search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
    X

    கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

    • குடும்ப தகராரில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    கலவை:

    கலவை அடுத்த அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(28). இவரது மனைவி நித்யா. தம்பதியினருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    நந்தகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நந்தகுமார் நேற்று மீண்டும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நந்தகுமாரை, நித்யா திட்டியுள்ளார். இதனால் மணமடைந்த நந்தகுமார் வீட்டில் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த தகவல் அறிந்த கலவை போலீசார் விரைந்து சென்று, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் நந்தகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×