search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman murdered"

    • வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.
    • வேலூரில் இருந்து மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது.

    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வளர்மதி (வயது 50). தம்பதியருக்கு பாண்டியன் (25), அசோக்குமார் (23) என்ற 2 மகன்களும், அபிநயா (19) என்ற மகளும்  உள்ளனர்.

    வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம். நேற்று மதியம் 12 மணியளவில் ஆடுகளை அருகில் உள்ள மாந்தோப்பில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.

    ஆடுகளை மேய்த்துக்கொண்டு வீட்டிற்கு தேவையான விறகுகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வளர்மதி காதில் அணிந்திருந்த 1/2 பவுன் நகைக்காக அவரது காதை கத்தியால் அறுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வளர்மதி அங்கிருந்து தப்பி ஓடினார்.

    வளர்மதியை விரட்டி சென்ற மர்ம நபர்கள் அவரை மடக்கி கழுத்து அறுத்து கொலை செய்தனர்.

    ரத்த வெள்ளத்தில் வளர்மதி பிணமாக கிடந்தார். மாலை 4 மணிக்கு அந்த வழியாக சென்ற மலர் என்ற பெண் வளர்மதியின் பிணத்தைப் பார்த்து கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக இதுகுறித்து கிராம மக்கள் பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த குடியாத்தம் டிஎஸ்பி பொறுப்பு இருதயராஜ் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சம்பவ இடத்திற்கு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் சுருதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் வேலூரில் இருந்து மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சாரா சம்பவ இடத்திலிருந்து சாத்கர் கிராமம் கீழ் ரோடு வழியாக கானாற்றில் உள்ள கிணறு வரை 2 கிலோமீட்டர் தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கைரேகை நிபுணர் தமிழ்மணி, தடவியல் நிபுணர் சேதுராமன் ஆகியோர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். போலீசார் வளர்மதியின் பிணைத்த மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை வளர்மதியின் கொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி வளர்மதியின் உறவினர்கள் மற்றும் சாத்கர் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் பேரணாம்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் எர்ரம் அனுராதா ரெட்டி.
    • சந்திரமோகன் கொலை செய்தது, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ, அவருடன் வசிக்கும் அவருடைய தாயாருக்கோ கூட தெரியாது.

    ஐதராபாத்:

    டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சாரதா என்ற பெண்ணின் கொலை, நாட்டையே உலுக்கியது.

    அவருடன் சேர்ந்து வாழ்ந்த சமையற்கலை நிபுணர் அப்தாப் பூனவல்லா என்பவர், சாரதாவை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி நகரம் முழுவதும் ஆங்காங்கே வீசினார்.

    இந்த கொலையை நினைவுபடுத்தும்வகையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஒரு கொடூர கொலை நடந்துள்ளது. அங்குள்ள முசி ஆற்றங்கரையில் நடைபாதையில் ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு பெண்ணின் தலை கைப்பற்றப்பட்டது.

    அவர் யார்? அவரை கொலை செய்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தும், காணாமல் போனவர்கள் பட்டியலை ஒப்பிட்டும் கொலையாளியை நெருங்கினர்.

    அவர் பெயர் சந்திரமோகன் (வயது 48). பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார். ஐதராபாத்தில் சைதன்யபுரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் எர்ரம் அனுராதா ரெட்டி (55). வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார். ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாகவும் பணியாற்றி வந்தார். சைதன்யபுரியில், சந்திரமோகனுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது திடுக்கிட்டனர். அனுராதா ரெட்டியின் தலையற்ற உடல், பாலிதீன் கவரில் சுற்றப்பட்டு, ஒரு சூட்கேசில் வைக்கப்பட்டிருந்தது. அப்புறப்படுத்த தயார்நிலையில் இருப்பது தெரிய வந்தது.

    அனுராதா ரெட்டியின் துண்டிக்கப்பட்ட 2 கால்கள், 2 கைகள் ஆகியவை பிரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்தன. வாசனை திரவிய பாட்டில்கள், பினாயில், டெட்டால், கல் உடைக்கும் கருவி ஆகியவையும் பிரிட்ஜில் இருந்தன.

    கைதான சந்திரமோகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை நடந்தது எப்படி என்பது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் ருபேஷ் கூறியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து அனுராதா ரெட்டியிடம் சிறிது சிறிதாக ரூ.7 லட்சம்வரை சந்திரமோகன் கடன் வாங்கி இருந்தார். அதை பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். ஆனால் கொரோனா காலத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.

