என் மலர்
நீங்கள் தேடியது "வாலிபர் தற்கொலை"
- திருமணத்திற்காக புரோக்கர்களுக்கு ரூ.1 லட்சமும், மணமகள் தீபாவுக்கு வரதட்சணையாக ரூ.1 லட்சமும் சிவசண்முகம் கொடுத்துள்ளார்.
- திருமணம் நடந்து 2 நாளில் வீட்டைவிட்டு ஓடிய தீபா பல ஆண்களை இதுபோன்று திருமணம் செய்து கொண்டு மோசடி செய்யும் கல்யாண ராணியா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவசண்முகம்(35). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி அந்த பெண்ணை விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில் சிவசண்முகம் மதுரையை சேர்ந்த திருமண புரோக்கர்கள் மூலம் 2-வது திருமணத்திற்கு பெண் தேடி கொண்டிருந்தார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் தீபா (30) என்ற பெண்ணை கடந்த 7-ந்தேதியன்று மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள கோவிலில் சிவசண்முகம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது சிவசண்முகத்தின் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர். மணமகள் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இந்த திருமணத்திற்காக புரோக்கர்களுக்கு ரூ.1 லட்சமும், மணமகள் தீபாவுக்கு வரதட்சணையாக ரூ.1 லட்சமும் சிவசண்முகம் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து சிவசண்முகம் மணமகள் தீபாவை அழைத்து கொண்டு குடும்பத்தினருடன் வடகரையாத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
இந்நிலையில் திருமணமான 2-வது நாளான கடந்த 8-ந்தேதி திடுமல் ராசாம்பாளையத்தில் உள்ள தனது அக்கா மலர்கொடியின் வீட்டிற்கு சிவசண்முகம் தீபாவை விருந்துக்கு அழைத்துச் சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சிவசண்முகத்தின் அக்கா வீட்டிலிருந்த தீபாவை காணவில்லை. இதையடுத்து சிவசண்முகம் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் புரோக்கர்கள் மற்றும் தீபாவின் செல்போனை தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவசண்முகம் விரக்தியில் இருந்தார். இந்நிலையில் ராசபாளையத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் கடந்த 10-ந் தேதி மாலை தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவசண்முகத்தின் அக்காள் மலர்க்கொடி பார்த்து கதறி அழுதார். பின்னர் உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து சிவசண்முகத்தின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவசண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிவசண்முகம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்தினார்.
போலீசாரின் விசாரணையில் வீட்டை விட்டு வெளியே சென்ற தீபா திருமணத்திற்கு எடுத்த பட்டுப்புடவை, 9 பவுன் தங்க தாலி கொடியுடன் தலைமறைவானது தெரியவந்தது. மேலும் தலைமறைவான புதுப்பெண் தீபா மற்றும் பெண் உள்பட 6 புரோக்கர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் திருமணம் நடந்து 2 நாளில் வீட்டைவிட்டு ஓடிய தீபா பல ஆண்களை இதுபோன்று திருமணம் செய்து கொண்டு மோசடி செய்யும் கல்யாண ராணியா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமணம் முடிந்த பிறகும் அஜித் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
- தாய் சத்தம் போட்டதால் மனமுடைந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் மாரியம்மன் குரும்பன்தெருவை சேர்ந்தவர் அரசன் மகன் அஜித் (வயது26). கூலித்தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வந்து விட்டார்.
அதன்பிறகு ராஜபாளையத்தை சேர்ந்த சினேகா என்பவரை கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தார். திருமணம் முடிந்த பிறகும் அஜித் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனை அவரது தாய் விக்டோரியா கண்டித்தார். மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்பு தனது தாய் சத்தம் போட்டதால் மனமுடைந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் விக்டோரியா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 40வது நாளில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை.
- ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.
வேலூர்:
வேலூர் சின்ன அல்லாபுரம் கே.கே. நகர் திரவுபதியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் சபீனாபானு (வயது 33). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். சபீனாபானு, சின்னஅல்லாபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
தொடர்ந்து சதுப்பேரியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் வேலூர் விருப்பாட்சிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரும் வேலை செய்து வந்தார்.
இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் பேசுவதை சபீனா பானு தவிர்த்து வந்தார்.
