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிறையில் அடைக்கப்பட்ட 7 வருடங்களுக்கு பிறகு அபிராமி வழக்கில் கடந்த ஜூலை 24-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி தீர்ப்பில், உங்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை தர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஆனால், இது காந்தி தேசம் என்பதால், பழிக்கு பழியாக தண்டனையை வழங்க முடியாது. ஆனால், நீங்கள் இருவரும் செய்திருக்கக் கூடிய குற்றம் கொடூரமானது. கணவருடன் வாழ விருப்பமில்லையானால், பிரிந்து சென்றிருக்கலாமே? குழந்தைகளை கொலை செய்ததை ஏற்க முடியாது. அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கிறேன். மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை கேட்டு அபிராமி கதறி அழுதார். தன்னுடைய அப்பா, அம்மா வயதானவர்கள். ஏற்கனவே 7 வருடம் சிறையில் இருந்து விட்டேன். எனவே, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டும் அதை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை.
குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு தூக்கு தண்டனையே தர வேண்டும் என்று பெரும்பாலானோர் கருத்து கூறினார்கள்.
கள்ளக்காதல் கண்ணை மறைக்க, அதற்கு தடையாக இருக்கும் குழந்தைகளை கொல்ல நினைப்பவர்களுக்கு இதுபோன்ற கடுமையான தண்டனை ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவுமே இருக்கும்.
நீதிமன்றம் அளித்த தண்டனை வேண்டுமானால் தாமதம் ஆகியிருக்கலாம்... ஆயுள் தண்டனையின்போது செய்த தவறை நினைத்தும், குழந்தைகளை நினைத்தும் அபிராமி அனுபவிக்கும் வேதனை அவருக்கு காலம் கொடுத்த பரிசு.
இறைவன் கொடுத்த அழகான வாழ்க்கை, குழந்தை என வாழ தெரியாமல் நடுவில் வந்த கள்ளக்காதலால் தன்னுடைய வாழ்க்கையையே தொலைத்துவிட்டார் குன்றத்தூர் அபிராமி.
- படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கவலைக்கிடமாக நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் நெல்லை-தென்காசி பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் கூலக்கடை பஜார் என்ற இடத்தில் அவரது அலுவலகத்திலேயே வைத்து அவர் மர்ம நபரால் அரிவாளால் வெட்டப்பட்டார்
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கவலைக்கிடமாக நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை வெட்டிவிட்டு, எந்த பயமும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு வழக்கறிஞர் மீதான கொலைவெறி தாக்குதலை கண்டித்து தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் நெல்லை-தென்காசி பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர்.
- நாகராஜ் திடீரென்று அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமியின் தோள் பட்டையில் வெட்டி தப்பி ஓட முயன்றார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் வனப்பகுதியில் தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பணியில் இருந்த காவலாளிகளான பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஆகிய இருவரையும் வெட்டிக்கொலை செய்தனர். மேலும் அங்கிருந்த உண்டியலை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர். இதில் தேவதானத்தைச் சேர்ந்த நாகராஜ் (வயது 25) என்பவரிடம் நடந்த விசாரணையில் காவலாளிகளை கொன்று உண்டியலை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவருடன் சேர்ந்து முனியாண்டி (30) என்பவரும் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இதற்கிடையே இன்று காலை 6 மணி அளவில் சேத்தூர் அருகே உள்ள அசையாமணி விலக்கில் இருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் கல்லணை ஆஞ்சநேயர் கோவில் அருகே கொள்ளையடித்த பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக நாகராஜ் கூறினார். அதனை கைப்பற்றுவதற்காக சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கல்லணை பகுதிக்கு சென்றனர்.
அங்கு சென்றவுடன் புதைத்து வைத்திருந்த இடத்தின் அருகே நாகராஜ் திடீரென்று அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமியின் தோள் பட்டையில் வெட்டி தப்பி ஓட முயன்றார். உடனே அருகில் இருந்த இன்ஸ்பெக் டர் ரமேஷ் கண்ணா, நாகராஜின் வலது முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டார். இதில் சுருண்டு விழுந்த அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் துப்பாக்கி குண்டு பாய்ந்த நாகராஜ் ஆகிய இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். கோவிலில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான முனியாண்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மர்ம நபர்கள் மூலஸ்தானம், அம்மன் சன்னதிக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைக்க முயற்சித்தனர்.
- அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் கொள்ளை போன நகைகள், விக்கிரகங்கள், சிலைகள் சரிபார்ப்பு பணியும் தொடங்கியுள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தேவதானம் கிராமம்.
இங்கு தென்மாவட்ட பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக போற்றப்படும் தவம்பெற்ற நாயகி சமேத நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. பொதுவாக பஞ்சபூத கோவில்களாக திகழும் காஞ்சிபுரம், காளகஸ்தி, திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகியவற்றை ஒரே நாளில் தரிசனம் செய்ய முடியாது.
ஆனால் தென் மாவட்டங்களில் உள்ள சங்கரன்கோவில், தாருகாபுரம், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய ஊர்களில் உள்ள பஞ்சபூத கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கலாம் என்பதால் இந்த ஸ்தலங்களுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக மகா சிவராத்திரி தினத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் வந்து தரிசனம் செய்வார்கள்.
சேத்தூர் ஜமீன்தார் வம்சத்தினர் பரம்பரையாக கோவிலை நிர்வகித்து வந்த நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஜமீன்தார் வம்சத்தினர் அறங்காவலர்களாக இருந்து வருகிறார்கள். இக்கோவில் தினமும் காலை 6.30 முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 முதல் 7.15 மணி வரையிலும் திறந்திருக்கும்.
பல நூற்றாண்டுகளை கடந்த இந்த கோவிலில் தற்போது பகல் நேர காவலாளியாக மாடசாமி என்பவரும், இரவு காவலாளிகளாக தேவதானம் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (வயது 50), சங்கரபாண்டியன் (65) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். மிகப்பெரிய மதில் சுவர்களை கொண்ட கோவிலில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
நேற்று இரவு கோவிலுக்கு வந்த காவலாளிகள் கதவுகளை பூட்டிக்கொண்டு உள்பகுதியில் தங்கள் பணியை தொடர்ந்தனர். இதற்கிடையே நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கோவிலுக்கு முன்பாக இரண்டு கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே காவலாளிகள் இருவரும் கதவை திறக்காமல் அதன் அருகே நின்று கொண்டு சத்தம்போட்டு கேட்டுள்ளனர். ஆனால் வெளியில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
இதற்கிடையே அந்த கார்களில் இருந்து இறங்கிய 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் முதலில் கோவிலை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை கட்டைகளால் அடித்து உடைத்துள்ளனர். பின்னர் தென்பக்கமாக உள்ள தூண்கள் வழியாக ஏறி கோவில் வளாகத்திற்குள் குதித்துள்ளனர். அவர்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காவலாளிகள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் இருவரும் யார் நீங்கள், வெளியே செல்லுங்கள் என்று கூறியவாறு அருகில் சென்றுள்ளனர்.
ஆனால் மர்ம நபர்கள் அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் மூலஸ்தானம், அம்மன் சன்னதிக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைக்க முயற்சித்தனர். அதனை காவலாளிகள் இரண்டு பேரும் சேர்ந்து தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் இருவரையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கோவில் என்றும் பாராமல் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். பின்னர் அவர்களது உடல்களை கொள்ளையர்கள் தரதரவென்று இழுத்து சென்று இரண்டு மூலைகளில் வீசியுள்ளனர். அத்துடன் உண்டியல்களையும் உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அத்துடன் மூலஸ்தானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி, தவம்பெற்ற நாயகி அம்பாள் ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் கொள்ளை போயிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் கோவிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, ஐம்பொன் விக்கிரகங்களும் கொள்ளை போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்று காலை 6 மணியளவில் பகல் நேர காவலாளியான மாடசாமி பணிக்கு வந்துள்ளார். அப்போது கோவில் கதவுகள் திறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, காவலாளிகள் மாடசாமி, சங்கரபாண்டியன் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து உறைந்து போனார்.
உடனடியாக அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கோவிலுக்குள் கொலையுண்டு கிடந்த காவலாளிகள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோப்ப நாய், தடயவியல், கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலையுண்டவர்களின் ரத்தக்கறை உறைந்திருந்த நிலையில் இச்சம்பவம் நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் கொள்ளை போன நகைகள், விக்கிரகங்கள், சிலைகள் சரிபார்ப்பு பணியும் தொடங்கியுள்ளது.
