search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murdered"

    • திருமணம் முடிந்து ரகுபதி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லாமல் அந்த பகுதியில் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார்.
    • செல்வராஜ் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து ரகுபதியை சரமாரி தாக்கினார்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 35) பி.இ. படித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊரான நிதிநத்தம் வந்தார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை ரகுபதி திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் முடிந்து ரகுபதி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லாமல் அந்த பகுதியில் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரகுபதிக்கு முன்னதாகவே மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் ரகுபதி தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி சத்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

    நேற்று வழக்கம் போல் மது குடித்துவிட்டு வந்து சத்யாவை மதுபோதையில் தாக்கி உள்ளார். ரகுபதி தாக்கியதில் வலி தாங்க முடியாமல் சத்யா அலறினார். இதனால் இவர்களது வீட்டின் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் சத்யாவின் தாய் சசிகலா (50) மகளின் அலறல் சத்தம் கேட்டு ரகுபதி வீட்டிற்கு ஓடி வந்து ஏன் என் மகளை அடித்து துன்புறுத்துகிறாய்? என்ன பிரச்சனை? என்று ரகுபதியிடம் கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ரகுபதி மதுபோதையில் அங்கு கீழே கிடந்த செங்கலை எடுத்து மாமியார் சசிகலாவை முகத்தில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் பற்கள் உடைந்து பலத்த காயம் அடைந்த சசிகலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த ரகுபதியின் மாமனார் செல்வராஜ் (55) தொடர்ந்து குடித்துவிட்டு வந்து பிரச்சனை செய்து வருகிறாயே என்று கேட்டபோது ரகுபதிக்கும் செல்வராஜிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இந்த தகராறு வாக்குவாதமாக மாறி இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். அப்போது செல்வராஜ் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து ரகுபதியை சரமாரி தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரகுபதி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரகுபதியின் தாய் சகுந்தலா ஆவினங்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ரகுபதி மாமனார் செல்வராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தி வருகிறார். மதுபோதையில் மகளை அடித்து துன்புறுத்திய மருமகனை மாமனார் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுவையில் யார் பெரியவர்? என்பதில் ரவுடிகள் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கம்.
    • கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் ஆகியோர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.

    புதுவையில் யார் பெரியவர்? என்பதில் ரவுடிகள் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கம். இதுவே பழிக்குப்பழியாக மாறி கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இது போன்ற சம்பவங்களில் சர்வ சாதாரணமாக வெடிகுண்டுகளை கையாளுவது தொடர்கதையாகி உள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார், அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர் வீரப்பன், தொழில் அதிபர் வேலழகன், காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் ஆகியோர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

    இதே பாணியில் 2019-ம் ஆண்டில் வாணரப்பேட்டை ரவுடி சாணிக்குமார், காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர், அரியாங்குப்பம் பாண்டியன், முத்தியால்பேட்டை காங்கிரஸ் பிரமுகர் அன்பு ரஜினி ஆகியோரும் 2021-ம் ஆண்டில் முதலியார்பேட்டை பாம் ரவி, அவரது நண்பர் அந்தோணியும், கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் ஆகியோர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வயதான தம்பதி கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
    • மயிலி அணிந்திருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகை மற்றும் குடிசை வீட்டில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

    கரூர்,

    திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், இவரது மனைவி மயிலி. இவர்கள் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே ஓடையூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான மாங்காய் தோட்டத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் தோட்டத்தில் உள்ள குடிசையில் தங்கவேலும், மயிலியும் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். மேலும் மயிலி அணிந்திருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகை மற்றும் குடிசை வீட்டில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இந்த கொலை சம்பவம் வாங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க திருச்சி டி.ஐ.ஜி., சரவணசுந்தர் உத்தரவுபடி கரூர் எஸ்.பி., சுந்தரவதனம் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேவவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 53), லாரி டிரைவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்லத்துரை (55), விவசாயி. இவர் பா.ஜனதா கூட்டுறவு பிரிவின் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவராக இருந்து வந்தார்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை தெருவில் வைத்து அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்லத்துரை கத்தியால் ஐயப்பனை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    அப்போது அங்கு வந்த ஐயப்பனின் 17 வயதான மகன் தனது தந்தையை கொன்ற ஆத்திரத்தில் செல்லத்துரை கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தியாக கூறப்படுகிறது. இதில் செல்லத்துரையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார். பின்னர் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    • சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் அனுஜ் சர்மா இரவு நேரங்களில் சூட்கேசை வெளியே எடுத்து செல்லும் காட்சிகள் இருந்தது.
    • சரோஜ் சர்மா உடலை வெட்டிய என்ஜினீயர் உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி, சில இடங்களில் மண்ணில் புதைத்து வைத்ததும் தெரிய வந்தது.

