search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
    X

    இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

    • கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி பிள்ளையார் கோவில் ஏரிமுனையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 34), லாரிக்கு பாடி கட்டும் தொழில் செய்து வந்தார்.

    இவரது மனைவி இளவரசி (31). தம்பதிக்கு தனுஷ் (11), சிவகார்த்திக் (9) என இரண்டு மகன்கள் உள்ளனர். ரஞ்சித் குமார் கடந்த 14-ந் தேதி மாலை தனது நண்பர்களுடன் காட்பாடி ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

    கணவர் இறந்த துக்கம் தாளாமல் இளவரசி மன வேதனை அடைந்தார்.யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.

    நேற்று இரவு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவு எழுந்து பார்த்த போது இளவரசியை காணாததால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இளவரசியின் உறவினர்கள் இரவு முழுவதும் அவரை தேடிப் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் இளவரசி பிணமாக மிதந்தார்.

    போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இளவரசியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இளவரசி தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×