மேலும் கொள்ளையர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களா? அல்லது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர்களை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் 2 காவலாளிகளை கொன்று பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
- காவலர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் கோவில் உண்டியலும் சேதமடைந்துள்ளது.
- உண்டியல் திருட்டை தடுக்க முயன்றபோது காவலர்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே காவலர்கள் 2 பேர் கோவிலுக்குள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரவு காவலர்கள் பேச்சிமுத்து (50), சங்கர பாண்டியன் (65) ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
காவலர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் கோவில் உண்டியலும் சேதமடைந்துள்ளது.
உண்டியல் திருட்டை தடுக்க முயன்றபோது காவலர்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
- குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சேலம்:
சேலம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட தூதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாவாயி (70) விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (75) ஆடுகளை வளர்த்து வாழ்ந்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று காலை 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் காணவில்லை. இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தூதனூர் பகுதியில் அம்மாசி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் உள்ள தண்ணீர் குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகுடஞ்சாவடி போலீசார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மூதாட்டிகள் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதால் நகைக்காக 2 மூதாட்டிகளையும் மர்ம நபர்கள் கொலை செய்து கல்குவாரி தண்ணீரில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பன்றி வளர்ப்பில் ஈடுபட்ட ரவிசங்கரை மர்மநபர்கள் 2 பேர் வெட்டிக்கொன்று தப்பிச் சென்றனர்.
- தொழில் போட்டி காரணமாக ரவிசங்கர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு ஒன்றிய பொருளாளர் ரவிசங்கர் (35) ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பன்றி வளர்ப்பில் ஈடுபட்ட ரவிசங்கரை மர்மநபர்கள் 2 பேர் வெட்டிக்கொன்று தப்பிச் சென்றனர்.
தொழில் போட்டி காரணமாக ரவிசங்கர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சூளகிரி காவல்துறையினர் விசாரணை நடத்தி, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- வாரச்சந்தை அருகே உள்ள நகராட்சி கட்டிடத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.
- தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 51). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் அங்குள்ள வாரச்சந்தை அருகே உள்ள நகராட்சி கட்டிடத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சதீஷ் பா.ஜ.க. கட்சியின் நகர் வர்த்தகப்பிரிவு தலைவராகவும் இருந்தார்.
இவர் வேலை முடித்து விட்டு தினமும் நண்பர்களை சந்தித்து மது அருந்துவது வழக்கம். அதன்படி நேற்று இரவு வேலை முடித்துவிட்டு சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் மெக்கானிக் கடையில் சந்தித்து மது அருந்தினர். அதே பகுதியில் தாரை தப்பட்டை குழுவினர் சிலர் தங்கியிருந்தனர். அவர்களும் மது அருந்தினர் போதை தலைக்கேறிய நிலையில் அந்த குழுவை சேர்ந்த சிலர் சதீஷ் தரப்பை சேர்ந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இது கைகலப்பாக மாறிய நிலையில் ஒருவரையொருவர் சரமாரியமாக தாக்கி கொண்டனர். இதில் சதீஷின் நண்பர் மணிபாரதி என்பவர் படுகாயமடைந்தார். அவரை அந்த கும்பல் தாக்கியபோது சதீஷ் தடுக்க முற்பட்டார். உடனே எதிர்தரப்பினர் அவரை தாக்கி கீழே தள்ளினர். இதில் தவறி விழுந்ததில் அவர் மயங்கினார்.
மோதல் குறித்து தகவலறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்திருந்த மணி பாரதி மற்றும் சதீஷை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தில் சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணிபாரதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
சிவகங்கையில் பா.ஜ.க. நிர்வாகி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பிரயாக்ராஜில் உள்ள கரேலியில் பதுங்கி இருந்த சரண்சிங்கை போலீசார் கைது செய்தனர்.
- எனது குடும்பத்துக்கு யாரோ கெடுதல் செய்து இருப்பதால்தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று சிலர் கூறினர்.
