என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் விசாரணை"

    • ஜோசப் தனது நண்பருடன் சர்மிளாவை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
    • ஜோசப் மற்றும் அவரது நண்பரும் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

    புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சர்மிளா (27). இவர் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் இந்திரா நகரை சேர்ந்த டிரைவர் ஜோசப் (36) என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜோசப் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

    இந்நிலையில் ஜோசப்பின் பழக்க வழக்கம் சர்மிளாவுக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஜோசப் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அவர் வேலை செய்யும் ஜவுளி கடைக்கு சென்று தொந்தரவு செய்துள்ளார்.

    இதுகுறித்து சர்மிளா பெரிய கடை, ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார், ஜோசப்பை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு சர்மிளா வேலையை முடித்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே வந்த போது ஜோசப் தனது நண்பருடன் சர்மிளாவை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    ஆனால் அந்த பெண் அவரிடம் பேசாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோசப் ஏற்கனவே ஒரு பாட்டிலில் வாங்கி தயாராக வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்த அந்த பெண் வலி தாங்க முடியால் அலறியபடி ஓடினார். இதனை பார்த்து அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி ஓடினர். ஒரு சிலர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ஜோசப் மற்றும் அவரது நண்பரும் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    ஜோசப்புக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டதால் அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • இருவரும் மாறி, மாறி அடித்துக் கொண்டதாக தெரிகிறது.
    • சக மாணவர்கள் இரண்டு பேரையும் சமாதானம் செய்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள புலிவலம் நல்லவாணிப்பட்டி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் செல்வம் (வயது 13). கரட்டாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பினார்.

    பின்னர் நல்லவாணிபட்டியில் உள்ள ஒரு மைதானத்தில் நண்பர்கள் மற்றும் மாணவர்களுடன் வாலிபால் விளையாட சென்றிருந்தார். அப்போது நல்ல வாணிப்பட்டியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவருக்கும், செல்வத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் மோதலாக மாறியது. இருவரும் மாறி, மாறி அடித்துக் கொண்டதாக தெரிகிறது. பின்னர் சக மாணவர்கள் இரண்டு பேரையும் சமாதானம் செய்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் செல்வத்தின் பெற்றோர் மகனின் நெற்றி பொட்டு சற்று வீங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதுபற்றி அவரிடம் கேட்டபோது வாலிபால் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தன்னை தாக்கியதாக கூறினார். லேசான வீக்கம் தானே சரியாகிவிடும் என கருதி விட்டுவிட்டனர்.

    இந்த நிலையில் இரண்டு மணி நேரம் கழித்து செல்வம் வாந்தி எடுத்து வீட்டில் மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை தூக்கிக் கொண்டு துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஓடினர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தலையில் ஏதேனும் அடிபட்டு உள்ளுக்குள் ரத்தம் உறைந்து சுயநினைவு இழந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றி செல்வத்தின் தந்தை சரவணன் புலிவலம் போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் சம்பவ இடம் விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளார். விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட தகராறில் சக மாணவன் தாக்கியதால் செல்வம் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சக மாணவருடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பள்ளிச் சிறுவன் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

    • மாணவியின் செல்போனுக்கு மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களை அனுப்பி ஒரு கும்பல் மிரட்டி உள்ளது.
    • கல்லூரி மாணவி அபிராமபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    திருச்சியில் இருந்து சென்னைக்கு பிராஜக்ட் செய்ய வந்திருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அடையாறு C.L.R.I.க்கு பிராஜக்ட் செய்வதற்காக வந்த மாணவியின் செல்போனுக்கு மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களை அனுப்பி ஒரு கும்பல் மிரட்டி உள்ளது.

    மாணவியை C.L.R.I.க்கு வெளியே வரவழைத்து காரில் வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று அந்த கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த கும்பல் மாணவியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து மீண்டும் காரிலேயே வந்து விட்டுச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து ஆண் நண்பரிடம் நடந்ததைக் கூறி அழுத கல்லூரி மாணவி அபிராமபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமை புகார் குறித்து அபிராமபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி புகாரின் உண்மைத்தன்மை குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகம் முழுக்க கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, சட்டம் ஒழுங்கு விவகாரம் கட்டுப்பாட்டை மீறியுள்ளதையே காட்டுகிறது.

    • பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து உடனடியாக கார்த்தி சிதம்பரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் தெற்கு முதல் வீதியில் முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி மற்றும் சிவகங்கை தொகுதி எம்.பி.யும்., ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் உள்ளது.

    இங்கு ஆண்டியப்பன் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவர் நேற்று இரவு 12 மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். பின்னர் அவர் ஓய்வெடுத்தார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் திடீரென 2 பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசினார்கள்.