    ஜெய்ப்பூர்:

    டெல்லியில் ஸ்ரத்தா வாக்கர் என்ற 27 வயது இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொடூரமாக கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதே போல டெல்லி பாண்டவ நகரில் மகன் உதவியுடன் கணவரை துண்டு துண்டாக வெட்டிய வீசிய பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவங்களை போலவே ராஜஸ்தானிலும் ஒரு கொடூர கொலை நடந்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வித்யா நகரை சேர்ந்தவர் சரோஜ் சர்மா. இவரது கணவர் 26 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசிக்கின்றனர்.

    இதனால் சரோஜ் சர்மாவுடன் அவரது கணவரின் அண்ணனும், அவரது மகனான அனுஜ் சர்மா (வயது 32) என்ற வாலிபரும் வசித்து வந்தனர். அனுஜ் சர்மா என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். கடந்த 11-ந் தேதி அனுஜ் சர்மாவின் தந்தை வெளியூர் சென்றிருந்தார்.

    அப்போது சரோஜ் சர்மா கோவிலுக்கு சென்றதாகவும், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை எனவும் அனுஜ் சர்மா போலீசில் புகார் செய்துள்ளார்.

    அதன் பேரில் போலீசார் சரோஜ் சர்மாவை தேடி வந்தனர். மேலும் இதுபற்றி அவர் சரோஜ் சர்மாவின் மகள் பூஜாவிடமும் கூறி உள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது வீட்டிற்கு சென்றபோது அங்கு அனுஜ், சமையல் அறையில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

    இதைக்கண்ட பூஜா எப்படி இங்கு ரத்தம் வந்தது என கேட்டார். இதற்கு பதில் அளித்த அனுஜ், தனது மூக்கில் இருந்து ரத்தம் கசிவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பூஜா இதுபற்றி தனது சகோதரியிடம் கூறினார்.

    பின்னர் இருவரும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வீட்டில் சோதனை செய்தனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அனுஜ் சர்மா இரவு நேரங்களில் சூட்கேசை வெளியே எடுத்து செல்லும் காட்சிகள் இருந்தது.

    அதன் மூலம் நடந்த விசாரணையில் சரோஜ் சர்மா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.

    விசாரணையில், சம்பவத்தன்று அனுஜ் சர்மா, தான் டெல்லி செல்ல விரும்பியதாகவும், அதற்கு பெரியம்மா எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலை சமையல் அறைக்கு கொண்டு சென்று அங்கு வைத்து மார்பிள் கட்டர் மூலம் உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டியதாகவும் கூறினார்.

    மேலும் வெட்டப்பட்ட உடல் பாகங்களை சூட்கேசில் மறைத்து எடுத்து சென்று ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் காட்டு பகுதியில் பல்வேறு இடங்களில் வீசியதாகவும் கூறினார்.

    மொத்தம் 10 துண்டுகளாக சரோஜ் சர்மா உடலை வெட்டிய அவர் சில உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி எடுத்து சென்று சில இடங்களில் மண்ணில் புதைத்து வைத்ததும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து சரோஜ் சர்மாவின் உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதுவரை 8 உடல் பாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சொத்து தகராறில் தம்பிையை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு முத்தீஸ்வரன் (வயது52), முருகன் (32), மணிகண்டன் (29), விநாயகமூர்த்தி (22) என்ற மகன்களும், ராஜேஸ்வரி (24), முருகேஸ்வரி (48) என்ற மகள்களும் உள்ளனர்.

