என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கொலை- போலீசார் விசாரணை
- பன்றி வளர்ப்பில் ஈடுபட்ட ரவிசங்கரை மர்மநபர்கள் 2 பேர் வெட்டிக்கொன்று தப்பிச் சென்றனர்.
- தொழில் போட்டி காரணமாக ரவிசங்கர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு ஒன்றிய பொருளாளர் ரவிசங்கர் (35) ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பன்றி வளர்ப்பில் ஈடுபட்ட ரவிசங்கரை மர்மநபர்கள் 2 பேர் வெட்டிக்கொன்று தப்பிச் சென்றனர்.
தொழில் போட்டி காரணமாக ரவிசங்கர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சூளகிரி காவல்துறையினர் விசாரணை நடத்தி, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Next Story