    இதில் ஒரு பெட்ரோல் குண்டு தரையில் பட்டு வெடித்து சிதறியது. இன்னொரு பெட்ரோல் குண்டு புல்வெளியில் விழுந்து உள்ளது. இதனால் அது வெடிக்கவில்லை. இன்று காலையில் காவலாளி வந்து பார்த்த போது, அலுவலக வளாகத்தில் பாட்டில்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து உடனடியாக கார்த்தி சிதம்பரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆலோசனையின் பேரில் எம்.பி. அலுவலக உதவியாளர் செந்தில் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். ப. சிதம்பரத்தின் அலுவலகம் அமைந்திருக்கும் தெரு பகுதியில் ப.சிதம்பரத்தின் அலுவலகத்தை நோக்கி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கேமராவையும் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் உடைத்து உள்ளனர்.

    இருப்பினும் அப்பகுதியில் உள்ள மற்ற சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் எதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை.

    இருப்பினும் ஈரான் அதிபர் பற்றி கார்த்தி சிதம்பரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கார்த்தி சிதம்பரம் ஈரான் பற்றி பேட்டி அளித்த போது ஈரானில் நடைபெற்றது கொடுங்கோல் அரசு என்று தெரிவித்து இருந்தார்.

    இதற்கு சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்து வெளியிடப்பட்டதுடன், காரைக்குடியில் கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களே கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    அதே நேரத்தில் அரசியல் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க., காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ப.சிதம்பரம் தலையிட்டு சுமூகமாக சமீபத்தில் தீர்த்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

    காரைக்குடி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்து வருகிறார்கள்.

    • நேற்று இரவு மணிஷ்குமார் வீட்டிற்கு இளம்பெண் சென்றார்.
    • அப்போது மதுபோதையில் இருந்த மணிஷ்குமார் திடீரென இளம்பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறலில் ஈடுபட்டார்.

    போரூர்:

    சென்னை நெற்குன்றம், பகுதியை சேர்ந்த 23வயது இளம்பெண் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    இவரது எதிர் வீட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிஷ்குமார் (வயது37) என்பவர் வசித்து வருகிறார் இவரிடம் இளம்பெண் நட்பு ரீதியாக பழகி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மணிஷ்குமார் வீட்டிற்கு இளம்பெண் சென்றார். அப்போது மதுபோதையில் இருந்த மணிஷ்குமார் திடீரென இளம்பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவரது பிடியில் இருந்து தப்பி ஓடி வந்து தாயிடம் நடந்ததை கூறி அழுதார். உடனடியாக இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது இதையடுத்து போலீசார் மணிஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஆம்பூர்:

    சென்னை பழவந்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிவபூசணம் (வயது48) . இவர் இன்று காலை ஆம்பூர் அடுத்த தேவலாபும் ஊராட்சி எட்டியம்மமன் கோவில் தெருவில் நிறுத்தி வைத்திருந்த காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் பகுதியை சேர்ந்த காஞ்சனா என்ற பெண்ணை 11 ஆண்டு முன்பு திருமணம் செய்து கொண்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததும், தற்போது ஆம்பூரில் கணவன்- மனைவி பைபாஸ் சாலையின் அருகே உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த 3- நாட்களுக்கு முன்பு தேவலாபுரம் பகுதியில் தங்கும் விடுதியில் தங்கியிருந்து நேற்று மாலை அறையை காலி செய்து வெளியே சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவபூசணம் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே முதியவரை கொன்று அவரது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி வசித்து வந்த நிலையில் 70 வயது கணவனை கொன்று 60 வயது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்த நிலையில் மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • உங்கள் மகன் பெண் பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், தன்னை போலீஸ் அதிகாரி எனக்கூறியுள்ளார்.

    மேலும் உங்கள் மகன் பெண் பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடுமே என எண்ணி தங்கள் மகனை விடுவிக்க வேண்டுமாறு கூறியுள்ளனர்.

    அப்போது வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோர், அவர் கூறிய எண்ணுக்கு ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சத்தை அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுபற்றி விசாரித்தபோது, பலாத்கார வழக்கில் மகன் கைது செய்யப்படவில்லை என்பதும் மர்மநபர் போலீஸ்போல் பேசி மோசடி செய்தது தெரியவந்தது.

    இதேபோல் முத்தியால் பேட்டையை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி அவரின் மகனும் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளதாகவும் அவரை விடுவிக்க ரூ.5 லட்சத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டி பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெரியவர்கள் பல முறை நிவேதிதாவிற்கு அறிவுரை கூறி சமரசம் செய்து வைத்துள்ளனர்.
    • நிவேதிதா இறந்ததை அறிந்த பாக்கியராஜ் தலைமறைவானார்.

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜெல்திம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாக்கியராஜ் (35) இவரது மனைவி நிவேதிதா (30) இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. 9 மற்றும் 7 வயதில் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

    நிவேதிதாவிற்கு அப்பகுதியில் உள்ள வேறு ஒரு வாலிபருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த பாக்கியராஜ் நிவேதிதாவை பலமுறை கண்டித்துள்ளார்.