    இவர்களுக்கிடையே பல வருடங்களாக குடும்ப சொத்துக்களை பிரிப்பதில் பிரச்சினை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் சொத்து பிரச்சினை குறித்து பேசி முடிவு எடுக்க முத்தீஸ்வரன் அனைவரையும் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

    அதன் பேரில் அனைவரும் நேற்று மாலை சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் உள்ள முத்தீஸ்வரன் வீட்டில் ஒன்றுகூடி பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின்போது ஒருவருக்கு ஒருவர் வாக்கு வாதம் ஏற்பட்டு ள்ளது.

    இதில் பயங்கர ஆயுதங்க ளுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் கழுத்து அறுக்கப்ப ட்டு படுகாயம் அடைந்த முருகன், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ெசல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    3 பேருக்கு சிகிச்சை

    மேலும் இந்த சம்பவத்தில் முருகன் மனைவி இந்திராதேவி, அவரது தாயார் பெரியதாய், மணிகண்டன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலைவழக்கு சம்பந்தமாக முத்தீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி கொலை வழக்கில் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அதன் தொடர்ச்சியாக மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்.நகர் 2-வது வடக்கு தெருவில் குடியிருந்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கர பாண்டியன், அவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை ஜோதி மணி ஆகிய இருவரையும் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளை யடித்து சென்றனர். மேலும் அடையாளங்களை அழிக்க மிளகாய் பொடியையும் தூவி விட்டு சென்றனர்.

    இந்த வழக்கில் மதுரை சரக ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், டி.ஐ.ஜி பொன்னி ஆலோசனையிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரணடு மனோகர் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சி பதிவுகளை பதிவிறக்கம் செய்தும், செல்போன் டவர்களை ஆய்வு செய்து வந்ததில் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், சிலரை அருப்புக்கோட்டையிலும் சிலரை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இருந்தும் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சங்கரபாண்டியன் வீட்டில் இருந்த செல்போன் தொலைந்து விட்டதாகவும் அதை தற்போது வரை பயன்படுத்தி வந்த ஒருவரையும், அதன் தொடர்ச்சியாக மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    அவர்களிடம் விசாரிக்க இன்று ஐ.ஜி.அஸ்ரா கார்க் அருப்புக்கோட்டை வருகிறார்.  

    • தங்கையை காதலித்தற்காக உயிருக்கு உயிராக பழகிய நண்பரையே தீர்த்துக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பெங்களூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சேடபட்டியை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன் மகன் அஜித்குமார்(25). பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதேபகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் அழகுவிஜய்(23) என்பவரும் உறவினர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.

    அழகுவிஜய் கல்லூரி முடித்துவிட்டு கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அஜித்குமாரின் வீட்டிற்கு செல்லும்போது அவரது தங்கை துர்க்காலட்சுமி(18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்த விபரம் சமீபத்தில்தான் அஜித்குமாருக்கு தெரியவந்தது. இதனால் அவர் தனது தங்கையையும், அழகுவிஜயையும் கண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர்கள் யாருக்கும் தெரியாமல் பேசி பழகி வந்துள்ளனர். இதனால் தனது தங்கையை காதலிப்பதை மறந்துவிட்டதாக நினைத்து அஜித்குமார் எப்போதும்போல் நட்பாக பழகி வந்துள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகுவிஜயின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி நண்பர்களை வரவழைத்து கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஜித்குமாரின் தாய் ராமேஸ்வரத்திற்கு சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது. வீட்டில் துர்க்காலட்சுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்ததும் அவரை பார்க்க அழகுவிஜய் சென்றுள்ளார்.

    அப்போது திடீரென அஜித்குமார் வந்துவிடவே ஆத்திரமடைந்தார். தனது தங்கையையும், அழகுவிஜயையும் கடுமையாக தாக்கினார். அழகுவிஜய் மயக்கமடைந்து கீழே விழவே கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் சாக்குமூடையில் கட்டி ஆத்தூர் அணைப்பகுதிக்கு கொண்டு சென்றார்.

    அப்போது அங்கு வந்த அவரது தந்தை முத்தமிழ்ச்செல்வன் உடலை யாரும் பார்க்காத வகையில் சடையாண்டி கோவில் அருகே வீசிவிட்டு சென்றுவிட்டனர். அழகுவிஜய் கொலை செய்யப்பட்டது தெரியவரவே அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர்பொதுமக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தந்தையை கைது செய்த போலீசார் தலைமறைவான அஜித்குமாரை தேடி வந்தனர்.