பலமுறை சுரேஷ், சபீனாபானுவை தொடர்பு கொண்டும் அவர் பேச மறுத்ததாக தெரிகிறது. இதனால் சபீனாபானு மீது கோபத்தில் இருந்த சுரேஷ், நேற்றும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து நேற்று இரவு 11.30 மணியளவில் சுரேஷ், சின்ன அல்லாபுரத்தில் உள்ள சபீனாபானுவின் வீட்டுக்கு சென்றார். அவரிடம் 'ஏன் என்னிடம் 2 மாதங்களாக பேசவில்லை.
வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா?' என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.
இதை பார்த்த சபீனாபானுவின் தந்தை சிராஜூதீன், தாய் ஆஜிரா ஆகியோர் தடுக்க முயன்றனர். இருவரையும் சுரேஷ் கம்பியால் தலையில் தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த அவர்கள் மயங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சபீனாபானு, வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்ற சுரேஷ், சபீனாபானு வீட்டின் அருகில் இருந்த மின்கம்பம் அருகே மடக்கி அவரை சரமாரியாக தாக்கினார் .
இதில் சம்பவ இடத்திலேயே சபீனாபானு பரிதாபமாக இறந்தார். உடனே, சுரேஷ் தனது பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் சக்கரவர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சுரேஷின் செல்போன் எண்ணை வைத்து விருபாட்சிபுரம் நேதாஜி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர்.
அங்கு தனது அறையில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சுரேஷ் பிணமாக தொங்கினார்.
சபீனாபானுவை கொலை செய்த பின்னர், வீட்டுக்கு திரும்பிய சுரேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த சபீனாபானுவின் பெற்றோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆரல்வாய்மொழி பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் அரவிந்துக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் அவரை தேடி வந்துள்ளனர்.
- கடந்த 5 நாட்களுக்கு முன் வெளியே சென்ற அரவிந்த் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீசாருக்கு அங்குள்ள கிளாக்குளம் குளத்துக்கரையில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டு யார் அவர்? எந்த ஊரைச் சார்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் இறந்து 4 அல்லது 5 நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் கூடங்குளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 29) என்பதும், அவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது என்பதும் தெரிய வந்தது. அரவிந்த் டிரைவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
ஆரல்வாய்மொழி பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் அரவிந்துக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் அவரை தேடி வந்துள்ளனர். இதனால் போலீசார் எப்படியாவது தன்னை பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் அரவிந்த் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் வெளியே சென்ற அரவிந்த் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இந்நிலையில்தான் அவர் குளத்துக்கரையில் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே அவர் போலீசாருக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
- வாலிபர் தற்கொலை செய்த அறையிலேயே மற்றொரு வாலிபரும் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.
- கடந்த 40 நாளில் ஒரே அறையில் ஒரே ஊரை சேர்ந்த 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ரங்கநாதபுரம் தேவாரம் மெயின்ரோட்டில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் கேன் சப்ளை செய்யும் பிளாண்ட் உள்ளது. இந்த மையத்தை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காலாப்பூரை சேர்ந்த கார்த்திக்(24) என்பவர் லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார்.
தொழிலில் நஷ்டம் ஏற்படவே கடந்த மாதம் 19-ந்தேதி வாட்டர் பிளாண்ட் அறையிலேயே கார்த்திக்கின் தம்பி கிஷோர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அந்த பிளாண்ட்டில் கிஷோரின் உறவினரான சிவகங்கை மாவட்டம் காலாப்பூரை சேர்ந்த பாண்டியன் மகன் விஜய்(19) வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை கிஷோர் தற்கொலை செய்த அறையிலேயே அவரும் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போடி டவுன்ேபாலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 40 நாளில் ஒரே அறையில் ஒரே ஊரை சேர்ந்த 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உன் பேச்சை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என உருக்கம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 35). இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இவருக்கு பிரியா( 28) என்ற மனைவியும், 6 வயதில் மகனும் உள்ளனர்.