உலகம் நாகரிக வளர்ச்சி அடைந்தாலும், மூடநம்பிக்கையில் இருந்து இன்னமும் ஒரு சிலர் விடுபடவே இல்லை என்பதற்கு உதாரணமாக நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் காமினி, இவருடைய மகன் பியூஷ் (வயது 17), அங்குள்ள சரஸ்வதி வித்யா மந்திரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற பியூஷ் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த காமினி, தனது மகனை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பியூஷை தேடிவந்தனர்.
இந்தநிலையில் அங்குள்ள ஒரு ஓடையில் துண்டிக்கப்பட்ட தலை கிடப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று, அந்த தலையை மீட்டனர். பின்னர் அதே ஓடையின் வெவ்வேறு பகுதிகளில் மற்ற உடல் பாகங்கள் தனித்தனியாக கிடந்தன. அவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட உடல்பாகங்களையும், காமினி கூறிய அடையாளத்தையும் வைத்து போலீசார் ஒப்பிட்டு பார்த்தபோது, அது மாயமான மாணவர் பியூஷ் என்பதை உறுதி செய்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், யாரோ ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் துணியால் சுற்றப்பட்ட எதையோ அந்த ஓடையில் வீசிச்சென்றதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறிய அடையாளத்தை வைத்து, அதே பகுதியை சேர்ந்த சரண்சிங் என்பவரை போலீசார் தேடினர். அவருடைய தம்பியின் பேரன்தான் பியூஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது.
பிரயாக்ராஜில் உள்ள கரேலியில் பதுங்கி இருந்த சரண்சிங்கை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் தனது தம்பியின் பேரனை கொன்றதை ஒத்துக்கொண்டார்.
பின்னர் போலீசாரிடம் அவர் கூறியதாவது:-
என்னுடைய மகன் கடந்த 2023-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டு என்னுடைய மகளும் தற்கொலை செய்து கொண்டனர்.
எனது குடும்பத்துக்கு யாரோ கெடுதல் செய்து இருப்பதால்தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று சிலர் கூறினர். இதனால் அதனை சரிசெய்ய உள்ளூரில் இருக்கும் மந்திரவாதி ஒருவரை சந்தித்தேன். அவர் உனது தம்பியின் பேரனால்தான் உனக்கு இந்த துன்பம் நேர்ந்துள்ளது. அவனை கொன்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.
அவரது ஆலோசனைப்படி பியூசை நரபலி கொடுக்க முடிவு செய்தேன். இதையடுத்து பியூசை கடத்தி, அவனது தலையை துண்டித்து கொன்றேன். பின்னர் உடல் பாகங்களையும் துண்டு, துண்டாக வெட்டி ஓடையில் வீசினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து சரண்சிங்கை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நரபலி சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சம்பவத்தன்று மோகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெங்கடேசனும் கலந்துகொண்டுள்ளார்.
- சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நிதின்சாய் (வயது 21). சென்னையில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திருமங்கலத்தில் தனது நண்பர் மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் அவர் தனது கல்லூரி நண்பர் அபிஷேக் என்பவருடன் ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருமங்கலம் பள்ளி சாலை அருகே வந்தபோது ஸ்கூட்டர் மீது அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு நிதின்சாய் சம்பவ இடத்திலேயே பலியானார். அபிஷேக் படுகாயம் அடைந்தார்.