    ஆனால் தொடர்ந்து நிவேதிதா வாலிபருடன் பழகி வந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பெரியவர்கள் பல முறை நிவேதிதாவிற்கு அறிவுரை கூறி சமரசம் செய்து வைத்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பாக்கியராஜ் வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியால் நிவேதிதாவின் தொண்டை பகுதியில் குத்தி உள்ளார்.

    இதில் நிவேதிதா துடிதுடித்து ரத்தம் வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    நிவேதிதா இறந்ததை அறிந்த பாக்கியராஜ் தலைமறைவானார். இன்று காலை தகலவறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிவேதிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் பாக்கியராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணம் மீறிய உறவை கைவிடாததால் கணவனே மனைவியை குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சூர்யஸ்ரீ என்ற பெயரில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஆலையில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் முழுவதுமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பட்டாசு வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாணவியும் இதனை உண்மை என நம்பி அவர்களுடன் பைக்கில் சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஜோகுலாம்பா மாவட்டம், கட்வால் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கட்வாலில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பைக்கில் வந்தனர். மாணவியிடம் பைக்கில் அழைத்துச் சென்று பள்ளியில் பத்திரமாக விடுவதாக தெரிவித்தனர். மாணவியும் இதனை உண்மை என நம்பி அவர்களுடன் பைக்கில் சென்றார்.

    சிறிது தூரம் சென்ற போது வாலிபர்கள் வேறு வழியாக பைக்கை திருப்பி வெறிச்சோடிய பகுதிக்கு ஓட்டிச் சென்றனர். இருவரும் சேர்ந்து மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நடந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

    மாணவியின் பெற்றோர் காட்வால் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    பள்ளிக்கு செல்லும் மாணவிகள் யாரையும் நம்பி செல்லக்கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    • திலீப் பறித்த நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • பயந்து போன தொழிலதிபர் மனைவி தனது கணவரிடம் இது பற்றி முறையிட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கம் முருகப்பா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபர் மனைவியை மயக்கி அதே குடியிருப்பில் வசித்து வந்த வாலிபர் ஒருவர் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளை பறித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தொழிலதிபர் சென்னை அண்ணா சாலையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். 36 வயதான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில்தான் தொழிலதிபரின் மனைவியுடன் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடிவந்த திலீப் என்ற 34 வயது வாலிபர் பழகியுள்ளார்.

    வாலிபர் திலீப்பின் தாய் சங்கீதா தான் முதலில் தொழிலதிபரின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியுடன் நெருங்கி பழகி இருக்கிறார். இதன் பிறகு தொழிலதிபரின் மனைவியும் வாலிபர் திலீப்பின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

    இதனை பயன்படுத்திக் கொண்ட திலீப் தொழில் அதிபர் மனைவியை காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையிலும் தொழிலதிபர் மனைவி தனது குடும்பத்தை மறந்து கள்ளக்காதலுடன் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உல்லாசமாக இருந்திருக்கிறார்.

    கடந்த ஓராண்டாகவே இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்த நிலையில் வாலிபர் திலீப் தொழிலதிபர் மனைவியிடம் இருந்து நகை மற்றும் பணத்தை அதிக அளவில் பறித்துள்ளார்.

    தனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் தொழிலதிபர் மனைவியிடம் சென்று வாலிபர் திலீப் பணம் வாங்குவதை வழக்கமாகவே வைத்திருந்து உள்ளார்.

    இப்படி தொழிலதிபரின் மனைவியிடம் இருந்து திலீப் 850 கிராம் தங்க நகைகள் 120 கிராம் வைர நகைகள் 2½ கிலோ வெள்ளி பொருட்கள்,ரூ.20,000 ரொக்க பணம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

    இதன் பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்று குடியேறி உள்ளார். இருப்பினும் தொழிலதிபர் மனைவியை தொடர்பு கொண்டு மேலும் மேலும் பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி இருக்கிறார்.

    நான் கேட்கும்போதெல்லாம் பணத்தை கொடுக்காவிட்டால் நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று தொழிலதிபர் மனைவியை வாலிபர் திலீப் மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்து போன தொழிலதிபர் மனைவி தனது கணவரிடம் இது பற்றி முறையிட்டுள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் இந்த சம்பவம் பற்றி வேப்பேரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் திலீப்பின் தாய் சங்கீதா, அவரது தம்பி அங்கித் ஆகிய இருவரையும் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

    தொழிலதிபர் மனைவியை மயக்கி நகை, பணத்தை பறித்துவிட்டு தப்பி சென்ற மன்மத வாலிபர் திலீப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    தொழிலதிபர் மனைவியிடம் இருந்து வாலிபர் திலீப் பறித்த நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள திலீப்பை பிடிப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    ×