சிவானந்தத்திற்கு வேலை செய்யும் இடத்தில் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சேர்ந்து நெமிலி அருகே ஒருவரிடம் மாத சீட்டு கட்டி வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீட்டு பணத்தை எடுத்து இருவரும் ஆளுக்கு பாதி என பிரித்துக் கொண்டதாக தெரிகிறது. பிறகு மாதம் தோறும் சீட்டு பணம் கட்டுவதற்கு உரிய பங்கு பணத்தை மோகன் தராமல் இழுத்து அடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிவானந்தம் தனது நண்பரான மோகனுக்கு மனைவிக்கு தெரியாமல் வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதையும் அவர் சரிவர கட்டவில்லை இந்த நிலையில் சிவானந்தம் தீபாவளி பண்டிகையில் இருந்து மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் சிவானந்தம் யாரிடமும் சொல்லாமல் திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிரியா கணவரை காணவில்லை என்று நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் நேற்று காலை நெமிலி அடுத்த அச நெல்லிக்குப்பம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிவானந்தம் பிணமாக மிதந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் சிவானந்தம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உருக்கமான வீடியோ
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிவானந்தம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்வதற்கு முன்பு தனது மனைவி பிரியாவுக்கு உருக்கமான வீடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.
அதில் என்னை மன்னித்துவிடு .வாழ எனக்கு தகுதி இல்லை .நீ எவ்வளவு சொல்லியும் நான் உன் பேச்சை கேட்கவில்லை. உன் பேச்சைக் கேட்டு இருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது.
நான் இறந்த பிறகு நான் பட்ட கடனை எப்படியாவது அடைத்து விடு என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
- காதலை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது.
அவனியாபுரம்
அவனியாபுரம் பராசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மலையம்மாள், இவர்களது மகன் அருண்பாண்டி (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்ட அருண்பாண்டி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருண்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்காக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர்.
- போலீசுக்கு பயந்த அவர் தூத்துக்குடிக்கு வந்தார். நேற்று இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி:
திருவாரூர் மாவட்டம் மூவநல்லூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது25). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.
அதன்பேரில் மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசுக்கு பயந்த அவர் தூத்துக்குடிக்கு வந்தார். நேற்று இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்ததும் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுரேந்தருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்ைதகள் உள்ளனர்.
- குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்தார்
கோவை,
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 32). கூலி ெதாழிலாளி.
இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்ைதகள் உள்ளனர். இந்த நிலையில் சுரேந்தருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அதனை அவர் கைவிட பல முறை முயற்சி செய்து வந்தார்.
ஆனால் அவரால் குடிப்பழக்கத்தை கைவிட முடியவில்லை. இதனை நினைத்து அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்று மது குடித்து வீடு திரும்பினார்.
வீட்டிற்கு வந்ததும் அவர் அறைக்கு சென்று துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாண்டிச்செல்வம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் ஊராட்சி ஓமங்கொல்லைப்பட்டி கிராமத்தில் தாய் மாமன் கருப்பையா மகன் துரை என்பவரின் வீட்டில் வசித்து வந்தார்.
- விவசாயம் செய்தும் வந்த அவர் அதே கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா ஜெயங்கொண்டாம் ஊராட்சியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம் (வயது 23). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் ஊராட்சி ஓமங்கொல்லைப்பட்டி கிராமத்தில் 2 வயது முதல் தனது தாய் மாமன் கருப்பையா மகன் துரை என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். ஐ.டி.ஐ. முடித்து விட்டு அவரது வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் ஆடு, மாடுகள் மேய்த்தும், விவசாயம் செய்தும் வந்த அவர் அதே கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட மன வருத்தத்தில் அதே கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஏணியில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் இறந்தவரின் தந்தை ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் அழகம்மை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- செல்வம்அங்குள்ள ஒருவரது தோட்டத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்
- கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் ( வயது 38). விவசாய கூலி தொழிலாளியான இவர் அங்குள்ள ஒருவரது தோட்டத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மீண்டும் குடும்பம் நடத்த அழைத்த பின்னரும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வம் சறுக்கு பாறை பாலம் அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். அக்கம் பக்கத்து தோட்டக்காரர்கள் இன்று பாடாலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேப்பூர் அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையிலிருந்து வீட்டிற்கு தனியாக வந்தார்.
கடலூர்:
வேப்பூர் அருகே சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்(வயது22). 9ம் வகுப்பு படித்துள்ளார். இவர், கடந்த 4 ஆண்டுகளாக தனது பெற்றோருடன், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையிலிருந்து வீட்டிற்கு தனியாக வந்தார். நேற்று காலை அவரது நண்பர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, குணசேகரன் வீட்டின் மேற்கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