கார் மோதியதில் ஸ்கூட்டர் உருக்குலைந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். பலியான நிதின்சாய் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அபிஷேக் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
நிதின்சாய் மற்றும் அபிஷேக்கின் நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவால் இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த கொலைக்கான பயங்கர பின்னணி வருமாறு:-
கொலையான நிதின் சாயின் நெருங்கிய நண்பரான வெங்கடேஷ் என்பவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி அவரது காதலை ஏற்காமல் கண்டித்து வந்துள்ளார். எனினும் வெங்கடேஷ் விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த மாணவி தனது நண்பரான பிரணவ் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர், வெங்கடேசனை நேரில் சென்று மிரட்டி உள்ளார். எனினும் அவரது மிரட்டலை வெங்கடேசன் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று மோகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெங்கடேசனும் கலந்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து பிரணவ் தனது நண்பர்களுடன் சொகுசு காரில் வந்துள்ளார். ஓட்டலை விட்டு வெளியே வந்தவுடன் வெங்கடேசனை பிரணவ் தரப்பினர் தாக்க முயன்றனர். அப்போது நிதின்சாயும், அபிஷேக்கும் அவர்களை தடுத்து நிறுத்தி வெங்கடேசனுக்கு ஆதரவாக நின்றுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் வெங்கடேசனின் கால் மீது பிரணவ் தரப்பினர் காரை ஏற்றி உள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த நிதின் சாய், அபிஷேக் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சொகுசு காரை சேதப்படுத்தி, நம்பர் பிளேட்டையும் உடைத்து எறிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பிரணவ் தரப்பினர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
அதன்பின்னர், நிதின்சாயும், அபிஷேக்கும் ஸ்கூட்டரில் ஒன்றாக சென்ற போதுதான் பிரணவ் தரப்பினர் காரில் பின்தொடர்ந்து வந்து வேகமாக மோதி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு திருமங்கலம் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து சட்டம்-ஒழுங்கு போலீசார் வசம் வந்தது. கொலை வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் காரில் வந்தவர்கள், விபத்தில் நிதின்சாய் இறந்தது தெரியாமல் சிரித்தபடி எச்சரிக்கை விடுத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சொகுசு காரை ஓட்டி வந்து நிதின்சாய் மீது மோதி கொலை செய்தது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரின் பேரன் சந்துரு என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நிதின்சாயின் உறவினர்கள், நண்பர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திருமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து திருமங்கலம் உதவி கமிஷனர் பிரம்மானந்தன், இன்ஸ்பெக்டர் தீபக் ஆகியோர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். அதன்படி பிரணவ் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்துரு தலைமறைவாகி விட்டதால் அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான தி.மு.க. பிரமுகரின் பேரன் சந்துருவை கைது செய்த திருமங்கலம் போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கீழ்பள்ளம் வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அருகில் உடலில் பலத்த காயங்களுடன் சிறுவன் பிணமாக கிடந்தான்.
- 2 பேரும் சேர்ந்து சிறுவன் ரோகித்தை நைசாக பேசி அழைத்து சென்றுள்ளனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 40), சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இளைய மகன் ரோகித் (13), மாவனட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள், அவரை காரில் கடத்தி சென்றனர்.
இதையடுத்து, தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள திருமொடுக்கு கீழ்பள்ளம் வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அருகில் உடலில் பலத்த காயங்களுடன் சிறுவன் பிணமாக கிடந்தான்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரது சடலத்தை எடுத்துக்கொண்டு அஞ்செட்டி பஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கொலை செய்த வாலிபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி, சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, சம்பவ இடம் சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதால் மறியலை கைவிட்டனர்.
இது குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி சிறுவனை கொலை செய்த அதே ஊரை சேர்ந்த புட்டண்ணன் என்பவரின் மகன் மாதேவன் (21), மாரப்பன் என்பவரின் மகன் மாதேவா (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் புட்டண்ணன் மகன் மாதேவன், 20 வயதுடைய பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் பகலில் காதலியுடன் அங்குள்ள ஒரு வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார்.
சிறுவன் ரோகித், அவர்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துள்ளான். இதை ரோகித் மற்றவர்களிடம் சொல்லி விடுவானோ என நினைத்த மாதேவன், தனது நண்பனான மாதேவாவிடம் கூறினார். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து சிறுவன் ரோகித்தை நைசாக பேசி அழைத்து சென்றுள்ளனர். பின்னர் காரில் அவனை ஏற்றிக்கொண்டு சென்றனர். அந்த நேரம் அவர்கள் வாங்கி வைத்திருந்த பீரை சிறுவனின் வாயில் ஊற்றி அவனை மயக்கம் அடைய வைத்துள்ளனர்.
இதன்பிறகு சிறுவனை தேன்கனிக்கோட்டை சாலையில் திருமொடுக்கு கீழ்பள்ளம் பகுதியில் 50 அடி ஆழ பள்ளத்தில் மேலே இருந்து கீழே தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
தொடர்ந்து மாதேவனுடன் உல்லாசமாக இருந்த அந்த பெண் மற்றும் மேலும் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வி.சி.க. பெண் கவுன்சிலர் கோமதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
- கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் அவரது கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் வி.சி.க. பெண் கவுன்சிலர் கோமதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, அவரது கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்துள்ளார். ஸ்டீபன்ராஜை கைது செய்த போலீசார் கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






