என் மலர்
நீங்கள் தேடியது "cardboard boxes"
- வீடியோ பதிவிட்ட இளம்பெண்ணின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிந்தனர்.
- உடலில் இருநத அட்டையில் ஆண்கள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தீபக்(வயது35). கோழிக்கோட்டில் உள்ள துணிக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்த இவர், கடந்த 9-ந்தேதி கண்ணூருக்கு ஒரு பஸ்சில் சென்றார்.
அப்போது அவர் அந்த பஸ்சில் பயணம் செய்த ஒரு இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்தாக கூறப்படுகிறது. ஓடும் பஸ்சில் தனக்கு நேர்ந்த அந்த நிகழ்வு தொடர்பான வீடியோவை, அந்த இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதனை லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.
இதனால் அவமானம் தாங்காமல் வாலிபர் தீபக் தற்கொலை செய்து கொண்டார். இளம் பெண் வெளியிட்ட வீடியோ காரணமாக தீபக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கடும் விவாதத்தை உருவாக்கியது.
தீபக்கின் சாவுக்கு காரணமான இளம்பெண்ணின் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இன்ஸ்டாகிராமில் தனது வீடியோ வைரல் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் தனது மகன் மீது அபாண்டமாப பழி சுமத்தி தற்கொலைக்கு தூண்டிவிட்டதாக தீபக்கின் தாய் கன்யகா குற்றம்சாட்டினார்.
அவர் சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் சமூகவலை தளத்தில் வீடியோ பதிவிட்ட இளம்பெண்ணின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிந்தனர்.
தனது வீடியோ பதிவு மற்றும் தன்னுடைய செயல்பாட்டுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதால், வீடியோவை வெளியிட்ட இளம்பெண் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் கேரளாவில் சில ஆண்கள், தங்களின் உடலை அட்டைப்பெட்டியால் மறைத்தபடி பஸ்களில் பயணம் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. அதில் ஒரு வீடியோவில் பயணி ஒருவர் கூண்டு போன்று இருக்கும் அட்டை பெட்டிக்குள் நின்ற படி பஸ்சில் பயணிப்பது போன்று இருக்கறது.
மற்றொரு வீடியோவில் பஸ் கண்டக்டர் ஒருவர், தனது உடலில் நெஞ்சு மற்றும் கைகள் உள்ளிட்ட இடங்களில் அட்டை பெட்டிகளை கட்டிக்கொண்டு வந்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கிறார். அவர் உடலில் இருநத அட்டையில் ஆண்கள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்.
ஆண்களின் இந்த வித்தியாசமான நடவடிக்கையை, அந்த பஸ்களில் பயணித்த மற்ற பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. அதே நேரத்தில் அட்டை பெட்டியால் உடலை மறைத்து பஸ்சில் ஆண்கள் பயணிக்கும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆடை தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது.
- அழகிய பேக்கிங் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஆடை வடிவமைப்பில், புதிய யுக்திகளை கையாண்டு சாதனைகளை குவித்துள்ளனர். ஆடை வடிவமைப்பு மட்டுமல்லாது அரிய பல கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலைகள் மற்றும் கலா ரசனைகளில் கைதேர்ந்தவர்களாக மாறி வருகின்றனர்.
அந்தவகையில், பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு பயிலும் அப்பேரல் பேஷன் டிசைனிங் மாணவர்கள், புனர்பாவா நிறுவனத்துடன் இணைந்து அழகிய ஆடைகளை பேக்கிங் செய்து கொடுக்கும் கண்கவர் அட்டை பெட்டிகளை வடிவமைத்துள்ளனர். ஆடை பேக்கிங் செய்ய பயன்படுத்தும் 400 முதல் 450 ஜி.எஸ்.எம்., அட்டைகளை பயன்படுத்தி, இயற்கை சாயத்தை கொண்டு கண்கவர் அட்டைப்பெட்டிகள் தயாரித்து அசத்தியுள்ளனர். அதுமட்டுமல்ல அதே அட்டைகளில், இயற்கை சாயத்தை கொண்டு எளியவகை பேன்ஸி அணிகலன்களையும் வடிவமைத்துள்ளனர்.
இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறியதாவது:- ஆடை தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அழகிய பேக்கிங் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆடைகளின் மதிப்பை கூட்ட, அழகிய அட்டை பெட்டிகளில் பேக் செய்து கொடுப்பது அவசியம்.குழந்தைகளுக்கான ஆடைகள், பின்னலாடைகள், விலை மதிப்புமிக்க சேலைகள் போன்றவற்றை நாங்களே வடிவமைத்துள்ளோம்.
மஞ்சள் தூள், ஆர்கானிக் பிண்டி(கலர் குங்குமம்), பீட்ரூட், காய்கறிகள், வெங்காயத்தோல், மருதாணி இலை, செம்பருத்தி பூக்களை கொண்டு இயற்கையான சாயம் தயாரித்து அவற்றின் மூலமாக பேக்கிங் அட்டை பெட்டிகளும், பேன்ஸி அணிகலன்களும் மெருகூட்டப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரத்துடன் தயாரித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.