    அவரையும் கைது செய்யாவிட்டால் இன்று சாலை மறியலில் ஈடுபடபோவதாக அழகுவிஜய் உறவினர்கள் தெரிவித்தனர். இதனிடையே செம்பட்டி இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை போலீசார் அஜித்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். பெங்களூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    தற்போது செம்பட்டி போலீஸ் நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தங்கையை காதலித்தற்காக உயிருக்கு உயிராக பழகிய நண்பரையே தீர்த்துக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இளம்பெண் மரண வழக்கில் பல்வேறு மர்மங்கள் உள்ளதால் நவநீதனை காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 50). தொழில் அதிபரான இவர் கோவை மட்டுமல்லாமல் ஈரோட்டிலும் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    ஈரோட்டில் உள்ள நிறுவனத்தில் பவானியைச் சேர்ந்த 37 வயது பெண் வேலை பார்த்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்த அந்த பெண், நீண்ட நாட்களாக நவநீதனின் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

    சம்பவத்தன்று அந்த பெண், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதனின் வீட்டுக்கு வந்தார். அதன்பின் தீக்காயங்களுடன் அந்த பெண் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நவநீதன் தரப்பில் மருத்துவச் செலவுக்கு அந்த பெண் பணம் கேட்டு வந்ததாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் அந்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அந்த பெண் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

    கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தன்னை தொழில் அதிபர் நவநீதன் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் தொடர்ந்து 6 முறை கர்ப்பம் ஆனேன். 6 முறையும் மிரட்டியே எனது கர்ப்பத்தை கலைக்கச் செய்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நான் மருத்துவ உதவிக்காக பணம் கேட்டுச் சென்றேன். அங்கு நவநீதனும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து என் மீது தீவைத்து எரித்தனர் என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். தொழில் அதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்து.

    போலீசார் அவர்களை தேடிச் சென்றபோது 2 பேரும் தலைமறைவாகி இருந்தனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்கள் 2 பேரையும் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வந்தனர்.

    இந்தநிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை கோர்ட்டில் நேற்று தொழில் அதிபர் நவநீதன் சரண் அடைந்தார். அவரை திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சி ஜெயிலில் நவநீதன் அடைக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து இளம்பெண் மரண வழக்கில் பல்வேறு மர்மங்கள் உள்ளதால் நவநீதனை காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

    நவநீதனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், அவரை திருச்சி ஜெயிலில் இருந்து கோவை மத்திய ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் எனவும் மனு செய்கிறார்கள்.

    இந்த மனு வருகிற 6-ந் தேதி விசாரணைக்கு வரும் என தெரிகிறது. அப்போது நவநீதனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைக்கும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதற்கிடையே நவநீதனின் மனைவி எங்கு தலைமறைவாகி உள்ளார் எனவும் விசாரணை நடக்கிறது. அவரை பிடிக்க போலீசார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெண் ஊழியர் கொலை தொடர்பாக தொழில் அதிபர் நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    கோவை:

    ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்தார்.

    அந்த பெண் ஈரோட்டில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். டைல்ஸ் நிறுவனத்தை கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் நவநீதன் (வயது 50) என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் ஈரோட்டில் இருந்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு உடல் கருகிய நிலையில் அந்த பெண் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுதொடர்பாக தொழில் அதிபர் தரப்பில் அந்த பெண், சிகிச்சைக்காக தன்னிடம் பணம் கேட்டு வந்ததாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்ததாகவும் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அந்த பெண்ணை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். அப்போது அந்த பெண் திடுக்கிடும் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

    கணவரை பிரிந்து வாழ்ந்த என்னுடன் தொழில் அதிபர் நவநீதன் நெருங்கி பழகினார். எனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். உடனே நவநீதன் கர்ப்பத்தை கலைக்கும்படி கூறினார். நானும் கர்ப்பத்தை கலைத்தேன். இப்படியே 6 முறை நான் கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளேன். இதில் நான் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டேன். இந்த விவரங்கள் அவரது மனைவி அகிலாவுக்கும் தெரியும்.

    உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நான் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டு நவநீதன் வீட்டுக்கு சென்றேன். அங்கு குளியல் அறைக்கு அழைத்துச் சென்று நவநீதனும், அவரது மனைவியும் சேர்ந்து என் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்தனர். இதில் நான் படுகாயம் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.

    இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் தற்கொலைக்கு முயன்றதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை, பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் கொலை வழக்காக ஆர்.எஸ்.புரம் போலீசார் பதிவு செய்தனர். நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடிச் சென்றபோது அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 2 பேரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் 2 பேரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.


    தொழில் அதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காமாபுரத்தை சேர்ந்த 37 வயது பெண். இவருக்கு திருமணமாகி விட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாயார் வீட்டில் வாழ்ந்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த நவநீதன் ஆவார்.

    சம்பவத்தன்று இளம்பெண் தான் வேலைபார்க்கும் டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் மருத்துவ செலவுக்கு பணம் வாங்குவதற்காக கோவை ஆர்.எஸ்.புரத்தில், உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அங்கு அவரிடம், தனக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என கேட்டார்.

    ஆனால் உரிமையாளர் கொடுக்க மறுக்கவே வேதனை அடைந்த இளம்பெண் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடனடியாக ஆர்.எஸ்.புரம் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் கணவரை பிரிந்து எனது தாயார் வீட்டில் வசித்து வந்தேன். மேலும் அந்த பகுதியில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நவநீதன் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    மேலும் பல முறை என்னை பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன். இதுகுறித்து அவரிடம் தெரிவித்தபோது கருவை கலைக்க சொன்னார். இதுபோன்று 6 முறை கர்ப்பத்தை கலைத்துள்ளேன். இந்த விஷயம் அனைத்து நான் வேலைபார்த்த நிறுவனத்தின் உரிமையாளரின் மனைவி அகிலாவுக்கு தெரியும்.

    ஆனால் அவரும் அதனை கண்டு கொள்ளவில்லை. நான் 6 முறை கர்ப்பத்தை கலைத்ததால் எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதற்கு மருத்துவ செலவுக்கு பணம் கேட்பதற்காக கோவையில் உள்ள நவநீதன் வீட்டிற்கு வந்தேன். அப்போது அவரும், அவரது மனைவியும் என்னை தனியாக வீட்டிற்குள் அழைத்து சென்றனர்.

    அங்குள்ள குளியலறையில் வைத்து என் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டனர்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் நவநீதன், அவரது மனைவி அகிலா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து ஆர்.எஸ்.புரம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர். தங்களை போலீஸ் தேடுவதை அறிந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே பெண்ணின் சாவுக்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
    பழனி அருகே ஒரே நாளில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    பழனி:

    பழனி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் சுல்தான். இவருக்கு 3 மனைவிகள். 3-வது மனைவியின் மகன்கள் தாஜூதீன் (வயது45), கமருதீன் (40), ஜாகீர்உசேன் (38). தாஜூதீன் ஆயக்குடியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    மற்ற 2 பேரும் வேலைக்கு செல்லாமல் பூர்வீக சொத்தை அனுபவித்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. முதல் மனைவியின் மகன் ஜாபர் அலி. இவர் கமருதீன் மற்றும் ஜாகீர்உசேனிடம் சொத்தை பிரித்து தரக்கோரி சமரசம் பேசி உள்ளார்.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த 2 பேரும் நேற்று இரவு உன்னால்தான் இந்த பிரச்சினை என்று தாஜூதீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாஜூதீனை சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தாஜூதீன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜாகீர்உசேன், கமருதீன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    பழனி அடிவாரம் அருகே உள்ள மருத்துவ நகரை சேர்ந்தவர் சங்கர் (30). இவர் அமரப்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று இரவு திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது காரில் வந்த 3 மர்ம நபர்கள் சங்கரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டி.எஸ்.பி. விவேகானந்தன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை பழிக்கு பழியாக நடந்தது தெரிய வந்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு பாலசமுத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சிறைக்கு சென்ற சங்கர் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளார்.

    இதனை அறிந்த மர்ம கும்பல் அவரை பழிக்கு பழியாக வெட்டி கொன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒரே நாளில் 2 கொலைகள் நடந்துள்ளது பழனி பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ×