என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teen suicide"

    • உன் பேச்சை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என உருக்கம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 35). இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இவருக்கு பிரியா( 28) என்ற மனைவியும், 6 வயதில் மகனும் உள்ளனர்.

    சிவானந்தத்திற்கு வேலை செய்யும் இடத்தில் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சேர்ந்து நெமிலி அருகே ஒருவரிடம் மாத சீட்டு கட்டி வந்துள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீட்டு பணத்தை எடுத்து இருவரும் ஆளுக்கு பாதி என பிரித்துக் கொண்டதாக தெரிகிறது. பிறகு மாதம் தோறும் சீட்டு பணம் கட்டுவதற்கு உரிய பங்கு பணத்தை மோகன் தராமல் இழுத்து அடித்ததாக கூறப்படுகிறது.

    மேலும் சிவானந்தம் தனது நண்பரான மோகனுக்கு மனைவிக்கு தெரியாமல் வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதையும் அவர் சரிவர கட்டவில்லை இந்த நிலையில் சிவானந்தம் தீபாவளி பண்டிகையில் இருந்து மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் சிவானந்தம் யாரிடமும் சொல்லாமல் திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிரியா கணவரை காணவில்லை என்று நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்நிலையில் நேற்று காலை நெமிலி அடுத்த அச நெல்லிக்குப்பம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிவானந்தம் பிணமாக மிதந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் சிவானந்தம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உருக்கமான வீடியோ

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிவானந்தம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்வதற்கு முன்பு தனது மனைவி பிரியாவுக்கு உருக்கமான வீடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.

    அதில் என்னை மன்னித்துவிடு .வாழ எனக்கு தகுதி இல்லை .நீ எவ்வளவு சொல்லியும் நான் உன் பேச்சை கேட்கவில்லை. உன் பேச்சைக் கேட்டு இருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது.

    நான் இறந்த பிறகு நான் பட்ட கடனை எப்படியாவது அடைத்து விடு என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    • வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்தார்.
    • இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் கன்னிதேவன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 39). இவர் கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லவில்லை. வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்த அவரை குடும்பத்தினர் கண்டித்ததாக கூறப்படு கிறது.

    இதில் மனமுடைந்த அவர் விஷம்குடித்து மந்தையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை மாவட்டம் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி அவரது தம்பி முத்துப்பாண்டி கீழராஜ குலராமன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உணவுக்காக வீட்டிற்கு வந்த நிலையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், கல்லூரி மாணவிகள் அரசு விடுதிகள், பள்ளி மாணவர்கள் விடுதி உள்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டுவருகிறது.

    கடந்த சில தினங்களாக மாணவர்கள் விடுதி செயல்பாட்டில் இல்லாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இந்த விடுதி வளாகத்தில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் திரு வண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்த வாலிபர் திருவண்ணாமலை கல் நகரை சேர்ந்த திரு நாவுக்கரசு என்பவரின் மகன் சூர்யா (வயது 17) என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்ததும், நேற்று மதியம் உணவுக்காக வீட்டிற்கு வந்தவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    தொடர்ந்து அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமாகாத விரக்தியில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கூலி வேலை செய்து வந்தார்‌

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு சேகர் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் அந்த கிராமத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள விவசாயக் கிணற்றில் சேகர் பிணமாக மிதந்தார். வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்த சேகர் உடலை மீட்டனர்.

    சேகர் கட்டியிருந்த லுங்கியில் சுமார் 25 கிலோ எடை கொண்ட கருங்கல் கட்டப்பட்டிருந்தது. இதனால் கருங்கல்லை கட்டி அவரை யாரும் கிணற்றில் தள்ளினார்களா என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    திருமணமாகாத விரக்தியில் சேகர் லுங்கியில் கருங்கல் கட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் பெரிய கம்மியப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரு டைய மகன் ராகவேந்திரன் (வயது 32) உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நோய் பாதிப்பு அதிகமான நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல் வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் ராகவேந்திரனின் செருப்பு மிதந்து கொண்டு இருந் தது.

    தகவல் அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கி தேடியதில் ராகவேந்திரன் உடலை மீட்டனர்.