    அந்த பணத்தை திருப்பித்தருமாறு அனுராதா ரெட்டி வற்புறுத்தி வந்தார். சந்திரமோகனால் கொடுக்க முடியவில்லை. எனவே, அனுராதா ரெட்டியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    உடலை அப்புறப்படுத்துவது எப்படி என்று 'கூகுள்' பார்த்து தெரிந்து கொண்டார். உடலை துண்டு போட என்னென்ன கருவிகள் தேவைப்படும் என்றும் ஆய்வு செய்தார்.

    கடந்த 15-ந் தேதி அனுராதா ரெட்டி வீட்டுக்கு சென்ற சந்திரமோகன், அவரது நெஞ்சிலும், வயிற்றிலும் குத்தி கொலை செய்தார். பின்னர், அனுராதாவின் தலையை துண்டித்தார். உடலை 6 துண்டுகளாக வெட்டினார்.

    டெல்லி சாரதா கொலையில், உடல் பாகங்கள் இரவு நேரங்களில் நகரம் முழுவதும் வீசப்பட்டதுபோல், நாள்தோறும் ஒரு பாகத்தை வீசி எறிய சந்திரமோகன் திட்டமிட்டார்.

    முதலில், கடந்த 17-ந்தேதி, தலையை மட்டும் முசி ஆற்றங்கரையில் வீசிவிட்டு, ஒன்றுமே நடக்காததுபோல் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

    மற்ற உடல் பாகங்களை பிரிட்ஜ்க்குள் வைத்திருந்தார். அதிலிருந்து துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக, தினந்தோறும் வாசனை திரவியங்களை அடித்து வந்தார்.

    இன்னும் ஒருபடி மேலே சென்று, அனுராதா ரெட்டியின் செல்போனை எடுத்து, அப்பெண்ணே அவருடைய நண்பர்களுக்கு செய்தி அனுப்புவதுபோல், நாள்தோறும் செய்தி அனுப்பி வந்தார். இதன்மூலம், அனுராதா உயிருடன் இருப்பதுபோல் நம்ப வைத்தார்.

    சந்திரமோகன் கொலை செய்தது, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ, அவருடன் வசிக்கும் அவருடைய தாயாருக்கோ கூட தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிதம்பரத்தை சேர்ந்த குணப்பிரியா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • நண்பர் வீட்டில் தங்க வைத்ததால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் நேற்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    பிணமாக கிடந்த பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அவர் சுடிதார் அணிந்திருந்தார். கழுத்தில் தாலி இருந்தது. அவர் யார் என்பது தெரியவில்லை. அவரை கொலை செய்து பாறை மேல் இருந்து தூக்கி வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

    போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் கொலை செய்து வீசப்பட்ட பெண் யார் என விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட பெண் சிதம்பரத்தைச் சேர்ந்த குணப்பிரியா என்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக சிதம்பரத்தைச் சேர்ந்த அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து குணப்பிரியாவின் உடலை அடையாளம் காட்டினர்.

    வேலூரை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் கார்த்தி (வயது22) என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு குணப்பிரியாவை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கார்த்தி குணப்பிரியாவை அடித்துக் கொன்று மலையில் இருந்து தள்ளியது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.

    சிதம்பரத்தை சேர்ந்த குணப்பிரியா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடன் இன்ஸ்ட்ரா கிராமில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தோம். எனது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குணப்பிரியாவை காதல் திருமணம் செய்தேன். எனது வீட்டில் எங்களை சேர்க்கவில்லை. இதனால் வேலூர் ஜீவா நகர் பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம்.

    மேளம் அடிக்கும் வேலைக்கு சென்று வந்தேன்.

    குணப்பிரியா 7 மாத கர்ப்பிணியானார். நண்பர் வீட்டில் தங்க வைத்ததால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    கடந்த மாதம் அவரது தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 25-ந்தேதி வேலூர் வந்தார். அவரை பாலமதி மலைக்கு அழைத்து சென்றேன்.

    வேலூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து நாம் குடியேறலாம் என குணப்பிரியா தெரிவித்தார். இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த நான் அங்கிருந்த கட்டையை எடுத்து அவரது தலையில் அடித்தேன். இதில் குணப்பிரியா இறந்து விட்டார். பின்னர் மலையில் இருந்து தள்ளி விட்டு வந்து விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கைது செய்யப்பட்ட வாலிபர்களில் பிரகாஷ் மற்றும் ரஞ்சன்ராணா ஆகிய 2 பேரையும் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் வடகாடு பகுதியில் கடல்பாசி சேகரித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய 45 வயது மதிக்கத்தக்க மீனவ பெண் கடந்த 24-ந் தேதி அங்குள்ள முட்புதரில் அரைநிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ராமேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணை அதே பகுதியில் உள்ள வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 வாலிபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து ஒடிசா மாநில வாலிபர்களான பிரகாஷ் (வயது 22), விகாஸ்(24), ராகேஷ் (25), பிரசாத் (19), ரஞ்சன்ராணா(34), பிண்டு(19) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கைது செய்வதற்கு முன்பாக அந்த 6 வாலிபர்களையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

    மேலும் அவர்கள் வேலை பார்த்த இறால் கம்பெனியில் இருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர். அதுமட்டுமின்றி கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடகாடு மீனவ கிராம மக்கள் நேற்று முன்தினம் பலமணி நேரம் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

    பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த 6 வாலிபர்களும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதால் அவர்களிடம் போலீசாரால் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை.

    இந்நிலையில் மருத்துவ சிகிச்சை முடிவடைந்ததை அடுத்து வாலிபர்கள் 6 பேரையும் நேற்று மாலை ராமேசுவரத்திற்கு அழைத்து சென்றனர். உச்சப்புளி போலீஸ் நிலையத்தில் வைத்து 6 பேரிடமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது குறித்து பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. அதுகுறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட வாலிபர்களில் பிரகாஷ் மற்றும் ரஞ்சன்ராணா ஆகிய 2 பேரையும் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது தனியாக வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி? என்று போலீசாரிடம் நடித்து காண்பித்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் நகைகளை அடகு வைக்க ராமேசுவரம் நகைக்கடை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றிருக்கின்றனர். இதனால் நகைக்கடை பஜாருக்கு பிரகாஷை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    2 வாலிபர்களை மட்டும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 6 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் முழுமையாக ஈடுபட்டவர்கள் எத்தனை பேர்? என்பது இன்று மாலைக்குள் தெரிந்து விடும்’ என்றனர்.



    பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற ஒடிசா மாநில வாலிபர்கள் 6 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வடகாடு பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று முன்தினம் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றார். மாலை வரை வீடு திரும்பாததால் அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடினர்.

    மேலும் அந்த பெண் மாயமானது குறித்து ராமேசுவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் அந்த பெண் அதே பகுதியில் கடற்கரையை ஒட்டிய இடத்தில் முள் புதரில் ஆடைகள் கலைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு முகம் உள்ளிட்ட பகுதிகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது.

    அவரை கொன்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண் பிணமாக கிடந்த இடத்திற்கு அருகே செயல்பட்டு வரும் இறால் பண்ணையில் பணிபுரியும் ஒடிசா மாநில வாலிபர்கள் பிரகாஷ் (வயது 22), விகாஷ் (24), ராகேஷ் (25), பிரசாத் (19), ரஞ்சன்ராணா (34), பிண்டு (19) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசாருடன் நின்ற பொதுமக்கள் வாலிபர்கள் 6 பேரையும் சரமாரியாக தாக்கினர். மேலும் இறால் பண்ணையின் முன் பகுதியில் இருந்த வாகனம் மற்றும் பொருட்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த வாலிபர்கள் 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடல்பாசி சேகரித்துவிட்டு தனியாக வந்த பெண்ணை 6 பேரும் வழிமறித்து புதருக்குள் தூக்கிச்சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து 6 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் அவர்கள் 6 பேரும் காயமடைந்திருந்தனர். இதனால் 6 வாலிபர்களும் சிகிச்சைக்காக மதுரை மற்றும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் கூட்டு பலாத்காரம் செய்து பெண்ணை கொன்ற கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், வடமாநில வாலிபர்கள் பணிபுரிந்த இறால் பண்ணையை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள், குடும்பத்தினர் வடகாடு மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 6 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மற்றும் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை வெகுநேரத்திற்கு பின் கைவிட்டனர்.

    அதன்பிறகு கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற ஒடிசா மாநில வாலிபர்கள் 6 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிகிச்சையில் இருப்பதால் 6 வாலிபர்களிடமும் போலீசார் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை. சிகிச்சை முடிந்ததும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதன்பிறகு அவர்கள் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



    பெண் படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி சந்திரா (வயது 45). இவர் வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று காலையில் சந்திரா வழக்கம் போல் கடல் பாசி எடுக்க சென்றுள்ளார். அவர் தினமும் மாலை 4 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பி விடுவார். ஆனால் நேற்று மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அச்சம் அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் வடகாடு கடல் பகுதியில் தேடினர்.

    இரவு வரை தேடியும் சந்திரா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அது குறித்து கணவர் பாலு ராமேசுவரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வடகாடு பகுதிக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் மாயமான சந்திராவை வடகாடு கடற்கரையை ஒட்டியுள்ள காட்டு பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்திரா அங்கிருந்த முள்புதருக்குள் உடல் எரிந்த நிலையில் அரைநிர்வாணமாக பிணமாக கிடந்துள்ளார். அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்திருந்தது. கழுத்தில் துணியால் இறுக்கியதற்கான தடயங்கள் இருந்தன. இதனால் அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொன்று விட்டு உடலை தீ வைத்து எரித்திருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் போலீசாருடன் சென்ற ஊர் மக்கள் ஆத்திரம் அடைந்து இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். மேலும் இறால் பண்ணையில் பணிபுரிந்த 6 வடமாநில வாலிபர்களையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கி, அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டினர்.

    அந்த 6 வாலிபர்களையும் போலீசார் மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சந்திராவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஊர் மக்கள் சந்திராவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை எடுக்க விட மாட்டோம் என்று கூறி போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதையடுத்து பொதுமக்கள் சந்திராவின் உடலை எடுக்க அனுமதித்தனர். சந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் வடமாநில வாலிபர்கள் 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த வாலிபர்களில் 3 பேர் சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை தீவைத்து எரித்தது தெரியவந்தது. கடல் பாசி சேகரிப்பதற்காக சந்திரா சென்றபோது, அவரை இறால் பண்ணையில் வேலை பார்த்த வடமாநில வாலிபர்கள் 3 பேர் கஞ்சா போதையில் வழிமறித்து தகராறு செய்திருக்கின்றனர்.

    பின்பு அவரை வடகாடு காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன்பிறகு சந்திராவை அங்கு வைத்து அவரது சேலையாலேயே கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கின்றனர்.

    சந்திராவை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக முட்புதரில் அவரது உடலை போட்டு முகம் மற்றும் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்திருக்கின்றனர். இதையடுத்து வடமாநில வாலிபர்கள் 3 பேரும் தாங்கள் பணிபுரிந்து இறால் கம்பெனிக்கு சென்று விட்டனர்.

    இந்நிலையில் மாயமான சந்திராவை தேடியபோது அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு கிடந்தது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் தாக்கியதில் வடமாநில வாலிபர்கள் 6 பேரும் காயமடைந்தனர். இதனால் அவர்களை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக வாலிபர்கள் 6 பேரும் மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். வடமாநில வாலிபர்கள் 6 பேரும் சிகிச்சையில் இருப்பதால் அவர்களிடம் போலீசார் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை.

    இதனால் சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற 3 வாலிபர்கள் யார்? என்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது. வாலிபர்கள் 6 பேரும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் சிகிச்சை முடிந்ததும் 6 பேரிடமும் விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் போலீஸ் கண்காணிப்பில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சந்திரா படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

    சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈட வழங்க வேண்டும், வடமாநில வாலிபர்கள் வேலை பார்த்த இறால் பண்ணையை மூட வேண்டும், அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    பொதுமக்களின் இந்த போராட்டத்தால் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து ராமேசுவரம் துணை தாசில்தார் அப்துல் ஜப்பார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சம்பவ இடத்திற்கு கலெக்டர் வரவேண்டும் மற்றும் தங்களின் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றுவதாக அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேசுவரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



    ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமேஸ்வரம் அருகே வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்க சென்ற இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 45 வயது மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    சூலூர் பெரியகுளத்தில் இளம்பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். அவரை யாராவது கொலை செய்து வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சூலூர்:

    சூலூர் பெரியகுளத்தில் சுடிதார் அணிந்த நிலையில் ஒரு இளம்பெண் நேற்று மாலை பிணமாக மிதந்தார். இதைப்பார்த்த சிலர் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் மீனவர்கள் உதவியுடன் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டனர்.

    விசாரணையில் பிணமாக கிடந்த பெண் யார் என்று தெரியவில்லை. மேலும் அவர் தனது கையில் ஒரு பேக் வைத்திருந்தார். அதனை போலீசார் கைப்பற்றி சோதனையிட்டபோது அதில் ஏதும் இல்லை. இதனால் பிணமாக கிடந்த பெண் பற்றி துப்பு ஏதும் கிடைக்கவில்லை. எனவே இளம்பெண்ணை கொன்று யாராவது குளத்தில் வீசி சென்றார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பிணமாக கிடந்த பெண்ணின் அடையாளத்தை காண கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு இளம்பெண் யாராவது காணாமல் போய் இருப்பதாக புகார் ஏதும் இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிணமாக கிடந்த பெண் யார் என்று தெரிந்தால் தான் அவரது இறப்புக்கான காரணம் தெரியும் என்பதால் போலீசார் இளம்பெண்ணின் அடையாளத்தை கண்டு பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். குளத்தில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    ஓட்டேரியில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    அம்பத்தூர்:

    ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை சுப்புராயன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் பரிமளா.

    இவரது கணவர் கோவிந்தராஜ். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் கார்த்திக் மயிலாப்பூரில் உள்ள விடுதியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வருகிறான். பரிமளா வீட்டு வேலை செய்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு வீட்டில் பரிமளாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் பரிமளா பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அங்கு பரிமளா வீட்டு மாடியில் வசிக்கும் சூர்யா (18) நின்று கொண்டிருந்தார். அவர் பதட்டத்துடன் இருப்பதை கவனித்த போலீசார் சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரித்தனர். அதில் பரிமளாவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து அவரை கைது செய்தனர். பரிமளாவுக்கும், சூர்யாவின் தாய் பாக்கியலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யா பரிமளாவை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ஆனால் மற்றொரு தகவலில் உல்லாசத்துக்கு மறுத்ததால் கொலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பரிமளாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இதை அறிந்த சூர்யா, பரிமளாவிடம் தன்னுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார். ஆனால் அதற்கு பரிமளா மறுத்ததால் தகராறு செய்தார்.

    இது தொடர்பாக நேற்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது ஆத்திரத்தில் பரிமளாவை சூர்யா கொலை செய்ததாக தெரிகிறது.

    இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #tamilnews
    புதுக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வீரப்பட்டியை சேர்ந்தவர் நேரு (வயது 28). இவரது மனைவி லாவண்யா (23). இவர்களுக்கு 1½ வயதில் ஒரு கைக்குழந்தை உள்ளது. நேரு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் லாவண்யா குழந்தையுடன் வீரப்பட்டியில் தனியாக வசித்து வந்தார்.

    இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து லாவண்யா வெளியே வரவில்லை. குழந்தையின் அழுகை சத்தம் மட்டும் கேட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டிற்குள் லாவண்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து உடனடியாக திருமயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது வீட்டிற்குள் பல்வேறு பொருட்கள் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தது. நகை மற்றும் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதனால் மர்ம நபர்கள் லாவண்யாவை அடித்து கொலை செய்து விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வந்தது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    மோப்ப நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து கொண்டு சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதே போல் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    லாவண்யாவின் வீடு அப்பகுதியில் தனியாக உள்ளது. வீட்டை சுற்றி எந்த வீடுகளும் கிடையாது. மேலும் அவரது பெற்றோர் தனியாக வசித்து வந்தனர். இதனால் லாவண்யா மட்டும் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் நேற்றிரவு அங்கு சென்று கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

    லாவண்யா நகைகளை கொடுக்க மறுத்து போராடவே ஆத்திரத்தில் மர்ம நபர்கள் அவரை அடித்து கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கற்பழிப்பு முயற்சியில் இந்த கொலை சம்பவம் நடந்ததா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாரின் கார் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    கோவை:

    கோவை ராமநாதபுரம், ராமலிங்கஜோதி நகரை சேர்ந்தவர் சிவகுமார், சலவை தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 35). ஜெயந்தி அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பாத்திரம் கழுவுதல் போன்ற வீட்டுவேலைகள் செய்துவந்தார். கடந்த 17-ந் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயந்தி திடீரென்று மாயமானார்.

    அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து சிவகுமார் ராம நாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

    இந்த நிலையில் சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் உள்ள சாக்கடையில் சாக்குமூட்டைக்குள் ஒரு பிணம் கிடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் காணாமல்போன ஜெயந்தி என்பது தெரிந்தது.



    போலீசார் ஜெயந்தி வீட்டில் இருந்த செல்போனை ஆய்வு செய்ததில், அதே பகுதியை சேர்ந்த மணிவேல் (34) என்பவர் கடைசியாக பேசியது தெரியவந்தது. உடனே போலீசார் மணிவேலை பிடித்து தீவிர விசாரணை செய்தனர். அப்போது அவர், ஜெயந்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் மணிவேலை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் ஜெயந்தியை கொலை செய்தது குறித்து அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:-

    மணிவேலின் சொந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள எத்தரைபாளையம். இவர் ராமநாதபுரம் ராமலிங்கஜோதி நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். என்.என்.வி. கார்டனில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக கார் டிரைவராக வேலை செய்துவந்தார்.

    தற்போது சுந்தரம் தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டார். இதனால் வீட்டை மணிவேல் கவனித்து வந்தார். அப்போது அவர் ஜெயந்தியிடம் தொடர்புகொண்டு, வீட்டை சுத்தம் செய்ய வருமாறு கூறினார். அதன்படி அவர் கடந்த 17-ந் தேதி மாலையில் அங்கு சென்று வீட்டை சுத்தம் செய்தார். அப்போது மணிவேல், ஜெயந்தியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி அவரை கடுமையாக திட்டினார். தனது ஆசைக்கு இணங்க அவர் மறுத்ததால், மணிவேலுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர் ஜெயந்தியை பிடித்து கீழே தள்ளியதில் மயக்கம் அடைந்தார். பின்னர் ஜெயந்தி கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    கொலையை மறைக்கவும், தன்மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ஜெயந்தி அணிந்திருந்த 4 பவுன் நகையை திருடிக் கொண்டார். பின்னர் பிணத்தை சாக்குமூட்டைக் குள் வைத்து கட்டி சாக்கடையில் வீசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் ஜெயந்தியிடம் செல்போனில் பேசியதால் சிக்கிக்கொண்டார்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கொலையை மணிவேல் மட்டும்தான் செய்தாரா? அல்லது வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    திருநாவலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பண்ருட்டி பெண் படுகொலையில் போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகள் ரம்யா (வயது 23). இவருக்கும் நல்லூர் பாளையம் பகுதியை சேர்ந்த விஜயக்குமார் (வயது 25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் வைத்து நடைபெற இருந்தது. இதற்காக 2 குடும்பத்தினரும் பத்திரிகை கொடுப்பது உள்ளிட்ட திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தனர்.

    நேற்று முன்தினம் விஜயகுமார் , ரம்யாவை வெளியே அழைத்து சென்றார். அதன்பின் 2 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர் பல இடங்களில் விஜயகுமாரையும், ரம்யாவையும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து ரம்யாவின் தந்தை கோதண்டபாணி புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான விஜயகுமார் மற்றும் ரம்யாவை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் திருநாவலூர் அருகே உள்ள இருந்தை கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் ஒரு இளம்பெண் பிணமாக மிதந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் திருநாவலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றுக்குள் பிணமாக மிதந்தவர் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மாயமான பண்ருட்டி ரம்யா என்பது தெரியவந்தது.

    இதுபற்றி ரம்யாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ரம்யா உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவை வெளியே அழைத்து சென்ற விஜயகுமாரை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த விஜயகுமாரை பிடித்தனர். அவருடன் அவரது நண்பர் நல்லூர் பாளையத்தை சேர்ந்த பாண்டியனும் சிக்கினார். அவர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    எனக்கும் ரம்யாவுக்கும் இன்னும் 4 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. எனக்கு ரம்யாவை பிடிக்கவில்லை. எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முடிவு செய்தேன். ஆனால் முடியவில்லை. இதையடுத்து நாம் வெளியே செல்லலாம் என்று கூறி ஏமாற்றி ரம்யாவை ஒரு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றேன். என்னுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் எனது நண்பர் பாண்டியனையும் உடன் அழைத்து சென்றேன்.

    நாங்கள் 3 பேரும் திருநாவலூர் அருகே இருந்தையில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றோம். அங்கு நாங்கள் பேசி கொண்டிருந்தோம். எனக்கு உன்னை பிடிக்கவில்லை. இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்து என்று ரம்யாவிடம் கூறினேன். அதற்கு அவர் மறுத்தார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்தேன். பாண்டியனுடன் சேர்ந்து ஒரு துணியால் ரம்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் ரம்யாவின் பிணத்தை அங்குள்ள கிணற்றில் வீசி விட்டு தலைமறைவானோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து விஜயகுமார் மற்றும் பாண்டியன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.





    ×