    இது சம்பந்தமாக ஜோலார்பேட்டை போலீசில் தந்தை காளிதாஸ் புகார் செய்தார்.

    அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ராக வேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப் பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் அடுத்த கேசவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் ரூபினி என்கிற லட்சுமி (வயது 22) இவருக்கும் ஈரோடு மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சதீஷ் என்பவருடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

    கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூபினி கணவனைப் பிரிந்து கேசவபுரத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த ரூபினியை வேலை எதுவும் செய்யவில்லை என அவரது தாயார் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ரூபினி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ரூபினி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண்டவர் என்பவர் 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்,
    • வலி தாங்க முடியாமல் வயலுக்கு அடிக்கவைத்திருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இந்திலி பகுதியை சேர்ந்த ஆண்டவர் (வயது 33) இவர் 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 18-ந் தேதி ஆண்டவருக்கு வயிற்று வலி அதிகமானது. இதனால் வலி தாங்க முடியாமல் வயலுக்கு அடிக்கவைத்திருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்தார்.

    பின்னர் அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆண்டவர் இறந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதன்குமார் சில நாட்களாக மன உளை ச்சலில் இருந்துள்ளார்.
    • டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு 

    ஈரோடு சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் மதன்குமார் (29). திருமணமாக வில்லை. இவர் கடந்த ஒரு வருடமாக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.

    மேலும் கடனை அடைப்பதற்காக தனது மோட்டார் சைக்கிள், தான் அணிந்திருந்த தங்க செயினையும் அடமானம் வைத்தும் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

    இதனால் மதன்குமார் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மதன் குமார் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.

    அப்போது வெளியே சென்று வந்த அவரது பெற்றோர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மதன்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருமணமாகி சில மாதங்களி லேயே இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர்.
    • இந்த நிலையில் பொலவ காளி பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நந்தினி விஷம் குடித்து விட்டார்.

    கோபி

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளி பாளையம் பகுதியை சேர்ந்த வர் நந்தினி (வயது 24). இவருக்கும் கோவையை சேர்ந்த வேலுமணி என்பவ ருக்கும் கடந்த 4 ஆண்டுக ளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இதையடுத்து கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணமாகி சில மாதங்களி லேயே இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் நந்தினி மனம் உடைந்து காண ப்பட்டார்.

    இந்த நிலையில் பொலவ காளி பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நந்தினி விஷம் குடித்து விட்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோபி செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாப மாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கோபிசெட்டி பாளையம் ஆர்.டி.ஓ. திவ்யா பிரியதர்சினி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நீலகண்டன் ஆகியோரும் தொடர்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் வடகரை சாலையில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையின் மேலே உள்ள தண்டவாளத்தில் ரெயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக விருதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து விருதுநகர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார், ரெயில்வே போலீஸ் படையை சேர்ந்த செல்வராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயில் மோதி பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், பலியான வாலிபர் திருமங்கலத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கதிரவன் (வயது 23) என்றும், அவர் நேற்று இரவு வீட்டுக்கு தாமதமாக வந்ததால் பெற்றோர் கண்டித்ததாகவும், இதில் மனமுடைந்த அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை
    • கணவரிடம் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள மட்றப் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 23) கட்டிட வேலை செய்து வருகிறார்.

    இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சத்யமங்கலம் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது உளுந்தூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஆதிலட்சுமி (19 )என்பவரை காதலித்தார்.

    இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் மட்றப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    பின்னர் சூர்யா வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினார். ஆதிலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காலையில் வழக்கம் போல வீட்டின் கதவை தட்டி திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஆதிலட்சுமி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆதிலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த ஆதிலட்சுமியின் உறவினர்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் ஆதிலட்சுமி சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் பிரேத பரிசோதனை முடிவு கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் இது குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆதிலட்சுமி அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • யார்? என தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சேவூர் ரெயில் நிலையம் அருகே மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பாய்ந்தார்.

    ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் சேவூர் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வெள்ளை நிற கட் பனியன் மற்றும் நீல நிற அரைக்கால் டவுசர் அணிந்திருந்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் யார் எதற்காக ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×